தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, September 13, 2016

பரவளைவுக் கோடு - சண்முகம் சிவலிங்கம்

www.noolaham.org















http://padamm.blogspot.in/2006/05/lesbos.html
Chandra


பரவளைவுக் கோடு

அதிகம் நடந்து விட்டோம்
ஆவணிமாத வெயிலின் கொடுமை
மிகவும் களைத்து விட்டாய்

...
...
...


வேறெங்கு போவோம்? - பார்
வானம் விரிந்துள்ளது
ஆனியில் வெட்டி,
அறுவடை செய்தவர்கள் போனபின்,
அந்தப் புதைதாளின் ஒட்டுகள் மஞ்சள் நிறமாகி
வைக்கோல் இடையிடையே சிந்திக் கிடக்க,
திரளாய்ப் பசுக்கள் எல்லாம் வந்து நின்று மேய,
வரம்பு ஒன்றில் ஏறி நாம்,
தென்திசையைப் பார்த்தோம்
வடதிசையும் பார்த்து நின்றோம்.

'கண்படும்வரை நீள்கரவாகு வட்டை' என்றேன்.
'அங்கே அடிவானம் அண்டுதுபார்' என்று சொன்னாய்

அன்று,
தலைமழை பெய்த அடுத்தநாள் என்று நினைக்கிறேன்
ட்றாக்டர் இரைச்சல் ஒன்று
இந்த வயலில் எழத்திரும்பிப் பார்த்து நின்றோம்.

'மந்தப் பொழுதில் மலைகளைப்பார்' என்று சொன்னாய்.

'இந்த வயலூடு இவ்வாறே இவ்வாறே நாம் நடந்து சென்றால்,
அந்நீலச் சிகரங்களையுடைய
ஊவா மலைத்தொடரில் ஊன்றலாம் கால்" என்று சொன்னேன்.

நீயோ சிரித்தாய்
நெடுகச் சிரித்து வந்தாய்
ஓமோம் பிழைதான்
உணர்ந்தபின்னர் நான் சிரித்தேன்.

"வாழ்வினிலே அன்றுசெல்லும் அடிவானத்தை
வசப்படுத்தப் பயணமுற்ற மனிதர் உள்ளே
நாமும் இருதுளியானோம், நடந்துசெல்வோம்..."
என்று நான் முன்னர் எழுதியதைச் சொன்னேன்
நன்றி என்று சொன்னாய்
திரும்பி நடந்து வந்தோம்.

மீளத் தொடர்ந்து விரியும் புதுவானின்
நீளம் அளக்கும் நினைப்போ எனக்குளது?

நீளமும் இல்லை
அகலங்கள் இல்லை
வளைவு - வளைவு - வளைவு!...

-சண்முகம் சிவலிங்கம்