தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283  வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

சமதளமாக, வட்டவடிவமாக இருக்கும். செடிகளும் புற்களும் அதைச் சுற்றி வளர்ந்திருக்கும். அந்த இடம் தனிமையாக அமைதியாக இருக்கும். ஜாலாலி தன் இருப்பிடத்துக்கு அருகில் வந்து சுற்றுவதால் மீனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. கோபம் அதிகமாக அதிகமாக அது தன் வாலை ஆட்டியது ; முன்னும் பின்னும் ஓடியது. மனித உருவத்தைப் பார்த்துப் பயப்படுகிறது, அல்லது பயப்படாமல், குதிரை காலெடுத்து வைப்பதுபோல் செதில்களை ஆட்டியது. மலைப்பாம்பின் உடலில் காணப்படுவது போல் பெரிய பெரிய சக்கரங்கள் அதன் உடலின்மேல் தீட்டப்பட் டிருந்தன. அதைப் பார்க்க ஒரு பெரிய கறுப்புத் தூண்போல இருந்தது. மனிதனைவிட எவ்வளவோ பலம் வாய்ந்தது அது. அவ்வளவு சக்தியையும் சேர்த்து வைத்துக்கொண்டு ஜாலாலியின் நெஞ்சைக் குத்திக் கிழிப்பதற்காக அவளைத் தாக்கியது. அப்போது ஜாலாலியின் தலை கீழாக இருந்தது. அவள் அல்லிக்கிழங்கு பறிப்பதற்காக இருகால்களையும் அகலப் பரப்பிக்கொண்டு தவளையைப் போல் தண்ணீருக்கடியில் இறங்கிக்கொண் டிருந்தாள்.

அப்போதுதான் மீன் அவளைத் தாக்கியது.

ஜாலாலிக்கு மூச்சுத் திணறியது. பிரம்மாண்டமான மிருகம் போல் மீன் குதித்தது. அந்த வேகத்தில் தண்ணீரில் சுழல் உருவாகியது. தண்ணீருக்கடியிலிருந்த செடிகொடிகள் சுழலில் சுழன்று ஜாலாலியின் மெல்லிய உடலைச் சுற்றிக்கொண்டன. அவள் அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கடைசி முறையாக முயற்சி செய்தாள். அவளிடமிருந்து ஓர் ஏப்பம் வந்தது. வாயைத் திறந்து மூச்சுவிட முயன்றபோது அவள் நிறையத் தண்ணீரைக் குடித்துவிட்டாள். அவளால் மறுபடி மேலே எழும்ப முடியவில்லை. தண்ணீருக்குள்ளேயே மூச்சுவிட முயற்சி செய்யச் செய்ய அவள் எல்லாத் தண்ணீரும் தன் வயிற்றுக்குள் போவதைக் கண்டாள். அவள் தன் உயிருக்காகத் துடித்துக்கொண்டு அல்லி, தாமரைக் கொடிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யச் செய்ய அந்த இரு சிவப்புக் கண்களும் பெரிதாக ஆகி ஆகி நெருப்புக்கோளமாக ஆகிவிட்டன. அதன் பிறகு அந்தக் கோளங்கள், தண்ணீருடன் தண்ணீர் கலந்து விடுவது போல் தண்ணீரில் கலந்து ஒரு பூப்போலக் காட்சியளித்தன. அதன் பிறகு ஜாலாலியின் உயிர் குமிழிட்டுக் கொண்டு காற்றாகித் தண்ணீருக்கு மேலே வந்தது. அந்த மலரின் நிறம் இப்போது மறைந்துவிட்டது. தண்ணீரின் சுழற்சியும் குறைந்துகொண்டே வந்தது. தண்ணீருக்குள்ளிருந்த புல்லும் புதரும் செடிகளும்

234கொடிகளும் சலனமின்றி நின்றன. அவற்றுக்கிடையில் அகப்பட்டுக் கொண்டிருந்தது ஜாலாலின் உடல். இப்போது அவளைப் பார்த் தால் ஒரு விசித்திரப் பிராணியைப் போல் தோன்றியது. கொடிகள் அவளுடைய கழுத்தைச் சுற்றிக்கொண் டிருந்தன. நெஞ்சைச் சுற்றியும் காலுக்குக் கீழேயும் நீர்க்கொடிகள் எண்ணிறந்த கடப்பம் பூக்களைப் போல் சுற்றிக்கொண் டிருந்தன. ஜாலாலி குப்புற விழுந்து கிடந்தாள். அவளுடைய கால்கள் மேலேயும் தலை கீழேயும் இருந்தன. வெள்ளியைப் போல் பளிச்சிட்ட ஒரு மீன் அவ ளுடைய மூக்கிலும், முகத்திலும், ஸ்தனத்திலும் குறுகுறுப்பு உண் டாக்கப் பார்த்தது.

கஜார் மீன் அசையவில்லை, அது தூரத்தில் வாலை விறைப்பாக வைத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தது. அந்த அபூர்வப் பிராணி செடி கொடிகளில் அகப்பட்டுக் கொண்டு அசைய முடியாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு அது வெற்றிவீரனைப் போல் தன் இருப்பிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் செதில்களை ஆட்டிக்கொண்டு வேகமாகத் தெற்குப் பக்கமாக ஓடியது. இந்தச் செய்தியை எல்லாருக்கும் சொல்லவேண்டும்: "இதோ பாரு ! நான் என் வீட்டிலே ஒரு

அதிசயப் பிராணியை பிடிச்சு வச்சுட்டேன்!''

பிரம்மாண்டமான மீன். அதன் நெற்றியில் செந்தூரமிட்டாற் போன்ற அடையாளம், அதற்கு எவ்வளவு வயசோ, யார் கண்டார் கள்! மனிதர்கள் காலங்காலமாக ஈட்டிகளால் அதை வேட்டை யாடிய அடையாளங்கள் அதன் உடலில் காணப்பட்டன. அதன் வலது உதட்டில் இரண்டு பெரிய தூண்டில் முட்கள் டோலாக் கைப் போல் தொங்கின, அதன் உடலில் மூங்கில் ஈட்டிகளின் சிறிய சிறிய முனைகள் குத்திக்கொண்டு இருந்தன. தேடிப் பார்த்தால் இதுபோல் நிறைய அந்த மீனின் உடலில் பார்க்கலாம். அந்த மீன் இப்போது மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு மேலே பாய்ந்து வந்தது,

கரையிலிருந்த ஜனங்கள், தண்ணீரில் ஒரு கூடை மிதப்பதை கண்டு கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ஜனங்கள், ஏரி நீரில் ஒரு மீன் அல்ல, ஆயிரக்கணக்கான மீன்கள், மேலே கிளம்பிக் கீழே விழுவதைப் பார்த்தார்கள். ராட்ஸசக் கஷார் மீன்களெல்லாம் முதலையைப் போல் தண்ணீருக்கு மேலே வருவதைக் கண்டு அவர்கள் பயமும் திகைப்பும் அடைந்தார்கள். அவை எல்லாருக்கும் சொல்வது போலிருந்தது : " பாருங்க, நாங்க செய்யற வேடிக்கை யைப் பாருங்க! நாங்க நீரிலே வசிக்கற பிராணிகள், தண்ணீ யிலே எங்களுக்குச் சுகம்."

235i

சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். அவனுடைய சிவப்பு ஒளி நீரில் பிரதிபலித்தது. வானத்திலும் சிவப்பு. மனிதர்களின் முகங்களும் நெருப்பாகச் சிவந்திருந்தன. ஏழை மக்கள் ஒன்றும் செய்ய வழியின்றி அங்கே நின்றுகொண் டிருந்தார்கள். ஒரே குளிர்; பொறுக்க முடியாத குளிர். எல்லாக் குளிரும் வாடைக் காற்றில் மிதந்து வந்து அந்த ஏரியில் குவிந்துவிட்டது. தண்ணீரில் மூழ்கி மூழ்கி அவர்களுடைய உடம்பு வெளுத்துப் போய்விட்டது. அவர்கள் ஆயிரக்கணக்கான கஜார் மீன் கள் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு மேலே வருவதையும் பிறகு தண்ணீருக்குள் மூழ்குவதையும் பார்த்தார்கள்.

அந்தக் கிழவி - அவளுடைய உடல் அநேகமாக நிர்வாணமாக இருந்தது. அவள் குளிர் காய்வதற்காக உலர்ந்த புல்லையும் சருகுகளை யும் சேர்த்தாள், அப்படிச் சேர்த்து நெருப்பு மூட்டித் தன் கந்தல் கந்தலான துண்டு அளவுப் புடைவையை உலர்த்திக்கொள்ள முடியாவிட்டால், அவள் இந்த ராட ஸசக் குளிரில் ஏரிக்கரையில் லேயே இறந்துபோய்விடுவாள். அவள் சருகுகளில் நெருப்பு மூட்டிவிட்டுக் கிசுகிசுக்கும் குரலில் ஏதோ சொன்னாள். அவள் என்ன சொன்னாளென்று தெரியவில்லை. அவளுடைய வாயையும் கண் களையும் பார்த்தால்தான் அவள் ஏதோ சொன்னாள் என்றே தெரிந்தது.

'மனிதர்களே ஏ, மனிதர்களே! மீன்களோட விளையாட்டைப் பாருங்கள்! சந்தோஷம் வந்தால் அது எப்படிக் குதிக்கறது, பாருங்க ! ஒரு காலத்துலே 'நோவா'ன்னு ஒரு மகாபுருஷன் இருந்தான். அவன் காலத்துலே ஒரு பிரளயம் ஏற்பட்டது ! இந்தக் கதையையெல்லாம் கிழவி சொல்ல நினைத்தாள் போலும்!

இதையெல்லாம் பற்றிப் பேசி என்ன பிரயோசனம்? ஜாலாலி அவளுடைய கணவன் ஆபேத் அலி கொய்னாப் படகில் வேலை செய்கிறான். இப்போது தண்ணீருக்கடியில் இரு தேவதைகளின் ஜோதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளுக்கு மகாப் பிரளயம் பற்றிய செய்தியால் என்ன பிரயோசனம்? யாரும் கிழவியை லட்சியம் பண்ணவில்லை. எல்லாரும் இப்போது நெருப் புக்காக ஏங்கினார்கள். அவர்கள் ஜாலாலி தண்ணீரில் முழுகி விட்டதைக் கூட மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்களுக்காகக் கவலைப்படத் தொடங்கினார்கள். கரையிலிருந்து உலர்ந்த புல், சருகுகள், சுள்ளிகள் இவற்றைப் பொறுக்கிக்கொண்டு வந்து நெருப்பில் போட்டார்கள். ஏரிக்குள் சூரியன் மறைந்து கொண்டு இருந்தான். நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து ஆகாயத்தைத் 236தொடுவது போல் உயர எழும்பியது. அதன் நாக்குகள் நாற்புறமும் நீண்டன. அந்த நெருப்பின் வெப்பம் பட்டு மீன்கள் ஏரிக்குள் புகுந்துகொண்டன.

ஏரிக்கரையில் பைத்தியக்கார டாகுர் நின்றுகொண் டிருந்தார். அவர் குளிர் காய நெருப்புக்கு அருகில் போகவில்லை. அவர் கைகளைப் பிசைந்துகொண்டு, '' கேத்சோரத்சாலா !" என்றார். ஏரிக்குள் ஒரு மனிதன் முழுகிவிட்டான்! அல்லிக்கிழங்கு பறிக்கத் தண்ணீருக்குள் மூழுகிய மனிதன் திரும்பி வரவில்லை.

மக்கள் நெருப்பைச் சுற்றி நின்றுகொண் டிருந்தார்கள். ஏரியில் மிதக்கும் கூடை அசையாமல் நின்றது. காற்று அடங்கிவிட்டது. தாமரை இலைகள் அந்தக் கூடையைத் தடுத்து நிறுத்திவிட்டன. அஸ்தமிக்கும் சூரியனின் ஒளியால் தண்ணீர் ரத்தம் போல், பிறகு வெளிர் சிவப்பாக, பிறகு கொஞ்சங் கொஞ்சமாகச் சிவப்பு நிறம் மங்கி நீலமாகிவிட்டது, பிறகு பசுமை நிறம், பிறகு கறுப்பாகிவிட்டது. தண்ணீர் சலனமற்று இருந்தது. அதில் குமிழி கூட எழவில்லை. குளிர் காரணமாக மீன்களுக்குக் கூட அசையத் துணிவு பிறக்க வில்லை .

பைத்தியக்கார டாகுர் சொன்னார்: "கேத்சோரத்சாலா!'' எருமையின் வெட்டப்பட்ட தலை ஏரிகரையில் அப்படியே கிடந்தது. எருமையின முண்டத்தை எடுத்துச்சென்ற மனிதர்களுக்கு அதன் தலை அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. தலையை எப்படியும் எறிந்துவிட வேண்டியதுதான். எருமையின் உடலின் எல்லாப் பாகமும் சாப்பிட லாயக்கில்லை. இருந்தாலும் முழுவதையும் எடுத்துக்கொண்டுதான் போகவேண்டும். பிரசாதத்தை மறுக்கக் கூடாது. தலையையும் எடுத்துக்கொண்டால் அதற்கேற்ற அளவு அரிசியும் பருப்பும் கூடக் கிடைக்கும். நெருப்பின் வெப்பத்தில் எருமையின் காதுகள் விறைத்துக்கொண்டு நின்றன. பாவம், அன்று அதிகாலையில் குளிரில் அந்த இளம் எருமைக்கு ஸ்நானம் செய்து வைத்தார்கள். அதன் தலையில் எண்ணெயும் சிந்தூரமும் தடவி அதற்கு இளம்புல்லைச் சாப்பிடக் கொடுத்தார்கள். காலில் சதங்கை போல் செம்பரத்தைப்பூ மாலையைக் கட்டினார்கள். தர்ம க்ஷேத்திரத் தில் அது மரண நடனம் ஆட வேண்டுமல்லவா!

அபலையான இந்த எருமைக் கன்று காலையில் ஸ்நானம் செய்து விட்டுப் பலி மேடைக்கருகில் படுத்திருந்தது. குளிர் காரணமாக அதனால் அசைய முடியவில்லை. ராஜாவை' நடத்துவதுபோல் அதை நடத்தினார்கள். சின்னஞ்சிறு பையன்களும், அழகிய பெண் களும் புத்தாடை யணிந்துகொண்டு அதற்குப் பசும்புல் கொடுத்

237iiiiiii

தார்கள். காலை நேரம் முழுதும் அதற்கு மிகவும் இன்பமாகக் கழிந்தது,

கிழட்டுப் பிராமணப் புரோகிதனின் தலையில் பெரிய குடுமி. அதில் அவன் செம்பரத்தைப் பூவைச் செருகிக்கொண்டு இருந் தான். அவன் அந்த எருமைக் கன்றுக்கருகில் ஒரு சேர் நெய்யை வைத்துக்கொண்டு உட்கார்ந்தவன் வெகுநேரம் வரை எழுந் திருக்கவில்லை. அவன் வெற்றிலையை மொச்சுமொச்சென்று மென்றுகொண்டே அவ்வளவு நெய்யையும் எருமையின் கழுத்தில் அழுத்தி அழுத்தித் தடவினான். தடவித் தடவிக் கழுத்தை மிருது வாகச் செய்தான், அரிவாள் சிக்கிக் கொள்ளாமலிருப்பதற்காக. பலி வெற்றிகரமாக நடப்பதற்காக அவ்வளவு பிரயாசை. எவ்வளவு செய்தால் என்ன ? எருமையின் உயிர் கழுத்தில் சிக்கிக் கொண்டதோ என்னவோ? அதற்கு எதையும் சாப்பிடப் பிடிக்க வில்லை. தாரை தப்பட்டைகளின் முழக்கம், சாம்பிராணி வாசனை, சந்தனத்தின் மணம், வில்வம், பூக்கள் இவற்றின் மணம், குளிர் - இவற்றுக்கிடையே அது உற்சாகமின்றி அயர்ந்து கிடந்தது. இப்போது நெருப்பின் வெப்பம் பட்டதும் அதன் அறுபட்ட தலையில் காதுகள் விறைத்துக்கொண்டன. இதையெல்லாம் பார்த்த பைத்தியக்கார டாகுரால் சிரித்துக்கொண்டு, "கேத்சோரத்சாலா !" என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

கிராமத்துக்குக் கிராமம் செய்தி பரவியது, இந்த வருஷமும் ஏரி பலிவாங்கி விட்டதென்று. மனிதன் ஏரியில் மூழ்கிச் சாகாமல் ஒரு ஆண்டும் கழிவதில்லை. இந்த நிகழ்ச்சி பாஞ்சாலிப் பாட்டில் வரும் கதையை உறுதிப்படுத்துவதாக இருந்தது. எங்கும் செய்தி பறந்தது. பிரம்மாண்டமான பெளசார் ஏரியில் - ஆழமே கண்டு பிடிக்க முடியாத-படகில் பிரயாணம் செய்யும் மனிதரைத் தடுமாற வைக்கும் ஏரியில் - இந்த வருஷம் ஆபேத் அலியின் பீபி ஜாலாலி முழுகிவிட்டாள்!

தோடார்பாகைச் சேர்ந்த ஆபேத் அலி, மழைக் காலத்தில் கொய்னாப் படகில் வேலைச் செய்யச் சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை. ஜப்பர் பாபுர்ஹாட் போயிருந்தான். ஆகை யால் அவர்களுக்கு ஆள் அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் பிணத்தை ஏரியிலிருந்து எடுக்க முடியாது. அவள் எங்கே முழுகினாள் அல்லது நாடோடிக் கதைகளில் சொல்லப்படும் ராட்சசன் அவளை எங்கே கொண்டுபோய் அமுக்கிவிட்டான் என்று யாருக்குத் தெரியும் ?

குளிர் காய்வதற்காக மூட்டப்பட்ட நெருப்பு அணைந்ததும் கரையில் இருந்தவர்கள் அவரவர் கிராமத்துக்குப் போய்விட்டார்கள்,

238இப்போது ஏரியின் மேலே நிலவு வரும். இரவு முழுதும் ஏரி நிலவில் குளித்துக்கொண் டிருக்கும். கூடை மிதந்துகொண்டே போய்க் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மறந்துவிடும். காற்று வீசினால் மலைபோன்ற ஆகிருதியுடைய அந்தக் கறுப்புப் பிராணி மறுபடி நீருக்கு மேலே வரலாம். அது என்ன பிராணி, அது எங்கே வசிக்கிறது, அல்லது அது ஒரு ராட்ஸ்சனா என்று புரிந்துகொள்ள முடியாது. இந்த மாதிரி பிராணியை இதற்கு முன்பும் பார்த்திருப் பதாகச் சிலர் சொன்னார்கள், ஏரிகரையில் நடந்து செல்லும் போது இந்தக் கதைகள் நினைவுக்கு வரும். இவ்வளவு பெரிய ஏரி யையும் அதன் கறுப்பு நிறத் தண்ணீரையும் பார்த்தால் இந்தக் கதைகளை நம்பத்தான் தோன்றும்.

கதைகளில் சொல்வார்கள் : நவாப் ஈசாகான் இந்த ஏரியில் தன் மனைவி சோனாயி பீபியுடன் மயிற்படகில் உட்கார்ந்து எவ்வளவோ இரவுகள் கலாகாச்சியாக் கோட்டையைப் பார்த்துக்கொண் டிருப் பானாம். சாந்த்ராயும் கேதார்ராயும் கலாகாச்சியாக் கோட்டையை அழித்துவிட்டார்கள். சோனாயி பீபியை விடுவிப்பதற்காக எழு நூறு முதலை முகப் படகுகள் பாயை விரித்துக்கொண்டு நீரில் சென்றன. கிழவன் ஈசாகானின் முகத்தில் பக்கிரிக்கு உள்ளது போன்ற நீண்ட வெண்ணிறத் தாடி, அவனுடைய தலையில் ஜரிகைக் குஞ்சம் வைத்த தொப்பி, இடுப்பில் உடைவாள், பின்னால் கறுப்பு நிற முகத்திரைக்குப் பின்னால் அழகிய பொம்மை போன்ற சோனாயி பீபி- அவனுடைய கண் இமை கொட்டாமல் எதிரேயே நிலைத் திருந்தது. அவர்கள் ஏரியில் ஒளிந்துகொண் டிருக்கிறார்கள். அவர் களுடைய இந்தக் கதை பாஞ்சாலிப் பாட்டு மூலம் மக்களிடையே நம்பிக்கையாகப் பதிந்துவிட்டது.

புகையிலையை மென்றவாறே பேலு நினைத்தான், ஜாலாலி நாடோடிக் கதைகளின் நாட்டில் விருந்து சாப்பிடப் போயிருக்கிறாள் என்று. நவாப் ஈசாகான், சோனாயி பீபி, மலைபோன்ற அந்தப் பெரிய பிராணி, ஆயிரக்கணக்கான கஜார் மீன்கள் - இவர்கள் ஓர் அபூர்வ ஒளியில் ஜாலாலிக்கு வழிகாட்டிக்கொண்டு அவளை நவாபின் அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

இப்போது கரையில் பைத்தியக்கார டாகுர் மட்டும் நின்றார். அவர் ஜாலாலி முதலில் நீருக்குள் முழுகிய இடத்தையும், கூடை முதல் முதலில் மிதந்து வந்த இடத்தையும் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே யிருந்தார். வலப் பக்கத்து மூங்கில் காட்டைக் கடந்தால் கொஞ்ச தூரம் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டி யிருக்கும்.

239இரண்டு பெரிய தாமரை மொட்டுகள் தண்ணீருக்கு வெளியே நீட்டிக்கொண் டிருந்தன. அவற்றுக்கு அருகில் தான் ஜாலாலி நீரில் மூழ்கினாள். பிறகு எழுந்து வரவில்லை, கூடை எங்கோ மிதந்து போய்விட்டதால் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை. நிலவு தெளிவாக இல்லை. காலடியில் இருந்த எருமைத் தலை பைத்தியக்கார டா குரை உறுத்துப் பார்த்தது, அவரிடம் ஏதோ சொல்ல விரும்புவதுபோல,

ரத்தபீஜ அசுரனின் ஒரு துளி ரத்தம் விழுமிடமெல்லாம் இன்னொரு ரத்தபீஜன் தோன்றுவானாம். இப்படி ரத்தபீஜன் கள் ஆயிரம் ஆயிரம் மாக, லட்சம் லட்சமாகப் பிறப்பார்களாம். அதுபோல இந்த எருமை யின் தலைக்கும் உயிர் வந்துவிட்டது போலும்! பைத்தியக்கார டாகுர் திகைத்துப் போய் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். எருமைத் தலை அவரைக் கேட்பதாகத் தோன்றியது 1 "டாகுர், நீ என்ன பார்க்கறே?"

" நான் நிலாவைப் பார்க்கிறேன்." " நிலாவைத் தவிர வேறே என்ன பார்க்கிறே?" "உன்னைப் பார்க்கிறேன்." "நான் யாரு ?" "நீ ஓர் அபலைப் பிராணி, எருமை." "எருமைக்கு உயிர் உண்டா ?" ''உண்டு ." "அப்போ என்னை ஏன் கொன்னங்க ?" ''உன்னைக் கொல்லலே; சாமிக்குப் பலி கொடுத்தோம்.'' ''அந்தச் சாமி யாரு ?" "சாமிதான் உலகத்தையே அடக்கி ஆள்கிறார். உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறார், பூவைப் பூக்க வைக்கிறார், உலகத்திலே உள்ள பாவத்தைப் போக்கிப் புண்ணியத்தைக் கொண்டு வரார்."

"வேறே ஒண்ணும் செய்யறதில்லையா அவர் ?" "இன்னும் எவ்வளவோ செய்யறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எல்லாம் அவர் கையிலே. பிராணிகளை அவர்தாம் காப்பாத்தறார்."

"அப்போ நான் ஓர் உபகரணந்தான் ; நைவேத்திய உபகரணம்.'' ''ஆமா .'' எருமைத் தலை சிரித்தது. " நீ ஏன் சிரிக்கறே?" என்று டாகுர் கேட்டார். "உன் பேச்சைக் கேட்டுத்தான்." டாகுருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவரால் எருமையைத் திரும்பிப் பார்க்க முடியவில்லை. பார்த்தால் மறுபடியும் அது சிரிக்கும்.

240அவர் வேறு பக்கம், ஜாலாலி தாமரை மொட்டுகளுக்கு அருகில் நீரில் முழுகிய பக்கம் பார்த்துக்கொண்டு நின்றார். எதிரில் ஒரே நீர்ப் பரப்பு. காற்றில் அலைகள் எழுந்தன. அலைகளின் ஓசை கரையில் கேட்டது. தூரத்திலிருந்து மேளங்களின் ஓசையும் வந்து கொண் டிருந்தது. 'கும், கும்!' புயல் வருவது போன்ற ஒலி. ஆயிரக் கணக்கான வருடங்களாக வழங்கிவரும் கதைகளில் சொல்லப்படும் ராட்சசன் ஓடிவருவது போன்ற ஒலி. ராஜகுமாரனின் கையில் பறவை. ராஜகுமாரன் அதன் சிறகுகளைப் பிய்த்து எறிந்துவிட்டான், 'ஐயோ ! விழுந்தோம், செத்தோம்!' என்று அலறிக்கொண்டே அந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ராட்சசர்களின் கூட்டம் ராஜாவின் பட்டணத்தை நோக்கி ஓடிவந்தது. அந்த ராட்சசர்கள் ஒரு பழங்காலப் பொந்தில் உள்ள பறவையைக் கொன்று அதன் ரத்தத்தைக் குடிக்கும் ஆசையில் ஓடுகிறார்களென்று தோன்றியது. பறவை ராஜகுமாரனின் கையில். அவன் இஷ்டப் பட்டபடி அதன் காலையோ கழுத்தையோ பிய்த்து எறிந்துவிட்டால் கதை முடிந்துவிடும். ஆனால், ராஜகுமாரனும் கல், பறவையும் கல் ராஜகுமாரன் பறவையைக் கையில் வைத்துக்கொண்டு கனவு கண்டவாறே கல்லாகிவிட்டான்.

"டாகுர், ஏன் என்னைப் பார்க்கமாட்டேங்கறே ?" என்று எருமைத் தலை கேட்டது.

டாகுர் பதில் சொல்லவில்லை. "டாகுர், ஒரு சாதாரணத் தலை- வெட்டப்பட்ட தலையோட வேடிக் கைப் பேச்சை உன்னாலே பொறுத்துக்க முடியல்லையே. நான் எப்படி அரிவாள் வெட்டைப் பொறுத்துக்குவேன் சொல்லு ?"

"இதோ பாரு, நான் உன்னை ஒண்ணும் சொல்லலே, நீ என்னை சும்மா விட்டுடு."

"சரி, நான் இப்போ பறந்து போறேன்." எருமைத் தலைக்கு இரண்டு பக்கங்களிலும் இறக்கைகள் முளைத் தன. அது ஏரிக்குமேல் பறக்கத் தொடங்கியது.

"அடே! என்ன பண்றே? என்ன பண்றே?'' என்று சொல்லிக் கொண்டு டாகுர் அதைப் பிடிக்கப் போனார்.

"ஏன், நான் உன்னோட சாமியை விட மட்டமாத் தெரியறேனா இப்போ? என்னைப் பார்த்தா ஒரு பெரிய வெளவால் மாதிரி இல்லே?" என்று சொல்லியவாறு அந்தத் தலை டாகுருக்கு முன்னால் பெண்டுலம் மாதிரி ஆடியது.

"எப்படி இருக்கு என்னைப் பார்த்தா ? வௌவால் மாதிரி இல்லே? லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாலே உலகத்துலே இந்த மாதிரி எவ்வளவோ வௌவால்கள் இருந்தன. இப்போ இல்லே.

241

18அதைவிடப் பெரிய பாம்புகள் வந்து அதையெல்லாம் சாப்பிட்டு டுத்து. ஆனா அதுகள் என்ன செஞ்சாலும், உங்க மாதிரி மதத்தின் பேரைச் சொல்லிக்கிட்டு அநியாயம் பண்ணலே. கடவுள் பேராலே

அக்கிரமம் செய்யலே!''

எருமைத் தலை செய்யும் அட்டகாசத்தைப் பார்த்து டாகுருக்கு எரிச்சல் வந்தது. நல்ல மனிதர் ஒருவர் அகப்பட்டுக்கொண்டார் என்று ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்தது அது. அவர் கரை வழியே நடக்கத் தொடங்கினார். என்ன ஆச்சரியம்! எருமைத் தலையும் சிறகுகளை விரித்துக்கொண்டு அவருக்கு முன்னாலேயே தொங்கிக்கொண்டு வந்தது, யாரோ அதைக் கண்ணுக்குத் தெரி யாத நூலில் கட்டி ஆகாயத்தில் தொங்கவிட்டிருப்பது போல. டாகுர் முன்னே போனால் அது பின்வாங்குகிறது, பின்னே வந்தால் அது முன்னே வருகிறது. டாகுருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்தப் பயங்கர காட்சியை உதறிவிடுவதற்காக அவர் ஓடத் தொடங்கினார், முன்னும் பின்னும். தன்னந்தனியே கோல்லாட் விளையாட்டு விளையாடினார். அவர் எந்தப் பக்கம் ஓடினாலும் எருமைத் தலை அவருடைய கண்முன்னே வந்து பிரம்மாண்டமான ஒரு வெளவாலைப் போல் தொங்கியது. அது சில சமயம் அழுத்து, சில சமயம் சிரித்தது. சில சமயம், "இந்த மனித இனத்தைப் போல மட்டமான இனத்தைப் பார்த்ததில்லே நான். அவங்க இஷ்டத் துக்குச் சாமி பேரைச் சொல்லி என்னை வெட்டிப் போட்டுட்டாங்க" என்றது.

பைத்தியக்கார டாகுர் கூடப் பயந்துபோனார். அவர் எல்லா வற்றையும் மறந்துவிட்டு அந்த மைதானமெங்கும் ஓடத் தொடங் கினார். பிரம்மாண்டமான அந்த வௌவாலைப் பார்த்துக் கத்தினார் ''கேத்சோரத்சாலா |"

சாம்சுத்தீன் டாக்காவிலிருந்து திரும்பியதும் ஜாலாலி ஏரியில் முழுகியது பற்றியும், கிராமத்தில் யாருமே அவளைத்தேடப் போகாதது பற்றியும் கேள்விப்பட்டான். அவன் உடனே தன் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு வந்தான். ஆபேத் அலிக்கும் ஜப்பாருக்கும் செய்தி தெரிவிக்க இரண்டு ஆட்களை அனுப்பினான். அவன் தன் கோஷ்டியுடன் ஏரியை அடைந்தபோது வெகுநேரமாகிவிட்டது. ஏரிகரை மைதானத்தில் யாரோ ஓடிக்கொண் டிருப்பதை அவர்கள்பார்த்தார்கள். பார்த்தால் ஓர் அற்புதச் சம்பவம் போல் இருக்கும் , ஏதோ ஒரு தேவதை கடவுளுக்குப் பயந்து ஓடித் திரிவது போல் தோன்றும். சாம்சுத்தீன் கூடப் பயந்து போய்விட்டான். அவ னுடைய ஆட்கள், "நாம் திரும்பிப் போயிடுவோம். யார் தலையிலே எப்படி எழுதியிருக்கோ , யாருக்குத் தெரியும் ?" என்று கூறினார்கள். "மைதானத்திலே இருக்கிறது யாரு ?" என்று சாமு கத்தினான். ஒரு பழக்கமான பதில் வந்தது. ''கேத்சோரத்சாலா!'' மைதானத்தில் சுற்றுவது மனிதன்தான். எல்லாருக்கும் இப்போது உயிர் வந்தது. மைதானத்தில் சுற்றிக்கொண் டிருப்பது பைத்தியக்

கார டாகுர்தான். அவர்களுடைய பயம் தெளிந்தது.

"பெரிய பாபு, நான் தான் சாமு! ஆபேத் அலியோட பீபி ஜாலாலி தண்ணியிலே முழுகிட்டா. நாங்க அவளை வெளியிலே எடுக்க

வந்திருக்கோம்" என்று சாமு கூறினான்.

அவர்கள் பயந்தெளிந்து ஏரிகரைக்கு வந்தார்கள், அல்லிக் கிழங்கு பறிக்கவந்த சிலர் கூட வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு ஏரிக்கரையில் சுற்றினான் சாமு. அவர்கள் ஜாலாலியைக் கடைசியாக எங்கே பார்த்தார்கள், அப் போது மணி என்ன இருக்கும் என்று விசாரித்துக் கொண்டான். ஹாசிம் வீட்டுப் பெரிய படகை எடுத்துக்கொண்டு வரச் சிலர் போனார்கள். அது வந்ததும் அதில் ஏறிக்கொண்டு ஜாலாலியைத் தேடுவதென்று திட்டம். ஜாலாலி அணிந்திருந்த துணி மேலே மிதந்து வரலாம்; அவளுடைய வீங்கி உப்பிய உடலே தண்ணீருக்கு மேலே மிதந்து வரலாம்.

படகை ஓட்டிக்கொண்டு மன்சூர் வந்தான். ஜய்னால் துடுப்பு வலித்தான். இருபத்தைந்து முப்பது பேர் படகில் ஏறிக்கொண் டார்கள். நிலவில் ஏரியில் அலைகள் கிளம்பின. தாமரையிலை மேல் ஏதோ பூச்சியின் ஒலி. நேரம் கழிந்து நள்ளிரவாகிவிட்டது, ஆனால் ஜாலாலி இருக்குமிடம் தெரியவில்லை. அப்போது அவர்கள் தூரத்தில் ஏதோ மிதப்பதைக் கண்டார்கள். அது ஒரு கூடை; ஜாலாலியின் கூடை. அதில் ஜாலாலி நாள் முழுதும் சேகரித்த ஏழெட்டு அல்லிக் கிழங்குகள் இருந்தன. அவற்றின்மேல் நிலாவின் ஒளி விழுந்தது. அல்லிக் கிழங்குகளோடு ஒரு சிப்பியும் இருந்தது. தண்ணீருக்கடியில் சிப்பி கிடைத்தால் கனவு காண்பது இயற்கை, சிப்பிக்குள் முத்து இருக்குமோ என்று. ஜாலாலியும் அந்த மாதிரி கனவு கண்டிருக்கலாம், பேகம் ஆகும் கனவு!

சாம்சுத்தீன் குனிந்து அந்தக் கூடையைப் படகில் ஏற்றியபோது வேதனையோடு சொன்னான் : "சின்னம்மா, உன் ராஜ்யத்திலே இப்போ யாரு முழிச்சுக்கிட்டு இருக்காங்க ?"

243தண்ணீரிலிருந்து பதிலெதுவும் வரவில்லை. அவன் நாற்புறமும் பார்த்தான். ஏரிகரையில் ஒன்றுக்குப் பின் ஒன்றாகச் சிறிய சிறிய கிராமங்கள் ; ஏழைகளின் குடியிருப்புகள். அவற்றில் ஒரு சில முல்லா, மெளல்விகள். அவர்களுக்கு நூல் அல்லது சணல் வியா பாரம். ஒரு சில இந்து லேவாதேவிக்காரர்கள். ஹக் சாயபுவின் லேவாதேவிக் கடை விளம்பரம். எல்லாரும் பிழைக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். சாமு தன் ஆட்களிடம், "ஜாலாலி

அகப்படலே !'' என்றான்.

யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஏதாவது சொன்னால் சாமு அவர்களைத் தண்ணீரில் முழுகித் தேடச் சொல்லுவான், இந்தக் குளிரில் தண்ணீரில் முழுகினால் உறைந்து போய்விட வேண்டியது தான். அவர்கள் தயங்குவதைப் பார்த்துச் சாமு சொன்னான்: "சரி, நீங்க படகிலே இருங்க. நான் முழுகித் தேடிப் பார்க்கறேன்." அவன் ஒரு துண்டை மட்டும் உடுத்திக்கொண்டு, ஜாலாலி கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் தண்ணீரில் முழுகினான்.

ஏரிக்கரையில் இவ்வளவு ஆட்களைப் பார்த்துத்தானோ என்னவோ, எருமைத் தலை மறைந்து போய்விட்டது. பைத்தியக்கார டாகுருக்குச் சற்று யோசிக்க நேரம் கிடைத்தது. 'ஓர் அபலைப் பிராணிக்கு எவ்வளவு கோபம்?' என்று நினைத்தார் அவர். அந்தக் கோபத்தி லிருந்து தப்பிக்கொள்வதற்காக அவர் சாமுவின் ஆட்கள் இருந்த படகை நோக்கிச் சென்றார். படகு ஓரிடத்தில் நின்றது. ஒரே ஒரு ஆள் நீரில் நீந்தினான், தண்ணீருக்குள் முழுகி முழுகி உயரே வந்தான். கொஞ்சமும் பயப்படவில்லை அவன். எவ்வளவு பேர் படகில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தார்கள்! இன்னோர் ஆள் தண்ணீருக்குள் இந்தக் குளிரில் கொடிகளில் அகப்பட்டுக் கொள்ளப் போகிறான். முன்யோசனை யில்லாத ஆள்! பைத்தியக் கார டாகுர் தண்ணீரின் ஓரத்தில் நின்றார்.

ஜாலாலி மூழ்கிய இடத்திலிருந்து வெகு தூரத்தில் அவரைத் தேடி னான் சாமு. அவனுடைய இந்த வீண் முயற்சியைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வந்தது. அவர் தன்னந்தனியே மைதானத்தில் நடந்தால் அந்த எருமைத் தலை அவரை மறுபடி பிடித்துக்கொள்ளும். அவர் கைகளைத் தட்டினார், என்னைப் படகில் ஏற்றிக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்வது போல.

மன்சூர் படகின் மேல் நின்றுகொண்டு, "கை தட்டறது யாரு ?'' என்று கேட்டான்.

பதில் இல்லை. யாரோ ஏரிகரையில் விடாமல் கை தட்டுவது மட்டும் தெரிந்தது. பைத்தியக்கார டாகுர் தாம் கை தட்டுகிறார் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. படகில் ஏற்றிக்கொள்ளச்

244சொல்லிக் கைதட்டுகிறார். மன்சூர் கத்தினான், "இருங்க, எசமான் இதோ வரேன்!''

படகு அருகில் வந்ததும் டாகுர் அதில் ஏறிக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாகத் தண்ணீரில் குதித்து, தாமரை மொட்டுக்கள் இருந்த இடத்தை நோக்கி நீந்திப் போனார். அவருக்குக் கோடை யும் குளிரும் ஒன்றுதான். பைத்தியம் முற்றிவிட்டது அவருக்கு. அவர் ஒரு பெரிய வெண்ணிற ராஜஹம்சத்தைப் போல் வேகமாக நீந்திக்கொண்டு போனார். அவரைப் போன்ற ஆஜானுபாகுவை அந்தப் பிராந்தியத்தில் பார்க்க முடியாது. தோற்றம் மட்டுமல்ல, அபார பலமும் உண்டு அவருக்கு. நாடோடிக் கதைகளின் ராட்சசர் களையும், பிசாசுகளையும் லட்சியம் செய்யாமல் அவர் தாமரை மொட்டுக்களுக்குப் பக்கத்தில் தண்ணீருக்குள் முழுகினார். செடி கொடிகளையும் பாசியையும் அறுத்துக் கொண்டுபோய்க் கீழேயிருந்து ஜாலாலியின் பிணத்தைத் தலைமயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அம்பின் வேகத்தில் நீந்தத் தொடங்கினார். இதைப் பார்த்த வேர்கள் பிரமித்து நின்றார்கள். இந்த மனிதர் தர்காவின் பீர்தான், சந்தேகம் இல்லை. டாகுர் ஜாலாலியின் சவத்தைத் தோளில் சுமந்து கொண்டு கரையேறினார். ஒரு பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை. தோளில் சவம், எதிரில் சூனிய வயல்வெளி, ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள், தூரத்தில் மேளங்களின் ஒலி. தாம் ஜாலாலியின் பிணத்தைத் தூக்கிக்கொண் டிருப்பதாக அவருக்குத் தோன்ற வில்லை. இது வறண்ட வயல்வெளியல்ல, கோட்டையை ஒட்டிய நடைபாதை. இது ஃபோர்ட் வில்லியம். மேலே புறாக்கள் பறந்தன. நடைபாதையில் பாண்டு வாத்தியங்கள் முழங்கின. மத்தள ஒலியில் அவருக்கு இதெல்லாம் நினைவுக்கு வந்தது. அவருடைய தோளில் இருப்பது ஜாலாலியல்ல, யுவதி பாலின், பக்கத்தில் கோட்டை. ஆங்கிலேய சிப்பாய்களின் கூட்டமொன்று அணிவகுத்துக்கொண்டு வருகிறது, பாலினை அவரிடமிருந்து பறித்துக்கொண்டு போக. இவ்வாறு நினைத்துக்கொண்டு ஓடத் தொடங்கினார் டாகுர்.

டா குர் மைதானத்தில் ஓடுவதை மற்றவர்கள் பார்த்தார்கள். அவர் பைத்தியக்காரர் ; பிணத்தைத் தூக்கிக்கொண்டு எங்கே ஓடுவாரோ ? யார் கண்டார்கள்? தவிரவும், அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர், அவருடைய தோளில் ஜாலாலியின் சவம். அவர் அதை எடுத்துக் கொண்டு வேறெங்காவது அல்லது ஆற்றின் மறுகரைக்குப் போய் விட்டால் இஸ்லாமுக்கு அபசாரமாகிவிடும். மதவிதிப்படி ஆபேத் அலி கூட இப்போது ஜாலாலியைப் பார்க்கக்கூடாது. அப்படி யிருக்க, இந்த வேற்று மதக்காரர் அவளைத் தூக்கிக்கொண்டு

245ஓடுகிறாரே! அவர்கள் அவரைத் தொடர்ந்து ஓடி மைதானத் துக்கு நடுவில் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் மெது வாக நாலா பக்கங்களிலிருந்தும் அவரை அணுகினார்கள், தாங்கள் அப்படி அணுகுவதை அவர் புரிந்துகொள்ளாதவாறு. புரிந்து கொண்டால் அவர் அவர்களிடமிருந்து தப்பிவிடுவார். முன்பு ஒரு தடவை ஒரு பின்பனிக்கால மாலை நேரத்தில் யானையில் ஏறிக். கொண்டு ஓடிப்போனாரே, அதுபோல.

அவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு உஷாராக நின்றார்கள். சாமு அவர் அருகில் போய், "சின்னம்மாவை இங்கே கொடுங்க!'' என்றான்,

என்ன ஆச்சரியம்! ரொம்பச் சாது மனிதராக ஆகிவிட்டார் அவர். அவர் சவத்தை மெதுவாக, நோயாளியை இறக்குவதுபோல் தோளிலிருந்து இறக்கிக் கீழே படுக்கவைத்தார். அப்போது சவத்துக் குள்ளிருந்து தண்ணீர் 'களகளவென்று வெளிவந்து கொட்டி யது. சவம் வெளுத்துப் போயிருந்தது. கண்ணின் மணிகள் நிலைகுத்தியிருந்தன. சவம் இமைக் கொட்டாமல் எல்லாரையும் பார்த்துக்கொண் டிருந்தது. கட்டம் போட்ட புடைவை அவழ்ந் திருந்தது, சாமு துணியை எடுத்துத் தண்ணீரைப் பிழிந்துவிட்டு மறுபடியும் அதைக்கொண்டே பிணத்தை மூடினான். பிறகு ஜாலாலி யின் சவத்தைத் தூக்கும் உரிமையுடைய உறவுக்காரர்கள் யார் என்று தீர்மானித்து அவளுக்குப் பிள்ளைமுறை அல்லது தகப்பன் முறையாக இருப்பவர்களுக்குத்தான் அந்த உரிமை உண்டுஅவர்களைக் கூப்பிட்டுப் பிணத்தைக் கட்டச் சொன்னான். பலியிடப் பட்ட எருமையை மூங்கிலில் கட்டித் தூக்கிக்கொண்டு, 'ஜய் யக்ஞேஸ்வர் கீ ஜய்!' என்று கத்திக்கொண்டு மக்கள் போனது போல், இவர்கள், 'அல்லா ரஹ்மானே ரஹீம்!' என்று கத்திக் கொண்டு பிணத்துடன் போனார்கள்.

ஆபேத் அலியின் பீபி அல்லிக்கிழங்கு பறிக்கப் போய்த் தண்ணீ ருக்குள் முழுகிவிட்டாள், நாடோடிக் கதைகளில் ஒரு தியாகியாக இடம் பெற்றுவிட்டாள் அவள். இந்தப் பரபரப்பு இன்னும் ஒரு வருடம் நீடிக்கும். ஒரு வருடம் ரஸோவும் பூடியும் இந்த மாதிரிதான் தண்ணீரில் முழுகி இறந்துவிட்டார்கள். இந்த விஷயம் ஒருவருக்கும் தெரியாது. ஒரு பின்பனிக் காலப் பிற்பகலில் அவர்களுடைய எலும்புக் கூடுகளைக் கண்டு அந்தப் பிராந்தியத்து மனிதர்கள் திகைத்துப் போனார்கள். அதன் பிறகு அவர்களைப்பற்றி எவ்வளவோ கதைகள்! அந்தப் பிராந்தியத்திலிருந்த படிக்காத, அல்லது அரை குறையாகப் படித்த மக்கள், இரவில் மற்றவர்கள் எல்லாரும் தூங்கிய பிறகு, அந்தப் பக்கத்து ஏரிகள், சுடுகாடுகள், இடுகாடு

246களைப் பற்றிய அதிசய நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு பொழுதுபோக்குவார்கள். அம்மாதிரி நிகழ்ச்சிகளை நம்புவது அவர் களுக்குப் பிடித்தமானதாகும்.

மத்தளங்களின் முழக்கம் தெளிவாகிக்கொண்டு வந்தது. இரவு பூராவும் இந்த வாத்தியங்கள் முழங்கும். வயல்வெளி முழுதும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளி. இடையிடையே பட்டாசுகள் வெடித்தன. ஆகாய வாணங்கள் உயரே எழும்பின.

மாலதிக்குத் தூக்கம் வரவில்லை. திருவிழாக் காலத்து விருந்துச் சாப்பாடு, வாழைப்பழம், கத்மா, எள்ளுருண்டை , கிச்சடி, பாயசம்... தவிரவும், பெரிய மாமி அவளைத் தனியாகக் கூப்பிட்டு இன்னும் நிறையப் பாயசம் கொடுத்திருந்தாள்,

மாலதி போர்வையைப் போர்த்துக்கொண்டு படுத்தவாறே ஜன்னல் வழியே வயல்வெளியில் நிலவு காய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாஸ்து பூஜையன்று நிலவு மர்மம் நிறைந்த தாக இருந்தது, ஆஸ்வின் மாதத்து லக்ஷமி பூர்ணிமைப் போல, வானங்கள், பட்டாசுகள்! வயிறு நிறைய லாடு முதலிய தின்பண் டங்கள், இந்த நிலவில் ஜாலாலி நீரில் முழுகிச் செத்துவிட்டாள். நினைக்கும்போதே மாலதிக்கு மூச்சை யடைத்துக்கொண்டு வந்தது. எழுந்து உட்கார்ந்தாள். ஜாலாலியின் பிணத்தைத் தேடப் போன வர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்கள் ஆற்றுப் படுகை வழியே நடந்து வரும்போதே அவர்களுடைய பேச்சிலிருந்து அவர்கள் ஜாலாலியின் உடலைக் கண்டுபிடித்தார்களா, இல்லையா என்று தெரிந்துவிடும்.

எவ்வளவு முயன்றும் மாலதிக்குத் தூக்கம் வரவில்லை. அவள் போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு மெளனமாக, வருத்தத் துடன் ஜன்னலருகே உட்கார்ந்திருந்தாள். அன்று பகல் முழுதும் அவளுக்கு நல்ல வேலை. நைவேத்தியச் சாமான்களை வைப்பதற் காகப் பித்தளைப் பாத்திரங்களைத் தேய்த்திருந்தாள் அவள். நரேன் தாஸுக்குப் பலவிதக் கிறுக்குத்தனங்கள் உண்டு. இந்த வாஸ்து பூஜை நிலத்துக்காக, பயிருக்காக. உயிரைவிட மதிப்பு வாய்ந்தது பயிர். ஆகையால் பூஜையில் எந்தவிதக் குறையும் நேர அவனுக்குப் பொறுக்காது. வேலை விஷயத்தில் கெடுபிடி செய்யும் அவன் இன்று அமுல்யனுக்குக் கூட விடுமுறை கொடுத்துவிட்டான். மாலதி அதிகாலையில் எழுந்தது முதல் பால் பாத்திரங்களையும் மற்றப் பித்தளைப் பாத்திரங்களையும் தேய்த்துக்கொண்டே இருந்தாள். அதற்கப்புறம் நாள் முழுதும் வீட்டுக்கும் வயலுக்கும் அலைச்சல், வாஸ்து பூஜை வயலில் நடக்கும். அதற்கு வீட்டிலிருந்து எல்லாச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். பூஜைக்குப்

247பிறகு எல்லாவற்றையும் மறுபடி வீட்டுக்கு எடுத்துவர வேண்டும். ஆபுவும் சோபாவும் அவளுக்குச் சற்று உதவி செய்தார்கள். மற்றப்படி எல்லா வேலையையும் அவளே செய்யவேண்டியதாயிற்று. அமூல்யன் நடுப்பகல் வரையில் இருந்துவிட்டுப் பிறகு வீட்டுக்குப் போய்விட்டாள். ஆகையால் அவளுக்கு மாலை நேரம் வரையில் மூச்சு விடக்கூட நேரம் இல்லை. ஆகவே அவள் சீக்கிரம் தூங்க எண்ணிக் கை கால்களை அலம்பிக்கொண்டு படுத்தாள். ஆனால் அவள் அதிர்ஷ்டம், தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் நெஞ்சு அடித்துக்கொண்டது அவளுக்கு. நிலவொளியில் திறந்த வெளியில் போய்த் தனியாக நிற்கத் தோன்றியது அவளுக்கு. அவ ளுடைய அன்புக்குரிய மனிதன் ஒருவன் மட்டும் அவள்கூட இருக்க வேண்டும். அவளுக்குப் பிரியமான அந்தச் சுயநலக்கார ராட்ச சனின் நினைவு வந்தது அவளுக்கு.

அந்த ராட்சசன் நாள் முழுதும் பிரசாதம் சாப்பிட்டுக்கொண்டு சுற்றிக்கொண் டிருந்தான். மாலதியின் பூஜையைப் பார்க்க ஒரு தடவைகூட வரவில்லை. சர்க்கார் வீட்டாரின் வாஸ்து பூஜையைப் பார்க்க மாலதி வீட்டு வயல் பக்கமாகச் சென்றவன் அவள் இவ்வளவு நியம நிஷ்டையுடன் செய்யும் பூஜையைப் பார்க்க வர வில்லை. ஏமாற்றமும் கோபமும் உள்ளுறப் பொங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு. அந்த மனிதனுடன் கோபித்துக்கொண்டே அவள் நாள் முழுதும் காரியங்கள் செய்தாள். இந்தக் கோபத்தின் கடுமை அவளை வருத்தியது. அந்த ஆளுக்குக் கர்வம் அதிகமாகி விட்டது. தேச சேவை செய்கிறோமென்ற கர்வத்தில் அவனுக்குக் கால்கள் கீழே பாவவில்லை.

நிலவில் வயல்வெளி மிதந்தது. மரங்களும் செடிகளும் வெள்ளை யாகத் தெரிந்தன. எங்கும் கொஞ்சங்கூட இருட்டு இல்லை. எவ்வளவோ காலமாக இந்த மாதிரி நிலவு வந்ததில்லை. இம்மாதிரி நிலவு இருந்தால் தூக்கம் வருவதில்லை.

நிறையச் சாப்பிட்டதால் வயிற்றில் சங்கடம் ஏற்பட்டு அதன் காரணமாகத் தூக்கம் வரவில்லை என்று மாலதி முதலில் நினைத்தாள், ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் தூக்கம் வரவில்லை, அல்லது அந்த மனிதன் தனக்கருகில் இருக்கவேண்டும் என்று ஆசையாக இருக் கலாம். நெஞ்சுக்குள் ஒரே எரிச்சல், நடுநடுவே நெஞ்சு பட படத்தது. அவன் இதோ வந்துவிட்டான். மெளனமாக ஜன்ன லுக்குப் பக்கத்தில் வந்து நிற்பதுபோல் தோன்றியது. ஆனால், இல்லை, இல்லை, ஒருவனும் வரவில்லை. ஒருவனும் வரமாட்டான், அவள் தனியே விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். மாலதி மறுபடியும் படுத்துக்கொண்டாள். நிலவின் ஒளி

11

248அவள் முகத்தில் பரவியது. அடிவானம் வரையில் வயல்வெளி நிலத்தில் மிதந்தது. அவள் தன் கழுத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். எவ்வளவு மிருதுவாக, அழகாக இருக்கிறது இந்த உடம்பு! அவள் உள்ளுறச் சலனமடைந்தாள், ரஞ்சித்தை மறப்பதற்காகத் தன் கணவனைப்பற்றி நினைக்க முயற்சி செய்தாள், தன் மனச்சலனத்தைப் போக்கிக் கொள்வதற்காக, தான் தன் கணவனுடன் வாழ்ந்த காட்சியை நினைவுறுத்திக் கொண்டாள். ஆனால் அந்தப் பழைய - இப்போது அலுத்துவிட்ட- காட்சியை வைத்துக்கொண்டு காலந்தள்ள முடியாது. அந்தக் காட்சி இப்போது அவளுக்கு எவ்வித உற்சாகமும் அளிக்கவில்லை.

அவள் தன் போர்வையை இழுத்து அதைக் கொண்டு முகத்தை இறுக மூடிக்கொண்டு ஓர் இடத்திலும் நிலவு இல்லை என்று நினைத்துக் கொண்டாள். இப்போது அவளைச் சுற்றி இருட்டு. பட்டணத்தில் நடந்த கலகம் அவளுடைய கனவை முடித்துவிட்டது. புதிதாகக் கனவு காண்பது பாவம். இந்தப் பாவத்துக்குப் பயந்து மாலதி போர்வைக்குள் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள். இருட்டில் தன்னந்தனியே பாவம் செய்துகொண்டு திரிந்தால், அது யாருக்குத் தெரியும்?

கணவனின் முகம் நினைவுக்கு வரவில்லை. கணவனுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையின் சித்திரம் காலண்டரின் தாள்களைப் போல அன்றாட விஷயங்களாகிவிட்டன. இந்நிலையில் அவளுடைய மெல்லிய, அழகிய விரல்களின் ஸ்பரிசம் அவளுடைய உடலில் மயிர்க்கூச்சத்தை உண்டாக்கியது. விரல்கள் அவ்வுடலில் பாவம் செய்து கொண்டு திரிந்தன; அவை உடலுக்கு வெறியூட்டின. சதி சாவித்திரியைப் போல் புண்ணியவதியாக இல்லாமல் இருட்டில் மனத்தில் ரஞ்சித் என்ற இளைஞனை நினைத்துக்கொண்டு தன் உடலி லேயே பாவத்தைத் தேடித் திரிவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாவம் அவளுக்கு உயிரைவிட மேலாகத் தோன்றியது.

அடிபட்ட பாம்பு சாவதற்கு முன்னால் ஒரு தடவை உடம்பைச் சுருட்டிக்கொண்டு, பிறகு அதை விரித்து நேராக்கிவிட்டுச் செத்துக் கிடப்பதைப்போல் மாலதி தன் தேகத்தைக் கொஞ்சங் கொஞ்ச மா கச் சுருட்டிக் கொண்டாள், பிறகு திடீரென்று அதைப் பரப்பிக் கொண்டாள். ஆதரவற்ற ஓர் அநாதைக் குரல் அவளுடைய உள்ளத்தில் ஒளிந்திருந்தது. உடலில் - உலகில் அவளுக்கென்று ஒன்றும் இல்லாதது போல், அவள் தன்னுடையது எதையோ இழந்துவிட்டது போல், அவள் தன் உடல் முழுதும் காதலைத் தேடிப் பார்த்தாள். இந்த ஆராய்ச்சி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் காதல் உணர்வு மனிதனுக்குள்ளே எப்படி உண்டாகிறது ?

249எந்த இருளிலிருந்து அது எட்டிப் பார்க்கிறது, எப்போது அது பாவ புண்ணியங்களுக்குத் தலை முழுகிவிட்டுத் துறவிபோல் பைத்திய மாகிவிடுகிறது? இதையெல்லாம் சொல்ல யாராலும் முடியாது. மாலதி பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாள். ஒரு நாடோடிப் பாடகன் அவளுடைய உடலில் நாடோடிப் பாட்டை இசைக் கிறான் ; 'ரசமாகிய விரல்களைக் கொண்டு வாத்தியமாக என்னை

வாசி !'

அப்புறம் சக்கரவாகப் பறவையின் கூவலைப்போல் 'டுப், குப்' என்ற ஒலி. மாலதி அயர்ந்து போய்விட்டாள். இதென்ன ? படுகையில் யாரோ ஓடுகிறார்களே! வானத்தைப் பிளக்கும்படி உருக்கமாக அழுவது யார் ? அழுபவனை அடையாளங் கண்டுகொள்வது மாலதிக் குக் கஷ்டமாக இல்லை : ஜப்பார்தான்! அல்லிக்கிழங்குப் பறிக்கச் சென்ற அவனுடைய தாய் இறந்துவிட்டாள். இப்படி அழ எப்போது கற்றுக்கொண்டான் ஜப்பார் ? வானத்தைப் பிளப்பது போல், குழந்தை போல், அழுகிறான் ஜப்பர்-"அம்மா! அம்மா!''

மாலதி வெள்ளை நிலவில் வெளியே ஓடிவந்தாள். பிணத்தை மூங்கிலில் வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் வந்தான் சாமு.

படுகையிலிருந்து வந்த சப்தத்தைக் கேட்டு அண்டை அயலார் யாவரும் விழித்துக் கொண்டார்கள். சாயங்காலத்திலிருந்தே வீட்டுப் பெண்களும் வேலைக்காரிகளும் கிணற்றங்கரையிலிருந்தும் குளத் தங்கரையிலிருந்தும் சீதாமர வேலியின் இடுக்கு வழியாகவும் பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஜாலாலியின் உடலை எடுத்து வருவதைப் பார்க்கத் துடியாய் இருந்தார்கள்,

சாம்சுத்தீன் தன் கோஷ்டியுடன் போயிருக்கும்போது பிணத்தைக் கொண்டுவர எவ்வளவு நேரம் ஆகப்போகிறது! ஆனால் ஏரியின் மாய சக்தியில் நம்பிக்கை வைத்திருந்த கிழவர்கள் நினைத்தார்கள், சாம்சுத்தீன் செய்யும் முயற்சி வீண்தான் என்று. அவர்கள் வீட்டுக் கூடத்தில் அல்லது வாசலில் உட்கார்ந்துகொண்டு ஏரியின் மாய சக்தியைப் பற்றிய கதைகளையெல்லாம் சொல்லிக்கொண் டிருந் தார்கள், ஹக்கா பிடித்தவாறு. அவர்களுடைய சிறு குழந்தைகள் அவர்களுக்கருகில் கூட்டங் கூட்டமாக உட்கார்ந்துகொண்டு அந்தக் கதைகளைக் கேட்டுக்கொண் டிருந்தார்கள்.

250ஈசம் சோனாவுக்கு அந்தக் கதையைச் சொன்னான். ஒரு பின்பனிக் காலத்து இரவில் சோனா பாபு பிறந்தார். ஈசம் வயலில் தர்மஜ் கொடிகளைக் காவல் காத்துக்கொண் டிருந்தான். அப்போது ஸோனாலி பாலி ஆற்று மண்ணில் பூக்கள் பூத்திருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்துவிட்டது. சோனாபாபு பிரசவ

அறையில் பூனையைப் போல் 'மியா, மியா' என்று அழுதார்.

தான் 'மியா, மியா' என்று அழுததாக ஈசம் சொன்னதைக் கேட்டு " நீங்க பொய் சொல்றீங்க" என்று சோனா சொன்னான்.

"இல்லை, எசமான். நான் பொய் சொல்லலே. தலையிலே முண்டாசைக் கட்டிக்கிட்டுக் கிளம்பினேன், தனபாபுவுக்குத் தகவல் சொல்ல. அப்போ என்ன இருட்டு, தெரியுமா? கும்மிருட்டு. பாமுந்தி மைதானத்திலே ஒரு பெரிய இலவமரம் இருக்கே, அது தலையிலே ஒரு விளக்கை வச்சுக்கிட்டு என்கிட்டே நடந்து வர்றமாதிரி இருந்திச்சு. எனக்கு ரொம்பப் பயம். யாரோ என்னை ஏரிக்குள்ளே அமுக்கிடப் பார்க்கிறாப்பலே எனக்குத் தோணிச்சு."

''கொல்லப் பார்க்கறாப்பலேயா ?" என்று ஆச்சரியத்தோடு கேட் டான் சோனா.

''ஆமா! நான் என்ன சொல்லுவேன் ? ஏரியிலே இருக்கற தேவதையை நாங்க பார்த்ததில்லே. அழகான பொண்ணு, தங்கப் படகுலே ஏறிக்கிட்டு, காத்தாலே பண்ணின துடுப்புடன் 'புஸ்ஸ மனு தண்ணியிலேருந்து கிளம்பி வருவாளாம்! அவ இருட்டு ராத்திரிலே படகிலே போகமாட்டாளாம், நிலாவிலேதான் போவா ளாம். பெளர்ணமி ராத்திரியிலே அதைப் பார்க்கப் பிரமாதமா இருக்குமாம். என்ன வெள்ளை, என்ன வெள்ளை !''

ஈசம் பாடத் தொடங்கினான் : "அவ தண்ணியிலே முழுகிப் போயிட்டா, இப்போ மிதக்கிறதில்லே."

சோனாவுக்கு ஏனோ இந்தக் கதை பிடிக்கவில்லை. ஏரியைப் பற்றிய மாயக்கதைகள் அவனுக்குக் கிலியை உண்டாக்கின, 'அவ முழுகிப் போயிட்டா. இப்போ மிதக்கறதில்லே.'

ஏனோ அவனுக்குத் தன் தாயின் நினைவு அடிக்கடி வந்தது. அன்று சாயங்காலம் அவள் அவனைத் திட்டியிருந்தாள்; ''நீ எங்கே போறே, எங்கே இருக்கேனு தெரியவே இல்லே. நீ என்னிக்காவது ஒரு நாள் தண்ணீயிலே முழுகிச் சாகத்தான் போறே !"

தாய் சொல்வது சரிதான் என்று சோனாவுக்குத் தோன்றியது. காட்டிலும் மேட்டிலும் சுற்ற அவனுக்கு எப்போதும் ரொம்ப ஆசை. இந்த வழக்கம் அவனை எப்போது பிடித்துக்கொண்டது என்று அவனுக்குத் தெரியாது. இப்போது அவனைக் கிலி பிடித்துக் கொண்டது.

251ஒரு நாள் அவன் யாரிடமும் சொல்லாமல் வயல்வெளிக்குப் போய் விடுவான். அப்புறம் அந்த ஏரி; அதில் இறங்கவேண்டுமென்ற வெறி அவனுக்கு. அவன் அதில் முழுகிவிடுவான், யாரும் அறியாமல்.

அவன் தனக்குள் சபதம் செய்துகொண்டான், இனிக் காட்டில் கண்டபடி திரிவதில்லை என்று. இனிமேல் அவன் தனியாகவோ, பைத்தியக்காரப் பெரியப்பாவுடனோ காடுகளில் சுற்றப் போவதில்லை. போனால் கதையில் வந்தமாதிரி ஆகிவிடும். 'தண்ணியிலே முழுகிப் போயிட்டா, இப்போ மிதக்கறதில்லே!' இனி அவன் குளமோ, நிலமோ எங்கும் சுற்றமாட்டான். அம்மா எப்போதும் அவனுக் காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கண்களில் தெரிந்த பயத்தின் சாயை அவனை நினைக்க வைத்தது, அவன் இனிமேல் ஒழுங்கானவனாக, உண்மை சொல்பவனாக இருக்க வேண்டுமென்று. ஈசுவர சந்திர வித்யாசாகர் தம் அம்மாவுக்காகத் தாமோதர் ஆற்றை நீந்தியே கடந்தாராம். அதுபோல் அவனும் தன் தாயை நேசிக்கவேண்டும். அவள் வார்த்தையைத் தட்டக் கூடாது. அவன் தன் தாய்க்காக எதுவும் செய்யத் தயாராக இருக்க வேண்டும், தன் தாயின் நினைவு வரும்போதெல்லாம் அவனுக்கு ஈசுவர சந்திரரின் நினைவு வந்தது. அவனும் ஈசுவர சந்திரரைப் போல் லட்சியவாதியாக, எப்போதும் உண்மை பேசுபவனாக இருக்கவேண்டும். தன் அம்மாவுக்குப் பிடித்ததையே செய்ய வேண்டும், பிடிக்காததைச் செய்யக்கூடாது.

ஈசம் பாடினான்: "முழுகிப் போயிட்டா, இப்போ மிதக்கறதில்லே !" வாசலில் உட்கார்ந்திருந்த அவர்களுக்கு, உள்ளே பெரிய அறையில் தாத்தா இருமுவது காதில் விழுந்தது.

ஈசம் பாட்டை நிறுத்திவிட்டு, “உங்களுக்குத் தெரியுமா. எசமான் ? சாயங்காலம் ஆயிட்டா, ராஜகுமாரி சூரியனைக் கையிலே பிடிச்சுக்கிட்டு ஏரியிலே முழுகிடுவா" என்றான்.

''அப்புறம் மிதக்கமாட்டா ?'' "மிதப்பா. ராத்திரிப் பூரா சூரியனைக் கையிலே வைச்சுக்கிட்டே தண்ணிக்கு அடியிலே நீந்துவா. நீந்திக்கிட்டே ஆத்திலேருந்து சமுத்திரத்துக்குப் போவா - பெரிய சமுத்திரத்துக்கு ! அதிகாலையிலே கிழக்குப் பக்கம் மேலே கிளம்புவா. சூரியனை ஆகாசத்துலே இழுத்து விடுவார். அப்புறம் மறைஞ்சுடுவா."

''எங்கே மறைஞ்சுடுவா?'' ''ஏரித் தண்ணிக்குள்ளே !” “நீங்க பார்த்திருக்கீங்களா?" ''நான் என்ன பார்க்கறது, எசமான் ? உங்க அம்மாவைக் கேளுங்க. உங்க பைத்தியக்காரப் பெரியப்பாவைக் கேளுங்க."

252அப்படியும் இருக்கலாம் என்று நினைத்தான் சோனா. பெரிய ஏரி, ராஜகுமாரிக்குத் தங்கப் படகு இருக்கிறது. காற்றால் ஆன துடுப்பு. அவள் ஆற்றிலிருந்து சமுத்திரத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்? அவள் சமுத்திரத்தில் வெகுதூரம் போய்விடுவாள். “அப்படியானால் இப்போது ராஜகுமாரி வடக்குக் கடலில் இருக் கிறாளா, தெற்குச் சமுத்திரத்தில் இருக்கிறாளா?' என்று கேட்கத் தோன்றியது சோனாவுக்கு. கையில் தங்கமீனைப் போல் சூரியனை வைத்துக்கொண்டு எந்தச் சமுத்திரத்தில் நீந்திக்கொண் டிருக்கிறாள் ராஜகுமாரி ?

அதிகாலையில் ராஜகுமாரி கிழக்குக் கடலில் மிதந்துவந்து சூரியனை வானத்தில் இழுத்து விட்டுவிட்டுப் போவதாகவும் அப்புறம் தண்ணீ ருக்குள் முழுகிவிடுவதாகவும் ஈசம் சொன்னான். இவ்வளவு நாளுக் கப்புறம் சூரியனின் தந்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டான் சோனா. 'சூரியன் எங்கே போகிறான்?' என்ற கேள்வியை எவ்வளவோ தடவை கேட்டிருக்கிறான் சோனா. அவன் பெரியவனான பிறகு இந்த ரகசியத்தை தெரிந்துகொள்வான் என்று அவனுடைய அப்பா சொல்லியிருந்தார். இப்போதே அவனுக்கு ரகசியம் தெரிந்து விட்டது. சூரியனின் மாமா மாமி வீடு ஏரிக்கு அடியில் இருக்கிறது. அங்கேதான் போகிறான் சூரியன்.

சோனா சும்மா உட்கார்ந்திருந்தான். ஈசம் ஏதோ வேலையாக மாட்டுத் தொழுவத்துக்குப் போனான். தனியாக உட்கார்ந்திருக்கப் பயமாக இருந்தது சோனாவுக்கு. அவன் உடனே எழுந்து உள்ளே போனான். அங்குத் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். மரக் கட்டிலின்மேல் தாத்தா தம்மைச் சுற்றிப் பெரிய பெரிய திண்டுகளைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய தலைப்புறத் தில் ஒரு விளக்கெண்ணெய் விளக்கு எரிந்தது. அதன் ஒளி நீலமாக இருந்தது. அது அவருடைய முகத்திலும் கண்களிலும் மின்னலைப் போல் பிரதிபலித்தது. பாட்டி சந்தியா காலப் பூஜைக் காகப் பூஜையறைக்குப் போய்விட்டாள். பாட்டி அறையிலிருந்த வரையில் அவளுடனேயே ஒட்டிக்கொண் டிருந்தான் சோனா. அப்போது அவனுக்கு ஈசுவர சந்திரரின் நினைவு மறுபடியும் வந்தது ; தாமோதர் நதியின் நினைவு வந்தது.

அவன் மறுபடியும் தீர்மானித்துக் கொண்டான் : அவன் தன் தாய்க்காக எதுவும் செய்யத் தயார்! சுற்றி வளைத்துக்கொண்டு அந்த நினைவு வந்தது : ஏரியில் ராஜகுமாரி, வயல்வெளியில் பாதிமா, அவன் பாதிமாவைத் தொட்டுவிட்டான்; ஆனால் ஸ்நானம் செய்யவில்லை, இதைக் கேட்டால் அவனுடைய அம்மா கோபிப்பாள். அம்மாவின் கடுமையான முகபாவத்தைக் கற்பனை செய்தபோது அவனுக்கு

253அழுகை வரும்போல் இருந்தது. அவனுடைய அம்மா இன்று பட்டுப் புடைவை கட்டிக்கொண் டிருந்தாள். விசேஷ நாட்களில் பட்டுப் புடைவைதான் உடுத்துவாள் அவள். அப்போது அவளைப் பார்த்தால் பெரிய வீட்டுப் பெண் மாதிரி இருக்கும். தண்ணீரைப் போல் நிர்மலமாக, வெள்ளை ஆம்பல் பூவைப் போல் பவித்திரமாக இருப்பாள் அவள். அப்படிப்பட்டவளுக்கு அருகில் அசுத்தமாகி விட்ட உடம்புடன் இருப்பதே பாவம். என்ன செய்வது என்று புரியவில்லை சோனாவுக்கு. 'அம்மா, என்னைப் பாத்திமா தொட்டு விட்டாள்' என்று சொல்லிவிடுவதா ? அல்லது பேசாமலிருந்து விடுவதா ? பயங் காரணமாக உள்ளுற நடுக்கமாயிருந்தது அவனுக்கு. அவன் ஒரே ஓட்டமாய் ஓடி மேற்குப் பக்க அறைக்குள் நுழைந்தான்.

"என்ன குளிர், என்ன குளிர்!'' இந்தக் குளிரில் ஸ்நானம் செய்வது ரொம்பக் கஷ்டம். சோனா தன் மேலிருந்த சால்வையை இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டான். பிறகு தன் தாய்க்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டான். இப்போது அவனுக்கு ஸ்நானம் செய்யும் விஷயம் மறந்துவிட்டது. ஏரியில் இருக்கும் ராஜகுமாரியின் நினைவுதான் வந்தது. அவள் தன்னுடைய வாயில் வெள்ளைச் சூரியனைக் கவ்விக்கொண் டிருக்கிறாள். வாயில் சூரியனைக் கவ்விக்கொண்டு அவள் மீனைப்போல் தண்ணீருக்கடியில் நீந்துகிறாள்.

அன்று இவ்வளவு அலைந்ததில் அவனுக்குக் களைப்பாக இருந்தது. அவன் இரவில் சாப்பிடக்கூட இல்லை, மரக்கட்டிலில் படுத்துக் கொண்டு தூங்கிவிட்டான். இன்றைக்கு அவனுக்குப் படிக்க வேண்டியதில்லை. விசேஷத்தை முன்னிட்டு விடுமுறை அவனுக்கு. இன்றிரவு சிலம்பப் பயிற்சியும் கிடையாது, ஹவிஸ் சமைக்கப் போயிருந்த லால்ட்டுவும் பல்ட்டுவும் இன்னும் திரும்பவில்லை. மாலை நேரம் முழுதும் அவன் பெரும்பாலும் தனியாகவே இருந்தான். பெரியம்மா சமையலறையில் இருந்தாள். இன்று இரவுச் சமையல் கிடையாது. தாத்தா வேகவைத்த பழங்களை மட்டும் சாப்பிடுவார். பாட்டி சூடான பால் மட்டுமே குடிப்பாள். அவர்களுக்கு இவற்றைத் தயார் செய்து கொடுத்துவிட்டால் அம்மா - பெரியம்மாவுக்கு ஓய்வுதான்.

அம்மா இப்போது அறையை விட்டுப் போனாள். சோனா மட்டும் அங்கே தனியாக இருந்தான். அரிக்கேன் விளக்கு அணையும் போலிருந்தது. தகரத்தாலான கூரை. அதில் மூடுபனி படர்ந் திருந்தது. சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் கீழே விழுந்தது, 'டப், டப்' என்ற சப்தத்துடன். சோனா உற்றுக் கேட்டான்.

2643

யாரோ மேலே நடக்கும் ஒலி. அவன் தன் அம்மாவைக் கூப்பிட்டுத் தனக்குப் பயமாயிருக்கிறது என்று சொல்ல நினைத்தான். மற்ற நாட்களில் பயமாக இருப்பதில்லை அவனுக்கு. ஆனால் இன்று

அம்மாவைக் கூப்பிடத் துணிவு உண்டாகவில்லை அவனுக்கு.

ஒருத்தி இன்று தண்ணீரில் முழுகிச் செத்துப் போய்விட்டாள். எருமையின் வெட்டப்பட்ட தலையை அதன் வயிற்றின்மேல் வைத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள். இந்தக் காட்சிகளை நினைத் ததும் அவன் போர்வையால் தன் முகத்தை மூடிக் கொண்டான். தன் உடம்பு அசுத்தமாகிவிட்டது நினைவுக்கு வந்தது. அவன் பாதிமாவைத் தொட்டும் ஸ்நானம் செய்யவில்லை. சரீரம் அசுத்தமாக இருந்தால் பிசாசுகள் பிடித்துக்கொள்ளும். அந்த ஆவிகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக அவன் போர்வையால் தன் உடம்பை மூடிக்கொண்டான். சிறுவர்களுக்குத்தான் எத்தனைவிதப் பயங்கள்! கொஞ்சம் இடுக்குக் கிடைத்தால் பிசாசு அவனுடைய உடம்புக்குள் புகுந்துவிடும் என்று அவனுக்குத் தோன்றியது. அது அவனுக்குக் குறுகுறுப்பு மூட்டிச் சிரிக்கவைத்தே சாகடித்துவிடும், அல்லது அவனுடைய மூக்கில் ஒருவித வாசனையைத் தேய்த்து விடும். தேய்த்ததும் அவன் அதனுடைய அடிமையாகிவிடுவான். அது அவனைத் தன்னோடு ஏரித் தண்ணீரின்மேல் நடக்கச் சொல்லும்.

அவனுக்கு உள்ளுறக் கஷ்டமாக இருந்தது, தன் தாய் தந்தை யரை நினைத்து. அவன் போர்வைக்குள் தன்னை நன்றாகச் சுருட்டிக் கொண்டான். பிசாசுகள் அந்த அறையை நாற்புறமும் சூழ்ந்து கொண்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டன. சோனா மனசுக்குள் சாமி பெயரைச் சொல்லிக்கொண்டான். அப்போது விளக்கு அணைந்து, அறை முழுதும் இருட்டாகிவிட்டது. சோனா போர்வைக்கு வெளியே முகத்தை நீட்டினான். ஜன்னலுக்கு வெளியே நிலா ஒளியில் ஏதோ ஒரு முகம் தெரிந்தது. ஜாலாலிதான் எட்டிப் பார்க்கிறாளோ? பயந்துபோய் உரக்கக் கத்திவிட்டான் சோனா. வெட்டப்பட்ட எருமைக் கழுத்தை வைத்துக்கொண்டு ஜாலாலி

அவனைப் பார்த்துக்கொண் டிருந்தாள்.

அவனுடைய கூச்சலைக் கேட்டுத் தனமாமி ஓடிவந்தாள். சோனா வின் உடம்பு நடுங்கிக்கொண் டிருந்தது. அவன் ஜன்னல் பக்க மாக எதையோ விரலால் சுட்டிக் காட்டினான். ஜன்னல் வழியே நிலவைத்தான் பார்த்தாள் தனமாமி,

"ஏன் கத்தினே ?" "ஒரு மனுஷி."

25513:

"மனுஷி எங்கேயிருந்து வருவா? தூங்கு தூங்கு!'' சோனா பயந்துகொண்டே, அழுதபடி, "அம்மா, என்னைப் பாதிமா தொட்டுட்டா!" என்றான்.

"மறுபடி அந்த மூதேவி கிட்டேப் போனியா?" சோனா தன் குற்றத்தை மறைத்துவிட்டுச் சொன்னான் : "இல்லே அம்மா! நான் அவளைத் தொடவேயில்லை."

அம்மா ஒன்றும் பேசவில்லை. அவள் பூஜையறைப் பக்கம் போனாள். பட்டுப் புடைவை, மல்லிகை மணம், அவளுடைய உடம்பில் சந்தன வாசனை. சோனாவின் கண்களுக்கு அவனுடைய அம்மா புஷ்பக் கன்னிகையாகத் தோன்றினாள். சோனா அவள் மேலே படாமல் அவளுக்குப் பின்னால் போனான். இப்போது இருட்டு இல்லை, வயல்களும் ஆற்றங்கரையும் நிலவில் மிதந்தன. ஈசம் இதற்குள் தர்ஜ் வயலுக்குப் போய்ச் சேர்ந்திருப்பான். ரஞ்சித் முன்னறையில் உட்கார்ந்துகொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். தனமாமி முற்றத்தைத் தாண்டினாள். அவளுக்குத் தன்மேல் ரொம்பக் கோபம், அவள் தன்னைக் குளத் துக்கு அழைத்துப் போகிறாள் என்று சோனா நினைத்தான். அங்கே போய்ச் சேர்ந்ததும் அவனைக் குளிக்கச் சொல்லப் போகிறாள். தண்ணீரோ பனிக்கட்டி மாதிரி இருக்கும். பயந்து நடுங்கிவிட்டான் சோனா.

பவழமல்லிகை மரத்தடிக்கு வந்ததும் தனமாமி சோனாவை அங்கே நிற்கச் சொல்லிவிட்டுப் பூஜையறையைத் திறந்தாள். ஒரு தாமிரப் பாத்திரத்திலிருந்து துளசி இலையும் கொஞ்சம் அபிஷேக தீர்த்தமும் எடுத்தாள். தீர்த்தத்தைச் சோனாவின் மேலும் தன் மேலும் தெளித் துக்கொண்டாள். சோனாவை 'ஆ'வென்று வாயைத் திறக்கச் சொல்லிவிட்டு, அதற்குள் துளசி இலையைப் போட்டுச் சாப்பிடச் சொன்னாள். உடனேயே தன் உடம்பிலிருந்து எல்லாப் பயமும் மாயமாய்ப் பறந்தோடி விட்டதாகத் தோன்றியது சோனாவுக்கு . அவன் தன் தாயை இறுகக் கட்டிக்கொண்டு சொன்னான்: ''அம்மா, இனிமே நான் வயல்காட்டுக்குத் தனியாப் போகமாட்டேன்!''

தனமாமி சோனாவுக்குப் பதில் சொல்லவில்லை. அவள் தாமிரப் பாத்திரத்திலிருந்து ஒரு கை தண்ணீரை எடுத்துக்கொண்டு வேகமாக அறைக்குள் போய்க் கட்டில் மேலும் படுக்கை மேலும் தெளித் தாள், அப்போது ஆற்றங்கரையிலிருந்து, ஜப்பர் அழும் சப்தம் கேட்டது.

பெரிய மாமி அவசர அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்தாள். ரஞ்சித்தும் எல்லாவற்றையும் போட்டுவிட்டு வெளியே வந்தான்.

31

256111

தனமாமி கதவை வெளியிலிருந்து தாழிட்டாள். எல்லாரும் குளத் தங்கரைப் பக்கம் போனார்கள். அவர் களுக்குப் பின்னால் சோனா.

தீனபந்து, தன்னுடைய இரு மனைவிகள், சுகி துக்கியுடன் மகிழமரத்தடியில் வந்து நின்றான். பிரதாப்சந்தா தன் வீட்டு மொட்டை மாடியில் வந்து நின்றான். அவனுடைய மூன்று மனைவி களும் குழந்தை குட்டிகளும் கூட வந்து நின்றார்கள், ஜாலாலியைப் பார்ப்பதற்காக. ஸ்ரீசந்தா, நாவிதர் வீட்டுக் கவிராஜ், கெளர் சர்க்காரின் குழந்தைகள் எல்லாரும் மூங்கில் புதருக்கருகில் வந்து நின்றார்கள். பூதத்தைப் பார்க்கப் போவது போன்ற உணர்வு. தண்ணீரில் முழுகிப் போனவள் இப்போது வரப்போகிறாள். நிலவு கூட மங்கி வெளுத்திருந்தது. ஒரு வாழையிலை அசைந்தால் கூடத் தெரியும். அவ்வளவு அமைதி எங்கும். ஆகாயத்தில் மேகம் சிறிதும் இல்லை. வெள்ளை மேகங்கள் ஆகாயத்தில் இருந்தால், காற்று வீசிக் கொண்டிருந்தால், புதர்களில் பூச்சிகள் பறவைகள் ஒலியெழுப் பினால் இவ்வளவு பயங்கரமாகத் தோன்றாது. மத்தளங்களின் ஒலி கூட நின்றுவிட்டது. பயங்கரமான, மங்கிய நிலவு வெளிச்சத்தில் மனிதர்கள் கூட்டமாக வருவதை அவர்கள் பார்த்தார்கள். சோனா தன் தாயை இறுகக் கட்டிக்கொண்டான். எருமையின் அறுபட்ட தலை மறுபடியும் எட்டிப் பார்க்குமோ என்று அவனுக்குப் பயம்.

தனமாமி உடனே சோனாவைத் தூக்கி வைத்துக்கொண்டாள். மூங்கிலுடன் சேர்த்துக் கட்டியிருந்த பிணம் அசைந்து அசைந்து கொண்டு வந்தது, சாம்சுத்தீனுடன் ஏதாவது பேசலாமென்று ரஞ்சித் நினைத்தான். ஆனால் அவன் வயல் பக்கம் திரும்பிப் பார்த்த போது அங்கு இன்னும் திருவிழாவின் அடையாளங்கள் இருப் பதைக் கண்டான். மேலும், சற்று நேரத்தில் சர்க்கார் வீட்டுக் குளத்தங்கரையில் வாணவேடிக்கை ஆரம்பிக்கும். இந்த நிலையில் சாம்சுத்தீனுடன் பேசத் தயக்கமாயிருந்தது ரஞ்சித்துக்கு.

அன்று பிற்பகலில் கண்ட காட்சி நினைவுக்கு வந்தது சோனாவுக்கு. வெட்டப்பட்ட எருமையின் வயிற்றின்மேல் அதன் தலை சவாரி செய்துகொண் டிருந்தது. இப்போது எதிரில் காணும் காட்சித் தெளிவாக இல்லை. ஆனால் ஜாலாலியின் தலை கீழ்ப்பக்கமாகத் தொங்குவதாகத் தோன்றியது சோனாவுக்கு. அவளுடைய தலை மயிர் சணலைப் போல் விறைத்துக்கொண் டிருந்தது. சோனா தன் தாயை இன்னும் இறுகக் கட்டிக்கொண்டான். இந்தக் காட்சி

அவளிடம் ஓர் இறுக்கத்தை உண்டு பண்ணியது.

இப்படி நேருவது இயற்கைதான், பிறருடைய கஷ்டத்தைப் பார்க்கும்போது வேதனையுணர்வு எல்லாரிடமும் ஒட்டுவாரொட்டி போல் பரவி விடுகிறது. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள்

1 111111!?

257

17எல்லாருமே எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது.

உலகம் முழுதும் நிலவொளி பரவியது. பெரிய மாமி மருத மரத்தடியில் நின்றாள். ஜாலாலியின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் வயலைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்புறந்தான் எல்லாரும் பார்த்தார்கள் ; அந்த மனிதர், நாடோடிக் கதைகளின் கதாநாயகர் ராஜாவைப் போல் கம்பீரமாக நடந்து வருவதை .

வெள்ளை நிலவில் பைத்தியக்கார டாகுர் ஒரு துறவியைப் போல் காட்சியளித்தார்.

அவர் எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை என்பதைச் சோனா கவனித்தான். அவர் நேராக நடந்துவந்தார். அவர் முன்னால் வந்ததுமே பெரியம்மா அந்தப் பக்கம் ஓடினாள், ரஞ்சித்தும் போனான். பெரியப்பாவைப் பார்த்ததும் சோனாவின் பயமெல்லாம் பறந்து விட்டது. அவன் அவர் அருகில் போய், "பெரியப்பா !" என்று கூப்பிட்டான்.

பெரிய மாமி அவரை மேலே போகவிடவில்லை. அவள் அவரு டைய கையின்மேல் தன் கையை வைத்தாள். வைத்ததுமே அவர் கள்ளமே அறியாத குழந்தையைப் போல் ஆகிவிட்டார். அவருடைய மேலுடம்பு காலியாக இருந்தது ; கைகால்கள் சில்லிட்டுப் போயிருந்தன. குளிரில் அவர் இன்னும் வெளுத்துப் போயிருந்தார். ஆடை ஈரமாக இருந்தது. மனிதருக்கு இருமல், ஜலதோஷங்கூட ஏற்படுவதில்லை. அவரைச் சமாளிக்க முடியவில்லை, பெரிய மாமியால். அவருக்கு இரவில்லை, பகல் இல்லை ; எப்போது எங்கே போவார், எப்போது திரும்பி வருவார் என்ற கணக்கு இல்லை. இவ்வளவு முக்கியமான விசேஷ நாளில்கூட அவருக்குச் சாப்பாடு போட அவளுக்கு முடியாமல் போயிற்று. அவர் இரவில் திரும்பி வருவார், அல்லது விடியற்காலையிலாவது வருவார் என்ற நம்பிக்கையில் அவள் அவருக்காக எல்லாப் பதார்த்தங்களையும் தனியாக எடுத்து வைத்திருந்தாள், வெள்ளைக் கல் பாத்திரத்தில்,

பைத்தியக்கார டாகுரால் வெகுநேரம் கடுமையாக இருக்கமுடிய வில்லை. அவருடைய மனைவியின் கண்களில் சோகம் தெரிந்தது. நிலவொளியில் அந்தச் சோகம் இன்னும் மனசைத் தொடுவதாக இருந்தது, அவர் பெரிய மாமியின் கையைப் பிடித்துக்கொண்டு மெளனமாக வீட்டுப் பக்கம் நடந்தார். தாம் எதற்காக வெளியே வந்தோம் என்பதை மறந்துவிட்டவர் போல் அவர் சுற்றுமுற்றும் பார்த்தார்.

258'நான் வெளியே கிளம்பியது யாருக்காக? யாருடைய நினைவாக இந்தப் படபடப்பு? என் வாழ்க்கையின் பொன்மானைக் கட்டி வைத்திருப்பது யார் ? அந்தக் கற்பனை மான் ஒரு நெல்லி மரத் தடியில் கட்டி வைக்கப் பட்டிருக்கிறதே, அந்த நெல்லிமரம் எங்கே ?, இவ்வாறெல்லாம் நினைத்து நினைத்து அவருடைய மனம் சஞ்சல மடைந்தது.

'அவள் யார்? குமரிப் பெண் பாலின் சந்திரனில் இருக்கும் கிழவி யைப் போல இருப்பாளா? அவளுடைய கண்கள் இமைக்கா தா ? அவள் ஏதாவது ஓர் அருவிக்கருகில் முயல் பொந்தில் வசிக்கிறாளா? அவளுக்குத் தினம் அருவியில் ஸ்நானம்...... அவள் போர்ட் வில்லியத் தில் இருக்கிறாள். அந்தக் கோட்டையின் உச்சியில் கொண்டைப் புறாக்கள். அதற்கு எதிரில் எவ்வளவு கப்பல்கள்! அந்தக் குமரி ஒரு கப்பலில் தன் தந்தையுடன் இந்த நாட்டுக்கு வந்தாள். அவர் அவளை வரவேற்கக் கப்பல் துறைக்குப் போயிருந்தார்.'

பழைய காட்சிகள் மங்கலாக நினைவுத் திரையில் விழுந்தன. அவள் தான் எத்தனை அழகு! அவளுடைய கண்கள் எவ்வளவு நீலம்! அவள் தன் காதலனான அவருடன் தினந்தோறும் கோட்டைச் சுவரின் நடையில் உட்கார்ந்திருப்பாள். இதெல்லாம் ஞாபகம் வந்ததும் அவ ருக்குப் படபடப்பு ஏற்பட்டது, மூளைக்குள் வேதனை உண்டாகியது ; பிறகு நினைவு கலங்கியது. அந்த யுவதியின் முகமும், கண்களும், லாவண்யமும் அவரைப் பைத்தியமாக்கி வயல்வெளிகளில் அலையச் செய்கின்றன. இப்போது என்ன முயன்றும் அவரால் அந்த நீலக் கண்களையும், அழகிய முகத்தையும் நினைவில் கொண்டுவர முடிய வில்லை, தன் அன்புக்குரியவளின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வர முடியாததால், கோபமும், துக்கமும், ஏமாற்றமும் அவரை நிலைகுலையச் செய்கின்றன. இதன் விளைவாகத்தான் அந்தக் கூச்சல் “ 'கேத்சோரத்சாலா !"

ரஞ்சித் தனியாக வயல்வெளியில் நின்றான். தூரத்தில் இங்கு மங்கும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரிந்துகொண் டிருந்தன. மைதானம், விசாலமான ஏரிகரை, வயல்கள், வயல்களில் விளக்கு களின் ஒளி. பிஸ்வாஸ்பாடாவிலும், சர்க்கார் விட்டுக் குளத்தங் கரையிலும் விளக்குகள். பிரசாதம் வாங்கிக்கொள்ளும் ஆசையில் இப்போதுகூட ஓரிரு மனிதர்கள் வயல்களைக் கடந்து போனார்கள். ரஞ்சித் தன்னந்தனியாக அந்தக் குளிரில் சற்றுநேரம் உலவினான். ஏதேதோ நினைவுகள் அவனை அலைக்கழித்தன.

சிலம்பப் பயிற்சி பற்றிய பிரச்னைகள், யோசனைகள். அவன் ரகசியமாக இந்தக் காரியத்தை நடத்த வேண்டுமென்பது சங்கத்தின் கட்டளை. ஆனால் சாம்சுத்தீனும் அவனுடைய ஆட்களும் ரஞ்சித்

259iiithi

சிலம்பப் பயிற்சியும், கத்திவீச்சுப் பயிற்சியும் நடத்துவதை நன்றாகத் தெரிந்துகொண்டு விட்டார்கள். ரஞ்சித் இந்துக்களைத் தைரியசாலிகளாக்க, பலசாலிகளாக்க முயற்சி செய்கிறான், அவர் களைத் தற்காப்புக்குத் தயார் செய்கிறான். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை இல்லை. இந்துக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். அநேகமாக எல்லாருமே பொருளாதாரத்தில் நடுத்தர நிலையில் உள்ளவர்கள். தாழ்ந்த ஜாதி களைச் சேர்ந்தவர்கள்கூட - உதாரணமாக, நமசூத்திர ஜாதியினர் - சிலம்பப் பயிற்சி, கத்திப் பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதன் விளைவாக இந்து, முஸ்லீம்களிடையே பரஸ்பர நம்பிக்கை கொஞ்சங் கொஞ்சமாக குறைந்து போய்விட்டது. இரு இனத்தாரும் ஒருவர் மற்றவரிடமிருந்து விலகிக்கொண்டு போனார்கள். இவ் விஷயங்களை விவரமாகச் சங்கத்துக்கு எழுதித் தெரிவிக்க விரும் பினான் ரஞ்சித். ஜாலாலியின் இந்தத் துர்மரணம் வாழ்க்கைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட மரணம். அல்லிக்கிழங்கு பறிக்கச் சென்ற ஜாலாலி கொடிகளில் சிக்கிக்கொண்டு தண்ணீ ருக்குள் முழுகிவிட்டாள். வெவ்வேறு மனிதர்களுக்கிடையே இருந்த இந்தப் பொருளாதார வேறுபாடு ரஞ்சித்தை வருத்தியது. இதையும் தன் சங்கத்துக்குத் தெரிவிக்கத் தீர்மானித்தான் ரஞ்சித்.

நரேன் தாஸின் நிலத்தில் நின்றுகொண் டிருந்த வெள்ளையுடை அணிந்த உருவம் ஒன்று தன்னைப் பார்த்துக்கொண் டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அது தான் மாலதி என்று அவன் புரிந்து கொண்டான். அவள் மற்றவர்களுடன் திரும்பிப் போகவில்லை. அவனை நோக்கி மெதுவாக வந்தாள் அவள். துணையின்றி இருக்கும் மாலதிக்காக அவன் மனசு சங்கடப்பட்டது. அவன் மருதமரத் துக்குப் பின்னால் மறைந்துகொண்டான். யார் யாரிடமிருந்து ஒளிவது ? மாலதியின் பார்வை தீட்சண்யமானது. அவளுடைய இதயத்துக்குள்ளிருந்த பறவை ரஞ்சித்தைக் கண்டதும் கூவத் தொடங்கிவிட்டது. அவளுடைய நெஞ்சு திகுதிகுவென்று பற்றி எரிந்தது. அடிவானம் வரையில் பரந்துகிடக்கும் மைதானத்தில் இந்த நாளில் கரைந்து மறைந்துவிட யாருக்குத்தான் தோன்றாது? உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது, ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் ஏற்படாது ? இத்தகைய அழகிய இளைஞனைப் பார்த்தால் அவனைக் காதலிக்க யாருக்குத் தான் தோன்றாது?

பெரிய மாமி தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். மேஜையின்மேல் அரிக்கேன் விளக்கு எரிந்தது. பைத்தியக்கார மனிதர் இப்போது அநேகமாக நிர்வாணமாக இருந்தார். பெரிய

260மாமி அவருடைய ஈர உடையைக் கழற்றினாள். சலவைக் கல் போன்ற உறுதியான உடல் அவருக்கு. நெஞ்சின் மேல் ஒரு யானையை ஏற்றிக்கொண்டு அதை ஆடவைக்கும் அளவுக்குப் பலம் வாய்ந்த தசைநார்கள் மார்பில். வயிற்றில் கொழுப்பே இல்லை. மெல்லிய தசையின்மேல் வெளுத்த தோல். ரோமம் அடர்ந்த மார்பிலிருந்து ஆற்றொழுக்குப் போல் நேராக இறங்கிய ஒரு மயிர்க் கோடு கீழே அடர்ந்திருந்த ரோமக்காட்டைத் தொட்டது. பெரிய மாமி ஒரு வெள்ளைத் துண்டால் அவருடைய தேகத்திலிருந்த நீர்த் துளிகளைத் துடைத்துவிட்டாள். ஒரு மரப்பொம்மைபோல் அசை யாமல் இருந்தார் அவர். சாவி கொடுக்கும் மரப்பொம்மை. அவர் அசையாமல், வேறு நினைவின்றி, பெரிய மாமியின் பெரிய பெரிய கண்களை, காதலுக்குரிய கண்களை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் கையைத் தூக்கச் சொன்னால் தூக்கினார் ; உட்காரச் சொன்னால் உட்கார்ந்தார்.

விசேஷ நாள். பெரிய மாமி அவருக்காக எல்லாப் பதார்த்தங் களையும் எடுத்து வைத்திருந்தாள். அவர் சிலவற்றைச் சாப்பிடுவார், சிலவற்றைச் சாப்பிடமாட்டார். சிலசமயம் எல்லாவற்றையுமே சாப்பிட்டுவிடுவார்; சாப்பிட்டுவிட்டு, "இன்னும் கொண்டா!" என்று பெரிய மாமியின் கையைக் கடித்துவிடுவார். அவளால் கொடுக்க முடியாவிட்டால் அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு மைதானத்தில் ஓடத் தொடங்குவார் அவர் ; அல்லது அவளை அப்படியே படுக் கையில் கிடத்தி நிர்வாணமாக்கிவிடுவார் ; அல்லது அவளை முகர்ந்து பார்ப்பதுபோல் அவளுடைய முகத்துடன் தன் முகத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு படுத்துக் கிடப்பார் அவர். அவர் எப்போது என்ன செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது. அவருடைய செய்கைகளில் எல்லாம் ஒரு கடுமை, ஒரு தீவிரம் இருக்கும். இந்தக் கடுமைக்காக நாள் முழுதும் ஏங்கிக் கிடப்பாள் பெரிய மாமி.

மாலையில் அவர் திரும்பிவராவிட்டால் பெரிய மாமி ஜன்னல் அருகே நின்று மைதானத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள். இப்படியே இரவு கழிந்துவிடும், அவர் திரும்பி வரமாட்டார். அவர் ஏதாவதொரு மரத்தடியில் படுத்துக்கொண்டு நீலவானத்தில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண் டிருப்பார். அப்போது அவருடைய வாய் ஒரு கவிதையை முணுமுணுக்கும் ; காதல் கவிதை. கவிதை யின் வரிகள் பெரிய மாமிக்கு நீலக் கண் களையும் பொன்னிறத் தலை முடியையும் அடிக்கடி நினைவுறுத்தும். அவள் உணர்ச்சிவசப்பட்டுத் தன் மாமனாரிடம் கேட்கத் துடிப்பாள் : "ஏம்பா, நீங்க இந்த மனுஷரைப் பைத்தியமாக்கிட்டீங்க? ஜாதியும் மதமும் மனுஷனைவிட உசந்ததுன்னு ஏன் நினைச்சீங்க?"

261.பெரிய மாமிக்குக் கண்களில் நீர் வந்துவிட்டது. " அவருக்கு உடையணிவிக்கும்போது கண்ணீர் அவளுடைய பார்வையை மறைத்தது. அவள் பார்வைக்கு மங்கலாகத் தெரிந்தார், மணீந்திர நாத். அவருக்கு மடித்து வைத்திருந்த வேஷ்டியை அணிவித்தபோது அவருடைய நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் அவள். மரப்பொம்மை கொஞ்சங்கூட அசையவில்லை. அவர் வழக்கம்போல் தன் கடுமையைக் காட்டினால்? அவளைப் பலவந்தமாக நிர்வாணமாக்கினால்? ஆனால், இன்று அவர் சற்றும் சலனமடைய வில்லை. அவர் துறவியைப் போல் பிட்சைக்காக நின்றிருந்தார். கையில் தண்டத்தைக் கொடுத்தால் துறவி மாதிரியே இருப்பார் அவர். விசேஷ நாளாதலால் பெரிய மாமி அவருக்குப் பட்டுச்சட்டை அணிவித்தாள். அவருடைய சுருட்டை மயிரை வாரிச் சீவினாள். மாப்பிள்ளை வேடத்தில் நின்றிருந்தார் பைத்தியக்கார மனிதர். அந்தக் காட்சியைப் பார்த்து உருகிக் கரை தொள பெரிய மரமி. 'இவ்வளவு அழகான புருஷன் உண்டா ?' என்று சொல்லிக் கொண்டு அவள் அழுதுவிட்டாள். அவள் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு வந்து ஆசனத்தில் உட்கார்த்தி வைத்தாள். பிறகு ஒவ்வொன்றாகப் பதார்த்தங்களைக் கொண்டு வந்து வைத்தாள். எள்ளுருண்டை , கத்மா, பாயசம், கிச்சடி, பழம், சர்க்கரைப் பொரி... ஒவ்வொன்றாக அவருக்கு முன்னால் நகர்த்தி வைத்தாள். ஆனால் இன்று அவருக்குச் சாப்பாட்டில் ஆசை இல்லை. அவர் பதார்த்தங்களை ஏதோ கொஞ்சம் எடுத்துக்கொண்டு எழுந்துவிட்டார்.

மெத்தென்ற படுக்கையில், தலைமாட்டில் தங்கக்கோலும் வெள்ளிக் காலும் வைத்துக்கொண்டு படுத்துறங்கும் ராஜகுமாரனைப் போல் அவர் படுக்கையில் படுத்திருந்தார். அவருடைய உடையின் மடிப்பு கொஞ்சங்கூடக் கலையவில்லை. அவருடைய வேஷ்டி குதிகால்வரை இழுத்துவிடப் பட்டிருந்தது, கச்சம் கால்வரையில் வந்திருந்தது. அவர் தம் கைகளைக் கோத்துக்கொண்டு மார்பின் மேல் வைத்த வாறு கூரையின் அடிச்சட்டங்களை எண்ணினார், இமைமூடாமல். அவருக்குப் பக்கத்தில் பெரிய மாமி, உட்கார்ந்துகொண்டே யிருந்தாள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நினைத்து நினைத்து அவருடைய இரு கன்னங்களையும் முத்தமிட்டாள் அவள். அவரு டைய சட்டைக்குள்ளே நெஞ்சின் மேல் அவளுடைய மிருதுவான விரல்கள் தவழ்ந்து விளையாடின - மயங்கிக் கிடக்கும் ராஜ குமாரன் மந்திரக்கோலின் ஸ்பரிசம் பட்டு மயக்கத்திலிருந்து விழித்து எழமாட்டானா என்ற ஆசையில்.

262ஊஹும், மனிதர் எழுந்திருக்கவில்லை. இந்த விசேஷ நாள் வீணாகிவிட்டது.

அவள் அந்த மனிதரின் ரோமம் அடர்ந்த மார்பின் மேலிருந்து தன் கையை எடுத்துக்கொண்டு, போர்வையைப் போர்த்துக்கொண்டு, அந்த மரப்பதுமையைத் தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இரவு பூராவும் படுத்திருந்தாள். மரப்பொம்மை தூங்கவில்லை, ஆனால் எப்பேர்ப்பட்ட தூக்கம் பெரிய மாமிக்கு! அவளுடைய கண்கள் அயர்ந்து எப்போது மூடிக்கொண்டன, எப்போது மணீந்திர நாத் சப்தம் செய்யாமல் ராஜகுமாரன் வேஷத்தைக் களைந்துவிட்டு முழங்கால் வரை கட்டிய துணியுடன் வெளியே போனார் என்று பெரிய மாமிக்குத் தெரியாது. பேய்த் தூக்கம் பெரிய மாமிக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொள்ளை கொண்டு போய்விட்டது.

இதற்குள் ஜாலாலியைச் சவப்பெட்டிக்குள் வைத்தாகிவிட்டது. மாலதி மருதமரத்தை நோக்கி அடிமேல் அடிவைத்து நடந்தாள், பேலு புதைக்குழிக்கருகில் நின்றுகொண்டு குழி நன்றாகத் தோண்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான்.

கஜார் மீன் ஏரிக்குள் தன் இருப்பிடத்துக்குத் திரும்பி வந்து விட்டது. தாமரைக் கொடிக்குள் எட்டிப் பார்த்து அங்கு முன்பு கிடந்த அதிசயப் பிராணியைக் காணாமல் ஆச்சரியத்துடன் வாலை ஆட்டியது. 'அந்த அதிசயப் பிராணியை யார் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்? அது எங்கே மிதந்துகொண் டிருந்தது ?' என்று பார்ப்பதற்காக அது நீரில் தன் துடுப்புக்களை விரித்துக்கொண்டு நீந்தத் தொடங்கியது.

சவப்பெட்டிக்குள் ஜாலாலியின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஹாஜிசாயபு புதிய துணி வாங்கிக் கொடுத்தார். அவருடைய மூன்று பீபிகளும் சடலத்தை வெந்நீரில் குளிப்பாட்டி யிருந்தார்கள். எல்லாக் காரியங்களையும் அவர்களே மேற்பார்வை பார்த்தார்கள். ஜாலாலியின் தலைமயிரைப் பின்னி விட்டார்கள். அவளுடைய உடலுக்கு அத்தர். சந்தனம் பூசி விட்டார்கள். 'ஜாலாலி கொய்னாப் படகில் வேலை செய்யும் ஒரு சாதாரணப் படகோட்டியின் மனைவி. அவள் தன் வாழ்நாள் பூராவும் சோற்றுக்கு ஏங்கி ஏங்கிக் கழித்தாள்' என்று இப்போது யாரால் சொல்லமுடியும்? சவப் பெட்டியில் ஜலாலி, மத்தியில் இமாம். எல்லாரும் ஜாலாலிக் காக அல்லாவின் ஆசியை வேண்டினார்கள். கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் யாவரும் மசூதியில் மூன்று வரிசைகளாக நின்று கொண்டு காதுகளைத் தொட்டுக்கொண்டு, "ஏ அல்லா! உன் பெருமை எல்லையற்றது. நாங்க சாதாரண மனுஷங்க ; நாங்க

263செய்யக்கூடியது என்ன? இந்தப் பிரபஞ்சத்துலே உன் விளையாட்டு நடக்குது. ஏ அல்லா! இந்த வயல்கள்ளே விளையற விளைச்சல், இங்கே கேக்கற பறவைகளோட ஒலி எல்லாமே உன் கருணை தான்னு யாருக்குத் தெரியாது? நீ எல்லாருக்கும் புகலிடம் தர்றவன். இந்த ஏழை ஜாலாலிக்குப் புகலிடம் கொடுத்துக் காப்பாற்று!' என்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர் போலும்.

நிலவு காயும் இரவு. மத்தளங்கள் முழங்கின. இங்குமங்கும் வயல்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரிந்தன. சவப் பெட்டிக்குள் ஜாலாலி படுத்திருந்தாள். சாம்சுத்தீன் இமாமாகச் செயற்பட்டான். மசூதிக்குப் பக்கத்தில் நிறையச் சீதாமரங்கள் மரங் களில் நிறையப் பறவைகள் வசித்து வந்தன. அகாலத்தில் இவ்வளவு மக்களைப் பார்த்து அவை விழித்துக்கொண்டு கூவத் தொடங்கின. சீதாமரத்து இலைகள் பூக்களைப் போல் சவப்பெட்டியின் மேல் விழுந்தன.

பிறகு எல்லாரும் சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு, 'இலாஹா இல்லால்லா மொகம்மதர் ரசூல்லா' என்று கூவிக்கொண்டு நடந் தார்கள். இப்போதும் சர்க்கார் வீட்டுக் குளக்கரையில் மத்தளம் ஒலித்தது. இப்போதும் வயல்வெளி முழுதும் நிலா. அவர்கள் லாந்தரோ, சிம்னி விளக்கோ வைத்திருந்தார்கள். சாதாரணமாக வெளியே வராத, முகத்திரையணிந்த பீபிகள் கூட, பரிதாபத்துக் குரிய ஜாலாலிக்காக அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் புதை குழியைச் சூழ்ந்து நின்றார்கள். ஹாஜிசாயபுவின் உடல் நிலை சரியில்லையாதலால் அவரால் வரமுடியவில்லை.

சவப்பெட்டியிலிருந்து சடலம் வெளியே எடுக்கப்பட்டது. சாமு ஒரு பக்கமும் ஜப்பர் ஒரு பக்கமுமாகக் கீழே இறக்கினார்கள். அன்று பிற்பகல் பேலு யாருக்காகத் தன் கழுத்தை ஆமைபோல் நீட்டிக் கொண்டிருந்தானோ, அவள் இப்போது முகத்திரைக்குள்ளிருந்து பேலுவைப் பார்த்தாள். பேலுவின் நெஞ்சு 'தடக் தடக்' என்று அடித்துக்கொண்டது.

சாமு புதைகுழியிலிருந்து வெளியே வந்ததும் பேலு அதை மூங்கில்களால் மூடிவிடுவான். வடக்கே தலையும் தெற்கே காலு மாக ஜாலாலியின் சடலம் கிடத்தப்பட்டது. அவளுடைய தலை மேற்குப் பக்கம் பார்க்குமாறு வைக்கப்பட்டது, ஜாலாலி மக்காவை யும் மதீனாவையும் பார்க்கட்டும் என்று. சாமுவும் ஜப்பரும் வெளியே வந்ததும் பேலு குழியை மூங்கில்களால் மூடி அவற்றின் மேல் சில விளம்பரங்களை வைத்தான். அவற்றில் எழுதியிருந்தது, முஸ்லீம் லீக் ஜிந்தாபாத்! அவர்கள் தங்கள் சபதத்தை ஒரு சாட்சி போல் அங்கே வைத்தார்கள். இந்த விளம்பரங்கள் மண் புதை

264குழிக்குள் விழுந்து அதைத் தூர்த்துவிடாமல் தடுக்கும். ஏழை முஸ்லீம்களின் பிழைக்கும் உரிமையை யாரும் மறுக்காமல் இருக்க அந்தச் சபதம் உதவும்.

சாமு ஜாலாலியிடம் சொல்ல விரும்பினான் போலும் : 'சின்னம்மா, நாங்கள் இந்த வயல்களையும் அவற்றின் விளைச்சலையும் எங்கள் பின் சந்ததிக்குச் சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போவோம். அதற்காகத் தான் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம் நாங்கள். நம் எல்லா ருக்கும் மேலே நமது மதம். அல்லா ஒன்றே கடவுள். அவருக்கு ஈடு இணை இல்லை. முகம்மது அவருடைய தூதர்!'

எல்லாரும் ஒவ்வொரு கை மண்ணெடுத்துக் குழிக்குள் போட் டார்கள். பிறகு குழி மண்ணால் மூடப்பட்டது. ஜாலாலியைக் குளிப்பாட்டின தண்ணீரில் மிஞ்சியதை அந்த மண்ணின் மேல் கொட்டினான் ஜப்பர் அங்கு மூன்று பட்டிச் செடிகளை நட்டுவைத்து விட்டு அவர்கள் பின்பக்கம் திரும்பிப் பார்க்காமல் கிராமத்துக்குத் திரும்பினார்கள். அவர்கள் இரண்டடிதான் நடந்திருப்பார்கள். ஓர் அதிசய ஒளி புதைகுழிக்குள் புகுந்தது. பாதிமா தன் தந்தையுடன் நடந்துகொண் டிருந்தாள். அவர் அவளுக்குத் தேவதையின் கதை களைச் சொல்லிக்கொண்டு வந்தார்.

கர்ண பரம்பரைக் கதைகளில் வருவதுபோல, சுவர்க்கத்திலிருந்து ஒளிமயமாகப் படிகள் புதைகுழிக்குள் இறங்குகின்றன. அந்த ஒளியில் ஜாலாலி விழித்துக்கொள்கிறாள்.

இரண்டு தேவதைகள் அவளைக் கேட்டன : "நீ யார் ?'' ஜாலாலி பதில் சொன்னாள்: "நான் ஜாமிலா காட்டுன்.'' "நீ என்ன மதம்?" *'இஸ்லாம்." ''அல்லா யார் ?'' “அல்லா ஒருவரே கடவுள். அவருக்கு ஈடு இணை இல்லை.” "ரசூலின் பெயர் ?'' ''ஹஜ்ரத் முகம்மது." ''இவரைத் தெரிகிறதா ?'' என்று கேட்டுத் தேவதைகள் வெளிச் சத்தில் யாரையோ காட்டினார்கள்.

''ஹஜ்ரத் முகம்மது" என்று சொல்லிவிட்டு மறுபடி உறங்கத் தொடங்கினாள் ஜாலாலி.

இருதேவதைகளும் அவளை எடுத்துக்கொண்டார்கள். அவள் அந்தத் தெய்விக ஒளியில் ஐக்கியமாகிவிட்டாள், கர்ண பரம்பரைக் கதைகளில் வரும் சூரிய தேவனைப் போல். சூரியன் ஏரியிலிருந்து ஆற்றுக்கு, ஆற்றிலிருந்து கடலுக்கு, கடலிலிருந்து சமுத்திரத்துக்குப் பிரயாணம் செய்கிறான். கடைசியில் ராஜகுமாரி தண்ணீருக்கு

265மேலே மிதந்துவந்து சூரியனை ஆகாயத்தில் தொங்க விட்டுவிட்டு மறுபடி தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிடுகிறாள்.

தாயின் அருகில் படுத்து உறங்கிய சோனா ஒரு கனவு கண்டான். ஒரு குருட்டுக் குதிரை ; அதற்கு இரண்டு தலை. சர்க்கஸ் கோமாளி அதைக் கூடாரத்திலிருந்து வெளியே கொண்டு வந்து வயல்வெளியில் விட்டுவிடுகிறான். குருட்டுக் குதிரை ஒரு தடவை கிழக்குப் பக்கமும் ஒரு தடவை மேற்குப் பக்கமுமாக ஓடுகிறது. அதன் முதுகில் ஒரு மனிதன். பாவம்! கிழக்கிலும் மேற்கிலும் குட்டிக்கரணம் போடுகிறான், சர்க்கஸ் விளையாட்டு விளையாடுவது போல், இந்த வேடிக்கையைப் பார்த்துக்கொண்டு இருப்பவர் கள் இரண்டு பேர் தான் - சோனாவும், பாதிமாவும். அவர்கள் இந்த விளையாட்டை ரசித்துக் கைதட்டுகிறார்கள். அவர் களுக்குப் பக்கத்தில் பைத்தியக்காரப் பெரியப்பா. அவர்தான் அவர் களைச் சர்க்கஸ்க்குக் கூட்டிவந்திருக்கிறார்.

நிலவு மங்கிக்கொண்டு வந்தது. பொழுது புலர இன்னும் அதிக நேரம் இல்லை. கிராமத்தார் ஜாலாலியைப் புதைத்துவிட்டுத் திரும்பி

னார்கள்.

தோப்புக்குப் போகும் வழியில் பேலு நின்றான் வயல்வெளியில் சூழ்ந்திருந்த மூடுபனி காரணமாக ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. பேலுவால தன்னையே பார்த்துக்கொள்ள முடியவில்லை. மூடுபனி அவ்வளவு அடர்த்தி. விடிவேளைக் குளிரில் கை கால்கள் பனியாக உறைந்துவிட்டன. ஆன்னு எல்லாருக்கும் முன்னால் போய்விட்டாள். அவளுக்குத் தூக்கம் ரொம்பப் பிடிக்கும். மன்சூர் போனான், ஹாஜி சாயபுவின் பெரிய பீபி போனாள். சாமு ஜப்பரைப் பிடித்துக்கொண்டு போனான். சாமுவின் பீபி அவனுக்குப் பின்னால் வந்தாள். முகத்திரை யைப் பார்த்தே அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது, யாருடைய பீபி, அவளுடைய நடத்தை எப்படி என்றெல்லாம்.

முகத்திரையில் கண்களுக்கு எதிரில் உள்ள இடம் மட்டும் வெள்ளை நூலால் பின் .01 ல வேலை செய்திருந்தது. நிலவில் சட்டென்று பார்த்த போது பூதமோ என்ற பிரமை ஏற்படும், அந்த முகத்திரைக்குப் பின்னே இருப்பது ஹாஜிசாயபுவின் இரண்டாவது பீபி. பேலு தீவிர ஆசைக்குள்ளாகித் தவித்தான். 'தோழி லலிதா! உன் மேல் எனக்கு காதல்! 'பேலுவின் நெஞ்சுக்குள் மீண்டும் அந்த ஒலி, காரியத்தை ஒரு நிமிஷத்தில் செய்து முடித்துவிட வேண்டும். யாருக்கும் தெரியக் கூடாது! ஒரு முழத் தூரத்தில் முன்னால் இருக்கும் மனிதனைக் கூடப் பார்க்க முடியாதபடி அவ்வளவு அடர்ந்த பனிமூட்டம். இந்த மங்க லான வெளிச்சத்தில் தவறான ஆளைப் பிடித்து இழுத்துவிட்டால் ரகளையாகிவிடும். குளிரில் வெடவெடவென்று நடுங்கினான் பேலு.

266அவனுக்குத் தன் ஒரு கைதான் ஆதரவு. இரண்டாவது பீபியைப் பலவந்தமாக இழுத்துவந்து வசப்படுத்த எவ்வளவு நேரமாகும்? மங்கிய ஒளியில் அவளுடைய உருவம் அசைந்தது. உடனே அவன் தன் ஒரு கையால் அவளை இறுகப் பிடித்தான். இப்போது அவனுக்குப் பத்தாயிரம் யானைகளின் பலம் வந்துவிட்டது. அவன் அவளுடைய வாயைக் கையால் அழுத்திப் பொத்திக்கொண்டு அவளைப் புதருக் குள் இழுத்துக்கொண்டே அதட்டினான், "உஷ்! சத்தம் போடாதே! நான் தான் உன் அருமை பேலு!''

எல்லாருக்கும் பின்னால் வந்தான் ஈசம். அப்போது புதருக்குள்ளே ஏதோ அமளி நடப்பது அவனுக்குத் தெரிந்தது. பாம்பும் பாம்பும் விளையாடிக்கொண் டிருக்கலாம், அல்லது பாம்பும் புலியும் போராடிக் கொண்டிருக்கலாம். புதருக்குள் பெரிய போராட்டம். போராட் டத்தில் பிணம் விழுமென்ற ஆசையில் ஹாஸான் பீரின் தர்காவி லிருந்து ஓநாய்கள் ஓடிவந்தன. உடும்பாகவும் இருக்கலாம், புதருக்குள் இருப்பது. முதலையைப் போல் பெரிய உடும்பு ஒன்று ஆற்று மணலில் திரிவதைப் பார்த்திருக்கிறான் ஈசம். அவன் பயந்து போய்க் கிராமத்தை நோக்கி ஓடினான்.

விடியற்காலைக் கனவு, புதிய கனவு, இனிய கனவு. இப்போது தான் முதல் தடவையாகக் கனவு காணக் கற்றுக்கொண் டிருக்கிறான் சோனா. கனவுகண்ட பிறகு தூக்கம் கலைந்துவிட்டது. பெரிய அறையில் தாத்தா ஸ்தோத்திரம் சொல்வது அவனுக்குக் கேட்டது. பெரியம்மாவும் சித்தப்பாவும் விடியற்காலைக் குளிரில் அவரை வெளியே நிறுத்தி வைக்கிறார்கள்,

வெகுநாட்களுக்குப் பிறகு இன்று பிடிவாதம் பிடித்தார் அவர், சூரியோதயம் பார்க்க வேண்டுமென்று. அவர் பார்வையிழந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. அவர் தம் அறையைவிட்டு வெளியே வந்து எவ்வளவோ நாட்களாகி விட்டன. அவர் தினம் தோறும் அதிகாலையில் தன் அறையிலிருந்து கொண்டே ஸ்தோத் திரங்கள் சொல்வார் : 'பகவானே, நீ கருணைமயமானவன். உன் கருணைதான் பூவாக, பழமாக, பயிராக வெளிப்படுகிறது !

கிழவருடைய விருப்பத்தை மறுத்தால் அனர்த்தம் ஏற்படும். ஆகையால் அவர்கள் கிழவரின் கையைப் பிடித்துக்கொண்டு வந்து

26711/

. !

.

B:

1/

அவரை வெளியே நிற்க வைத்தார்கள். சகட மரத்துக்குக் கீழே இருந்து பார்த்தால் கிழக்கு வானம் தெளிவாகத் தெரியும். சூரியன் உதிக்கப் போகிறான், கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. பறவைகள் பறக்கத் தொடங்கிவிட்டன. மசூதியில் சாம்சுத்தீன் தொழுகைக்கு அழைக்கிறான், கோழிகள் கூவுகின்றன. பெரிய மாமி பூஜைக்கு மலர் பறிக்கப் போகிறாள். கிழவர் சூரியோதயம் பார்ப்பதற்காக நின் றிருந்தார். அவர் சூரியோதயம் பார்த்து, விடியற்காலையில் பறவை களின் ஒலியைக் கேட்டு எவ்வளவு காலமாகிவிட்டன!

அவர் சகட மரத்துக்குக் கீழே லால்ட்டு, பல்ட்டு, சோனா ஆகிய வர்களுடன் நின்றார். சூரியன் உதித்ததும் அவர்கள் சூரியன் உதிக் கிறானென்று அவருக்குச் சொல்லவேண்டும். சூரியதேவன் ஒளித் தெய்வம் ; அவன் கடவுளின் அம்சம் ; கடவுள் ஒவ்வொரு மனிதனுக் குள்ளும், புல்லுக்குள்ளும், பூவுக்குள்ளும் இருக்கிறார். எங்கும் அவர். அவர் ஒருவர். அவரே பலர். அவர் எல்லைக்கும் எண்ணிக் கைக்கும் அப்பாற்பட்டவர். அவருடைய தூ தனாகிய சூரியதேவனை வணங்கி வாழ்த்தப் போகிறார் கிழவர்.

ஆச்சரியந்தான். சூரியன் உதிக்கிறானென்று யாரும் அவருக்குச் சொல்லத் தேவைப்படவில்லை. சூரியன் கீழ்வானத்தில் எழுவதை அவர் தாமாகவே உணர்ந்துகொண்டு விட்டார். பனித்துளி சகட மரத்திலிருந்து சொட்டுச் சொட்டாக விழுந்தது. பறவைகளின் சிவப்பு, நீல நிற இறக்கைகள் பறந்தன. ஃபிளானல் சட்டையும் கால்களில் பாதரட்சைக் கட்டையும் அணிந்திருந்த கிழவர் சூரியன் தோன்றியதும் அவனை வணங்கினார். ''இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் சாதாரண மனிதர்கள். மனிதனின் நைந்துபோன, உளுத்துப் போன வாழ்க்கைக்கு ஒளியூட்டுபவன் நீதான். எங்கள் பிணியை, சோகத்தை அகற்று!''

சூரியோதயத்துக்கு இவ்வளவு மகிமை உண்டு என்று சோனாவுக்கு இதற்குமுன் தெரியாது. தாத்தாவைப் பார்த்து அவனும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்து அவருடன் சேர்ந்து சூரிய ஸ்தோத்திரத்தைச் சொன்னான்.

சசீந்திரநாத்துக்கு வேறு காரியம் இருந்தது. அவர் ஈசமைக் கூட்டிக்கொண்டு வயலுக்குப் போகவேண்டும். கெளர் சர்க்கார் வயலின் வரப்புகளை இடித்துவிட்டார். இந்த விஷயத்தைக் கவனிக் கவும், சண்டைக்கார சர்க்காரைச் சற்று எச்சரித்து வைக்கவும் வயல் பக்கம் போவதென்று தீர்மானித்திருந்தார் சசீந்திர நாத். சர்க் காரின் செய்கையால் அவருக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. மண்ணைவிட அன்புக்கு உகந்த பொருள் வேறு என்ன இருக்கிறது?

13

268சூரியன் வானத்தில் மேலே எழுந்துவிட்டான். இப்போது கிழவ ருக்கு வேறு எந்த ஆதரவும் தேவையில்லையென்று தோன்றியது. சூரியனின் கதகதப்பு அவருள்ளே சக்தியைத் தோற்றுவித்தது, அவரை அவருடைய இளமைப் பருவத்துக்கும் குழந்தைப் பருவத்துக் கும் அழைத்துச் சென்றது. இப்போது அவர் தாமாகவே, யாரும் சொல்லாமலேயே சொல்லிவிடுவார்: 'எந்தப் பக்கம் போனால் ஆற்றுப் படுகை வரும், எந்தப் பக்கம் போனால் குளத்தங்கரை மருதமரம் வரும், எவ்வளவு தூரத்தில் ஆறு, எவ்வளவு வயல்களைக் கடந்தால் ஆற்று மணலை அடையலாம், தர்முஜ் வயல் எவ்வளவு பெரிது. அதிலுள்ள செடிகொடிகள் எவ்வளவு பச்சை என்றெல்லாம்,

அவர் சொல்ல விரும்பினார்: "சசீ, உனக்கு வயலுக்குப் போகணுமா? போ! எனக்காகக் கவலைப்படாதே! நான் தனியன். இதுதான் உலகம். பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள் எவ்வளவு இருந்தாலும் மனிதன் தனியாகத்தான் இருக்கிறான்." அவர் சசீந்திர நாத்திடம் வயலுக்குப் போவதற்கு முன் வெள்ளிப் பூண்போட்ட தடியைத் தம்மிடம் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார்,

எவ்வளவு காலமாகிவிட்டது, அவர் அந்த வெள்ளிப் பூண்போட்ட தடியைச் சுற்றிக்கொண்டு கம்பீரமாக வயல்களில் சுற்றி? எவ்வளவு காலமாக அவர் தம் அறையைவிட்டு வெளியே வராமல் இருக்கிறார் ! இப்போது அவர் பலம் இழந்தவர், திராணியற்றவர். அவர் இந்த வருடம் இறந்துவிடுவாரென்று அவருடைய ஜாதகமும் ராசிப் பலனும் கூறுகின்றன. சாவைப் பற்றிய பயம் கிழவர்களைக் குளிர் காலத்தில்தான் அதிகமாகப் பீடிக்கும். கார்த்திக் மாதம் வந்து விட்டால் சாவுக்கு ஆற்று வெள்ளத்தின் வேகம் வந்துவிடும் ; கிராமங்களிலுள்ள கிழவர்களையெல்லாம் இழுத்துக்கொண்டு போய் விடும் சாவு.

இந்தச் சமயத்தில்தான் ஒரு தடவை பூபேந்திரநாத் தம் தந்தை யிடம், ''இந்தத் தடவை சந்திராயணம் பண்ணிடலாமே!'' என்றார்.

பையனின் விருப்பம் கிழவருக்குப் புரிந்தது. அவருக்கு வயதாகி விட்டது. கார்த்திக் மாதத்தின் இழுப்பில் அவருக்கு உடம்பு தள்ளவில்லை. பன்னிரெண்டு பிராமணர்களுக்குப் போஜனம் செய் வித்துச் சந்திராயணம் அனுஷ்டித்தால் பாவம் தொலையும். பாவம் தொலைந்தால் அவருக்குச் சம்சாரத்திலிருந்து விடுதலைதான். உயிர் பஞ்ச பூதங்களாகப் பிரிந்து காற்றோடு கலந்துவிடும்.

அவருக்குத் தம் பிள்ளையின் பேச்சைக் கேட்டுக் கோபம் வந்தது, ''எனக்கு இன்னும் போறதுக்கு நேரம் வரல்லே! எப்போ வரும்னு எனக்குத் தெரியும். நீ முன்னாலேயே மணியடிச்சுண்டு நிற்க வேண்டாம்."

269குளிர் காலத்தின் நடுவில் கிழவர் சற்றுத் தெம்பாக ஆகிவிட்டார். காதுகூட முன்னைவிட நன்றாகக் கேட்பது போல் தோன்றியது, தேகத்திலிருந்து மரத்துப் போன உணர்வு கொஞ்சம் குறைந்தது. இப்போது அவரால் படுக்கையிலிருந்து எழுந்திருந்து உட்கார முடிந்தது, சற்று நடக்க முடிந்தது. அவர் நூறாண்டு வாழத் தயார் செய்து கொள்வது போலத் தோன்றியது.

அவருடைய பேரப் பிள்ளைகள் எல்லாருக்குமே ரொம்பச் சிறிய வயது. அவருடைய பிள்ளைகள் யாவரும் காலங்கடந்து பிறந்த வர்கள். அவர் தமக்குக் குழந்தைகளே பிறக்காது என்றுகூட நினைத்துவிட்டார் ஒரு சமயம். அப்போதுதான் அவருக்குப் பழைய நினைவுகள் வந்தன. "எனக்கு வயலுக்குப் போகணும் போல இருக்கு. என்னைக் கூட்டிக்கிண்டு போறீங்களா?" என்று பேரப் பிள்ளைகளைக் கேட்டார்.

இதைக் கேட்டுப் பையன்களுக்கு ரொம்ப உற்சாகம். இன்னும் சூரியன் ரொம்ப உயரத்துக்கு வரவில்லை.

கிழவர் பல்ட்டுவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார், அவருக்கு முன்னால் லால்ட்டு, பின்னால் சோனா. கிழவரின் கையில் வெள்ளிப் பூண்போட்ட தடி. தடியின் மேல்பாகம் தவளைத் தலை மாதிரி இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு, காதுகளை விறைத்துக் கொண்டு ஒரு தவளை. சில சமயம் முள்ளம்பன்றி வாயை 'ஆ' வென்று திறந்துகொண் டிருப்பது போல் இருந்தது. கிழவர் வலக் கையால் தடியை இறுகப் பிடித்துக்கொண்டார். இப்போது எல்லாமே அவர் கண்ணுக்குத் தெரிவது போல் இருந்தது, முன் காலத்தில் இருந்தது போல. எங்கோ ஒரு வெள்ளைச் செம்பரத்தை பூத்திருந்தது, ''பல்ட்டு! பாரு! இங்கே ஒரு செம்பரத்தை பூத்திருக்கு செடியிலே"

என்றார்.

''ஆமா!'' என்றான் லால்ட்டு . ஆமாம், செடியில் ஒரே ஒரு வெள்ளைச் செம்பரத்தை பூத்திருந்தது. இது கிழவருக்கு எப்படித் தெரிந்தது ? சோனா, லால்ட்டு, பல்ட்டு வுக்கு ஒரே ஆச்சரியம்.

''பருவம் இல்லாதபோது பூத்திருக்கு" என்று சொல்லிக்கொண்டார் கிழவர். குளத்தங்கரை வழியே போனபோது, "புளிய மரத்துக்குக் கீழே கூட்டிண்டு வந்திருக்கீங்களா என்னை ?" என்று கேட்டார்.

சிறுவர்கள் கிழவரைப் பிடித்துக்கொண்டு அழைத்துப் போனார்கள், வயல் பக்கமாக. குளத்தங்கரைமேல் போகும்போது அவர் அநேக மாக அங்கிருந்த எல்லா மரங்களின் பெயரையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு போனார். அவர் எப்போது விளாமரத்துக்கடியிலே இருக்கிறார், எப்போது ஜாம்ருல் மரத்துக்குக் கீழே இருக்கிறார் என்

2708:11

றெல்லாம் சொல்ல முடிந்தது அவரால் போய்க்கொண் டிருந்தவர் சட்டென்று ஓர் இடத்தில் நின்று, "தண்ணீரிலே ஒரு போயால் மீன் மிதந்துண்டு இருக்கு" என்றார்.

அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ஆமாம், குளத்து நீரில் மிதந்து கொண்டே ஒரு போயால் மீன் நீர்ப்புல்லைக் கடித்துக்கொண் டிருந்தது.

கிழவரிடம், "எங்கே, உங்க கண்ணைக் காண்பியுங்க, பார்க்கறேன். அப்பாகிட்டே சொல்லிடறேன், நீங்க பொய் சொல்றீங்கன்னு. உங்களுக்குக் கண்ணு தெரியாதுங்கறது பொய், உங்களுக்கு நன்னாக் கண் தெரியறது!" என்றான் சோனா.

அவனுடைய பேச்சைக் கேட்டு மகேந்திர நாத் சிரித்தார். அவர் மீனின் வாசனையை மோப்பங் கண்டுபிடித்தே சொன்னார். அவர் தாம் இருக்குமிடத்தை அடையாளங் கண்டு கொள்வதற்காகத் தடியால் தட்டித் தட்டிப் பார்த்துவிட்டு, ''நீங்க என்னை நாவல் மரத் தடிக்குக் கொண்டு வந்திருக்கீங்களா?" என்று கேட்டார்.

மூன்று சிறுவர்களும் இந்தத் தடவை சேர்ந்து சிரித்தார்கள். ''தாத்தா, இந்தத் தடவை உங்களாலே சரியாச் சொல்ல முடியல்

லியே" என்றார்கள்.

எவ்வளவு நாட்களுக்குப் பிறகு கிழவர் தம் அறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார், சூரியோதயம் பார்ப்பதற்காக! அவர் உழைத்துச் சிறுகச் சிறுகச் சம்பாதித்துச் சேர்த்த இந்த நிலம் -

அதன் மேலுள்ள பாசந்தான் அவரைக் கடவுளுடன் ஐக்கியமாகி விடாமல் தடுக்கிறது - இதற்குள் இவை இத்தனை அந்நியமாகி விட்டனவா ? அவரால் தாம் இருக்குமிடத்தை அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லையே! இந்த நிலத்துடன், இங்கு வாழும் மனிதர் களுடன் அவருக்கு ஏறக்குறைய நூறுவருட உறவு. அவர் இந்தச் சிறுவர்களிடம் தம் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.

எந்த இடத்தில் எந்த மரத்துக்கு அடுத்தாற்போல் எந்த மரம் இருந்தது, எந்தெந்த மரத்தை அவர் வெட்டிவிட்டார் என்பதை யெல்லாம் நினைவுப்படுத்திப் பார்த்துக்கொள்ள தொடங்கினார். புளிய மரத்தைத் தாண்டியதும் ஜாம்ருல் இலையின் வாசனை வந்தது. அந்த மரத்தைக் கடந்ததும் முகத்தில் வெயில் விழுந்தது. ஆகையால் நாவல் மரத்துக்கு அருகில் வந்துவிட்டதாக நினைத்துவிட்டார் அவர், தம் ஊகம் தவறு என்று சிறுவர்கள் கூறியதைக் கேட்டு அவருக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் ஆழமாக மூச்சை இழுத்தார், வேறு எந்த மரத்தின் வாசனையாவது தெரிகிறதா என்று பார்க்க. இந்த நிலத்தின் மேலும் நீரின் மேலும் அவருக்கிருந்த பாசம் அவரை

அந்தர்யாமியாக ஆக்கிவிடாதா?

271''நாம் ஈச்ச மரத்துக்கிட்டே இருக்கோம்" என்றார் அவர். சிறுவர்கள் இன்னும் பலமாகச் சிரித்தார்கள். அவர்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது; திருடன் விளையாட்டு. கிழவர் குருடர். அவருடைய கண்களைத் துணியால் கட்டிவிட்ட மாதிரிதான். அவர்கள் தாத்தாவைச் சுற்றி நின்றுகொண்டு 'திருடன், திருடன்' என்று கத்தினார்கள். தாத்தாவால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.

அவர்கள் தாத்தாவை வயல்வெளிக்குக் கூட்டிப் போய் அவரைக் கேட்பார்கள், "நீங்க எங்கே இருக்கீங்க ?" என்று. அவர் சொல்லு வார், “பண்ணை வீட்டிலே" என்று. அப்புறம் அவர்கள் இன்னும் கொஞ்ச தூரம் போனதும், மறுபடி தாத்தாவை, "இப்போ நாம எங்கே இருக்கோம்?" என்று கேட்பார்கள். "மனை நிலத்துலே!" என்பார் பதிலுக்கு. எல்லாமே விளையாட்டாகிவிட்டது. இந்த மாதிரி நல்ல விளையாட்டு கிடையாது! சிறுவர்கள் கேள்வி கேட்டுத் தாத்தா என்ன பதில் சொல்கிறார் என்று பார்த்தார்கள், சோனா மான்குட்டி போலத் தாத்தாவைச் சுற்றிச் சுற்றிக் குதித்தான். தாத்தா சரியாகப் பதில் சொல்லிவிட்டால் அவரை அடுத்த இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள், தேரை இழுத்துக்கொண்டு போவது போல். ஒரு பழைய தேரை அன்பு வழியில் இழுத்துக்கொண்டு போவதுபோல இருந்தது அவர்கள் செய்கை,

அந்தப் பழைய, வயதான தேர் ஒரு பிரம்மாண்டமான ஆலமரம் போல் நின்றது. கையில் தடி, மேலே சால்வை, தலையில் சிவப்புத் தொப்பி, கைகளில் கம்பளியுறைகள், கால்களில் கம்பளி சாக்ஸ், வெள்ளைப் பூட்ஸ்கள், அந்தச் சிறுவர்கள் தம்மை எங்கே இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்தார் அவர். தம் மாட்டுப் பெண்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொல்லத் தோன்றியது அவருக்கு. "உங்கள் பிள்ளைகள் என்னை எங்கேயெல்லாம் இழுத் துண்டு போறாங்க, பாருங்க!"

குளக்கரைக்கு வந்து சேர்ந்தபோது அவருக்கும் குஷி பிறந்து விட்டது. அவர் தம் தடியால் தரையைத் தட்டிக்கொண்டே நடந்தார். கெட்டியாக ஏதோ ஒன்று அவருடைய தடிக்குத் தட்டுப்பட்டது. இப்போதுதான் அவருக்கு, தான் அந்த நாவல் மரத்தை வெட்டி விட்டு ஒரு மருதமரத்தை அந்த இடத்தில் வைத்தது நினைவுக்கு வந்தது. இந்தக் கண்டுபிடிப்பு அளித்த மகிழ்ச்சியில் முகம் மலர. " நீங்க என்னை மருதமரத்தடிக்குக் கூட்டிக்கிண்டு வந்திருக்கீங்க !" என்றார் அவர்.

தாத்தா சரியாகச் சொல்லிவிட்டார். தாத்தா சரியாகச் சொல்ல வேண்டுமென்றுதான் சோனாவும் மனப்பூர்வமாக விரும்பினான். அவர் இப்படி அவர்களுக்கு நடுவில் அகப்பட்டுக்கொண்டு

272நிற்பதும், இரண்டு அண்ணாக்களும் அவரைச் சோதனை செய்து கோட்டாச் செய்வதும் அவனுக்குச் சங்கடமாக இருந்தன. தாம் குளத்தின் தென்கரையில் இருப்பதைச் சரியாக ஊகித்துவிட்ட சந்தோஷத்தில் கிழவர் சிறு பையனைப் போல் உற்சாகமடைந்தார். அதைக் கண்டு சோனாவுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு அவனும் துள்ளிக் குதித்தான், தானே சரியாக ஊகித்துவிட்டாற்போல.

சிறுவர்கள் கிழவரை இன்னும் மேலே கூட்டிக்கொண்டு போக விரும்பினார்கள். ஆனால் அவர், ""நான் இனிமேல் வரமாட்டேன். நீங்க என்னை எங்கேயெல்லாமோ கூட்டிண்டு போகப் பார்க்க றீங்க. எனனைக் குரங்கு மாதிரி ஆட்டிவைக்கறீங்க. நான் இனிமேல் உங்க இஷ்டத்துக்கு ஆடமாட்டேன்!'' என்று கூறிவிட்டார்.

அவர் மருதமரத்தடியில் உட்கார்ந்துவிட்டார். அங்கே கொஞ்சம் அருகம் புல் வளர்ந்திருந்தது. வெயில் வந்துவிட்டது. புல்லில் ஒரு பனித்துளியும் இல்லை. உட்கார்ந்தவாறே அவர் தரையைக் கையால் தடவித் தடவி எதையோ தேடினார்,

"என்ன தேடறீங்க ?" என்று சோனா கேட்டான். ''என்னைத்தான்!'

அவர் சொல்வது புரியவில்லை சோனாவுக்கு. “ஆமா, என்னைத்தான் தேடறேன். நீங்க என்னை இங்கே விட்டு டுங்க!" என்று சொல்லிவிட்டு மெளனமானார் கிழவர். இந்த இடம் அவருக்கு எவ்வளவு பிடித்தமானது என்பது அந்தச் சிறுவர்களுக்கு எப்படித் தெரியும்? அவர் அன்புடன் தரையைத் தடவிக் கொடுத் தார். அங்கேயே தம்மைத் தகனம் செய்யவேண்டுமென்று எல்லாப் பிள்ளைகளிடமும் சொல்லி வைத்திருந்தார். அவர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தபோது அதன் அடையாளமாக இந்த மருதமரத்தை நட்டுவைத்திருந்தார்,

வெயில் மரத்தின்மேல் விழுந்ததால் நாற்புறமும் நல்ல வெப்பமாக இருந்தது. சந்தைக்குப் போகும் மாடுகள் மைதானத்தில் போய்க் கொண்டிருந்தன. குளக்கரையில் இங்குமங்கும் மர நிழல். கிழவர் மகேந்திரநாத் கால்களைப் பரப்பியபடி தம் பேரப் பிள்ளைகளுடன் மருதமர நிழலில் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்தால் கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றும். தம் பைத்தியக்காரப் பிள்ளையைப் பற்றிய சோகம் அவருடைய நினைவில் உறுத்தியது போலும், அவர் பல்ட்டுவின் தலையில் கையை வைத்து, "நன்னாப் படி. அப்பாவுக்குக் கஷ்டம் கொடுக் காதே!" என்று கூறினார்.

அங்கிருந்து ஆபேத் அலியின் பீபியின் சமாதி தெரிந்தது. அதற் கருகில் மூன்று பட்டிச் செடிகள் நட்டிருந்தன. ஒரு கோழி

273

18அந்தச் சமாதியின் மேலே ஒற்றைக் காலால் நின்று சூரியனைப் பார்த்தது. நேற்றிரவுதான் கிழவருடைய பைத்தியக்காரப் பிள்ளை ஜாலாலியைத் தண்ணீரிலிருந்து வெளியே கொண்டு வந்தான். அந்தப் பைத்தியக்காரப் பிள்ளை இப்போது எங்கிருக்கிறானோ, யார் கண்டார்கள் ?

பல்ட்டு பதில் சொல்லவில்லை. அவனுக்குத் தன் தந்தையிடம் ஒரு மாதிரியான பயம். அவன் அவருடன் எங்கும் போவதில்லை. ஆனால் சோனாவிடம் அலாதிப் பாசம் அவனுக்கு. அவன் பேச்சை மாற்றிச் சொன்னான் : "தாத்தா, வாங்க படுகைக்குப் போகலாம்!" பல்ட்டு சொல்லியது கிழவரின் காதில் விழுந்தாலும் அவருடைய மனத்தில் பதியவில்லை. அவர் வேறு ஏதோ நினைத்துக்கொண் டிருந்தார். 'ஜாலாலி தண்ணீரில் முழுகி இறந்துவிட்டாள். அவளு டைய சமாதியின் மேல் ஒரு கோழி வடக்கும் தெற்குமாக உலவுகிறது. வெயில் எங்கும் விழுகிறது. நேற்று விசேஷ நாள், வாத்திய ஒலி இன்னும் ஓயவில்லை, அந்தப் பிராந்தியத்திலேயே மிகவும் வயதான வரான மகேந்திர நாத் தமக்குப் பிரியமான அந்த மண்ணின்மேல் உட்கார்ந்திருக்கிறார். இங்கே தான் அவர் மீளாத தூக்கத்தில் ஆழப் போகிறார். எல்லாரும் இந்த இடத்துக்குத்தான் அவருடைய சடலத் தைத் தூக்கிக்கொண்டு வருவார்கள்.' இந்தக் காட்சி அவருடைய மனக் கண்ணுக்கு முன்னே தெரிந்தது. அவருடைய பிள்ளைகள் அவருடைய தேகத்தைச் சுற்றி நிற்பார்கள் ; பல கிராமங்களிலிருந்து மக்கள் அங்கு வந்து கூடுவார்கள் : ஹரி சங்கீர்த்தனம் நடக்கும்; சந்தனக் கட்டை எரியும்; அதில் நெய்யும், பாலும், தயிரும் ஊற்றப் படும் ; யாக அக்கினியில் போடப்பட்ட ஹவிசைப் போல் அவரு டைய உடல் அந்த நெருப்பில் எரியும். அவருடைய பைத்தியக் காரப்பிள்ளை மருதமரத்தின்மேல் சாய்ந்துகொண்டு, அவருடைய உடல் எரிவதைப் பார்த்துத் தன் இரு கைகளையும் தூக்கியவாறு கத்துவான்.

அவருடைய நினைவில் தோன்றிய அந்தப் பிள்ளையின் முகம் அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. அந்தப் பிள்ளை அவருடைய உடல் எரிவதைப் பார்த்துக்கொண் டிருக்கிறான். அவன் புகார் செய்வது போல் தோன்றுகிறது, ''அப்பா, நீங்க என்னைக் கெடுத்தீட்டீங்க! என் காதலை நாசம் பண்ணீட்டீங்க. உங்க மத உணர்வு என் வாழ்க் கையைப் பாழாக்கிட்டது. நான் பைத்தியம், என் புத்தி கெட்டுப் போச்சு. என்னோட நினைவுகளை, எண்ணங்களைப் பகிர்ந்துக்கு ஒரு வரும் தயாராயில்லே. என் மூளைக்குள்ளே ஏதோ கனவு அநாதையா அலையறது; யாரோ என்னை அந்தக் கனவுக்குள்ளே முழுகிப் போகச் சொல்றாங்க. என்னோட இருதயத்துக்கு மிகவும் நெருங்கி

27438

யிருந்த அந்தப் பொண்ணை - அவ பேரு பாலின் ; அவ உசரமா இருப்பா. அவ கண்ணு நீலமா இருக்கும் - நீங்க விரட்டிப்பிட்டீங்க, அப்பா. நான் சமுத்திரம் பார்த்ததில்லே ; ஆனால் வசந்த காலத்து ஆகாசத்தைப் பார்த்திருக்கேன். அந்த ஆகாசத்துக்குக் கீழே ஸோனாலி பாலி ஆத்தோட தண்ணீர். அதிலே அவளோட முகம் நிழலாடறது. ஆகாசத்திலே இருக்கிற ஒரு பெரிய நட்சத்திரத்தோட பிரதிபிம்பத்தைத் தண்ணீரிலே பார்த்தால், அவ என்னைத் தூர தேசத்திலிருந்து கூப்பிடறமாதிரி இருக்கு: 'மணி, போகாதே! வில்லோ மரத்துக்குக் கீழே நாம உக்காந்துணடு சாந்தா கிளாசைப்பத்திப் பேசுவோம். நீ போகாதே!' அப்புறம் குளிர்காலத்துலே புல் மேலே நிறையப் பனித்துளிகளைப் பார்த்திருக்கேன். பனித்துளிபோல் பவித்திரமான அந்த முகததை நீங்க என்கிட்டேயிருந்து பிடுங்கிக் கிண்டு போயிட்டீங்களே, அப்பா!"

இப்படிப் புகார் செய்துகொண்டே அவருடைய கெட்டிக்காரப் பிள்ளை - பைத்தியக்காரப் பிள்ளை - எரியும் சிதையைப் பார்த்து விம்மி விம்மி அழுகிறான்.

மகேந்திர நாத் தம் கைத்தடியை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டார். எவ்வளவோ காலமாக அவரைப் பச்சாதாபம் உறுத்து கிறது. அவர் சாவை நெருங்க நெருங்க இந்தப் பச்சாதாப உணர்வும் அதிகரிக்கிறது. அப்போதெல்லாம் அவர் தம்மை ஆதரவற்றவராக உணர்கிறார். இப்போது ஏனோ அவருக்குத் தோன்றியது, சீக்கிரமே சந்திராயணத்தை நடத்தி முடிப்பது தேவலை என்று. இனி தாமதிப் பதில் அர்த்தம் இல்லை. பன்னிரண்டு பிராமணர்களுக்குப் போஜனம் செய்து வைக்கவேண்டும். அதன் பிறகு பிராயசித்தம் செய்து கொண்டுவிட வேண்டும். இவை இரண்டும் முடிந்துவிட்டால் வாழ்க் கையை விட்டு வெளியேற அனுமதி கிடைத்த மாதிரிதான். அவருடைய உயிர் சம்சார பந்தத்திலிருந்து, சம்சார துக்கத்திலிருந்து விடுதலை பெற்றுக் கடவுளை அடைந்துவிட்டால் நல்லது.

''என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிண்டு போ" என்று சொல்லி அவர் பல்ட்டுவின் தோளின் மேல் தம் கையை வைத்தார்.

அவர் தம் உலகத்துக்கு, தம் குடும்பத்துக்குத் திரும்ப விரும் பினார். அவருடைய குடும்பத்தினர் அவரை அவருடைய சொந்த அறைக்கு கூட்டிப் போவார்கள். இருண்ட, காற்று வராத அறை. ஜனசந்தடியற்ற, பல்லியின் ஒலியைத் தவிர வேறு ஒலியில்லாத அறை. எல்லாமே சூனியமாக இருக்கிறது அந்த அறையில். சூனிய மான அவர் அந்தச் சூனியமான அறைக்குத் திரும்பிச் செல்கிறார். அவருடைய மனக்கண்ணில் காற்றோட்டமில்லாத ஓர் இருட்டு அறை தெரிகிறது.

275**

ஆனால் பையன்களின் குறும்புத்தனத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா? அவர்கள் கிழவரை வைத்துக்கொண்டு விளையாடினார்கள். படுகையைக் கடந்து அரசமரத்தடியில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து நின்று, அவரை அங்கே விட்டுவிட்டு, "இப்போ சொல்லுங்க, நீங்க எங்கே இருக்கீங்க?'' என்று கேட்டார்கள்.

பையன்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடினார் கிழவர். அவர்கள் அவரை வைத்துக்கொண்டு விளையாடினார்கள், புதரில் அவரை நிறுத்திவைத்துப் பயமுறுத்தினார்கள். கிழவர் கை

கூப்பிக் கும்பிடாத குறையாக அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு, "பசங்களா, நீங்க ரொம்ப நல்ல பையங்க, என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிண்டு போங்க" என்றார்.

"பயப்படாதீங்க, தாத்தா! நாம் தோடார்பாகிலே இருக்கற ஆலமரத்தடியிலே இருக்கோம்" என்றான் சோனா.

''நாங்க உங்களோட 'பலாந்தி' விளையாடப் போறோம்" என்று சொன்னான் லால்ட்டு. அவர்கள் கிழவரை மெதுவாகக் கீழே உட்கார வைத்தார்கள். கிழவரைத் தங்கள் சம வயதுக்காரராகப் பாவித்து இங்குமங்கும் ஓடினார்கள் : "ராஜா அதோ மரத்தடியிலே உட்கார்ந் திருக்கார்! அவரைத் தொட்டுட்டா ஜயம்!''

இந்த விளையாட்டு மும்முரத்தில் மகேந்திர நாத்துக்கு வீட்டு நினைவு மறந்துவிட்டது. மரக்கிளைகளில் பறவைகள் சப்தித்தன. தூரத்தி லிருந்து மாடு கன்றுகளின் மூக்காரம் கேட்டது. வெகுதூரத்தில் யாரோ மரம் வெட்டினார்கள். தொலைவில் யாரோ நடந்து போனார் கள். ஒரு வேளை அது அவருடைய பைத்தியக்காரப் பிள்ளையாக இருக்கலாம். இயற்கைச் சூழல் அவரை மறுபடி குழந்தைப் பருவத் துக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டதாக அவருக்குத் தோன் றியது. அவர் தம் தடியை மடியில் வைத்துக்கொண்டு, அசையாமல் புத்தரைப் போல் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

தூரத்தில் ஸோனாலி ஆற்று நீரில் படகுகள் மிதந்தன. அவற்றின் பாய்களின் மேல் சிவப்பு, நீலநிறப் பறவைகள் உட்கார்ந்திருந் தன. அவர் உட்கார்ந்தவாறே தம் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார். குழந்தைப் பருவம் திரும்பி வருகிறது. நதியில் ஒரு படகு போகிறது, அருகில் ஒரு சிவப்பு, நீலப் பறவை பறந்து வருகிறது. அவருக்கு நாற்புறமும் குழந்தைப் பருவம் விளையாடிக் கொண்டு திரிகிறது. அவர் பழைய குழந்தைப் பருவத்தின் அடை யாளம். பையன்கள் இப்போது திறந்தவெளியில் பாட்டுப் பாடிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடினார்கள். ஊரிலுள்ள மற்றப் பையன்களும் அந்த விளையாட்டில் சேர்ந்துகொண்டார்கள்,சுபாஷ், கிரணி, காலாபாகாட், தோடார்பாகிலிருந்து சின்னப் பாதிமா, எல்லாரும்

இப்போது மகேந்திரநாத்தின் மனக்கண் முன்னே அவருடைய பைத்தியக்காரப் பிள்ளையின் முகம் தெரியவில்லை. ஏனெனில் வாழ்க் கையில் சுகம் எப்போதும் நிரந்தரமாக இருப்பதில்லை ; துக்கமும் அப்படித்தான். வெகுகாலத்துக்கு முந்தைய குழந்தைப் பருவம் மட்டும் இந்த இயற்கைச் சூழலில் மறுபடியும் மறுபடியும் திரும்பி வந்தது. அவர் தாம் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை மறுபடியும் அடையும் ஆசையில் தாமும் கண்ணாமூச்சிப் பாட்டை மெல்லப் பாடத் தொடங்கினார்.

அவர் சிறுவனாக இருந்தபோது ஆலமரம் இவ்வளவு உயரமாக இல்லை. அவர் கண்முன்னே அவருடைய இளமைப் பிராயத்துச் சகாக்கள் தோன்றினார்கள். அவர்கள் அதே பாட்டைப் பாடிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடினார்கள். ஆனால் காலந்தான் எவ்வளவு விரைவில் கழிந்துவிடுகிறது! நீண்ட காலம் கழிந்ததாகத் தெரியவில்லை - ஆனால் அதற்குள் அவர்கள் யாவரும் போய் விட்டார் கள். ஒருவர்கூட உயிருடன் இல்லை. அவர்கள் ஆலமரத் தடிக்கு மறுபடி எப்படி வரமுடியும்? அவருக்கு வருத்தமாய் இருந்தது.

அவருக்குள்ளே யாரோ ஒருவர் இருந்துகொண்டு சொல்கிறார் ; 'உன் சகாக்களில் யாரும் உயிரோடு இல்லை ; நீ ஒருவன்தான் இங்கே காவல் காத்துக் கொண் டிருக்கிறாய்!' என்று.

இந்த இயற்கைக்குச் செடி கொடிகளுக்கு, பறவைகளுக்குத் தாம் அந்நியமாகிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அவர் தனியாக விடப்பட்டிருக்கிறார், பசுமையான செடிகளும் மரங்களும் அடர்ந்த காட்டில் அவர் ஓர் உலர்ந்த மரமாக, சும்மா இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு துறவியின் பாழடைந்த ஆசிரமத் துக்கு ஒப்பானவர். அதில் வாழ்ந்து வந்த துறவி எப்போதோ தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பிப் போய்விட்டார்.

அவரால் இனியும் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவர் எழுந்து தனியாக, யாரும் அவரைக் கவனிக்காதபோது, ஆற்றுப் பக்கமாக நடக்கத் தொடங்கினார்.

தாத்தா மரத்தடியில் இல்லை என்பதை முதல் முதலில் கவனித்தது சோனாதான். அவன், "தாத்தாவைக் காணோம்" என்று கத்தினான்.

விளையாட்டு மும்முரத்தில் அவர்கள் கிழவர் எழுந்து ஆற்றுப் பக்கம் போனதைக் கவனிக்கவில்லை. இப்போது அவர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே ஊரை நோக்கி ஓடினார்கள் ; "தாத்தாவைக் காணோம்! மரத்தடியிலே காணோம், ஒரு இடத்திலேயும் காணோம்.''

277ஈசம் படுகையில் நின்றுகொண் டிருந்தான். அவனுக்கு நாற் புறமும் தர்மூஜ் வயல்கள். மஞ்சள் நிறப் பூக்கள். பெரிய பெரிய கொடிகளின் இடுக்கில் நெருப்புக் கோழியின் முட்டை போல் தர்மூழ் பழங்கள் தெரிந்தன. கறுப்பு நிறத்தில் பளபளத்தன அவை. இந்தத் தடவை குளிர்காலம் கழிவதற்குள்ளேயே வயல் நிறையத் தர்மூஜ் பழுத்துவிட்டது. இந்தத் தடவை சந்தைக்கு நிறையத் தர்மூஜ் எடுத்துக்கொண்டு போகலாம்.

சிறிய டாகுர் வயல் வரப்பு விஷயமாகப் புகார் செய்ய வீட்டை விட்டுக் கிளம்பினார். வழியில் மொத்த வியாபாரியைச் சந்தித்தார். அவனுடன் தர்மூஜ் கொள்முதல் சம்பந்தமாகப் பேசிவிட்டு வயலுக்கு வந்தவர் தர்மூழ் பயிரைப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனார். இந்தத் தடவை விளைச்சல் ரொம்பப் பிரமா தம் என்று ஈசம் அவரிடம் சொல்லவேயில்லை. சில நாட்களுக்குள் வயலின் தோற்றம் எவ்வளவு மாறிப் போய்விட்டது! தர்மூஜ் சந்தைக்குப் போகும். நாளை அல்லது நாளை மறுநாள் முதல் இந்த வழியாக, அல்லது ஆற்றுமணலில், பெரிய பெரிய குதிரைகள் போகும். சந்தையின் போது குதிரைப் பந்தயம் நடக்கும்.

ஸோனாலி பாலி ஆற்றில் படகுகள் பாய்களை விரித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டன. இந்த ஒரு மாதந்தான் படகுகள் போகமுடியும். அதன் பிறகு நதியில் தண்ணீர் குறைந்துபோய் முழங்கால் மட்டுமே இருக்கும்.

ஈசம் வயலுக்குள் இங்குமங்கும் போனான். இலை களின் இடுக்கு வழியே தர்மூஜ் பழங்களைப் பார்த்து அவற்றை விரலால் தட்டினான். பாதி பழுத்த பழங்கள் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். விரலால் தட்டிப் பார்த்தால் எந்தப் பழத்தைப் பறிக்கலாம் என்று அவனுக்குத் தெரியும். ஒரு பழம் இருபது சேர் எடை இருக்கும். அவனால் சேர்ந்தாற்போல் இரண்டு பழங்களைத் தூக்கிக்கொண்டு போக முடியாது. ஒவ்வொரு பழம் இரண்டு கைகளாலும் சேர்த்துப் பிடிக்க முடியாத படி அவ்வளவு பெரியதாக இருந்தது. அதை மார்புடன் அணைத்து எடுத்துப் போக வேண்டியிருந்தது.

ஈசம் ஒவ்வொன்றாகப் பழங்களைப் படகுக்குள் கொண்டுபோய் வைத்தபோது யாரோ அந்தப் பக்கம் தள்ளாடிக்கொண்டு வருவதைக் கவனித்தான். அவனுடைய முழுக் கவனமும் பழங்களைப் பறிப்பதில் இருந்ததால் அந்த மனிதரை நன்றாகப் பார்க்கவில்லை. காற்று அடித்தபோது தூரத்தில் ஒரு தர்மூஜ் இலை விலகி அதன் இடுக்கில் ஒரு பெரிய பழம் தெரிந்தது. அவன் அதனருகில் ஓடினான். அதற்குள் காற்று நின்றுவிட்டது. இலைகள் பழத்தை மறைத்துவிட் டன. அவன் அங்குமிங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். சரியான

278பக்குவத்தில் பழத்தைப் பறிக்காவிட்டால் அது வெடித்து வீணாகப் போய்விடும். மறுபடி காற்று வந்தால் இலை விலகி, பழம் இருக்குமிடம் தெரியும், மீண்டும் காற்று அடிப்பதற்காகக் காத்திருந்தான். அவன் தலை நிமிர்ந்து பார்த்தபோது, அந்த ஆள் இரண்டு தடவை தடுக்கி விழுந்து மறுபடி எழுந்து நின்றதைக் கவனித்தான். தள்ளாடிக் கொண்டு வருகிற இந்த மனிதர் யார்? குளிர்காலத்து வெயிலில் பைத்தியம் போல் தள்ளாடிக்கொண்டு ஆற்றுப் பக்கமாக வருகிறாரே! கவனித்துப் பார்த்துவிட்டு அவரிடம் ஓடிவந்தான் ஈசம். ''அடேடே! இவரா! கண் தெரியாதவருக்கு இவ்வளவு தைரியம்

எப்படி வந்தது ? தன்னந்தனியாக நடந்து வருகிறாரே!''

அவர் தம் இளமையைத் திரும்பப் பெற்றவர் போலக் கைத்தடியைச் சுழற்றுகிறார். காற்றுடன் சிலம்பம் விளையாடுகிறார்.

'நான் மகேந்திரநாத் இப்போதும் என்னால் எவ்வளவு தூரம் நடக்க முடியும், பார்! நான் எவ்வளவு காலமாக இந்த மண்ணில் வசித்து வருகிறேன், தெரியுமா? எனக்குச் சந்திராயணம் பண்ணப் போகிறார் களாம், என் பிள்ளைகள்! அவர்களுக்கு எவ்வளவு அதிகப்பிரசங்கித் தனம்' என்று சொல்வதுபோல் இருக்கிறது அவர் முகம்.

இன்னும் கொஞ்சம் நடந்தால் தண்ணீரில் விழுந்துவிடுவார் அவர். ஈசம் ஓடிப் போய், விழவிருந்த அவரைத் தாங்கிக்கொண்டான். அவரைத் தன் மார்புடன் சேர்த்துப் பிடித்துக்கொண்ட போதுதான் அவன் கவனித்தான், அவருடைய கைகால்களில் அடிபட்டிருப் பதை. அடிபட்ட இடங்களிலிருந்து ரத்தம் வந்தது. ஏன் இப்படிச் செய்தார் இவர்? இப்போது அவருடைய முகம் பொம்மையின் முகம் போல் சாதுவாக இருந்தது. சிறு குழந்தையைப் போல ஆகிவிட்டார்

அவர். சிறு குழந்தையைப் போல அழுகிறார்.

"உங்களுக்கு என்ன ஆச்சு, எசமான் ? நீங்க எங்கே போறீங்க ?'' ''நீ என்னை எங்கே கூட்டிண்டு போறே ? " "வீட்டுக்கு வாங்க." வீடு! கிழவர் இப்போது கண்களை மூடிக்கொண்டார். என்ன செய்துவிட்டார் அவர்! அவர் ஏன் தம் பைத்தியக்காரப் பிள்ளையை போல் அலைய ஆரம்பித்துவிட்டார்? அவருக்கு ஏன் இவ்வித மனக் கிளர்ச்சி ? தம் சிறுபிள்ளைத்தனமான நடத்தைக் குறித்து

அவருக்கே வெட்கமாகிவிட்டது.

''சரி, என்னைக் கீழே விடு." "உங்க உடம்புக்கு என்ன ஆச்சு தெரியுங்களா?" "என்ன ஆச்சு?"

279ஈசம் பதில் ஒன்றும் சொல்லவில்லை. கிழவரின் உடம்பில் அதிக ரத்தமேயில்லை என்று நன்றாகத் தெரிந்தது. அவருக்குப் பல இடங் களில் காயம் பட்டும் அதிக ரத்தம் வெளியே வரவில்லை.

ஈசம் அவரைத் தாங்கிக்கொண்டு குளத்தங்கரைக்கு வந்ததும் அவர்களைப் பார்த்துவிட்டு எல்லாரும் அங்கு ஓடிவந்தார்கள்.

இந்தப் பிராந்தியத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த அவர் அங்கே வழி தவறிவிட்டார். இப்படித்தான் அவர் எல்லாருக்கும் சமாதானம் சொன்னார்.

இவ்விதம் திருவிழா நாள் நெருங்கிவிட்டது. பெரிய பெரிய பந்தயக் குதிரைகள் ஒவ்வொன்றாக ஆற்றங்கரை வழியே போகத் தொடங்கின. ஒரு மாத காலத்துக்கும் மேலே திருவிழா நடக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் குதிரைப் பந்தயம். குதிரையின் கழுத்து மணியொலி கேட்டால் மக்கள் வெளியே ஓடிவருவார்கள், யாரு டைய குதிரை வருகிறது என்று பார்க்க. தூரத்தில் குதிரையின் முகம் தெரிந்ததுமே அவர்கள் ஆரவாரம் செய்வார்கள், 'நயாபாடாக் குதிரை!... பிஸ்வாஸ் பாடாக் குதிரை!" என்று.

எல்லாரும் போவார்கள் திருவிழாவுக்கு ரஞ்சித் போவான், மாலதி போவாள், ஆபுவும், சோபாவும் போவார்கள். சின்ன டாகுர் போவார். படகில் தர்மூஜ் பழங்கள் போகும், படகில் தர் மூஜை ஏற்றிக்கொண் டிருந்தார்கள். லால்ட்டுவும் பல்ட்டுவும் பாண்டும் சட்டையும் அணிந்துகொண்டு தயாராகிவிட்டனர், திருவிழாவுக்குப் போக. சூரியன் உதித்ததும் அவர்கள் நடக்கத் தொடங்குவார்கள். சோனா மட்டும் திருவிழாவுக்குப் போகப் போவதில்லை ; அவனால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது.

மற்றவர்கள் திருவிழாவுக்குப் போவதற்குச் செய்துகொண் டிருந்த ஆயத்தங்களைப் பார்த்துக்கொண்டே வராந்தாவில் உட்கார்ந்திருந் தான் சோனா. அவனுக்கு ஒரே ஆத்திரம். யாருடனும் பேசவில்லை அவன். சிற்றப்பா அநுமதி அளித்தால்தான் அவன் திருவிழாவுக்குப் போகலாம். ஆனால் வீட்டில் யாருக்கும் சிற்றப்பாவிடம் சொல்லத் தைரியமில்லை.

சோனா அதிகாலையிலிருந்து அம்மாவிடம் நச்சரித்தான், "நானும் போவேன் நானும் போகணும்! நீ சித்தப்பாகிட்டே சொல்லு!" 280ஆனால் சிற்றப்பாவிடம் இந்தப் பேச்சை எடுக்க அம்மாவுக்கும் துணிவு வரவில்லை. நேற்று ஒரு தடவை அவள் மெதுவாகச் சொன் னாள், சோனாவும் திருவிழாவுக்குப் போகலாமே என்று. அதற்குச் சிற்றப்பா, ''சின்னப் பையனாலே அவ்வளவு தூரம் நடக்க முடியாது, மேலும் திருவிழாவிலே ரொம்பக் கூட்டமாக இருக்கும், வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார். அதற்கு மேல் வற்புறுத்தத் தயக்கமாக இருந்தது தன மாமிக்கு,

சோனா தூணின்மேல் சாய்ந்துகொண்டு நின்றான். லால்ட்டுவும் பல்ட்டுவும் இஸ்திரி போட்ட பாண்ட், சட்டையணிந்துகொண்டு இங்குமங்கும் வளைய வந்ததைக் கண்டு அவன் 'கோ'வென்று கதறி அழத் தொடங்கிவிட்டான். எல்லாரும் புறப்படும் நேரம் நெருங்க நெருங்க அவனுடைய அழுகையும் அதிகமாகியது. அவன் அழுவதைப் பார்த்தாவது சிற்றப்பா அவனைத் திருவிழாவுக்குப் போக அனுமதிக்கமாட்டாரா என்ற நைப்பாசை அவனுக்கு,

ஈசம் ஒரு பெரிய தர்மூஜ் பழத்தைத் தலையில் தூக்கிக்கொண்டு வந்தான். அவ்வளவு பெரிய பழத்தைப் பார்த்து அவனுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அதன் எடை ஒரு மணங்குக்கு மேல் இருக் கும். அவன் அதை விற்பனைக்கு அனுப்பவில்லை : வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டான். எசமான் வீட்டில் எல்லாரும் சாப் பிடட்டும். அதை நறுக்கினால் உள்ளே சிவப்பாக இருக்கும். கறுப்பு விதைகள் இருக்கும். வசந்த காலத்தில் தர்மூஜ் பழத்தின் ரசம் கற்கண்டு போட்ட சர்பத் மாதிரி ருசியாக இருக்கும்.

அவன் வீட்டு வாசலுக்கு வந்ததும், "சோனா பாபு, எங்கே இருக் கீங்க ? அரிவாள் கொண்டாங்க'' என்று அழைத்தான்.

ரஞ்சித் வாசலில் நின்றுகொண் டிருந்தான். கூடவே ஆபுவும் சோபாவும் நின்றுகொண் டிருந்தார்கள். மாலதியும் வந்திருந்தாள். திருவிழாவுக்குப் போகவிருந்தவர்கள் எல்லாருமே அங்கே கூடி யிருந்தார்கள். இப்போதே ஊரிலிருந்த ஜனங்கள் திருவிழாவுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். சோனாவைத் தவிர எல்லாரும் திருவிழாவுக்குப் போகப் போகிறார்கள். அவன் ஈசம் கூப்பிட்டதைக் கேட்டும் வாசலுக்கு வரவில்லை. தூண்மேல் சாய்ந்தவாறே கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான் அவன்.

"இதை நறுக்கி எல்லாருக்கும் கொடுங்க !” என்று ஈசம் ரஞ்சித்திடம் சொன்னான்.

அவன் ஒரு பெரிய வாழையிலையை நறுக்கிக்கொண்டு வந்தான். பழத்தில் ஒரு பகுதியை வெட்டிச் சுவாமிக்காக வைத்துவிட்டுப் பாக்கியை ரஞ்சித் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தான். அப்போது

281ஈசம் கேட்டான், "சோனா பாபுவைக் காணோமே! அவர் எங்கே ?" என்று .

"சோனா அழுதுக்கிட்டு இருக்கான்" என்றான் லால்ட்டு. "ஏன் ?" "திருவிழாவுக்குப் போகணும்னு.” ''நீங்க போகப் போறீங்க, சோனாபாபு போகக் கூடாதா?'' "சித்தப்பாதான் போகக் கூடாதுங்கறார்." "போகக் கூடாதுன்னு சொல்லிட்டா ஆச்சா ?" என்று சொல்லிக் கொண்டே ஈசம் உள்ளே போய்ச் சோனாவைக் கூப்பிட்டான் : "சோனா பாபு எங்கே ? உங்களை யாரு திருவிழாவுக்குப் போகக்கூடா துன்னது? நான் கூட்டிக்கிட்டுப் போறேன் உங்களை. யாரு தடுக்கிறாங்க, பார்ப்போம்!''

''அவனாலே அவ்வளவு தூரம் நடக்க முடியாதே! யாரு அவனைத் தூக்கிண்டு போவாங்க ?" என்றார் சிற்றப்பா.

"நான் தூக்கிக்கிட்டுப் போறேன். சோனாபாபு. நீங்க வாங்க.'' இருண்டு கிடந்த ஆகாயம் சட்டென்று மேகங்கள் விலகிப் பளிச் சென்று ஆகிவிட்டதாக தோன்றியது சோனாவுக்கு, கெட்டுப்போனது ஏதோ மறுபடி கிடைத்துவிட்டதுபோல் இருந்தது. அவன் அம்மா விடம் ஓடிப் போய்ச் சொன்னான: ''அம்மா, என்னை சித்தப்பா போகச் சொல்லிவிட்டார். ஈசம் என்னைக் கூட்டிக்கிண்டு போகப் போறான்." சோனா இந்த நற்செய்தியை எல்லாரிடமும் போய்ச் சொன்னான். தாத்தா, பாட்டியிடம் போய்ச் சொன்னான். திருவிழா போகும் மகிழ்ச்சியில் தன்னை மறந்துவிட்டான் அவன். புதுமையான ஒரு வாழ்க்கை . திருவிழா, கூட்டம், ஆறு, கால்வாய்கள் எல்லாம் சேர்ந்து மனிதனுக்குள் ஓர் உயிர்ப் பெருக்கைக் கொண்டுவந்து விடுகின்றன. இதுவரை திருவிழா என்பது ரகசியமாகவே இருந்தது சோனாவுக்கு. இப்போது அந்த ரகசியம் புரிந்துவிடும் அவனுக்கு. திருவிழாவின் ரகசியம் என்ன? எப்படிப்பட்ட ஜனங்கள் திருவிழா வில் இருப்பார்கள் ? குதிரைப் பந்தயத்தில் ஜயிக்க ஏன் எல்லாரும் இப்படித் தவிக்கிறார்கள்? இம்மாதிரி எவ்வளவோ கேள்விகள் தோன்றின சோனாவின் மனத்தில்,

அவன் ஈசமின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லாருக்கும் முன் னால் நடக்கத் தொடங்கினான். கொஞ்சதூரம் நடை, கொஞ்சதூரம் ஈசமின் தோளில் சவாரி. அவனுக்குக் கால் வலித்தால் அவனைத் தன் தோளில் தூக்கிக்கொள்வான் ஈசம். கொஞ்ச தூரம் போனதும் பாலியாபாடாவைக் கடந்ததும் ஆற்றங்கரையில் ஒரு தண்ணீர்ப் பந்தலைப் பார்த்தார்கள் அவர்கள். அதன் பிறகு வரிசையாக வளர்ந்திருந்த செங்கடம்பு மரங்களுக்குக் கீழே வெல்லப்பொரியும்

282சிவப்புநிறச் சர்க்கரையுருண்டையும் விற்கப்படுவதைக் கண்டார் கள். ஈசம் அவனுக்கு அரை அணாப் பொரியும், காலணாவுக்குச் சர்க்கரையுருண்டையும் வாங்கிக் கொடுத்தான், சோனா தன் இரு பைகளிலும் பொரியை நிரப்பிக்கொண்டு, சர்க்கரை உருண்டை இருந்த தொன்னையைக் கையில் வைத்துக்கொண்டான். அவனும் டைய கோஷ்டியில் சிலர் முன்னால் போய்விட்டார்கள். சிற்றப்பா இருந்திருந்தால் இதையெல்லாம் அவனைச் சாப்பிட விடமாட்டார். பொரியைத் தின்றுகொண்டே நடந்தான் சோனா. தூரத்து மைதானத் தில் கூடாரங்கள் போட்டிருப்பது தெரிந்தது. அவற்றின் உச்சியில் கொடிகள் பறந்தன. யக்ஞேஸ்வர் கோவில் தெரிந்தது. அரச மரத்தைப் பிளந்து கொண்டு வானத்தை நோக்கி நீட்டியபடி நின்றது, கோவில் சிகரத்திலிருந்த திரிசூலம். தர்கா நிலத்தில் வரிசை வரிசை யாகக் குதிரைகள் போயின. யாரோ பனையோலை ஊள தல் ஊதினார்கள். ஆற்றில் எவ்வளவு படகுகள்! அவர்களுடைய படகு ஒன்றும் திருவிழாவுக்கு வரும், தர்மூஜ் பழங்களை ஏற்றிக்கொண்டு. அது கால்வாய்கள் வழியே சுற்றுவழியில் வருவதால் வந்துசேரத் தாமத மாகும்,

ரஞ்சித்தின் கோஷ்டி ஒன்று நாராயண் கஞ்சிலிருந்து திருவிழா வுக்கு வரும். அந்தக் கோஷ்டியினர் திருவிழாவில் கத்திச் சண்டை , சிலம்பம் எல்லாம் போட்டுக் காண்பிப்பார்கள். புஜங்கன், கோபால் எல்லாரும் கூடாரம் அடிப்பதற்காக இரண்டு நாள் முன்னதாகவே திருவிழா மைதானத்துக்கு வந்துவிட்டார்கள். வெள்ளை ஃபிராக், கறுப்புக் காற்சட்டை, காலில் பூட்ஸ் அணிந்த சின்னச் சின்னப் பெண்கள் - பதின் மூன்று, பதின் நான்கு வயதுப் பெண்கள் - வருவார்கள். அவர்களை ஆபீஸ் கட்டிடத்தில் தங்கவைப்பார்கள். இந்த ஏற்பாடுகளை யெல்லாம் ரஞ்சித்தின் சங்கம் செய்திருந்தது, ஆனால் முன்னால் நின்று ஏற்பாடுகளைச் செய்தவன் புஜங்கன் தான். ரஞ்சித், தான் அவற்றில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

மாலதி யக்ஞேஸ்வர் கோவிலுக்குப் போனபோது, ஜப்பர் திருவிழாக் கூட்டத்தில் நோட்டீஸ் வினியோகிப்பதைக் கவனித்தாள். அவன் மாலதியைப் பார்த்துச் சிரித்தான் ; ''திருவிழாவுக்கு வந்திருக் கீங்களா, அக்கா ?" என்று கேட்டான். அவனுக்குப் பக்கத்தில் அவளுக்குப் பழக்கம் இல்லாத சில முஸ்லீம்கள் நின்றிருந்தார்கள், பயம் காரணமாக மாலதிக்குச் சிரிப்பு வரவில்லை. அவளுக்கு அவனைக் கேட்க ஆசைதான், "சாமு திருவிழாவுக்கு வந்திருக்கிறானா ?" என்று. ஆனால் அவனுக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் அவளை உறுத்துப் பார்த்த விதம் அவளை அங்கே நிற்கவிடவில்லை. அவளுக்கு

283