தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, November 12, 2017

வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம் - மிலோராட் பாவிச் & எது கவிதை? - - ரோமன் யாக்கப்ஸன் :: உன்னதம் (http://unnatham.net/)

2 ன்னதம் (http://unnatham.net/)


வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம்
- மிலோராட் பாவிச்

By unnatham (http:/Tunnatham.net/author/unnatham/) Posted in g 6616015Lh OPosted on October 10, 2017 (http://unnatham.net/wedgwood/)

- மிலோராட் பாவிச்

நீங்கள் வாசிக்கவிருக்கும் இந்தக் கதையில், கதைநாயகர்களின் பெயர்கள் ஆரம்பத்தில் சொல்லப்படுவதற்குப் பதிலாக இறுதியில் சொல்லப்படும்.

மொழியியல் மற்றும் இராணுவ அறிவியல் மாணவனான எனது தம்பிதான் தலைநகரின் கணிதப் பயிற்றுநர்கள் மத்தியில், எங்கள் இருவரையும் நேருக்குநேராக அறிமுகப்படுத்தினான். கணிதம் 1க்குத் தயார்செய்வதற்காக அவள் ஒரு கூட்டாளியைத் தேடிக்கொண்டிருந்ததால், நாங்கள் இருவரும் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம்; அவள் என்னைப் போல வெளியூர் இல்லை; அதனால், அவளுடைய பெற்றோரின் பெரிய வீட்டிலேயே படித்தோம். ஒவ்வொரு நாளும் மிகவும் அதிகாலையிலேயே அவளுடைய பளபளக்கும் லேலண்ட் பஃபலோ மகிழுந்தினைக் கடந்து சென்று முன்வாசலில் குதித்து, கல் ஒன்றைத் தேடியெடுத்து அதனை என் காற்சட்டைப்பையில் பத்திரப்படுத்தியதும், அழைப்பு மணியை அழுத்திவிட்டு மேல்மாடிக்குச் செல்வேன். புத்தகம், நோட்டு, பயில் கருவி எதனையும் நான் எடுத்துச் செல்வதில்லை; எல்லாமே அவளுடைய அறையில் எப்போதுமே பயில்வதற்குத் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும். நாங்கள் ஏழு முதல் ஒன்பது வரையில் படித்தோம்; பின்னர் எங்களுக்குக் காலை உணவுதந்தார்கள்; அது முடிந்ததும் நாங்கள் பத்து வரையிலும் தொடர்ந்தோம்; பத்து முதல் பதினொன்று வரையில் ஏற்கெனவே முடித்த பாடங்களைத் திரும்பவும் ஒரு பார்வை பார்ப்போம். அப்போது முழுவதும் நான் அந்தக் கல்லை என்கையிலேயே வைத்து உருட்டிக்கொண்டிருப்பேன். ஒருவேளை நான் தூங்கிவிட்டால், தரையில் விழும் அது, வேறு யாரும் கவனிக்கும் முன்பாகவே என்னை எழுப்பிவிடும். பதினொன்றுக்குப் பிறகும் அவள் தொடர்ந்து படித்தாள்; ஆனால் நான் இல்லை. ஆக, ஞாயிற்றுக்கிழமை, மற்றும் அவள் தனிமையில் படிக்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரம் முழுவதும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணிதத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம். அவளுக்கு இணையாக என்னால் படிக்கமுடியவில்லை என்பதையும் என்னுடைய அறிவு அவளைவிட மிகமிகப் பின்தங்கியிருந்ததையும் அவள் வெகு விரைவிலேயே புரிந்துகொண்டாள். நான் தவறவிட்ட பாடங்களைப் படிப்பதற்காகவே வீட்டுக்குச் செல்வதாக அவள் நினைத்துக் கொண்டபோதிலும், அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. பிறருக்குக் கற்பிப்பதன் மூலம் அவள் தனக்குத்தானே கற்பித்துக்கொள்வதை # "ஒவ்வொருவரும் மண்புழுவைப்போல அவரவர் வழி முழுவதும் மென்று தின்றே கடந்து முடிக் கட்டும்" என

னைததாள.



________________

செப்டம்பர் பருவம் வந்தபோது, தேர்வுநாளன்று சந்திக்கலாமென்றும் இருவரும் சேர்ந்தே தேர்வெழுதுவதென்றும் ஒப்புக் கொண்டிருந்தோம். அவள் தேர்வுப்பரபரப்பில் இருந்ததால், அன்று நான் தேர்வெழுதுவதென்ன, அங்கே தலைகாட்டக்கூட இல்லையென்பதைக் கண்டுகொள்வதற்கு அவளுக்கு நேரமில்லாமற் போயிருந்தது. அந்தத் தேர்வில் அவளது வெற்றி விவரம் தெரிந்த பிறகுதான், எனக்கு என்னவானதென்று அவளுக்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள். ஆனால், குளிர்காலம் வரையில் நான் தலையைக் காட்டவேயில்லை."அது சரி, எல்லாத் தேனீக்களும் தேன் சேகரிக்கவேண்டுமா, என்ன?" என்று அவள் முடிவுக்கு வந்தாள்; ஆனாலும், அவள் அவளுக்குள்ளாகவே சிலநேரங்களில் நினைத்துக்கொண்டாள்,"அவனுக்கு என்னதான் ஆனது? அநேகமாக கிழக்கிலிருந்து வாங்கி மேற்கில் அல்லது இங்கு வாங்கி அங்கு விற்கும், புன்னகை தவழும் வணிகர்களில் ஒருவனாகத் தான் அவன் இருக்கவேண்டும்ஞ்."

கணிதம் முன்னுக்கு வந்தபோது, திடீரென ஒருநாள் என்னைச் சந்தித்த அவள், என்கை மூட்டுகளில் புதிதாகத் தோன்றியிருந்த தேமல் களையும் அதற்கு முன் அவள் பார்த்திராத, புதிதாக முளைத்த மயிர்ப்பரப்பினையும் ஆர்வத்துடன் கவனித்தாள். முன்பு போலவே மீண்டும் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் நான் செல்வதும், அவள் வெதுவெதுப்பும் குளிருமிணைந்த நீர்ப்பெருக்கின் நடுவே நீந்திவருவதுபோல பசுமையடுக்குகள் நிறைந்த காற்றின் வழியே இறங்கிவந்து, தூக்கம் வழியும், ஆனால், கண்ணாடியைக்கூடத் துளைத்துவிடும் கண்களுடன் எனக்காகக் கதவைத்திறப்பதும் நிகழ்ந்தன. நான் தாடியை எப்படி அழுந்தத் தடவி ஒதுக்குகிறேன் என்பதையும் என் கையுறைகளை எப்படிக் கழற்றி உருவுகிறேனென்றும் ஒரு கணம் அவள் கவனிப்பாள். நடுவிரலையும் பெருவிரலையும் இணைத்து, ஒரு குறிப்பிட்ட பாணியில் அவற்றை வெளிப்பக்கமாகத்திருப்பி இரண்டு கையுறைகளையும் ஒரே இழுப்பில் ஒருசேர உருவிக் கழற்றிவிடுவேன். அது முடிந்ததும் அவள் உடனடியாக படிப்புக்கு ஆயத்தமாகிவிடுவாள். அவள் முழுவலிமையும் திரட்டி அவளுடைய மனத்தைத் தயார்செய்தாள்; அது தினமும் நிகழ்ந்தது. சிறிதும் அயராத மன உறுதியுடனும் ஒழுங்குமுறை தவறாமலும் பாடத்தின் அனைத்து விவரங்களுக்குள்ளும் மூழ்கிய அவள், அது, நாங்கள் புது மலர்ச்சியுடன் தொடங்கும் காலைநேரமோ அல்லது, காலை உணவுக்குப் பிறகோ அல்லது முடிக்கும் நேரத்திலாயினும், சிறிது வேகம் குறைத்தாலும் குறைப்பாளே தவிர, எந்த ஒரு சிறு விவரத்தையும் விட்டுவிட்டுத் தாண்டிச் செல்லமாட்டாள். அப்போதும் பதினொரு மணிக்கு நான் எழுந்து சென்றுவிடுவேன். நான் செய்துகொண்டிருந்த செயல்களில் என்னால் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியவில்லையென்பதையும் ஒரு மணிநேரத்துக்குள்ளேயே என் கண்கள் சோர்ந்துவிடுவதையும், நான் அவளுக்கு வெகுவாகப் பிந்தியிருந்ததையும் அவள் விரைவிலேயே கண்டுகொண்டாள். அவள் மேஜைக்கடியில் என் கால்களைப் பார்ப்பாள்; அவற்றில் ஒன்று எப்போதும் வெளியேறத் தயாராக இருக்கும்; மற்றொன்றோ அசைவின்றி இருக்கும்; பின்னர் அவை ஒன்றுக்கொன்று நிலை மாற்றிக்கொள்ளும்.

ஜனவரி பருவத் தேர்வு வந்தபோது, என்னால் தேர்வில் வெற்றிபெறமுடியாது என்ற நினைப்பு அவளுக்கிருந்தது; ஆனால் அவளுக்குள்ளாகவே இருந்த ஒரு சிறிய குற்றஉணர்வினால் அமைதியாக இருந்தாள்."எதுஎப்படியிருந்தாலும், நானென்ன, அவனைப் படிக்கச்செய்வதற்காக, அவன் கைமூட்டில் முத்தமிடவா வேண்டும்? அவன் தலைக்குள் ரொட்டி வெட்டிக்கொண்டிருந்தால், அது அவனுடைய சொந்தப் பிரச்சினைஞ்." என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.

அதன் பின்பும் அங்கே என் தலையைக் காணாதபோது, அவள் வியப்புக்குள்ளாகிய தோடு, தேர்வுமுடித்தபின், ஒருவேளை பிற்பகல் அல்லது பிறிதொரு நாள் தேர்வுக்கு நான் அனுமதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தில் தேர்வெழுதுபவர்களின் பட்டியலில் தேடிப்பார்த்தாள். அவளுக்குப் பெரிதும் வியப்பு ஏற்படும்வகையில், என் பெயர் அந்த நாளுக்கென்ன, வேறெந்த நாளுக்குமான பட்டியலிலுமே இடம்பெற்றிருக்கவில்லை. விவரம் தெளிவாகவே தெரிந்தது: நான் அந்தப் பருவம் முழுவதற்குமே தேர்வுக்கு மனுச்செய்திருக்கவில்லை.

மே மாதத்தில் மீண்டும் நாங்கள் பார்த்துக் கொண்டபோது, அவள் கான்கிரீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். ஏற்கெனவே எழுதாத தேர்வுகளுக்காக இப்போது நான் படித்துக்கொண்டிருக்கிறேனா என அவள் கேட்டபோது,நானும் கான்கிரீட்டுக்குத் தயார் செய்வதாகத் தெரிவிக்க, எதுவும் நடக்காதது போல, நாங்கள் தொடர்ந்து முன்புபோலவே ஒன்றாகப் படித்தோம். இளவேனிற்காலம் முழுவதையும் படிப்பதிலேயே கழித்தோம். ஜூன் பருவத் தேர்வு வந்தபோது, இம்முறையும் நான் தேர்வு எழுதப் போவதில்லையென்றும் இலையுதிர்காலம் வரையில் என்னைப் பார்க்க முடியாதென்றும் அவளுக்கு ஏற்கெனவேயே தட்டுப்பட்டுவிட்டது. முழுமையாகத் திறந்த வாயளவுக்கு விரியும் அழகிய கண்களைக் கொண்ட அவள், இப்போது கிறக்கத்துடன் என்னை நோக்கத் தொடங்கினாள். வழக்கம் போலவே இம்முறையும் நிகழ்ந்து முடிந்தன. அவள் கான்கிரீட் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றாள். வெறுமனே கூட, அங்கு செல்வதைப்பற்றி, நான் நினைத்தும் பார்க்கவில்லை.

வெற்றிபெற்ற நிறைவில் வீட்டுக்கு வந்தபின், என் நிலைமை குறித்துப் புதிரும் குழப்பமுமாயிருந்த அவள், நான் முதல்நாள் அவசரத்தில் என்னுடைய நோட்டுப்புத்தகங்களைக் கூட மறந்து அங்கேயே விட்டுச்சென்றிருந்ததைக் கண்டாள். அவற்றில் என்னுடைய மாணவர் கையேட்டைக் கண்டிருக்கிறாள். அதைத் திறந்து பார்த்தபோதுதான் நான் ஒரு கணித மாணவன் இல்லையென்பதையும், எப்படியோ, என்னுடைய தேர்வுகள் அனைத்தையும் முறையாக எழுதி வெற்றிபெற்றிருந்ததையும் வியப்புடன் கண்டுகொண்டிருக்கிறாள். முடிவற்று நீண்ட எங்கள் கூட்டுப் படிப்பின் கால அளவுகளை நினைவுகூர்ந்த அவள், எனக்கு எவ்விதப் பயனுமில்லாமல் மிகப் பெரும் மனச் சுமையும் அழுத்தமுமாக இருந்திருக்கக்கூடிய பெருங்காலவிரயமுமான அதனை நினைத்துப் பார்த்ததோடு, தவிர்க்கமுடியாத இந்தக் கேள்வியையும் அவளுக்குள்ளாகக் கேட்டுக்கொண்டாள்; எதற்காக? நான் வெற்றிபெறவேண்டிய தேர்வுகளுக்கோ, எனது பற்றார்வத்துக்கோ எவ்வகையிலும் தொடர்பில்லாத பாடங்களை அவளுடன் சேர்ந்து படித்து அத்தனை கால நேரத்தைச் செலவழித்தது ஏன்?சிந்திக்கத் தொடங்கிய அவள் இப்படியான ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தாள்: "அடிநிலத்தில் அமைதியாகக் கடந்துசென்றது என்ன என்பது குறித்து ஒருவர் எப்போதுமே விழிப்புடனிருக்கவேண்டும்." இவையெல்லாவற்றுக்கும் காரணம் தேர்வு அல்ல; அவள், அவள் மட்டுமே தான். நான் அவ்வளவு வெட்கப்படுபவனாகவும் எனது உணர்வுகளை வெளிப்படுத்த இயலாதவனாகவும் இருந்தேனென்பதை யார்தான் நினைத்திருக்கமுடியும்? உடனேயே, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த என் வயதுப் பையன்களோடு நான்தங்கியிருந்த வாடகை அறைக்குச் சென்ற அவள் அங்கு பார்த்த வறுமையைக் கண்டு வியப்பு கொண்டதோடு, நான் வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்த தகவலையும் தெரிந்திருக்கிறாள். சலோனிகா அருகிலுள்ள ஒரு சிறு கிராமத்தின் முகவரியையும் அவர்கள் தெரிவிக்கவே, அவள் அவளுடைய பஃபலோவை எடுத்துக்கொண்டு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல், என்னைப் பற்றி வழக்கத்துக்கு மாறான எந்தத் தகவலையும் அவள் தெரிந்துகொள்ளாத பாவனையில் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, ஏஜியன் கடற்கரை நோக்கி என்னைத் தேடிப் புறப்பட்டாள். இப்படியாகத்தான் அது நிகழ்ந்தது.

வெயில் மேற்கில் சாய்ந்துவிட்ட நேரத்தில் வந்துசேர்ந்த அவள், வாசலில் புதிய ரொட்டிகுத்தி, முளையில் மிகப்பெரிய வெள்ளை எருமைக்கடா ஒன்று கட்டப்பட்ட விரியத் திறந்த வீடு என அடையாளம் சொல்லப்பட்ட வீட்டைக் கண்டுபிடித்தாள். வீட்டினுள்ளே படுக்கை ஒன்றும், சுவரில் உருவச்சின்னம் ஒன்றும் அதன் அடிப்பக்கத்தில் சிவப்புச் சரிகைப்பட்டை ஒன்று, துளையிட்டுக் கம்பி இழை கோர்க்கப்பட்ட கல் ஒன்று, ஒரு பம்பரம், ஆளுயரக் கண்ணாடி ஒன்று மற்றும் ஒரு ஆப்பிள் அவள் கண்ணில் பட்டது. வெயிலில் நிறம் மாறிய மேனியும் நீண்ட தலைமுடியுமாக நிர்வாண இளைஞன் ஒருவன், சாளரப் பக்கம் முதுகு தெரியுமாறு, ஒரு கையை முட்டுக்கொடுத்து, ஒருக்களித்துப் படுத்திருந்தான். அவனது தண்டுவடத்தடம், அகன்ற முதுகு முழுவதுமாக இறங்கி, இடுப்பு வரையிலும் சென்று இலேசாக வளைந்து முரட்டு இராணுவக் கம்பளி ஒன்றுக்குள் மறைந்திருந்தது. எந்த ஒரு கணத்திலும், ஒரு திரும்பலில், மறுபக்கப் பதின் பெண், அவளது மார்பகங்கள் மற்றும் ஆழ்ந்து வலிமைமிகுந்த அவளது அந்த இதமான மாலை நேர ஒளிரும் பளபளப்பு, அனைத்தும் அவள் கண்ணில்பட்டுவிடக்கூடுமென்ற எண்ணம் அவளுக்குள் தோன்றியது. உண்மையிலேயே அந்தத் திரும்புதல் நிகழ்ந்தபோது, அந்தப்படுக்கையில் பெண் எவரும் இல்லையென்பதை அவள் கண்டாள். ஒற்றை முழங்கையில் சாய்ந்து, மதிய விருந்தில், முழுவதுமாகத் தேன்படிந்துபோயிருந்த எனது மீசையின் முடியொன்றைச்

________________

சுவைத்துக்கொண்டிருந்தேன், நான். அவளது எண்ணம் போலவே, நீண்ட நேரம் காரோட்டி வந்த சோர்வும் விரைவிலேயே அகன்றுவிட்டது. கண்ணாடிப் பாதம் கொண்ட ஒரு தட்டில் அவளுக்கு ஒன்றும், கண்ணாடியில் தெரிந்த அவளது ஆன்மாவுக்காக மற்றொன்றுமாக, அவள் பெற்றுக்கொண்ட இரட்டை விருந்து:கொஞ்சம் பீன்ஸ், ஒரு கொட்டைப் பருப்பு ஒரு மீன்; சாப்பாட்டுக்கு முன் அவளுக்கு அளிக்கப்பட்ட சிறிய ஒரு வெள்ளி நாணயத்தை, நான் சாப்பிடும்போது நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்ட மாதிரியே அவளும் வைத்துக்கொண்டாள். ஆக, எங்கள் நால்வருக்குமாக இரவு உணவு கிடைத்தது:இருவர் நாங்கள், மற்றுமிருவர், கண்ணாடியில் தெரிந்த இரு ஆன்மாக்கள். உணவு சாப்பிட்டு முடித்த பின் அவள் உருவச்சின்னத்தின் முன் போய் நின்று அது எதைக் குறிக்கிறதென்று கேட்டாள். "தொலைக்காட்சிப்பெட்டி", "வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உன்னைப் போலல்லாமல் முற்றிலும் வேறுவிதமாகக் கணிதத்தைப் பயன்படுத்தும் மற்றொரு உலகத்துக்கான சாளரம்" என்றும் சொன்னேன்.

"அது எப்படி?" எனக்கேட்டாள், அவள்.

“ரொம்பவும் எளிது" என்றேன் நான்."உங்கள் அளவைக் கணித மதிப்பீட்டு அடிப்படையில் உருவாக்கப்படும் எந்திரம், விண்கலம் மற்றும் விண் ஊர்திகள் அளவை முறை முற்றிலுமாகப் போதுமானதாக இல்லாத மூன்று கூறுகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன. அவை:பொருட்களின் தனிமைக்கூறு, அவை பயனாகும் நிலைப் புள்ளி, அவ்வப்போதைக்கான கணம் என்பதான இடம், பொருள், காலம் ஆகிய மூன்றுமே. தனிமைக்கூறுகளின் மொத்தமே ஒரு அளவை ஏற்படுத்துகிறது; தனிமைக்கூறு என்பதோ, எவ்வித அளவை முறையின் அளவீடுகளுக்கும் உட்படுத்த இயலாதது. நிலைப்புள்ளியைப் பொறுத்தவரையில் அதற்கெனத் தனியாக, அகலம் அல்லது உயரம், நீளம் அல்லது ஆழம் என எந்தவொரு உருவளவு அல்லது பருமளவும் இல்லாமலிருப்பதால் அது அளவீடுகள் மற்றும் கணக்கீடுகளுக்கு உட்படாததாக உள்ளது. எனினும், காலத்தின் மிகச்சிறு கூறான கணம் எப்போதுமே பொதுவான ஒரு வகு எண்ணைக் கொண்டுள்ளது. அதாவது, அவ்வப்போதைக்கான கணம், அதுவும் அளவைக்கு உட்படாதது என்பதுடன் அளவீடு செய்ய இயலாததாக உள்ளது. இப்படியாக, உங்கள் அளவீட்டு முறை அறிவியலின் அடிப்படைக் கூறுகள், இயல்பிலேயே அளவீட்டு அணுகுமுறைக்கு அந்நியப்படும் தன்மையைக் கொண்டுள்ளன. இப்படியிருக்கையில், அப்படியான ஒரு அறிவியல் மீது நான் ஏன் நம்பிக்கை கொள்ளவேண்டும்? இப்படியான அளவீட்டுமுறையின் தவறான கருத்தாக்கங்கள் அடிப்படையில், மனித வாழ்நாளுக்கும் மூன்று அல்லது நான்கு அல்லது அதன் பன்மடங்குக்கும் குறைவான வாழ்நாளுள்ள இயந்திரங்கள் எதற்காக உருவாக்கப்படுகின்றன? பாரேன், நீவைத்திருப்பதைப் போலவே நானும் ஒரு வெள்ளை பஃபலோவைத்திருக்கிறேன். லேலண்டில் தயாரிக்கப்பட்ட உன்னுடையதைப் போலல்லாமல் வேறுமாதிரியாக உருவானது. அதில் வெளியே போய்ப்பார், ஒருவிதத்தில் உன்னுடையதைவிட நல்லதாக இருப்பதை நீயே தெரிந்துகொள்வாய்."

"பழகியதா?" என அவள் சிரித்துக்கொண்டேகேட்டாள். "நிச்சயமாக" என்றேன், நான்."உம், போ, முயற்சித்துத்தான் பாரேன்" என்றும் ஆர்வமூட்டினேன். அவள் வாசலில் நின்ற பெரிய வெள்ளை எருமைக்கடாவைத் தடவிக்கொடுத்துப் பின் மெதுவாக அதன் முதுகில் ஏறியமர்ந்தாள். அதன் கொம்புப் பக்கம் என் முதுகு தெரியுமாறும் அவள்முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தவாறும் அதன் மீது நானும் ஏறி அமர்ந்து அதனை, கடல் அருகே செல்லுமாறு ஒட்டி, தண்ணிருக்குள் முன் கால் இரண்டுமிருக்க, பின்கால் இரண்டும் மணலில் இருக்குமாறுநிறுத்தினேன்.அவளின் ஆடையை நான் அவிழ்க்கத் தொடங்கியதும், அவள் முதலில் இதென்னவென்று வியக்கத்தான்செய்தாள். அவளது ஆடைகள் ஒவ்வொன்றாகத் தண்ணிரில் விழுந்து முடிந்ததும், அவள் எனது பொத்தான்களைக் கழற்றத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் எருமைக்கடாவின் மீது சவாரி செய்வதை நிறுத்திவிட்டு, நான் அவளுக்குள் பருத்துக்கொண்டே போவதாக உணர்ந்து, என்மீது சவாரிசெய்யத் தொடங்கினாள். நாங்கள் எருது மீது ஏறாமலிருந்திருந்தால் என்ன செய்துகொண்டிருப்போமோ, அதனை அந்த எருது செய்துகொண்டிருக்க, அவளை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திக்கொண்டிருந்தது நானா அல்லது எருதா, என அவளால் சொல்ல முடியாமலிருந்தது. இரண்டு காதலர்கள் மீது அமர்ந்திருந்த அவள், நாங்கள் எப்படி ஒரு வெண் சைப்ரஸ் காட்டை கடற்கரையில் வெண்பனி மற்றும் துளைக் கற்களைத் தேடிச்சேர்த்துக்கொண்டிருந்தவர்களையும், தங்கள் சொந்த நிழலின் மீதே தீமூட்டி, அதனை எரித்துக்கொண்டிருந்தவர்களையும், சிறிதாக இரத்தம் கசிந்த இரண்டு பெண்களையும், ஒரு தோட்டத்தையும் இரண்டு மணிநேரமாக, முதல் ஒரு மணிநேரம் பறவைகள் பாடிய அத்தோட்டத்தில் இரண்டாம் மணியில் மாலை மலர, அதில் முதலில் கனிகள் தோன்றியதோடு காற்றின் பின்னணியில் பனிப்புயலின் வீச்சு இருந்ததைக் கடந்தோமென்பதை அவள் அந்த இரவினூடாகப் பார்த்தாள். என்னிடமிருந்த எடை முழுவதும் அவளுக்குள் பாய்வதாக அவள் உணரவும், எருது எக்காளமிட்டுக் கூட்டுக்காலில் பாய்ந்து அவளைக் கடலுக்குள் எடுத்துச் செல்ல, கடைசியில் அலைகள் எங்களைப் பிரிக்கட்டுமென எங்களை அலைகளிடம் விட்டுச் சென்றது.

அது எப்படி இருப்பினும், அவளுடைய கண்டுபிடிப்பு குறித்து என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இலையுதிர்காலத்தில் பட்டம் பெறுவதற்குத் தயாரான போது, மீண்டும் நான் அவளுடன் சேர்ந்து படிப்பதாகக் கூறியபோது, அவள் சிறிதளவு கூட வியப்படையவில்லை. முன்பு போலவே தினமும் ஏழு முதல் காலை உணவு வரையிலும் பின்னர் பத்தரை வரையிலும் படித்தோம்; இப்போதென்ன, நான் படித்துக் கொண்டிருந்த பாடத்தில் என்னை நிபுணனாக்க உதவும் முயற்சியிலும் பத்தரைக்குப் பிறகும், புத்தகங்களிலிருந்தும் எங்களைப் பிரிக்கும் அந்த அரை மணிநேரத்துக்கு என்னை அங்கே தங்கச்செய்வதிலும் அவள் ஈடுபடுவதில்லை. செப்டம்பரில் அவள் பட்டம் பெற்றபோது, அவளுடன் சேர்ந்து நான் தேர்வு எழுதியிருக்கவில்லையென்பதற்கு அவளொன்றும் வியப்படையவில்லை.

அதன் பிறகும் ஒருமுறைகூட என்னைப் பார்க்க முடியவில்லையென்பதில் அவள், உண்மையிலேயே வியப்படைந்தாள்; அன்று மட்டுமல்ல, அதைத் தொடர்ந்த நாட்கள், வாரங்கள் மற்றும் தேர்வுப் பருவங்களின் போதுங்கூட மீண்டும் ஒருபோதும் பார்க்கவில்லை. வியப்படைந்த அவள், அவளைப் பற்றிய எனது உணர்வுகள் குறித்த அவளின் கணிப்பு தவறானவையெனத் தெளிவாகத் தெரிந்துவிட்டதென்ற முடிவுக்கு வந்தாள். எதன் பொருட்டென்று, எதுவும் கூறமுடியாத ஒரு குழப்பத்திலிருந்த அவள், நாங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உட்கார்ந்து படித்த அதே அறையில் காலையில் அமர்ந்தாள். காலை உணவைத் தொடர்ந்து, அங்கே மேசை மீதிருந்த வெட்ஜ்வுட் தேநீர் விருந்துக்கலம் அவள் கண்ணில் பட்டது. பின்னர்தான், அவள் உணர்ந்தாள். பல மாதங்களாக, ஒவ்வொரு நாளும் முடிந்து தொடங்கிய மறுநாளிலும் மாபெரும் முயற்சி மேற்கொண்டு, காலத்தையும் சக்தியையும் கணக்கில்லாத அளவுக்கு விரயமாக்கி, நான் அவளுடன் சேர்ந்து படித்தது, ஒவ்வொரு நாள் காலையிலும் நல்லதொரு காலை உணவை, அந்த ஆண்டுகளில் நான் பெற முடிந்த, அந்த ஒரே நேர உணவைப் பெறுவதற்காகவே. அதனை உணர்ந்த அவள் அவளுக்குள்ளாகவே இன்னொன்றையும் கேட்டுக்கொண்டாள். நான் அவளை வெறுத்ததென்பது உண்மையிலேயே நடக்கக்கூடியதா?

முடிவில் இன்னுமொரு கடமை விட்டுப் போயிருக்கிறது:இந்தக் கதையின் கதைசொல்லிகளுக்குப் பெயரிடுவது; வாசகருக்கு ஏற்கெனவேயே தட்டுப்பட்டிருக்கவில்லையெனில், இதோ என்பதில், என் பெயர் பால்கன்தீபகற்பம். அவள் பெயர் ஐரோப்பா.

தமிழில் ச. ஆறுமுகம்

________________

மிலோராட் பாவிச் 1929 இல் பெல்கிரேடில் பிறந்தவர்; செர்பிய மொழியின் சமகால எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி, மொழிபெயர்ப்பாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் செர்பியன் கலை மற்றும் அறிவியல் கழக உறுப்பினராகப் பணியாற்றியவர். இலக்கிய வரலாற்றில் பத்து ஆய்வுநூல்கள், பல கவிதைத்தொகுதிகள் நான்கு சிறுகதைத்தொகுதிகள் மற்றும் ஐந்து நாவல்கள் வெளியாகியுள்ளன. அவரது படைப்புகள் செர்பியாவிலும் அயல்நாடுகளிலும் மிகவும் மதிக்கப்படுவதோடு பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளன. நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பல பட்டியல்களிலும் அவரது பெயர் இருந்தது. ஆயினும் அந்த விருதினைப் பெறாமலேயே 30.11.2009 இல் மறைந்தார்.

யதார்த்த விவரிப்பினுள் மாபெரும் கற்பனைகளை இணைப்பதுவே அவரது உரைநடையின் சிறப்பாகக் கருதப்படுகிறது. இத்தகைய நடை அவரது படைப்புகளுக்கு ஒரு முடிவற்ற தன்மையை அளிப்பதாக மிகுபுனைவாளர்கள் போற்றிப் பாராட்டுகின்றனர்.

இந்த சிறுகதையின் பிரதான கதாபாத்திரங்களின் பெயர்கள் கதையின் கடைசியில் கொடுக்கப்படும் என்ற குறிப்போடு கதை தொடங்குகிறது. கதையின் தலைப்பை வெறுமனே "தேநீர் விருந்துக்கலம்" என்று வைக்காமல் "வெட்ஜ்வுட்" என்னும் சொல்லை இணைத்திருக்கிறார். அந்தச் சொல்தான் இந்த கதைக்குள் நுழையும் வழி என்று கொள்ளலாம்.1759ல் தொடங்கப்பட்ட பாத்திரங்கள் தயாரிக்கும் வெட்ஜ்வுட் நிறுவனத்தின் படைப்புகள் மகாராணியார் பாத்திரங்கள் என்றே அழைக்கப்பட்டன. சீனாவிலிருந்து ஹாலந்து வழியாகக் கொண்டு வரப்பட்ட சிவப்புக் கற்களாலும் களிமண்ணாலும் செய்து சுடப்பட்ட இப் பாத்திரங்கள் உலகம் முழுவதும் பரவின. 1800களில் தேநீர் சொகுசு வாழ்வின் அடையாளமாக இருந்தது. தேநீரின் பின்னே பெரும் வரலாறே இருக்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களையும் பிஜி மாதிரியான தீவுகளில் கரும்புத் தோட்டங்களையும்(சீனிக்காக) காலனிய அதிகாரம் மூலம் ஏராளமாக விளைவித்து உலகம் முழுவதையும் தேநீருக்கு அடிமையாக்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளை தேநீர்த்தோட்டங்களுக்காக அழித்த பிறகுதான் தென்கிழக்கு தமிழகத்தில் மாதம் மும்மாரிபொழிவது குறைந்து மறைந்தேவிட்டது. "போஸ்டன் தேநீர் விருந்து"ம் ஓபியம் யுத்தமும் பெரும் வரலாறானது. ಡ್ದಿ வெட்ஜ்வுட் தேநீர் கிண்ணங்களில் தேநீர் விருந்துகள் அளிப்பது மேட்டுக்குடிக் குடும்பகளில் ஒரு பண்பாடாக மாறயது.

மிலோராட் பாவிச் கதையின் இறுதியில் கதாபாத்திரங்களின் பெயர்களை"ஐரோப்பா" மற்றும் "பால்கன்ஸ்" என்ற சொற்களால் குறிப்பிடும் போது, இச் சிறுகதை பெரும் அரசியல் வடிவம் கொள்கிறது. நாள் முழுவதும் பட்டினி கிடக்கும் "பால்கன்ஸ்" என்னும் இளைஞன், காலை உணவுக்காகவே தான் படிக்காத கணிதத்தை கற்றுக்கொடுப்பதற்காக "ஐரோப்பா" என்ற பெண்ணின் வீட்டுக்கு தினமும் போகிறான். பெரும் அதிர்ச்சியுடன் கதையை மீண்டும் ஒருமுறை வாசிக்க முடிந்தது. குரோஷியா, போஸ்னியா, ஹெர்ஜிகோவினா, மசிடோனா, மாண்டிநெக்ரோ மற்றும் செர்பியா என சிதறுண்டயுகோஸ்லேவியா ஐரோப்பிய யூனியனில் பெரும் ஏழை நாடுகளாக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சிறுகதைகளே இன்று முழு உலகமும் போற்றும் "கஸார்களின் அகராதி" நாவலுக்கான அடிப்படையாக இருந்துள்ளன. பிரதிக்குள் புதைந்திருக்கும் பெரும் பிரதிகளையும் நம்மை வாசிக்க வைக்கிறார் பாவிச்.

இப்பொழுது மீண்டும் இந்தப் பிரதியை வாசிக்கும்போது கதை வேறு வடிவம் கொள்வதை உணரமுடியும்,


Sunday, 12th November 2017

உன்னதம் (http://unnatham.net/)
http://unnatham.net/எது-கவிதை/
எது கவிதை? - - - ரோமன் யாக்கப்ஸன்

ஒத்திசைவு என்பது வேறுபடுத்திப்பார்ப்பதன்முடிவு ஒன்றுக்கொன்று எதிரான ஆக்கக்கூறுகளால் ஆனதுதான் இவ்வுலகம் மேலும்."என்று நான் சொல்லியபோது அவர்இடையிட்டுக்கூறினார் கவிதை.இவ்வுலகில் மிகவும் நேர்மாறான வேறுபாடுகளின் ரகசியமான பண்புத்தொடர்பை ஏற்படுத்துவது. உண்மையானகவிதை ஒத்திசைவு என்பது வேறுபடுத்திப்பார்ப்பதன்முடிவு ஒன்றுக்கொன்று எதிரான ஆக்கக்கூறுகளால் ஆனதுதான் இவ்வுலகம் மேலும். என்று நான் சொல்வியபோது அவர்இடையிட்டுக் கூறினார் கவிதை. இவ்வுலகில் மிகவும் நேர்மாறான வேறுபாடுகளின் ரகசியமான பண்புத் தொடர்பை ஏற்படுத்துவது. உண்மையான கவிதை'

- கரேல் சடனோ, செக் கவிஞர்கரேல் மாச்சாவின்நண்பர்

எது கவிதை: கவிதை ஆனதையும் அல்லாததையும் அடுத்தடுத்துவைத்துப் பார்க்கும் பொழுதுதான்,நாம் கவிதையை வரையறுக்க முடியும். ஆனால் எதுகவிதை அல்ல என்பதை நிர்ணயிப்பதும் அவ்வளவு எளிதல்ல.

நவீன செவ்வியல் அல்லது புனைவியலாளர் காலகட்டங்களில் கவிதையில் ஒப்புக் கொள்ளப்பட்ட பாடு பொருட்கள் ஒரு கட்டுக்குள் இருந்தன. அவை வழிவழியாகத் தேவைப்பட்ட நிலா, குளம், மலை, கோட்டை குயில், ரோஜா போன்றவை என்பது நன்கு அறிந்ததே. மேற்குறித்த பழகியதடத்திலிருந்து, புனைவியலாளர்களின் அபிலாஷைகள் கூடவிலகிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.இன்று என்னைச் சுற்றிலும் விழுந்து கொண்டிருக்கும் இடிபாடுகளுக்கிடையே நான் நிற்பதாகக் கனவு கண்டேன்.கீழே உள்ள ஏரியில் குளிக்கும் தேவகன்னியரைப் பார்த்தேன்.ஒரு காதலன் தன் காதலியோடு சேர்வதற்கு அவளின் சமாதிக்குப் போகிறான். அதன்பின், அந்த அழிந்து போன பழமையான கோதிக் பாணி கட்டிட இடிபாடுகளின்



________________

ஜன்னல்களிலிருந்து குவியல் குவியலாக எலும்புகள் பறந்து வெளிவந்தன என்றுகரேல் மாச்சா (KareHynekMacha1810-36) எழுதுகிறார். மற்ற எல்லாஜன்னல்களை விட நிலவொளி ஊடுருவிவரும் கோதிக் ஜன்னல்கள் மிகவும் ஏற்கப்பட்டவை. தற்காலத்தில் பல்பொருள் அங்காடியிலுள்ள கண்ணாடிகாட்டும் கற்பனை முரணுருவும் கிராமத்தில் வழிப்போக்கர் தங்கும் விடுதியிலுள்ள ஈமொய்க்கும் கண்ணாடிப் பாளங்களும் கவிதைப் பாடு பொருட்களுக்குத் தகுதி வாய்ந்தனவைகளாகக் கருதப்படுகின்றன. மேலும் அண்மைக் காலங்களில் ஜன்னல்கள் வழியே எதுவும் வெளியே பறந்து வர முடியும் செக்நாட்டு சர்ரியலிஸ்க்கவிஞர் நெஸ்வால்(VitezslawNezwa) இவ்வாறு எழுதுகிறார்:

வியப்பிற்குட்பட்டேன் நான்
மலர்த்தோட்டம் கழிப்பிடம்
வாக்கிய நடுவினில் வித்தியாசம் இதிலில்லை
அவற்றுக்கு நீ அளித்திட்ட அழகு அல்லது அது உருவானது
இது எதையும் வேறுபடுத்திக் கூற முடியாது

இன்றைய கவிஞர் கரமஸோவ்சீனியர்க்கு அழகற்ற ஒரு பெண் என்ற ஒன்றில்லை. சந்து, பொந்து செயலற்ற தன்மை, இயற்கை நிலக்காட்சி, அல்லது எண்ணம் இவற்றில் எதுவுமே கவிதைப்பாடுபொருளுக்கு அப்பாற்பட்டவை அல்ல; வேறு விதத்தில் சொல்வதெனில், கவிதைப்பாடு பொருள் பற்றிய வாதத்திற்கு இன்று முக்கியத்துவமில்லை.

இனி கவிதா நெறிமுறைகளை ஒரு வரம்பிற்குள் கொண்டு வரவியலுமா? கிஞ்சித்தும் முடியாது. மாறுதல், நிரந்தரம் என்பதைக் கலையின் வரலாறு உறுதிப்படுத்துகிறது. இந்த நெறிமுறையின் உள்நோக்கத்தை வைத்து, கலையில் குற்றங்கான முடியுமா? டாடாயிஸ்வாதிகளும்,சர்ரியலிஸ்வாதிகளும் கவிதை எழுத முயற்சித்தவர்களை கவிதை எழுத அனுமதித்தார்கள் என்பதை நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டியவர்களாயிருக்கிறோம் ரஷ்யக் கவிஞர் க்லெப்னிகோவ் (Weimir Khlebnkow) அச்சுப் பிழைகளிலிருந்து எத்தனை இன்பம் அடைந்தார் என்பதை நாம் உணர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அச்சுப் பிழைகளும் கூட அடிக்கடி மிகச்சிறந்த கவிஞனை உருவாக்குகின்றன என்று ஒருமுறை அவரே கூறியிருக்கிறார். இடைக்கால கட்டங்களில் கிரேக்கசிலைகளை அறியாமை காரணமாக உருச்சிதைத்தார்கள். இப்போது சிற்பியே உருச்சிதைவை ஏற்படுத்துகிறான். ஆனால் விளைவு ஒன்றாகவே இருக்கிறது. முஸோர்க்ஸ்கியின் (Modest Mussorgsky) இசை ஹென்றிரூஸோ ஒவியம் இவற்றுக்கு என்ன விளக்கம் தருவது? படைப்பாளியின் மேதைமையை வைத்தா? அல்லது கலைத்துவக் குறைபாட்டை வைத்தா, விளக்கம் தருவது?நெஸ்வாலினுடைய இலக்கணப் பிழைகளுக்குப்புத்தக அறிவுக் குறைபாடா? அல்லது உணர்வுபூர்வமாக ஒதுக்கியதா? எது காரணம்: உக்ரேனியக் கோகலும் அவருடைய குறைபாடுடைய ருஷ்ய மொழியும் இல்லாதிருந்தால், ருஷ்ய இலக்கிய மொழியின் அமைப்புச் சட்டங்கள் எப்பொழுதாவது நலிவுற்று விடப்பட்டிருக்குமா?லாரமண்ட் (Comte de Lautreamont) அறிவமைதியுடையவராக இருந்திருந்தால் அவரது Les Chants de Maldoror க்குப் பதிலாக அவர் என்ன எழுதியிருந்திருப்பார்? இப்படிப்பட்டஊகங்கள் சுவையான சிறுகதைத் துணுக்குகளின் கருப்பொருள் வகையைச் சார்ந்தவை. கிரேட்ச்சன்ஆனாக இருந்திருந்தால் ஃபாஸ்ட்க்கு எப்படி தன் உள்ளுணர்வைக் காட்டியிருந்திருப்பாள் என்பதைப் போன்றதாகும், மேலேயுள்ளவை.

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த கவிஞர்களைச் சுட்டும் நெறிமுறைகளைத்தனிமைப்படுத்திக்காட்டுவதில் நாம் வெற்றியடைந்தாலும்கூடகவிதைக்கும் கவிதை அல்லாததுக்கும் இடையேயான எல்லை வரையறைக்கோட்டை நாம் இன்னும் நிலைநாட்டவேண்டியதிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் சொல்லாட்சித்திறத்தில் ஒரே விதமான மோனைகள். இனிமையைத் தூண்டும் நெறிமுறைகளில் வேறுமாதிரிப்படிவங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. தெருவில் ஒடும் வண்டிகளில் நிகழும் உரையாடல், நகைச்சுவைத் துணுக்குகள் நிரம்பியவையாய் உள்ளன. அவையெல்லாம் மிக நுட்பமானதன்னுணர்ச்சிப் பாடல்களில் காணப்படும் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டவை. கிசுகிசுவின் அமைப்பும், அதிக விற்பனையாகும் புத்தகத்தின் அமைப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான் (கிசுகிசுப்பவரின் புத்திசாலித்தனத்தைச் சார்ந்து) சென்ற வருடத்தில் அதிக விற்பனையான புத்தகத்தோடு கூடத் தொடர்புடையதுதான்.

கவிதையைக் கவிதை அல்லாததிலிருந்து பிரிக்கும் எல்லைக்கோடு, சீனப் பேரரசின் எல்கையைவிடக்குறைந்த நிலைத்தன்மையுடையது. நோவலிஸம், மல்லார்மேயும் அரிச்சுவடியை மிகச்சிறந்த கவிதைப்படைப்பாகக் கருதுகிறார்கள். மதுவிவரப்பட்டியல் (Pyotrwazemsky) மன்னர்களின் உடைப்பட்டியல் (Nikolai Gogol) காலஅட்டவணை (Boris Pasternak) சலவையாளர் கணக்கு (Aleksey Kruteryx) இவற்றில் கூடக்கவிதைப் பண்புகள் இருப்பதாக ருஷ்யக் கவிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள். புதினம் அல்லது சிறுகதையைவிட வெறும் செய்தி விவரணை சிறந்த இலக்கியத்துவ வகைமை என்று எத்தனை கவிஞர்கள் இன்று கருதுகிறார்கள். பொஸேனா நெம்கோவா (Bozena Nemcova) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தலைசிறந்த செக் உரைநடையாளரில் ஒருவரும், AMountain Village என்ற கதையை எழுதியவரும் ஆவார்.தன்னுடைய அந்தரங்கக் கடிதங்களை மிகச்சிறந்த கவிதைப் படைப்பாக அவர் பெருமைப்பட முடிவது போல் இப்போது ஒருசில ஆர்வலரால்தான் முடியும்.

மிகச்சிறிய கதைத்துணுக்கொன்று ஒரு சமயத்தில், உலக மல்யுத்தவீரன், சோப்ளாங்கி ஒருவனிடம் தோற்றுவிட்டான், இதைக் கண்ட பார்வையாளருள் ஒருவன், மேடை மீதேறி இப்போட்டி ஏற்கனவே திட்டமிடப்பட்டசதியென்று கூறி சவாலுக்கழைத்து, வெற்றி பெற்றவனைத்தோற்கடித்தும் விட்டான். மறுநாள் செய்தித்தாளில் இவ்விரண்டுமே சூழ்ச்சி என்றொரு கட்டுரை வந்தது. சவாலிட்டு வெற்றிபெற்ற பார்வையாளர் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று அக்கட்டுரைக்குப் பொறுப்பான ஆசிரியர் முகத்தில் ஒர் அறைவிட்டார். ஆனால் செய்தித்தாள் கட்டுரையும் பார்வையாளர் தான் அவமானப்பட்டதால் கட்டுரையாசிரியரை அறைந்ததும் எல்லாமே வேடிக்கைக்காகச் செய்யப்பட்ட கிண்டலாகும்.

உண்மை நிஜமான உலகம் அல்லது வேறெதற்காகவோ இவற்றின் பெயரால் தன்னுடைய கவிதைகளில் கலைகளில் தன் கடந்தகாலத்தைக் கைவிட்டுவிட்டேன் என்று கூறும் கவிஞனை நம்பவேண்டாம். டால்ஸ்டாய் எரிச்சலோடு தன் படைப்புகளை மறுதலிக்க முயற்சித்தாலும்,அவர் ஒரு கவிஞனாகப் பரிமளிப்பதற்குப் பதிலாக பாமரத்தனமான புதிய இலக்கிய வடிவங்களின் வழிகளை அமைத்துவிட்டார். ஒருநடிகர் தன் முகமூடியைக் கிழித்தெறிந்த பொழுது அவருடைய ஒப்பனை நிச்சயமாக வெளிவரும் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டதுபோல் மேலே குறிப்பிட்டதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

உண்மை இயற்கை இவற்றின் பெயரால் ஒருகவிஞனைக் கடுமையாக அலசுகிற விமர்சகனையும் நம்ப வேண்டாம். வேறொரு கவிதையியல் தனிமைக்குழுவின் வேறொரு உருத்திரிபடைந்த நெறிமுறைக் குழுவின் பெயரால், அதாவது உருத்திரிபடையும் மூலக் கூறுடைய நெறிமுறைகளின் ஒரு தொகுதியை நிராகரிப்பதைத்தான் உண்மையிலேயே விமர்சகன் செய்திருப்பதெல்லாம். மொத்தத்தில் கவிதை என்பது ஒரு பெரிய பொய், எழுத ஆரம்பித்ததிலிருந்தே மிகத் துணிவுடன் பொய் சொல்லத் தவறுகிறவன் கவிஞனாகமாட்டான் இந்தக் கணத்தில் Dichtung(சிக்கலான) வடிவத்தை விட Wahrhet(உண்மையும் அழகும் கொண்ட) வடிவத்தில்தான் ஈடுபாடு கொண்டிருக்கிறேன் என்று பிரகடனப்படுத்தும்போது அக்கலைஞன், மேலே கூறிய அதே விளையாட்டைத்தான் சொல்கிறான்.

________________

கவிஞன் தன்னைப்பற்றி அறிந்திருக்கிற இலக்கிய வரலாற்றாசிரியர் பலபேர் அவனது படைப்பின் அமைப்பை அலசுகிற அழகியலாளன், கவிஞனின் உள்மன அமைப்பைத்துருவி ஆய்கிற உளவியலாளன் எனப்பலருண்டு உபதேசியாரிடம் அமைந்துள்ள அதே நிச்சயத்தன்மையுடன் இப்படிப்பட்ட இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கவிஞன் படைப்பை அப்பட்டமான மனித ஆவணம் அவனுடைய கலைத்துவத்திறனின் நிரூபனம்'உண்மையானது'வாழ்க்கையை இயல்பாகப் பார்க்கும் தன்மைபோலித்தனமான, மிகக்கஷ்டப்பட்ட இலக்கிய நோக்கு'இதயத்திலிருந்து வருவது'செயற்கைத்தனமானது இவ்வாறு என்னென்னவோ உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். சோல்டான்(Fedor Soldan) எழுதிய ஆய்வுநூல் Havaceks Decadent Erotica விலிருந்து எடுக்கப்பட்டமேற்கோள்களே மேற்கண்டவை. சிற்றின்ப உணர்வூட்டும் கவிதைக்கும், ஒரு கவிஞனின் சிற்றின்ப வாழ்க்கைக்கும் இடையேயுள்ள உறவை சோல்டான்விளக்குகிறார். அடிக்கடி மாறுதலுக்குரியவாதம் சார்ந்த உறவைவிட கலைக்களஞ்சியத்திலுள்ள பதிவுக்குறிப்புக்களுடன் ஈடுபாடு கொண்டிருப்பது போல குறியும், குறியோசை தெரிவிக்கும் பொருளும், இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து மாறாதது என்று கருதுவது போல காலங்காலமாக உள்ள இருமுக உணர்ச்சிப்போக்குகளின் உளவியல் கொள்கையைப் பற்றி அவர் இதுவரை கேட்டிருந்திராததுபோல், அதனுடைய எதிர்மறை உணர்வின் கலப்பே இல்லாத வகையில் அவ்வளவு தூய்மையான உணர்வென்று ஒன்றில்லை. உள்மன மெய்மைகவிதையியல் புத்தாக்கப் புனைவு இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதன்னியல்பான மூலமுதல் இயல்பின் உறவுகளைக் கண்டுபிடிப்பதற்காக, இலக்கிய வரலாற்றுக் களத்தில் இருமுக முறைமையை அநேக ஆய்வுகளில் இன்றும் உபயோகிக்கிறார்கள். இவ்விரண்டுச் சரியொப்புநிலைகள் எவ்வளவு சாரமற்றவையாய் இருக்கக் கூடும் என்பதற்கு உதாரணமாக மாச்சாவின் டயரிக்குறிப்பை ஆய்ந்து பார்க்கலாம், இந்த டயரிக்குறிப்புமிக அதிகமாக அறிவூட்டத்தக்க ஆவணம்; ஓரளவு வேண்டாதன அகற்றப்பட்ட விதத்தில்தான்,இன்றைய தேதிவரை வெளிவந்திருக்கிறது. ஒருவரைப்பற்றி மற்றவர் எழுதும் வரலாற்றுக்குரிய சிக்கல்களை ஒதுக்கிவிட்ட சில வரலாற்றறிஞர்கள் கவிஞனின் வெளியிடப்பட்ட படைப்புக்களில் மட்டும் முழுவதுமாக ஆழ்ந்த கருத்தைச் செலுத்துகிறார்கள். கவிஞனின் வாழ்க்கையை எவ்வளவுக் கெவ்வளவு தகவல்களைக் கொண்டு, மீட்டுருவாக்கம் செய்ய முடியுமோ,அவ்வளவு மற்றவர்கள் முயற்சி செய்கிறார்கள். மேற்கண்ட இரண்டு அணுகுமுறைகளின் நிறைகளை ஏற்றுக்கொண்ட போதிலும் பாடப்புத்தகங்களில் காணப்படும் அதிகாரபூர்வமான விளக்கங்களின் தன்மையுடைய நம்பந்தகுந்த ஒருவரின் வாழ்க்கைச்சரித்திரத்தைவிட மாற்றியமைக்கும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் அணுமுறையை வெகு உறுதியாக நிராகரிக்கிறோம். ப்ராக் நகரத்தின் பெட்ரின் பூங்காவிலுள்ள மாச்சாவின் உருவச்சிலையை வியந்து கொண்டிருக்கும் கனவுலக வாலிபங்கள் ஏமாற்றமடையாமலிருப்பதற்காக மாச்சாவின் டயரிக்குறிப்பில் தேவையற்றவை தவிர்க்கப்பட்டன. ஆனால் புஷ்கின் ஒருதடவை கூறியதுபோல, இலக்கியம் இலக்கிய வரலாற்றைக் குறித்ததல்ல) 15வயதான யுவதிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் பதினைந்து வயதான யுவதிகள், மாச்சா, டயரிக்குறிப்பிலுள்ளதை விட மிகவும் விபரீதமானவற்றை எப்படியாகிலும் படிக்கிறார்கள். காவிய நீளமைதியோடு, ஆசிரியரின் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் உடலுறுப்புக்களின் செயல்களை, இந்த டயரிக்குறிப்பு விவரிக்கிறது.ஒரு கணக்கரின் கடினமான திட்ப நுட்பத்துடனும் எளிதில் புரியவியலாத குழுக்குறியில் அவர் தன்னுடைய காதலிலோரியுடன் எத்தனை முறையில் அடுத்தடுத்து உடலுறவில் திருப்தியடைந்தார் என்பதை இதுபதிவு க்ேகிறது. கூர்மையான பொருள் பொதிக் கருங்கண்கள், ஆழ்சிந்தனை வரிபடர்விழுமிய நெற்றி, வெளிர்நிறச் சிந்தனை, தோற்றம் இவற்றோடு கூட, மெருகேறிய ஒழுகலாறும், நம்பிக்கைக்குரியவளாயும் இருப்பதுதான், மற்றெல்லாவற்றையும் விட அப்பெண்ணின்பால் அவரை ஈர்த்துக்கொள்ளச் செய்தன என்று மாச்சாவைப் பற்றிக்கரேல் சபீனா எழுதியிருக்கிறார்.இந்த விதமாகத்தான் பெண்மையின் அழகு மாச்சாவின் கவிதைகதைகளில் வெளிப்படுகிறது. அவரது காதலியின் தோற்றத்தைப் பற்றிய விவரங்கள் நிறைந்த டயரிக்குறிப்பிலுள்ள வர்ணனைகள் ஏறக்குறைய ஜோசப் சைமா(osefsma) வின் தலையில்லாப் பெண் முண்டம் சர்ரியலிஸ் ஓவியங்களை நமக்குப் பெருமளவில் நினைவில் கொண்டு வருகின்றன.

தன்னுணர்ச்சிக் கவிதைகள் மற்றும் இந்த டயரிக்குறிப்புகளுக்கும் இடைப்பட்ட உறவும் Dichtung(சிக்கலான) மற்றும் Wahrhet (உண்மையும் அழகும் கொண்ட) டிற்கும் இடைப்பட்ட உறவும் இணைஒத்தவைகளாக இருக்க முடியுமா? இருக்கவே முடியாது. இரு நோக்குகளும் சமமாகச் சொல்லத்தக்கவை அவை சாதாரணமாக வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டவை. ஒரே காட்சியை இரு வேறு முறைகளில் திரைப்பட இயக்குநர் எடுப்பதாகச் சொல்வது போல, புலமைசால் சொல் தொகுதியில், மொழியின் வெவ்வேறு பொருள் மட்டங்கள் புலனுணர்வு சார்ந்த ஒருபொருள் ஒரே அனுபவத்தினை வேறுபடுத்துகிறது. இதற்கு உதாரணமாக, Maர் (மே மாதம் என்னும் இக்கவிதையால் மாச்சாபெரும் கவனம் பெற்றார்), மற்றும் Marinka என்னும் அவரது சிறுகதையைச் சொல்லலாம். மாச்சாவின் டயரிக்குறிப்பு, எல்லா விதத்திலும் அவரின் கவிதைப் படைப்பாக ಟ್ವಿಠ್ಠಲ್ಚಿ இந்த டயரிக்குறிப்பு பயனெறிக் கோட்பாட்டின் எந்தச் சுவடும் கொண்டதில்லை. இது தூயகலை கலைக்காகவே கவிதை கவிஞனுக்காகவே என்று இருக்கிறது. இன்று மாச்சா உயிரோடு இருப்பதாக இருந்தால் ஒருவேளை தன் சொந்த அந்தரங்க உபயோகத்திற்கு-தன்னுணர்ச்சிக்கவிதையை ஒதுக்கிவிட்டு,(சின்னமான்ே, சின்னமானே என் முறையீட்டைக் கேளாய்) என்று தனது டயரிக்குறிப்பை வெளியிட்டிருந்திருப்பார். இதன் விளைவாக ஜாய்ஸோடும், லாரன்ஸோடும் மாச்சா பலபொதுவான விவரணைகள் பெற்றிருப்பதால் அவர்களோடு ஒப்பிடப்பட்டிருப்பார்.இம்மூவரையும் விமர்சகர் ஒருவர். ஒழுங்குமுறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டமுழுமையான விலங்கு உண்ர்வுத் தூண்டல்களால் இலக்கின்றி அலைகிற மனித வகைமை பற்றிய உண்மைச்சித்திரத்தைக் கொடுக்க முயற்சிக்கிறவர்கள் என்று விமர்சித்திருப்பார். புஷ்கின் இப்படித்தொடங்குகிற ஒரு கவிதையை எழுதி உள்ளார்.

அற்புதமான ஒரு கணம் 
நினைத்துப் பார்க்கிறேன் நான் 
சடுதியில் மறையும் ஒரு காட்சியாய் 
தூய அழகின் ஓர் உருவமாய் 
தோன்றினாய் நீ என்முன்

கடவுளின் கருணையால் இன்றுஅன்னா பெட்ரோவ்னாவை அனுபவித்தேன்' என்று இக்கவிதையில் வரும் பெண்ணைப் பற்றித்தன் நண்பருக்குக் கிண்டலாக புஷ்கின் எழுதியிருந்த கடிதத்தினால், தன்வயதான காலத்தில், டால்ஸ்டாய் பெரிதாகச் சினம் கொண்டார். ஆனால், அந்த இடைக்காலத்தில் வந்த செக் நாட்டு mastickr போன்ற நகைச்சுவை நாடகங்கள் ஒழுக்க உணர்வுகளை அவமதிக்கக்கூடியவைகளாக இல்லை.ode(வெண்பா வடிவம்) மற்றும் burlesque (கேலிவடிவம் இவ்விரண்டும் சமமாகவே ஒப்புக்கொள்ளத்தக்கவை. ஒரு பாடுபொருளை வெளிப்படுத்தும் இரு கவிதையியல் வகைமைககளாக இவ்விரண்டும் இருக்கின்றன.

லோரியின் முதல் காதலன்தான் அல்ல என்ற சந்தேகம்தான் மாச்சா மனதைச் சஞ்சலப்படுத்திய பாடுபொருளாகும், தனது மே மாதம் கவிதையில் இக்கலைப் பண்புக்கூறுகீழ்க்கண்டவாறு உருவாகி இருக்கிறது. 

ஒருக்காலும் இல்லை! அவள் என் மாசற்ற தேவதை

நானவளைக் கூடுமுன் அவளேன் தவறினாள்?

ஏன் என் தந்தை அவளைக் கெடுத்தவரானார்?

________________

என் தலைவியைக்கெடுத்தவரவர் 
அன்னியமானேன் நான். 
மேலும், என்பகை என்தந்தை அவரைக் கொன்றது அவரது மைந்தம்.

இந்த டயரிக்குறிப்பின் ஓரிடத்தில்,இருமுறை லோரியை அனுபவித்தபின் அவர் அவளிடம் மறுமுறையும் பேசியது: வேறுயாராவது உன்னைக்கூட அனுமதித்திருந்தாயா என்பது பற்றி, அவள் இறக்க விரும்பினாள்.ஒ கடவுளே நான் எவ்வளவு துயரமடைகிறேன். என்று அவள் கூறினாள் என்மாச்சாவர்ணித்துள்ளார். அதைத் தொடர்ந்து கட்டுமீறிய சிற்றின்ப வர்ணனைவருகிறது. பின் கவிஞர் தன் ஆன்மாவை அசைத்த விரிவான வர்ணனை, அவள் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தால் கடவுள் அவளை மன்னிக்கட்டும், நான் மன்னிக்க மாட்டேன் அவள் மட்டும் என்னை நேசிப்பதாக இருந்தால் -அப்படித்தான் தெரிகிறது-ஏன், ஒருவேசி என்னை நேசிப்பதை அறிய வந்தால் அவளை நான் மனப்பேன்.

மெய்மையின் மிக நுணுக்கமான முழுமையான மறுபதிப்பாக இந்த டயரிக்குறிப்பின் பதிப்புரு உள்ளதென்றோ, கவிஞனைப் பொறுத்தமட்டில் மே மாதம் தெள்ளத் தெளிந்த கற்பனையாக்கமாக இருக்கிறதென்றோ யாராவது கருதுவார்களென்றால் அதுபள்ளிப் பாடப்புத்தகங்கள் செய்வதுபோல் ஒரு கருத்தை எளிமைப்படுத்துவதாகும். ஒருவேளை, டயரிக்குறிப்பைவிட உள்ளுணர்சார்வெளிப்பாட்டினை ஈடிபஸ் உள்ளர்த்தங்களால் தீவிரப்படுத்தப்பட்ட (என்பகை என் தந்தை) இந்தக் கவிதை டயரிக்குறிப்பைவிட அதிகமாகச் சுட்டுகிறது. வெறும் இலக்கியத்தந்திரமாக மாயாகோவ்ஸ்கியின் கவிதையில் தற்கொலை, கலைப்பண்புக் கூறாக இருக்கப்பட்டதாக ஒருசமயத்தில் எண்ணப்பட்டது. மாயாகோவ்ஸ்கி, மாச்சாவைப் போல் இருபத்தாறாம் வயதில் நிமோனியாவினால் இறந்திருந்தால் இன்று இவ்வாறாக இது எண்ணப்படமுடியும்

புதிய புனைவியல் சார்ந்த ஒருவரைப் பற்றிய முழுமையற்ற வர்ணனையை மாச்சாவின் குறிப்புகள் கொண்டிருக்கின்றன. உண்மை உருவத்தையும், அத்துடன் அவர் தன்காதல்வயப்பட்டகதாபாத்திரங்களை எந்த அடிப்படை ီ|န္တိမျိုဇို့ எடுத்துக் கொண்டாரோ அந்த அமைப்பாகவும் இது தோற்றமளிக்கிறது என்று சபீனா எழுதுகிறார். அவன் அதிதீவிரமாக நேசித்தாலும் அவனைவிடமிகத்தீவிரமாக நேசித்த காதலியின் கால்களில் இப்பகுதியின் கதாநாயகன் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறான். அவள் கெடுக்கப்பட்டதாக நம்பிக் கொண்டு கெடுத்தவனின் பெயரை, அவள் சார்பாகவே பழிவாங்குவதற்காக தெரிந்துகொள்ள, நிர்ப்பந்திக்க முயற்சிக்கிறான்.அனைத்தையும் அவள் மறுத்தாள்.அவன் ஆவேசமாக இருந்தான். எதுவுமே நடந்திருக்கவில்லையென அவள் சத்தியம் செய்தாள். பிறகு மின்னலென ஒரு எண்ணம் அவனுள் தோன்றியது. அவளுக்காகப் ಙ್ಗ நான் அவனைக் கொல்ல வேண்டும் சாவே எனக்குரிய தண்டனை அவள் வாழட்டும் என்னால் முடியாது. கெடுத்தவனுக்குக் கூடத் துன்பம் வரப்பிரியப்படாத, அவனுடைய காதலிநெடுநாளாக வேதனைப்படும்தேவதையாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையின் உறுதிப்பாட்டில் தான் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். பிறகு கடைசிக் கணத்தில் அவள் அவனை ஏமாற்றியிருக்கிறாள் என்பதையும், அவளுடைய தெய்வீகமுகம், பேயின் முகமாக மாறிவிட்டிருக்கிறது என்பதையும் அவன் உணர்கிறான். இவ்வாறாகத் தானே, தன்சொந்த சோகமிகுந்த அனுபவத்தை தன்னுடைய நம்பிக்கைக்குரிய நண்பனுக்கு ஒரு கடிதத்தில் தெரிவிக்கிறார்.ஒரு காரியம் என்னைப்பைத்தியக்காரனாக ஆக்கிவிடும் என்று ஒருசமயத்தில் உன்னிடம் சொன்னேன் அது நடந்தேவிட்டது. துரதிருஷ்டவசமாக நாங்கள் தவறு செய்தோம் என்காதலியின் தாய் இறந்தாள். அவள் சவப்பெட்டி அருகே ஒரு சபதம் எடுக்கப்பட்டது. பின்னர் இது உண்மையல்ல. பிறகு நான். ஆஹா.ஹா எட்வர்ட் நான் பைத்தியமாகவில்லை, ஆனால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

கொலையும் தண்டனையும், தற்கொலை, குமுறலுக்குப்பின் ஏற்பட்ட விரக்திநிலை என மூன்று பதிப்புருக்கள் நம்மிடம் உள்ளன. மேற்கூறிய ஒவ்வொரு நிலையும் கவிஞனால் அனுபவிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட சாத்தியங்களையும் தவிர்த்து வேறொன்றுமிருக்க முடியாதநிலையில் எல்லாமே ஒப்புக் கொள்ளப்படத்தக்கவை, கவிஞனின் சொந்தவாழ்க்கையிலும் அவரின் படைப்புகளிலும் இவை நாம் உணரக்கூடியவை. தற்கொலை, புஷ்கினின்சாவுக்கு காரணமான மரணப் போட்டி மாச்சாவின் இலக்கியத்துவமான கேலிக்குரிய முடிவு இவற்றிற்கிடையேயான வேறுபாட்டையாரே வரையறுக்க இயலும் குறிப்பிடத்தக்க வகையில் பிறருக்கு அறிவிக்கக் கூறிய மாச்சாவின் உயர்படைத்தான தகுதியில் மட்டுமின்றி இலக்கியக் கலைப்பண்புக் கூறுகள் வாழ்க்கையோடு எவ்வளவு இணக்கமான முறையில் கலப்பதில் கவிதைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடைப்பட்டபல பண்புத்திறன்கள் கொண்டஇடைவிளைவுகாணப்படுகிறது. தனிமனித மனோநிலை மூலத்தை ஆய்வு செய்வதும் மாச்சாவின் மனோநிலை, சமுதாய நோக்கம் அவற்றின் தனிநபர் உளவியல் அடிப்படைகளை ஆய்வு செய்வதும் ஒரே முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும் தனிநபர் உளவியல் அடிப்படை ஆய்வின் முக்கியத்துவத்தை உடையதாக இருக்கிறது.மாச்சாவின் காலத்தைச் சார்ந்தவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான ஜே.கே. டில். தனது மிகச்சிறந்த குறுநாவலான Rozervanecல் குறிப்பிட்டமாச்சாவின் வார்த்தைகளான, 'என் காதல் ஏமாற்றப்பட்டிருக்கிறது அவரை மட்டும் சார்ந்ததல்ல, அவை ஒரு வாழ்க்கைப் பாங்கைக் குறிக்கிறது. ஏனெனில் அவருடைய இலக்கியக் குழுவின் கோஷம் வேதனைதான் உண்மையான கவிதைக்குத் தாயாக இருக்கக் கூடும் எனப் பிரகடனப்படுத்துகிறது. அவர் காதலில் சந்தோஷமற்றவர் என்று கூற முடிந்ததால்தான் மாச்சாவின் படைப்புகள் அனைத்தும் சிறந்தது என்ற டில்லின் கூற்றை இலக்கிய வரலாற்று தரத்தில் சரியென்று கூற முடியும். ஆசையின் திருப்திக்குப் பின் தொடருகிற அயர்வான மனச்சோர்வுக்காலகட்டத்தில் உண்டாகும் இடைவெளியை நிரப்புவதற்கு பொருத்தமான வழி கற்பழித்தவர்-பொறாமைக் காதலர் என்ற பாடுபொருளாகும். கவிதையியல் மரபுவழியினால் முழுவதுமாக உருவாக்கப்பட்ட மரபுரீதியான கலைப்பண்புக் கூறு ஆகிய ஒரு தளர்வான்நம்பிக்கையற்ற உணர்வு மாற்றமடைகிறது தன் நண்பனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், கலைப்பண்புக் கூறின் இலக்கியத்தன்மையை வலியுறுத்திக் கூறுகிறார் மாச்சா. விக்டர் ஹ்யுகோவுக்கோ, யூஜின்சுவோவுக்கோ தங்களுடைய அற்புதமான நாவல்களில் எனக்கு நேர்ந்திருக்கிற எவற்றையுமே விளக்கிக்கூறும் சக்தி இல்லை. நான் ஒருவன்தான் அவற்றை அனுபவித்தவன். எனவே, நான் ஒரு கவிஞன் மாச்சாவினுடைய நம்பிக்கையற்ற தன்மை, மெய்மையின் அடிப்படையுடையதாக இருக்கிறதா? என்ற கேள்வி, அல்லது -யூகிப்பதுபோல கட்டுப்பாடற்ற கவிதையில் புத்தாக்கப் பிணைவால் உருவாகியதா? என்பதும் ஆய்வுக்குரியதாக, சட்டநுணுக்க ஆய்வுக்கே உரியதாக முக்கித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏதோ ஒரு கருத்து இயைபில் ஒவ்வொரு சொல்லார்ந்த செயலும் அது குறிக்கும் நிகழ்வைச் சிறப்பு இயல்புடையதாக்குகிறது; பண்புமாற்றம் செய்கிறது. அதனுடைய கருத்து சார்பினால் உணர்வு வயப்பட்ட உட்கருத்தினால், அதைக்கேட்ட கவிஞரால் அது ஆட்படும்பூர்வாங்கமான தணிக்கையினால் அது விளைவித்துக் கொண்ட ஏற்கனவே உருவாக்கப்பட்ட எடுத்துக்காட்டு அமைப்புகளினால் அச்சொல் எப்படி செயல்படுகிறது, என்பது நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் செய்திப் பரிமாற்றம் அவ்வளவு இன்றியமையாத முக்கித்துவம் உடையதல்ல என்று தணிக்கை இங்கே தளர்த்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ செய்யப்படமுடியும் என்பதைசொல் சார்ந்த செயலில் கவித்துவம் மிகத் தெளிவாக்குகிறது. ஜான்கோ கிரால்(1822-76) ஆற்றல்மிக்க ஒரு ஸ்லோவாகியக் கவிஞர். தனது மெருகற்ற அழகிய திடீர் படைப்புகளால், பிதற்றலுக்கும் நாட்டுப்பாடல்களுக்கும் இடைப்பட்ட எல்லைக் கோட்டை சிறப்பான விதத்தில் இல்லாமல் செய்துவிடுகிறார். மேலும் தன் கற்பனையில் மிகச் சுதந்திரமாகக் கூட இருக்கிறார், மாச்சாவைவிட தமது எழில்நயமிக்க வட்டார மனப்பாங்கில் அதிகமான தன்னியல்பை உடையவராக இருக்கிறார். மாச்சாவைப்போல, கிராலும் ஒரு தனிச் சிறப்புடைய ஈடிபஸ் வகையே, கிராலைப் பற்றி நெம்கோவாவின் முதல் எண்ணப்பதிவு தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறானது; அவர் மிகவும் இயற்கைக்குமாறுபட்டவர்.அவரது இளம் மனைவி மிக நுட்பமுடையவளாக இருந்தாலும் மிகவும் சூதுவாதற்றவள். அவர்,

________________

அவளை உண்மையிலேயே ஒருவேலைக்காரியாகத்தான் வைத்திருந்தார். தன் முழு ஆன்மசக்தியோடு வேறு எவருக்கும் மேல், எப்பொழும் ஒரேஒரு பெண்ணைத்தான்,தான் நேசித்ததாக அவர் தனக்குத்தானே சொல்வார். அந்தப் பெண், தன் தாயை நேசித்த அதே அளவிற்கு தன் தந்தையை வெறுத்தார். அவரின் தந்தை அவரின் தாயைத் துன்புறுத்தினார்.(அவர் மனைவியை அவர் துன்புறுத்தியதுபோல) அவள் இறந்ததிலிருந்து வேறு எவரையும் தான் நேசித்ததில்லை என அவர் கூறிக்கொள்கிறார். நான் உணர்ந்த அளவில், அந்த மனிதர் ஒரு பைத்தியக்காரக் காப்பு விடுதியில் தான் தன் வாழ்நாளை முடிப்பார். ஆனால் துணிவுமிக்க நெம்கோவாவைக்கூட இது அதனுடைய பைத்தியத்திற்குரிய உள்ளர்த்தங்கள் பயமுறுத்தினாலும் கிராலினுடையவியக்கத்தக்க உடல், உள்ள வளர்ச்சியற்ற பண்புவகை எவ்விதமான அவர் கவிதைகளிலிருந்தும் பீதியுணர்வை வெளிக்கொணரவில்லை. Readings for Students என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பில் பொய் முகமூடியைவிட சிறிது அதிகமானதாக அவை தோன்றுகின்றன. உண்மையில் எப்படி இருப்பினும் ஒரு தாய்- மகன் பாசத்தின் துன்பலியலை கவிதை அநேகமாகக் கண்டிராத அளவிற்கு முரட்டுத்தனமான ஒளிவுமறைவற்ற சொற்களில் அவை வெளிப்படுத்துகின்றன.

கிராலின்கதைப்பாடல்களும், பாடல்களும் எதைப் பற்றியவை?'பங்கிட்டுக்கொள்ளப்படமுடியாத ஆர்வமிக்க தாயன்பு மகனின் தவிர்க்க முடியாத புறப்படுகை, தாயின் ஆலோசனைக்குப்பின்னும் உறுதியான நம்பிக்கை இவை எல்லாமே வீணாயின."விதியை எதிர்த்து யார் போகமுடியும் நானில்லை. தூரதேசங்களில் இருந்து தாயிடம் திரும்புதல் முடியாது என்று நம்பிக்கையற்று மகனைத்தாய் தேடுகிறாள். இவ்வுலகெங்கும் என்துக்கம் கல்லறை பற்றியதே. ஆனால் என் மகனைப்பற்றிய ஒரு செய்தியும் இல்லை'மகன் நம்பிக்கையற்று தாயைத் தேடுகிறான். உன் தாய் பரந்த வயற்புரத்திற்குச் சென்று விட்டிருக்கிறாள். பறக்கிற வல்லூறே ஏன் உன் தகப்பனார், சகோதரர்கள் வீட்டுக்கு உன்னுடைய கிராமத்திற்குப் போகிறாய்? ஜாங்கோவின், அவன் தாயின் கர்ப்பப்பை பற்றிய கனவுடன்கூடிய இயல்புக்கு மீறிய, ஜாங்கோ அழிவுக்குட்படுத்தப்பட்டான் என்ற உடல்பயம், நெஸ்வாலைப் போன்ற, தற்காலத்திய சர்ரியலிஸ்க்கவிஞர்களின் பாடுபொருட்களை ஞாபகப்படுத்துகிறது. நெஸ்வாலின் AStory of Six Empty Houses என்பதிலிருந்து எடுக்கப்பட்டஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

அங்கு விட்டுவைக்க முடியுமா?
 தாயே,என்றென்றும் எனை நீ? 
எங்கும் யாதொரு விருந்தினரும் 
என்றுமிருக்காத வெற்றறையில் 
உன்னின் விருந்தளியாய் 
உறைவதில் மகிழ்வுறுகிறேன் நான். 
ஆனால் கடைசியாக நான் கட்டாயமாக 
வெளித்தள்ளப்படும்போது 
அச்சம் தருவதாய் அது இருக்குமே 
எத்தனையோ நிலைகள் காத்திருக்கின்றன எனக்காக எல்லாவற்றிலும் மிகவும் அச்சந்தரும்நிலை 
மரனத்தை நோக்கிப்போவதே

இங்கு கிராலின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்"(The Recruit)-ல் இருந்து ஒரு பகுதி.

ஏன் ஒப்படைத்தாய் விதியின் கைகளில்
 ஒஎன் தாயே 
என்னை நீ உண்மையிலேயே நேசித்திருந்தால் பூந்தொட்டியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட 
புதுமலரொன்று போல 
அந்நியப்பட்ட இவ்வுலகில் என்னை நீ 
கைவிட்டிருப்பதை உணரவில்லையா? 
எவரும் நுகர்ந்திரா மலர் பறிக்கத்தானெனில் 
பதியமிடுவதேனா?
கொடிது மிகக் கொடிது 
பசும்புல் வெளியொன்று மழையின்றி வாடுவது 
ஆயின் இதனினும் 
நூறு மடங்கு கொடிதன்றோ ஜான்க்கோ துன்புறுத்தப்படுவது.

வாழ்க்கையில் சடுதியில் ஏற்படும் உயர்வும் தாழ்வும் போல, கவிதைபற்றிய தவிர்க்க முடியாத நேர்எதிரிடையான முடிவு எந்தவொரு விதத்திலும் இருக்கிறது. மறுபடியும் இங்கு நெஸ்வாலைப் பார்க்கிறோம்.

நான் நடந்திருக்கவில்லை என்றுமே இந்த வழி கண்டெடுத்தமுட்டையைத் தொலைத்து விட்டிருக்கிறேனா ஒரு கறுப்புக்கோழியின் வெள்ளைமுட்டை அவன் ஜுரத்தில் இருந்திருக்கிறான்.மூன்று முழுநாட்கள். நாய் ஊளையிட்டுக்கொண்டிருந்தது இரவுப்பொழுதெல்லாம் பூசாரி வந்துகொண்டிருக்கிறான் எல்லாக் கதவுகளையும் அவன் ஆசீர்வதிக்கிறான் மயில் தன் இறகுகளால் செய்வது போல, பனிபெய்துகொண்டிருக்கிறது அங்கொரு பின ஊர்வலம் அம்முட்டை சுற்றியோடிக்கொண்டிருக்கிறது என்னவொரு வேடிக்கை, சாத்தானோ முட்டையினுள் உள்ளே ஒன்றுமில்லாத வெறும் முட்டைக்கூடு.

எதிர்ப்புணர்வுக் கவிதைக்கு முழுமையான ஆதரவாளர்கள் இவ்விதக் கவிதை விளையாட்டுக்களால் மிகவும் திகைப்படைந்ததால், ஒன்று தங்களால் இயன்றவரைக்கும் அவற்றை அடக்கிவைக்கவோ, அல்லது மனவேதனைப்பட்டதால் அவர்கள், நெஸ்வாலின் வீழ்ச்சியையும் குறிக்கோளுக்கு வஞ்சனைபுரிந்தமையைப் பற்றியும் பேசினார்கள். ஆயினும் மிக நுணுக்கமாக சிந்தித்து கட்டமைக்கப்பட்ட அவருடைய எதிர்ப்புத்தன்னுணர்ச்சிக்கவிதைகளின் இரக்கமற்றதர்க்க ரீதியான வெளிப்பாட்டியல் போலவே, இவ்விதக் குழந்தைகளின் ஒலிநயப்பாடல்களும் குறிப்புநுட்பமுடைய புதுமைப்போக்கு உடைத்தாயிருக்கிறது என்று முழுமையான நம்பிக்கை உடையவனாயிருக்கிறேன். ஒருங்கிணைந்த

________________

நோக்கின் முழுமையான பகுதியாகவும் வார்த்தையை போலியான உபயோகத்திலிருந்து தவிர்க்கிற ஒருங்கிணைந்த நோக்காகவும் அவை இருக்கின்றன. மொழியியல் குறிகளின் சடுதியில் தோன்றிய, வீச்சுடைய செயற்கை நடைஇவற்றின் காலகட்டமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின்பிற்பகுதி இருந்தது. சமூகவியல் நோக்கில் இவ்வாய்வு முடிவு எளிதில் நியாயப்படுத்தக் கூடியது.இந்தக் காலகட்டத்தில் அநேக வகைமாதிரியான கலாச்சார நிகழ்வுகள், எவ்விதத்திலாவது செயற்கை நடையை மறைக்க வேண்டுமென்ற மேலும் கிடைக்கக்கூடிய எல்லா வழிகளிலும் செயற்கை நடைமேல் நம்பிக்கையைத் தூக்கி நிறுத்தவும் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறது. தத்துவத்தில் நேர்காட்சிவாதமும், எளிய எதார்த்தவாதமும், அரசியலில் தாராளப்போக்கும், மொழியியலில் புதிய இலக்கணக்கூறுகளும், நாடக இலக்கியத் துறைகளில் மாயாவாதமும் இலக்கியக் கொள்கையில் நுண்மையாக பிரித்துப்பார்க்கும் முறைமையும் இப்படிப்பட்ட பலவிதமானவற்றின் வழித்துறைகளின் பெயர் வார்த்தையின் ஆளுமையை முதன்மைப்படுத்தவும், அதனுடைய மதிப்பீட்டிலுள்ள நம்பிக்கையை வழிப்படுத்தவும் உபயோகப்பட்டன.

தற்காலத்திலோ,அறிவுப்புலனுணர் அடிப்படைக் கோட்பாடு, மொழியியல் நாவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிக்கும், தனிப்படுத்தப்பட்ட குறிப்பிட்டபொருளுக்கும் இடைப்பட்ட ஒரு சொல்லின் அர்த்தத்திற்கும் அந்த அர்த்தம் எதைச்சுட்டியதோ அந்த உட்பொருளுக்கும் இடைப்பட்டதனிச்சிறப்பியல்பின் இன்றியமையாத முக்கியத்துவத்தை மிகத்திறம்படத் தெளிவுபடுத்தியிருக்கிறது. சமூக அரசியல்களத்தில் ஒரு இனமொத்த

றிப்பிடப்பட்டசம்பவம் உள்ளது; குழப்பமற்ற, வெறுமையான, ஊறுவிளைக்கும் புலனாகாத செயற்கைப் பேச்சுக்கும் ທີ່ມີຕໍ່ எதிர்ப்பு, ஒவியம் போன்ற சொல்திறத்தை உபயோகிப்பதற்காக மோசடியான வார்த்தைகளை எதிர்க்கும் கருத்தியல் கொள்கைக்கான போராட்டம்(அது) எப்படி, வானவியல், பூமியானது பலகோள்களில் ஒன்று என்பதைத் தெளிவுறுத்தியதன் மூலம் உலகைப்பற்றிய மனிதனின் கண்ணோட்டத்தைப் புரட்சிகரமயமாக்கியுள்ளதோ, அதுபோல கலையில் பல சாத்தியமான குறியமைப்புகளில் மொழியும் ஒன்று எனத்தெளிவாகவும் உறுதியாகவும் சலனப்படங்கள்தான் வெளிப்படுத்தியுள்ளன. தனக்கென ஒருதனித்தன்மை படைத்த பழைய உலகின் புராணக்கதையின் முடிவை, கொலம்பஸின் கடற்பயணம் முக்கியமாகக் குறிப்பிட்டுவிட்டது. ஆனால் இந்தப்புராணக்கதை, அமெரிக்காவின் சமீபத்திய வளர்ச்சியால் மரனஅடிவாங்கியது. ஆரம்பத்தில், திரைப்படமும் அயல் பண்புடைய ஒரு கலைக்குழுவாகவன்றி வேறொன்றுமில்லை என்று கருதப்பட்டது. மேலும் அதுபடிப்படியாக வளர்ச்சியுற்ற போதுதான் இதற்கு முந்தியிருந்த நடைமுறைக் கருத்துப் பாங்கினை உடைத்தெறிந்தது. பல்வேறு கொள்கை வேறுபாடுகளுள்ள பலகுழுக்களைச்சார்ந்த கவிஞர்களின் கவிதையானது ஒரு சொல்லின் அர்த்த புஷ்டியுள்ள தன்னாளுமை பற்றிய உத்திரவாதம் தருகிறது.ஆகையால் நெஸ்வாலின் விளையாட்டுத்தனமான ஒலிநயப் பாடல்கள் உறுதியான ஒரே எண்ணமுடையவர்களைப் பெற்றிருக்கிறது. இலக்கிய வடிவவியல் ஆய்வு பற்றிய சில சந்தேகங்களை எழுப்புவது சமீப காலத்தில் விமர்சக வட்டத்தில் மோஸ்தரான போக்காக இருந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக, இதை மறுத்துக் கூறுபவர்களின் இந்தக்குழு, உண்மை வாழ்க்கைக்கும் கலைக்குமிடைப்பட்ட உறவுகளைச் சரியாகப் புரிந்து கொள்வதில் தோல்வியுற்றிருக்கிறார்கள். இந்தக்குழு கலை கலைக்காகவே அணுகுமுறையைத் துணைக்கழைக்கிறது.இது காண்டிய அழகியலாளரின் வழியைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறது. இவ்விதத்தனிப்பட்டப் பாங்கினைச் சார்ந்த மறுப்புகளுடைய விமர்சகர்கள் மூன்றாவதொரு உருஅமைப்பு இருக்கிறதென்பதை மறந்து, முற்றிலுமாக ஒரு சார்புநிலையில் தங்களது தீவிரவாத உணர்வை உடையவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் எதையுமே ஒரு மட்டத்திலேயே நோக்குகிறார்கள்.டைஞ்சனோவ் (Tyhanov) முகராவ்ஸ்கி (Mukarovsky) ஸ்க்லோவ்ஸ்கி (skovsky) மற்றும் நான், எங்களில் ஒருவருமேகலையின் தன்னிறைவுத் தன்மைபற்றி என்றுமே பிரகடனப்படுத்தியதில்லை, நாங்கள் எடுத்துக்காட்டமுயற்சி செய்வது எதுவென்றால்- கலைசமுதாயக் கட்டமைப்பில் ஒரு உட்கூறு மற்ற எல்லாவற்றுடனும் கலந்து எதிர்விளைவை ஏற்படுத்துகிறது. அது தன்னிலேயே மாற்றம் அடையக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் கலையின் செயற்களம் சமுதாயக் கட்டமைப்பில் உள்ள மற்ற பகுதிகள்இவற்றினுடைய உறவுநிலையான தொடர்ந்ததர்க்கவாதம் சார்ந்த இயக்கத்தை உடையதாக இருக்கிறது. கலையைத் தனித்துப் பார்ப்பதல்ல நம்நிலை மாறாகக் கலையின் அழகியல் செயலின் தன்னாளுமை பற்றியதே.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், கவிதைபற்றிய பொதுவான கருத்தின் உட்பொருள் நிலையற்றது; தற்காலிகமாக வரையறுக்கப்பட்டது.ஆனால் கவிதையியற்றல், கவிதைச் செயற்பாடு, வடிவவியலாளர்கள் வற்புறுத்தியதுபோல தனித்தன்மை வாய்ந்த மூலக்கூறாகும். அதாவது வேறு மூலக்கூறுகளுக்கு எந்திரத்தனமான உருமாற்றப்படமுடியாத ஒன்று. இதைத் தனித்தன்மை வாய்ந்ததாகப் பிரித்து எடுக்கமுடியும் சான்றாக, புதியமுறை ஃபார்மலிஸ் ஓவிய பாணியின் பல்வகை நெறிமுறைகளைப் போல, ஆனால் இது ஒரு விசேஷமான கேள்விக்குரிய பொருள்; கலையில், வாதம் சார்ந்த ஆய்வாளர் கண்ணோட்டத்தில் தோற்ற மூலகாரணத்தைக் கொண்டதாக இது இருக்கிறது. இருப்பினும் இது ஒரு விசேஷமான கேள்விக்குரிய பொருள்தான். பெரும்பகுதியான கவித்துவத்துவம் ஒரு சிக்கலான அமைப்பின் ஒரு பகுதிதான். ஆனால் இப்பகுதி மற்ற தனித்தன்மை வாய்ந்த மூலக்கூறுகளை இன்றியமையா நிலையில் மாற்றுகிறது. அவற்றின் மூலம் முழுமையின் தன்மையை நிர்ணயிக்கிறது. எண்ணை எதிலும், அல்லது தன்னளவில் ஒருமுழுமையான உணவல்ல; தற்செயலாக உணவோடு சேர்க்கப்படும் உணவின் ஒரு பகுதியாகவுள்ள எண்ணை, உணவின் ருசியை மாற்றுகிறது. சிலசமயங்களில், இது எவ்வளவு ஊடுருவிக்கலந்து விடுகிறதென்றால், பெட்டியிலிட்டு நிரப்பப்பட்ட எண்ணையில் பாதுகாக்கப்பட்டமீன், செக்மொழியில் கூறப்படுவதுபோல அம்மீன் தன்னுடைய ஆரம்பகால இனவியல் பெயரை இழக்க ஆரம்பிக்கிறது. சார்டிங்கா (Sardina-sardine), ஓலேவ்கா (pleiovka) என்ற புதுப்பெயரைப் பெற்று விடுகிறது.(ole-pl+ovka) (வருவிக்கப்பட்ட பின்னொட்டு). ஒரு சொல் சார்ந்த செயல் கவித்துவத்தை ਸ਼ பொழுதுதான், ஒரு கவிதையியல் செயற்பாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியத்துவம் அடைகிறது. அதை நாம் கவிதை என்று கூறலாமா?

ஆனால் எப்படிக்கவித்துவத்துவம் தன்னை வெளிப்படுத்துகிறது? ஒரு சொல், சொல்லாக உணரப்படும் பொழுதும், அச்சொல்லில் கவித்துவம் வெளிப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட பொருளை சொல், பிரதிநிதித்துவப்படுத்தும் பொழுதல்ல; அல்லது உணர்ச்சியின் திடீர் வெளிப்பாடல்ல, மெய்மையை ஏனோ தானோ என்று குறிப்பதற்குப் பதிலாகச் சொற்கள், அவற்றின் கூட்டமைப்பு, அவற்றின் அர்த்தம், அவற்றின் வெளி, உள் வடிவம், அவற்றிற்கே உரித்தான தகுதியும் முக்கியத்துவம் பெறும் பொழுதும் கவித்துவம் வெளிப்படுகிறது. இவையெல்லாம் தேவைதானா? ஒரு குறிப்பிட்டபொருளோடு, ஒருகுறி இணைந்துபோகவில்லை என்ற ஒரு தனிப்பட்ட உண்மைக் கருத்தைக் கூறவேண்டிய அவசியம் தேவைதானா? ஏனெனில் குறிப்பிடும் பொருளுக்கும் குறிக்கும் பொருளுக்கும், இடைப்பட்ட அடையாளத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அந்த அடையாளத்தின் குறைபாட்டினைப் பற்றிய நேரிடையான விழிப்புணர்வும் தேவையாயிருக்கிறது. இந்த இயல்பியல் மாற்றம் மிகத்தேவையானதைக் குறிக்கும். முரண்பாடு இல்லாமல் கருத்துருவங்களின் இயக்கமில்லை, குறிகளின் இயக்கமில்லை என்பதற்கான காரணம் மேலும் கருத்துருவத்திற்கும் இடைப்பட்ட உறவு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. செயல்தன்மை ஸ்தம்பித்து விடுகிறது.மேலும் மெய்மையின் விழிப்புணர்வு மறைந்து விடுகிறது.

________________

புகழ்பெற்ற இலக்கியக் கோட்பாட்டாளரும்பின்நவீனத்துவசிந்தனைகளின் முன்னோடியுமான ரோமன் யாக்கப்சனின் (1896-1982)Semotics of Art என்ற நூலில் இருந்து What is poetry என்னும் இந்தக் கட்டுரை எடுக்கப்பட்டது. ஆங்கில மொழியாக்கம்: மைக்கேல் ஹைம்

தமிழாக்கம் மரிய ஜோசப்




L