தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, August 10, 2017

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - க ரஞ்சகுமார் ; 14 மார்ச் 11 - மார்ச் 24, 1999 சரிநிகர்

மார்ச் 11 - மார்ச் 24, 1999




இது வாழ்வின் வெக்கையில் புழுங்கிப் போன மனிதன் எவனுமே இன்னுமொரு * km)cm)。தன்னுள் படைப்பதில் சுகம் காணர்கின்றான் கலைஞன் இக்காரியத்தை மிகவும் இலாவகமாக ரசானுபவத் துடன் செயது அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றான். அதுவே கலை இலக்கியம் அரசியல் விடுதலை எனப் பல தளங்களில் விரிகின்றது. ஆனால் படைப்பாளி கள எல்லோருமே தமது அனுபவ மெயம்மைகள் காரணமாக தாம் படைத்த கனவுலகை பூரணப்படுத்தி மற்றவர்களுக்குத் தருவதில்லை. அவ்வாறு தருபவனே நல்ல படைப்பாளியாக இனங் காணப்பட்டு காலத்தை சில பொழுதுகளேனும் கடந்து செல்கின்றான தமிழில் அவ்வாறானவர்கள் சொற் பம் ஆற்றல் மிக்க பலரை காலம் அற்பாயுளில் கவர்ந்து சென்று விட்டது பலர் கை சோர்ந்துவிட்ட நிலையில் காலத்துடன் சேர்ந்து இழுபடு கின்றார்கள் நீந்திக் கரை சேர்பவர்கள் மிகச் சிலரே ஒரு உதாரணமாக அமரர் தி ஜானகிராமனை நாம் சுட்டலாம். ஈழத்திலோ ஒற்றை விரலைத் தானும் மடக்க முடியாத பாக்கியசாலிகள் நாம்! காரணங்கள பல ஆராயவது இங்கு பொருத்தமற்றது.

சுந்தர ராமசாமியின் படைப்புக்களுள் அவர் கடைசியாக நமக்குத் தந்திருக்கின்ற குழந்தைகள் பெண்கள் ஆண்களில் பெரும்பாலானோர் படைப்பாளியையே பெரிதும் நினைவூட்டுகின்றனர். பாலு என்கின்ற சிறுவன் சுந்தர ராமசாமியின் இளம் பிராயம் எனத் தோராயமாகக் கூறலாம் எனப் ஆர் எளப் தனது வியாபாரத்திலும் குடும்பத்தலைவன என்ற ரீதியிலும் மிகவும் கணிடிப்பான கறார் பேர்வழி சுந்தர ராமசாமி தமிழிலக்கிய உலகில் மிகவும் கறார் பேர்வழி இது எளப் ஆர். எஸ் இடமிருந்து அவருக்கு முதுசொமாக கிடைத்த குணாம்சமெனக்

லச்சம பூரீதரன வள்ளி ஆகியோர் நிகழ்காலத்தின் சீரழிவுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு துலமாகவும், குக்குமமாகவும் அழிக்கப்படுகின்றனர். பாலு முடமாக்கப்படுகின்றான். எளப் ஆர். எளப் லட்சுமி சாமு, சீதை, பங்கஜா

பிஷாரடி சுகன்யா, சேது அய்யர் முதலியோர் சாறு பிழியப்பட்ட சக்கைகளாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

நாவல் முழுக்க இலேசான மலையாள மணம் கமழ்கின்றது. அது இந்த நாவலுக்குப் பிரத்தியேகமான ஒரு கவர்ச்சியை அளிக்கின்றது. நாவலை துக்கி நிமிர்த்தும் பிரதானமான காரணிகளுள் ஒன்று இங்கு கையாளப்படும் மொழியாகும் சு ரா வின் பிற படைப்புக்களிலிருந்து இந்த நாவலின் மொழி நுணர்மையாக வேறுபடுகின்றது. ஜே.ஜே. சில குறிப்புக்கள்" போன்று அடிவயிற்றிலிருந்து பீறிடும் ஓங்காரத் தொனி இங்கில்லை. அவரது சிறுகதைகளில் காணப்படும் மின் வெட்டுப் போன்ற பளிரிடல்களும் இங்கில்லை. மழை மூட்டம் போன்றதொரு மொழி இது அமைதியாக இதமாகச் செல்கின்றது.

நாவலில் இன்னுமொரு வள மான அம்சம் இதில் வரும் பெனர்கள் விதம் விதமான பெண்கள் ஆனந்தம் மனதைக் கவவுகின்ற பெண லட்சுமி சுய இரக்கம் கொனட் பெண சுகன்யா, கோமதி, வள்ளி போன்றோர் முற்போக்கானவர்கள் மீள வழி இருந்தும் செயல்பட முடியாத சூழலில் மாட்டிக் கொண்டவர்கள் அதனால் சுயவெறுப்புக் கொண்டவர்கள் சீதை சாவித்திரி போன்றோர் சகல தளைகளாலும் கெட்டியாகக் கட்டப்பட்டு நீரில் மூழ்கித் தத்தளிப்பவர்கள் மீள வழி தெரியாதவர்கள்

இறந்த காலத்தின் மீதான கனவு

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலின் மீதான சில மனப்பதிவுகள்

குழந்தைகள் பெனகள ஆணிகள்" என்னும் நாவல் முக்கியமானது அவரது இதர படைப்புக்களுக்கான (கட்டுரைகள் உட்பட) மூல ஊற்றும் அச்சும் இந்த நாவல் தான் இந்த நாவலிலிருந்து முன்னோக்கி நகர்வது சற்றுக் கடினம் ஆனால் பின்னோக்கி ஒரு எல்லை வரை நாம் நகரலாம் அவ்வாறு நகர்ந்தால் அவரது சிறுகதைகள் ஏனைய இரண்டு நாவல்கள் கட்டுரைகள் ஆகியவற்றினுள் நாம் போய்ச் GFUG1) TLÓ.

சுந்தர ராமசாமியின் உறவினர் ஒருவர் இதை எழுத எத்தனை வருடம் எடுத்தது?" என்று அவரிடம் கேட்டாராம் அவர் எழுதத் தொடங்கிய கணத்திலிருந்து இந்த நாவல் சிறுக சிறுக எழுதப்பட்டிருக்கிறது என்பதே உணர்மை யென எனக்குத் தோன்றுகிறது.

இது தரும் முக்கிய செய்தியை ஒரு வரியில் சொல்" என்றும் கேட்டாராம் உறவினர் நாவலை ஒரு வரியில் சொல்ல முடியாது தான் ஆனால் ஒரு வரியில் வர்ணிக்க முடியும் என்னுர்க் கோயிலின் தீர்த்தக்கேணியை பார்த்துக் கொணர்டிருப்பது" போன்ற அனுபவத்தை இது தருகின்றது.

இந்தியாவிலிருந்து அந்நியர் வெளியேறுவதற்கு ஏறத்தாழ பத்தானர்டுகளுக்கு முன்னரான மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு காரியார்த்தமான வியாபா ரியின் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கொணடு பின்னப்பட்ட கதையைச் சொல்கின்றது இந்த நாவல கதை மாந்தர்களுள் பலரை ஏற்கெனவே சுந்தர ராமசாமியின் இதர படைப்புகளில் கண்டிருக்கிறோம். ஆனால் இந்நாவலின் மூலம் அவர்களை நெருங்கி வருகின் றோம். இந்த நாவல் அவரது படைப் புகளின் மூல அச்சு என்று ஏலவே கூறியதன் அர்த்தம் இது தான் தனது அகவுலக சலனங்களின் முழுமையை அவதானித்து நெறிப்படுத்தி வெளிப்படுத்த சுந்தர ராமசாமிக்கு நிறைய காலம் பிடித்திருக்கிறது. தனது குடும்பத்தின் கதையைப் புனைய அவர் தனது படைப்புலக வாழ்வின் பிந்திய காலகட்டத்தை தேர்ந்தெடுத்திருக் கிறார். ஆனால் நீல பத்மநாபன் போன்றோரிடம் இது மறுதலையாக நிகழ்ந்திருப்பதும் அவதானிக்கத் தக்கது.

நாவலில் வரும் ஆண கதை மாந்தர்

GA, Italian Cint2

சம்பத் கருநாகப்பள்ளி ரீதரன் செல்லப்பா ஆகியோரிடமும் சுந்தர ராமசாமியின் முகம் தெரிகின்றது கருநாகப்பள்ளி பரீதரன் ஆகியோரில் மார்க்சியத்தின் பாலி சுரா வுக்குள்ள அக்கறையை விமர்சனத்தைக் காணலாம் காந்தியத்தின்பால் சுரா வுக்குள்ள பற்றுதல் செல்லப்பாவாக உருவெடுத்திருக்கிறது. சம்பத் இதர கோட்பாடுகளை திறந்த மனதுடன் அணுக முற்படுபவர் அதேசமயம் நம்பிக்கையினம் தொனிக்கப் பேசுபவர் இதுவும் கூட சுந்தர ராமசாமியின் பணிபுகளுள் ஒன்றெனப் படுகின்றது.

அந்நியர் வெளியேறிய பிறகு கொஞ்ச காலம் ஏதாவது நல்லது நிகழலாம்" என்ற நப்பாசையில் சிறிது காலம் கழிந்து விட்டது அதன்பின் சீரழிவுகளை தொடர்ந்து கணடு கண்டு மூச்சடைத்துப் போய் விட்டோம் சுணை கெட்டு விட்டது. அரசியல் தளத்தில் எம்முன்னால் நிற்பது ஒரு குனியம் இந்த நிலை இன்று தமிழில் சிந்திப்பவனுக்கும் எழுதுபவனுக்கும் முன்னால் உள்ள ஒரு சவால்

ஆஹா கிருதயுகம் எழுகின்றது வாரீர்" என்று பொய் பேச நெஞ்சைத் தொட்டுக் கொண்டு எழுதுகின்ற எவராலும் முடியவில்லை.

இதற்கு சுந்தர ராமசாமியும் விதிவி லக்கு அல்ல. அவரது படைப்புக்களுள் ஒரு எல்லை வரை மட்டுமே பின்னோக்கிச் செல்லலாம் என்று முதலில் குறிப்பிட்டது இந்த அர்த்தத்தில் தான் முன்னால் உள்ள குனியத்தை எதிர்கொள்ள அவரிடம் திராணி இல்லை. தனது இயலாமையை ஜே ஜே. சில குறிப்புக்கள்" என்னும் நாவலில் பிறரையும் தன்னையும் பரிகசித்து வெளிப்படுத்துகின்றார் அதன் பின்னர் இறந்த காலத்தின் மீதான கனவுலகினுள் அவர் புகுந்து கொண்டதன் அடையாளம் தான் குழந்தைகள் பெண்கள் கனவுகள் என்னும் நாவல்

நாவல் காந்தியவாதிகள் உயிர்ப்புடன் இயங்கிய காலத்தில் நிகழ்கின்றது செல்லப்பா எலிசபெத் டீச்சர் ஆகியோர் அக்கால கட்டத்தின் குறியீடு அனாதையாக ஆனால் உறுதியானவராக இருக்கின்றார் செல்லப்பா ஆனந்தத்துக்கும் செல்லப் பாவுக்கும் இடையேயுள்ள உறவுநாவலின் ரம்மியமான பகுதிகளுள் ஒன்று.

சில கதைமாந்தர்கள் பல வின புட்போட்டில் தொங்கிக் கொணர்டி ருப் பவர்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள் சிலர் தங்களை நாவலுக்குள் திணித்துக் கொள்ள முயலுகிறார்கள் சிலர் அக்கறை பற்றுத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நாவலின் பலவீனமான அம்சம் இது

வேனல் பந்தலில் எளப் ஆர் எஸ். அவரது சகபாடிகள் ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்களும் மாந்தோப்பில் பரீதரனுக்கும் அவனது சகாக்களிடையேயும் நடைபெறும் உரையாடல்களும் வாசகன் அவர்களிடையே புகுந்து நாலு கேள்விகள் கேட்க ஏதுவாக அமைந்திருக்கின்றன

பாலு லச்சம் ஆகியோரது மன அவசங்கள் விஞ்ஞானரீதியாக அலசப்படுகின்றன லச்சம் மூர்க்கமான ஒரு போராளி. ஆனால் குழலின் குரூரம அவனை அடித்து வசக்கி கொன்று விடுகின்றது. பாலு நொய்ந்து போன மனமுடையவன ஆனால் கூருணர்வு உள்ளவன் காலத்தின் மீதான அதிருப்தியுடன் அவனை மீண்டும் ஜே ஜே சில குறிப்புக்களில்" சந்திக்கின்றோம்.

முன்னரே கூறியது போல குழந்தைகள் பெண்கள், ஆணிகள்" என்னும் இந்த நாவலை படித்தபின் மீண்டும் அவரது இதர படைப்புக்களைப் படித்தால் கூடுதல் துலக்கம் பெறலாம் ஜே ஜே சில குறிப்புகள் இதன் நீட்சி சன்னல் கிடாரி எங்கள் டீச்சர் பக்கத்தில் வந்த அப்பா விகாசம் முதலிய சிறுகதைகள் இந்த நாவலுடன் நேரடித் தொடர்பு கொண்டவை அவரது இதர சிறுகதைகளும் இந்த நாவலில் ஒளிவீச்சினுள் அகப்படுபவை தான தமிழின் நல்ல நாவல்களுள் குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்பதும் அடங்குகின்றது. ஆனால் தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக இதனை கொள்ள முடியாது தமிழில் உன்னத நாவல் களைப் பெற நாம் இன்னும் காத்திருக்க வேண்டும் சுந்தர ராமசாமி எமது அந்தத் தேவையை நிறைவேற்றுவார் என்று தோன்றவில்லை.