தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, September 29, 2016

அறைக்குள்ளிருந்தவன் - அம்பை

https://archive.org/details/orr-11906_Araikkullirunthavan

அறைக்குள்ளிருந்தவன் - அம்பை

Automated GOOGLE-OCR

பெங்களூர் சிக்பெட்டின் அந்தச் சிறிய சந்து அவள் கண் முன் விரிந்தது. பெரிய தெருவின் கும்பலிலிருந்து மீண்டும் இதனுள் நுழையும் முன்பே ஒரு கையால் மூக்கையும், இன் னொரு கையால் புடவையையோ, வேஷ்டியையோ தூக்கிப் பிடித்துக்கொண்டு வரவேண்டிய சந்து அது. ஒரு கையில் பள்ளிப் புத்தகங்களைத் தாங்கிக்கொண்டு-பை கொண்டு போவது நாகரீகம் இல்லை. எவ்வளவு புத்தகங்களானாலும் கை வலிக்க எடுத்துப் போவதுதான் அவள் பள்ளி செல்லும் காலத்து வழக்கம் - இன்னொரு கையால் பாவாடை யைத் தாவணியோடு தூக்கிப் பிடித்தவாறே வீடு வரும்வரை மூச்சு விடாமல் ஒடுவாள் அவள்.

வீடு ஒன்றும் 'ஆஹா என்று மூச்சை விடும்படியானது இல்லை. முன் அறையில் பாதி இடம் அம்மா விற்பதற்கு இட்டு வைத்த அப்பளங் களைப் பரப்பவே போய்விடும். மீதி இடத்தில் அப்பா முடங்கிக் கிடப்பார்.

அப்பாவின் பேச்சோ, முனகலோ, முகபாவமோ ஒன்றும் சரியாக நினைவு வருவதில்லை.

ஒரு நாள் மழையில் நனைந்துகொண்டு தாவணித் தலைப் பில் புத்தகங்களை மூடியவாறே ஓடி வந்ததும், வீட்டில் அடி எடுத்து வைத்தவுடன் முன் கூடத்தில் அப்பளங்கள் எல்லாம் இல்லாமல் அப்பா மாத்திரம் நீண்டு படுத்திருந்ததும், இவளைப் பார்த்தவுடன் துளிக்கூட அழாமல் அம்மா, "அவர் கதை முடிந்தது" என்று அவரை நோக்கிக் கையைக் காட்டியவுடன் அவள் பார்த்த அப்பாவின் முகம்தான் நினைவு வருகிறது.

அவர் அன்று மூச்சு விடுவதை நிறுத்தினார். அவ்வளவுதான். அதற்கு முன்பே அவர் வாழ வேண்டும் என்ற ஆசை மடிந்து செத்தாகி விட்டது.

-> 122 -- அம்பைஎல்லா வசதிகளுமுடைய விசாலமான சமையலறையில் அமர்ந்து கொண்டு, குளிர் பதனப்பெட்டியிலிருந்து எடுத்த பழ ரஸத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த தனக்கு அந்த நாற்ற சந்தும், என்றோ செத்துப்போன உபயோகமில்லாத அப்பாவும் நினைவு வந்தது அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. அவளுக்கு இங்கே என்ன குறை?

"கொன்னூடுவேன். கத்தியாலே துண்டுதுண்டா நறுக்கி. டேய். வேண்டாண்டா. அழுவேன்."

அந்த வீட்டின் மூலையிலிருந்த அறையிலிருந்து சத்தம் வர ஆரம்பித்துவிட்டது.

அவள் மெல்ல எழுந்து சென்றாள்.

முன் கூடத்தில் மாமியார் உட்கார்ந்து அந்த வாரப் பத்திரிக்கை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தாள்.

"அவன் கத்தறான். என்னன்னு போய்ப்பார்" என்றாள். அறைக்கு

அருகில் சென்று அதில் இருந்த ஒரே ஒரு ஜன்னலை மெல்லத் திறந்து எட்டிப்பார்த்தாள்.

வேஷ்டி நெகிழ்ந்து விழ, அறையில் அங்கும் இங்கும் கத்திக்கொண்டே ஒடிக்கொண்டிருந்தான் 'அவன்'

"உஷ். சத்தம் போடக் கூடாது.”

'அவன்' 'சட் டென்று திரும்பிப் பார்த்தான். உதட்டில் கை வைத்து, கூடத்துப் பக்கம் கையைக் காட்டி"திட்டுவா அப்புறம். பேசாம இருக்கணும்" என்றாள்.

"என்னை வெளியிலே விட்டுடேண்டி.." "கதவு கெட்டுப் போயிடுத்து. தொறக்க முடியாது."

'அவன் ஜன்னலருகே வந்தான். "நேக்கு ஒரு சுத்தி தா. நான் ஒடைச்சுடுவேன்."

"ம்ஹ"ம்" என்று மறுத்தாள். ஜன்னல் வழியாகக் கையை நீட்டி அவள் கழுத்தில் தொங்கிய சங்கிலியைப் பற்றினான்.

"இது தாயேண்டீ."

அவன் பிடியில் அகப்பட்டுக்கொண்டிருந்த அந்தச் சங்கிலியை அவள் குனிந்து பார்த்தாள். தங்க குண்டுகள் கோர்க்கப்பட்டு, லிங்கம் வரைந்த 'ப' வடிவச் சின்னம் அதில் இருந்தது.

அறைக்குள்ளிருந்தவன் -> 123 ->அவன் முரட்டுக் கரத்திலிருந்து அதை விடுவித்தாள். "அப்படி எல்லாம் கேட்கக் கூடாது. அம்மா திட்டுவா"

'அவன்' மெல்லக் கிசுகிசுத்தான். "நானும் நீயுமா அம்மாவைக் கொன்னுடலாமா ?” "ஒ. ஆனாக்கா சும்மா பேசாம இருக்கணும். இல்லாட்டா இல்லை." "சரி. நீ கத்தி கொண்டுவா, உம்?" தலையை ஆட்டிவிட்டு ஜன்னலைச் சாத்தினாள். திரும்ப சமைய லறைக்குப் போகும் வழியில் மார்பின் மீது நெளிந்த அந்தச் சங்கிலி யைப் பார்த்துக் கொண்டாள்.

ஹா! வறுமை எப்படிப்பட்ட ஒன்று! பசி! வயிறு புதையுண்டு போக, நாவின் சுவைக் காம்புகள் மண்ணைக் கண்டாலும் ஊறலெ டுக்க, பிச்சைக்காரன் குவளையிலிருக்கும் கதம்பச் சோறுகூட வயிற் றில் விழக்கூடிய சுவையுள்ளதாகத் தோன்றும் பசியை அவளுக்குத் தெரியும்.

அம்மா அவளிடம் "அப்பாவும் போயாச்சு. அவர் வைத்தியத்துக் கான கடன் தலைக்கு மேலே இருக்கு. புஸ்தகத்தை எல்லாம் கட்டி மூலையிலே வை” என்று சொன்னபோது புத்தகங்களைக் கட்டிக் கொண்டு அழுதாளே, அம்மாவை வாய்விட்டுச் சபித்தாளே, அப் போது கூட இப்படி ஒரு வறுமையை அவள் கற்பனை செய்யவில்லை. அப்படி மூன்று வருடங்கள். . .

அப்படி அதன் பின் இந்த வீட்டில் சமையற்காரியாக இருந்தாள். சம்பளத்தில் முக்கால் பகுதி கடன் அடைக்கப்போய்விடும். இரண் டொரு முறைகள் அம்மாவுடன் கூடமாட வேலை செய்ய அவளும் வந்ததுண்டு.

அப்படி ஒரு முறை வந்தபோதுதான் அந்த வீட்டு யஜமானி கேட் டாள்.

சமையலறைக்கே வந்து இடுப்பில் கை வைத்தபடி, "என்ன ரங்கம்மா, இவளுக்கு என்ன வயசு ?" என்றாள்.

"பத்தொம்பது மாமி. நடு நடுவே பணம் இல்லாம படிப்பு விட்டுப் போயிடுத்து. இல்லாட்டா இப்போ வேலையிலே இருப்பா. படிப்பும் அரைகுறையாப் போச்சு யாராவது உங்களை மாதிரி இருக்கிறவா படிக்க வைச்சா உண்டு."

பேச்சுக்கு இடையில் தன் தேவைகளை உணர்த்துவதில் அம்மா வுக்கு நிகரே கிடையாது.

"என்ன படிப்பு வேண்டியிருக்கு? சமர்த்தா லட்சணமா இருக்கா, என் பிள்ளைக்குத் தரயா?"

-- 124 -> அம்பை

அயர்ந்து போய் நின்றாள் அம்மா.

மூன்று பிள்ளைகள் அந்த வீட்டில், மூத்தவனை அவள் பார்த்ததே கிடையாது. அவன் கத்தலை மட்டுமே கேட்டதுண்டு. இரண்டாம் பிள்ளையும் மூன்றாம் பிள்ளையும் ஏதோ பெரிய படிப்புப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

நடுங்கும் குரலில் "எந்த பிள்ளையைச் சொல்லறேள் " என்றாள் அம்மா.

"மூத்தவனைத்தான்.அவனைக் கவனிச்சுக்கவும் ஒரு ஆள் வேணுமோ இல்லையோ? என் மனசு என்னிக்குமே எளகிய மனசு, உன் நிலைமை எனக்குத் தெரியும். உன் பெண்ணுக்கும் என்னாலே விடிவு வரட்டுமே? வேற பொண்ணு கிடைக்காதா என்ன ? கிடைக் கும். ஒரு ஏழைப் பொண்ணு நம்மாலே நல்லபடியா வாழட்டுமேன்னு தான் சொல்றேன். என்ன சொல்றே?"

"யோசிச்சு. யோசிச்சு." என்று அம்மா திணறினாள்.

"மாசாமாசம் உனக்குப் பணம் அனுப்பிடுவேன். நீ இப்படி வேலை பண்ண வேண்டாம்."

"நாளைக்குச் சொல்றேனே மாமி.”

“互f.”

அம்மா பெண்ணைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. பேசவே இல்லை. அன்று இரவு வீட்டில் வெறும் காய்ந்த ரொட்டித்துண்டை யும் தண்ணிரையும் சாப்பிட்டுவிட்டுப் படுத்தபோது, அந்த விசால மான சமையலறையும் நடக்கநடக்க நீளும் தோட்டமும் அவள் மனத்தில் விஸ்வரூபம் எடுத்தன. அம்மாவின் மெலிந்த தோற்றமோ, அவள் எதிர்கால சுகமோ அவள் மனத்தில் தோன்றி, "அவளுக்காகச் செய்ய வேண்டும்” என்ற தியாக மனப்பான்மை எல்லாம் அவளுக்கு ஏற்படவில்லை. அந்தச் சந்தின் அழுக்கிலிருந்து விடுதலை தரக்கூடிய வாயிலாகத்தான் இதை அவள் எண்ணினாள். அதனால் அவள் அம்மாவும் சுகப்படப்போவது இரட்டிப்பு லாபமாகப்பட்டது. இளமை என்ற ஒன்று உண்டு, அதற்குச் சில ஆசைகள் உண்டு என்பது ஏனோ அப்போது அவளுக்குத் தோன்றவில்லை. ரொட்டித்துண்டு மட்டுமே உள்ள வெற்று வயிற்றில் பருவக்கற்பனைகளை மனத்தில் ஒடவிட அவள் திரையுலகக் கதாநாயகியாக இருக்கவில்லை! அவள் வெறும் பெங்களூர் "சிக்பெட் சந்தில் உள்ள ரங்கம்மாவின் பட்டி னிக்குத் துணை வந்தவள். அப்படி இருந்ததால்தான் அவள் அந்த முடிவையும் எடுத்தாள்.

யாருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லாமல் அந்தப் பெரிய வீட்டின் முன் கூடத்திலேயே சம்பிரதாயத்துக்கு 'அவன்' கையில்

அறைக்குள்ளிருந்தவன் -> 125 ->தாலியைக் கொடுத்து, பின்பு தானே வாங்கிக் கட்டிக் கொண்டு அவள் கல்யாணம் நடந்தது. அவள் மனம் என்னவோ அதற்குப் பின் கிடைக்கப்போகும், அறுசுவை உண்டி பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. அந்தக் கல்யாணத்திலிருந்து வேறு எதை அவள் எதிர்பார்த்திருக்க முடியும்?

தலையைக் கலைத்துக்கொண்டு, உடையைக் கிழித்துக்கொண்டு, அறையில் அடைபட்டுக் கிடந்த அவனிடம் அவளுக்கு மனைவி என்ற முறையில் எந்த அன்பும் தோன்றவில்லை. ஆனால் முகம் சுளிக்காமல் அவள் அவனைக் கவனித்துக் கொண்டாள். ஒவ்வொரு முறை வயிறு நிறைய உண்ணும்போதும், அந்த அறைக்குள்ளிருந்த வனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாள். வேறு எந்த வகையிலும் பிணைப்பு ஏற்பட வகையில்லாதபோது, இந்த உணர்வே அவன் எந்த வகையிலும் துன்பப்படக் கூடாது என்று அவள் நினைக்கும் அளவுக்கு அவளை அவனிடம் நெருங்க வைத்தது.

சில சமயம் சமையலறையில் அவள் வேலையாக இருப்பாள். அறையிலிருந்து சத்தம் அதிகரிக்கும்போது, "இந்தக் கழுதைப் பயலை இன்னிக்கு உண்டு இல்லைன்னு ஆக்கியுடறேன்" என்று கத்திக் கொண்டே மாமனார் போவது காதில் விழும். அதைத் தொடர்ந்து அடிக்கும் சத்தமும், அவன் ஒலமும் கேட்கும்போது, அந்தக் கூக்கூரல் ஜிவ் வென்று இவள் நரம்புகளில் ஏறி, அவள் உடலின் ஒரு பகுதி ஒலமிடுவதைப் போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டதுண்டு. ஒரிரு முறைகளுக்குப் பின் ஒருதடவை மாமனார் கோபமாகக் கத்தியவாறே போனபோது, இவள் பாய்ந்து போய் அவர் முன்னால் நின்று கொண்டாள்.

"தயவு செய்து அவரை அடிக்க வாண்டாம்" என்று சொல்லி முடிப்பதற்குள் குரல் கம்மி அழுகை வெடித்துவிட்டது.

சமையலறையில் வேலை செய்ததால் வியர்வைத்துளிகள் நெற்றி யில் அரும்ப, வேகமாக வந்ததால் மூச்சு வாங்க அவள் நின்று சொல்லி விட்டுப் பின் உதடுமடங்க அழுததும் மாமனார் மலைத்துப்போய் நின்றார்.

அவள் மீண்டும் சமையலறைக்கு ஓடி வந்துவிட்டாள்.

அன்று ஏன் அவள் அழுதாள் என்பது அவளுக்கே புரியவில்லை. அந்த அறைக்குள்ளிருந்தவன் அவள் பொறுப்பில் இருப்பவன் போலவும், அவளால் அவனுக்குச் செய்யக்கூடியது கருணை காட்டு வது மட்டுமே என்றும் அவளுக்கு மாமனார் முன் நின்று பேசிய அந்தக் கணம் தோன்றியிருக்க வேண்டும். அதிகம் ஆழ்ந்த சிந்தனை களில் மூழ்கியிரா அவள் மனத்தை அந்த எண்ணத்தின் வேகமும், ஆழமும் தாக்கவே அவள் நிலைகுலைந்து அழுதுவிட்டாள்.அந்தப் பொறுப்பின் பாரத்தைத் தன் மேல்தானாகவே தன்னையறியாமலே சுமத்திக்கொண்டுவிட்டோமே

令 126 令 அம்பைஎன்று அவள் அழுதாள். மூன்றாம் மனிதனுக்குப் பணிவிடை செய்வது போல் செய்துவிட்டு, இந்தச் செல்வத்தின் சுகத்தை அனுபவிக்கும் பொறுப்பில்லா மனம் ஏற்படாமல், ஏன் தொண்டை கிழியக் கத்தும் இந்த மனிதனைக் காப்பது தன் கடமை என்று தோன்ற வேண்டும் என்று அவள் அழுதாள்.

அதற்குப் பின் அவனை யாரும் அடிக்க முயலவில்லை. அதற்குப் பதிலாகச் சத்தம் வந்தவுடன் அவள் அழைக்கப்பட்டாள்.

எந்தஎந்த சந்தர்ப்பங்களில் அவன் எப்படிச் சத்தம்போடுவான் என்பது அவளுக்குப் பழகிவிட்டது. சத்தத்திலிருந்தே அறைக்குள் என்ன நடக்கிறது என்று அவளுக்குப் புரிந்துவிடும் சில சமயம்,அவன் குணமாகிவிடலாம் என்ற நப்பாசை கூட, இரவு படுக்கையில் படுத்துக்கொண்டு தோட்டத்திலிருந்து காற்றில் கலந்து வரும் மல்லி கையின் மணத்தை நுகர்ந்தவாறே இருக்கும்போது அவளுக்கு ஏற் படும்.திடீரென்று அறையைத் திறந்துகொண்டு அவன் வந்து, அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது போல் அவள் எண்ணிக் கொள்வாள்.

அப்போது எல்லாம் எழுந்து போய் அவன் அறையின் ஜன்னல் கதவைத் திறந்து பார்ப்பாள். படுக்கை ஒரு புறமாயும், அவன் ஒரு புறமாயும் அவன் படுத்துக் கிடப்பான். துங்காமல் வெறித்துப் பார்த்தவாறே உட்கார்ந்துகொண்டிருக்கும் நாட்களுமுண்டு.

அர்த்தமில்லா சின்னஞ்சிறு ஆசைகளுக்கு வெள்ளி முலாம் போட்டு பொற்கிரீடம் வைத்து, அவற்றுக்கு நெஞ்சில் அரச பதவியை வாங்கித் தந்துவிடும் இளமை என்னும் மந்திரவாதியின் கைப்பாவை யாய் அந்த ஜன்னல் வழியாக அவளுடைய சொத்தான அவனை அவள் பார்ப்பாள். எல்லோரும் உறங்கியிருக்கும் அந்த இரவு வேளை யில் வெகு நேரம் அப்படி அவள் நின்றதுண்டு.

அந்த அசட்டு நப்பாசைகளெல்லாம் செத்துப்போய் இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.

இன்று அவனை அடக்கிவிட்டுச் சமையலறையில் அமர்ந்ததும், அப்பளங்கள் பரப்பப்பட்டிருக்கும் ஒரு சிறிய வீட்டில், வறுமை அவள் மென்மைக் குணங்களைக் காவு வாங்கிவிட்டதால் அடிக்கடி எரிந்துவிழும் அம்மாவின் வசவை வாங்கிக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்போல் தோன்றியது. இந்த வீட்டுள்நுழையும் முன்பு பத்து ரூபாய்க்கு முரட்டுக் கைத்தறிச் சேலை - கத்தரிப் பூ நிறத்தில் பூ அச்சிட்டது - அம்மா வாங்கித்தந்தாளே, அதைக் கட்டிக் கொண்டு போய்க் கதவைத் தட்டி அம்மாவை ஆச்சரியத்துக்குள்ளாக்க வேண் டும் என்று தோன்றியது.

அதை நினைத்த மறுவினாடியே, மூடியிருக்கும் ஒர் அறை ஒன்று அவளுக்கு ஞாபகம் வந்தது. பரிதாபகரமான பார்வையுடன் வாய் விட்டுக் கத்தும் அவனை எண்ணிக்கொண்டாள். இங்கே இவர்களி

அறைக்குள்ளிருந்தவன் -- 127 --டம் அடிவாங்கிக் கொண்டு இருக்க அவனை விட்டுப் போக முடியா மல் கருணை அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டது.

அவள் சமையலறைச் சுவரில் சாய்ந்துகொண்டிருக்கும்போதே இதுவரை அவள் கேட்டறியாத கதறல் அந்த அறையிலிருந்து, வேகமாக ஒடும் வண்டியைத் திடீரென்ற நிறுத்தும் கீச்சு ஒசையுடன் எழுந்தது. அடிவயிற்றில் நெருப்புத்துண்டு ஒன்று புரண்டது. பதறிக் கொண்டு ஓடினாள்.

அவளுக்கு முன்பு மாமியார் சென்றிருந்தாள். ஜன்னலைத் திறந்து பார்த்து, முகமெல்லாம் வெளிற, அவள் ஸ்தூல சரீரம் மெல்ல நடுங்க நின்றிருந்த அவளை நொடியில் அப்புறம் தள்ளிவிட்டுப் பார்த்தாள். நெற்றி, கன்னம், முகவாய் எல்லாம் குருதி பெருக அவன் விழுந்து கிடந்தான். சுவரிலிருந்து பறித்த ஆணி ஒன்று வலது கையில் இருந்தது. பாய்ந்து கதவைத் திறந்து உள்ளே அவனருகே சென்றாள். நொடிக்கு ஆயிரம் உளறும் அவன் பேசாமல் இருந்தான்.

சாதாரணமாக வெறி வரும்போது மற்றவர்களைத்தான் அவன் காயப் படுத்துவான். பல முறைகள் அவன் அறைக்குள் அடைபட் டிருப்பது அவள் மனத்துக்கு வேதனையாக இருந்தாலும், வெளியே வரும் சிலநேரம் அவன் ஆடுவதைப் பார்த்து அவளே பயந்ததுண்டு. இரண்டாம் பையன் சந்தானம் மேஜைமேல் Tசட்டத்தை வைத்துப் படம் வரைந்துகொண்டிருந்த வேளையில் ஒருமுறை கதவை எப்படியோ திறந்துகொண்டு அவன் உள்ளே வந்து ஒரு வார கால வேலையை ஒரு நொடியில் கிழித்தெறிந்தான். சந்தானம் தடுக்க முற்பட்டபோது, அதே சட்டத்தால் நெற்றியில் அடி விழுந்தது. நான்கு வேலைக்காரர்கள் வந்து இழுத்துக் கொண்டுபோனார்கள்.

அவள் சந்தானத்திடம் ஓடினாள். அதற்கு முன்பு வரை அவள் அவனிடம் பேசியதுகூட இல்லை.

"ரொம்ப அடிபட்டுடுத்தா? நான் மருந்துபோடறேன்"கை பஞ்சை யும். டிஞ்சரையும் ஒற்றிப் பரபரவென்று வேலை செய்தது. "யாருக்கு வேணும் மருந்து? அந்த ரூமிலே இருக்கறவன் ஒழிஞ்சாத்தான் இந்த வீட்டுலே நிம்மதி. நான் அவனை வெறுக்கறேன்” என்று மேஜையைக் குத்தினான் சந்தானம்.

அவள் பேசாமல் நின்றுகொண்டிருந்தாள். அந்தத் திட்டுக்கெல் லாம் அவளே உரியவள் போல் பொறுமையாக நின்றுகொண்டிருந் தாள். சந்தானத்தின் வெறுப்பை - ஏன், அந்த வீட்டின் எல்லோரின் வெறுப்பையும் - அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவளைப் பார்த்துவிட்டு மேலும் கத்தினான் சந்தானம்."நீஒண்ணும் 'உம்' முனு நிக்க வேண்டாம். நான் சொல்றது தப்பு மாதிரி பார்க்கவேண்டாம்."

-- 28 -> அம்பை"நான் நீங்க சொல்றது தப்புனு சொல்லலையே? அவர் அப்படி இருக்கறதுனால்தானே நான் இப்படி உங்க முன்னாலே நின்னு பேச முடியறது? இல்லாட்டா இந்த வீட்டுலே நுழைய எனக்கு ஏது யோக் யதை? பாலாவும் தயிராவும் நான் சாப்பிடறேனே, அதுக்காகவாவது அவருக்கு விழற வசவை நான் ஏத்துக்க வேண்டாமா? உங்க வீட்டு ஜூலி கூட சாப்பாடு போட்டவுடன் வாலை ஆட்டறதே?” என்றாள் அவள்.

அதன் பின்பு அவன் அறை எப்போதுமே ஜாக்கிரதையாக மூடப்பட்டது அவளால்.

இப்படி மற்றவர்களை ஹிம்ஸை செய்து அட்டூழியம் செய்த அவன், எல்லாக் கோபத்தையும் தன் மேலேயே காட்டிக்கொண்டு விழுந்து கிடந்தான்.

"மாமி மூச்சு இல்லையே மாமி.” என்றாள். "பாவி, பாவி! இப்படிச் செய்துரட்டானே? ரத்தத்தைப் பார்த் தாலே எனக்கு ரத்தக் கொதிப்பு வந்துரடுமே...!"

அவனை வழக்கமாகக் கவனிக்கும் டாக்டர் இந்நேரம் ஆஸ்பத்திரி யில் இருப்பார். ஃபோன் செய்து பயனில்லை. யாரும் எடுக்க மாட் டார்கள். எடுத்தாலும் அவர் இல்லை என்று விடுவார்கள்.

"நீங்க இங்கே இருங்கோ. நான் டாக்டரைக் கூட்டிண்டு வரேன்" என்று விட்டு எழுந்தாள்.

வெளியே வந்து டிரைவரைக் காரை எடுக்கச் சொன்னாள்."வேகமாக, வேகமாக” என்று பரபரத்தாள்.

அதிர்ஷ்டவசமாக ஆஸ்பத்திரி வாயிலில் டாக்டர் அகப்பட்டார். “டாக்டர், டாக்டர், மல்லேஸ்வரம் 6வது மெயின்ரோடுக்கு வரணும். உங்க பேஷண்டுதான். பேச்சுமூச்சில்லை டாக்டர்" என்று நாக்குழறக் கூறினாள்.

அவளை ஒருமுறை பார்த்துவிட்டு மருந்துப் பையுடன் காருக்குள் நுழைந்தார்.

"என்னம்மா ஆச்சு ?" "தன்னையே ஆணியாலே குத்திண்டுட்டார் டாக்டர்." "பேசாம ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டு நிம்மதியா இருக்கலாம்." அவள் பதில் பேசவில்லை. அப்போது பேச எந்தச் சொற்களும் அவள் மனத்தில் உருவாகவில்லை. ஓராயிரம் சொற்கள் ஒரேயடியாக மனத்தில் எழுந்து புகையாய்ப் பிசுபிசுத்துப் போயின. குருதி படிந்த அந்த முகம் மனத்தில் தோன்றி எல்லா எண்ணங்களையும் அந்தக் குருதியே அடித்துப்போயிற்று.

அறைக்குள்ளிருந்தவன் " - 29 <>கார் வீட்டை அடைந்ததும் துள்ளிக் குதித்து வீட்டை நோக்கி ஓடினாள். டாக்டரால் அவளை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

அவன் அறையை நோக்கிப் பறந்தாள். "என்ன ஆயிற்று மாமி? எப்படி இருக்கார்?" என்றாள். மாமியார் பதில் சொல்லும் முன் டாக்டர் உள்ளே நுழைந்தார். எதுவும் பேசா மல் அவனைப் படுக்கையில் கிடத்தினார். ரத்தத்தைத் துடைத்து மருந்திட்டார். கையில் ஊசி போட்டார். சிறிது நேரம் கழித்து அவன் கண் விழித்தான்.

"கவனமாப் பார்த்துண்டா ஒண்ணும் ஆகாது. நல்ல ஜூரம் அடிக்கும். மருந்து ஒழுங்கா தரணும். நர்ஸ் அனுப்பி வைக்கட்டுமா ?”

“நானே பாத்துப்பேன் டாக்டர்." "சரி. நான் மருந்து கொடுத்தனுப்பறேன்." மாமியாருடன் அவர் வெளியே போனார். "அம்மா, தன்னையே தாக்கிக்கற திருப்பம் இது. இனிமே ஒரு ஊசியைக்கூட நீங்க அவன் பக்கம் வைக்க முடியாது. ஏன் இந்தக் கஷ்டம் ? பேசாமே ஆஸ்பத்திரிலே சேர்த்துடுங்கோ. மாசாமாசம் பணம் கட்டினா போதும்." என்று டாக்டர் கூறுவது காதில் விழுந்தது. "குணமே ஆகாதுன்னுதான் சொல்லிட்டேளே? அப்புறம் ஆஸ்பத் திரிலே சேர்த்து என்ன பிரயோஜனம் ?"

"அவனுக்கும் பாதுகாப்பு. உங்களுக்கும் செளகரியம். அப்புறம் உங்க இஷ்டம்.”

கண்விழித்தும் தன் வசத்தில் இல்லாமல் சோர்வுற்றிருக்கும் அவனை அவள் பார்த்தாள்.

"இப்படிப் பண்ணிக்கலாமா? இப்படிப் பண்ணிக்கலாமா?" என்று மிருதுவாக அவனுக்குப் புரிய வைப்பது போல கேட்டாள். பாதி நீலமும், பாதி ரோஜா வண்ணமுமாய் வீங்கிக் கிடந்த முகத்தைத் தடவித்தந்தாள்.

சிறிது நாழிகைக்குப் பிறகு டாக்டரின் சொந்த மருத்துவசாலையில் பணியாற்றும் பெண் ஒருத்தி மருந்துடன் வந்தாள்.

"இந்த மருந்து ஜூரம் ஜாஸ்தியானா தரணும். இது ஒழுங்கா நாலு டோஸ் இன்னிக்கு ராத்திரி கண் விழிச்சுத் தரணும். உங்களாலே முடியுமா? இல்லே, நான் இருக்கட்டுமா? அப்புறமா ஏதாவது ஆனா டாக்டர் ஓடி வரணும்."

"நான் மருந்து ஒழுங்காய்த் தருவேன். நீங்க இருக்க வேண்டாம்." அவன் அப்படிச் சோர்வாகவே நிறைய நாட்கள் இருக்க வேண் டும் போல் அவளுக்கு ஒர் அசட்டு ஆசை ஏற்பட்டது. பைத்திய

令 130 令 அம்பைமாக அல்லாமல், பாதி நினைவுடன் அவள் கைக்கு அடங்கிய வனாக அவன் படுத்திருந்தது முட்புதர்களுக்கு நடுவே ஒரு பசுந் தழையாய அவள் மனத்தைக் குளிர்வித்தது. அதே சமயம் அவன் விழித்து இதே அறையில் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தால்கூட போதும், இப்படி பலவீனமாகப் படுத்திருக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

சந்தானம், அவனுக்கு மூத்தவன் பாலாஜி இருவரும் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். மாமனார் வந்து பார்த்துவிட்டு, "தன்னையே அடிச்சுக்க ஆரம்பிச்சாச்சா ? எல்லாம் என் போன ஜன்ம விதிப் பயன்" என்று தலையில் அடித்துக்கொண்டார்.

மருந்து நேரப்படி தர சந்தானத்தின் அறையில் அவள் பார்த்திருந்த மேஜைக் கடியாரத்தை எடுத்துவரப் போனாள்.

சந்தானத்தின் அறைக் கதவு சாத்தியிருந்தது. உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. சாவித்துவாரத்தின் வழியாகக் குனிந்து பார்த்தாள்.

சந்தானம் மேஜைமேல் ஏறி உட்கார்ந்துகொண்டிருந்தான். பாலாஜி நாற்காலியில். மாமனாரும், மாமியாரும் வேறு இரு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர். சந்தானம் ஆரம்பித்திருந்த வாக்கியத்தின் கடைசிப் பகுதி மட்டுமே அவள் காதுக்கு எட்டியது.

". இல்லையா நம்பகிட்டே? இப்படி வீட்டிலேயே வெச்சுண்டு ஏன் அவதிப்படனும்?"

"ஆஸ்பத்திரிக்கு அனுப்பினா வீண் செலவுதான். குணமாகா தாமே?” பாலாஜி குறுக்கிட்டான். "செலவானா பரவாயில்லை அம்மா. நாளைக்கு என்னோடு வேலையில் இருப்பவர்களை இங்கே நான் எப்படி அழைச்சுண்டு வரமுடியும்? எனக்கு ஒரு அந்தஸ்து இல்லையா?" "வாழ்நாள் முழுசும் அவன் இப்படித்தான் இருக்கப்போறானாம். டாக்டர் சொல்லறார். இப்படியே ரூமிலே போட்டு வைக்க முடியுமா? அதுவும் தன்னையே அடிச்சுக்க ஆரம்பிச்சிருக்கான். எவ்வளவு ஜாக்கிரதையா பார்த்துக்கணம் தெரியுமா?" "அந்தப் பொண்ணு பார்த்துப்பாடா." "அந்தப் பொண்ணு! அவளை இங்கே கூட்டிண்டு வந்தயே அதுதான் முதல் தப்பு. அவள் அவனை ஏன் கவனிச்சுக்க மாட்டா ? அவன் இருக்கிற வரைக்கும் தானே அவளுக்கு இங்கே இடம்?" பாலாஜி ஆத்திரத்துடன் கூறினான்.

"அம்மா, அவன் பைத்தியம் முத்திப் போயிடுத்து. இனிமே அவளை அனுப்பிவிட வேண்டியதுதான். அவகிட்டே ஆயிரம், ரெண்டாயிரம்

குடுத்துட்டுப்போகச் சொல்லு பெங்களுரை விட்டுப் போனா அவளுக்கு வேற கல்யாணம்கூட ஆகலாம்". இது சந்தானம்.

அறைக்குள்ளிருந்தவன் -> 131 --அவன் சொன்னதில் எந்த விரஸமும் இருப்பதாக அவளுக்குப் படவில்லை. ஒருவேளை இந்த வீட்டிலிருந்து அவள் அனுப்பப்பட் டால் அவள் மனமே அப்படி நினைக்கலாம். ஆனால் அந்த அறைக் குள்ளிருந்தவன் அவள் தோழன். அவனுக்கு அவள் கடமைப்பட் டவள். அவன் எங்கோ கதறிக் கொண்டு இருக்கும் வரை அந்தக் கதறல் அவள் நெஞ்சத்தில் மோதிக்கொண்டே இருக்கும். அவள் கழுத்தில் தொங்கும் அந்தச் சின்னத்திற்காக அவள் அப்படி உணர்ந் தாள் என்று இல்லை. அவனைக் கவனித்துக்கொள்ள வெறும் வேலைக்காரியாய் அவள் நியமிக்கப்பட்டிருந்தாலும் இதே அளவு பிணைப்பு அவளுக்கு ஏற்பட்டிருக்கும் என்று அவளுக்குப் பட்டது.

இதுவரை பேசாமலிருந்த மாமனார் பேசினார். "அந்தப் பொண் ணுகிட்டே நான் பேசிக்கறேன். இந்தத் தடவை நிஜமாகவே அவனுக்கு ஜாஸ்தியாகிவிட்டது.இனிமே அவனை நம்பளாலே சமாளிக்க முடியாது. அனுப்பிவிட வேண்டியதுதான்."

வேறு விஷயங்களைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பித்த பிறகு மெல்ல அவள் அறைக் கதவைத் தட்டினாள். சந்தானம் திறந்தான்.

"என்ன வேணும்?"

"கடிகாரம், மருந்து தரணுமே?”

அவன் மேஜையில் இருந்த கடிகாரத்தை எடுத்துத் தந்தான். அதைப் பெற்றுக் கொண்டு மீண்டும் 'அவன்' அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டாள்.

அவன் தலையைத் தன் மடியில் கிடத்திக்கொண்டாள். அவனைக் குனிந்து பார்த்தாள். "இவருக்கு என்ன வயதிருக்கும்?" என்று விசித்திர மான சந்தேகம் வந்தது. முப்பத்தைந்து இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். இனி மீதி வாழ்நாளை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி யில் உக்கிரமான பைத்தியங்கள் இருக்கும் பகுதியில் இருக்கப் போகும் அவன் நிலையை எண்ணிப் பார்த்தாள். வயது ஏறஏற, வலு குறைந்து தன்னைத்தாக்கிக்கொள்ளவோ,மற்றவரைத்தாக்கவோ சக்தி இல்லாமல் போகும்போது மீண்டும் அவன் இங்கே இந்த அறையில் அடைபடலாம்.

சந்தானமும், பாலாஜியும் அப்பொழுது குடும்பஸ்தர்களாக இருப்பார்கள். அவர்கள் குழந்தைகள் இந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, "பைத்தியக்கார பெரியப்பா." என்று கூவி அழைக்கலாம். "அப்படிச் சொல்லக்கூடாது" என்று கண்டிக்க யாரும் இல்லாமல் போகலாம். அல்லது கடைசிவரை அந்தப் பைத்தியக்கார ஆஸ்பத் திரியே அவன் உலகமாகி விடலாம்.

அவன் கேசத்தை அவள் வருடித்தந்தாள். எவ்வளவு சுலபமாக அவன் விதியை அவர்கள் நிர்ணயித்துவிட்டார்கள்! அவளுடை யதையும் கூட. இந்த மடியில் படுத்திருப்பவனுக்கு அவள் வாழ்வு

-8- 132 -> அம்பைஅவனால் மாறியதும், இன்று மீண்டும் அவனால் மாறப்போவதும் எப்படித் தெரியும்? ஆனால் அவனுக்கு அவளைக் கட்டாயம் நினைவு வரும். எங்கேயோ மன இருட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, மென்மையான இரு கரங்கள் கலங்கலாக அவன் ஞாபகத்துக் குக் கட்டாயம் வரும் என்பதில் அவளுக்கு அசாத்திய நம்பிக்கை இருந்தது. அந்த வீட்டிலேயே அவளிடம் அவன் அதிக அன்பைப் பெற்றிருந்தான். அத்தனை அன்பும் எப்படி வீணாக முடியும்? அந்த அன்பின் சிறு கீதங்கள் அந்தப் பைத்தியக்கார மனத்தில் கூட எப்போதாவது ஒலிக்கும்.

மாறப்போகும் தன் வாழ்வை அவள் எண்ணிக்கூடப் பார்க்க வில்லை. அதை அமைத்துக்கொள்வது சிரமமான காரியமாக அவளுக்குப் படவில்லை. ஏதாவது டீச்சர் உத்தியோகத்துக்கான படிப்பைப் பெறலாம். அவை சின்ன விஷயங்கள். இவர்கள் தரப் போகும் பணத்தால் தீரப்போகும் விஷயங்கள். அந்த சிக்பெட் சந்தின் நாற்றம் போதாது என்று இவளைப் பற்றிய வம்புகளும் இனிமேல் அங்கே மணக்கும். அடுத்த வீட்டு ரவியோடு அவள் பேசினால் எதிர்வீட்டு ராயர் மாமியின் விழிகள் பிதுங்கும்.

"அந்தப் பொண்ணுக்குக் கல்யாண ஆசை வந்துடுத்து" என்று கெளரம்மாவிடம் சென்று கரிசனமாகக் கூறுவாள்.

மாதா மாதம் முன்னறை வாசற்படி அருகே ஒர் ஒரத்தில் அவள் அமரும் நாள் தள்ளிப் போய்விட்டால், வாயைக் கிண்டினால் எல்லாவற்றையும் கொட்டிவிடும் அம்மாவிடம் வந்து, "என்ன ஆச்சு? நீங்க ஜாக்ரதையா இருக்கணும் மாமி, காலம் கெட்டுப் போயிடுத்து" என்று அவள் வயிற்றில் புளியைக் கரைக்க வைப்பார்கள். ஆ! அப்பா இறந்த மூன்று வருடங்கள் அவள் அனுபவிக்கவில்லையா ?

அந்தச் சந்தின் ஆண்கள் மட்டும் என்ன உயர்த்தி? அவள் சிறு பெண்ணாக இருந்தபோது நடந்த அந்தச் சம்பவம் அவளுக்கு இன்னும் மறக்கவில்லை.

ராயர் மாமா எப்போதும் இவளைக் கூப்பிட்டு பழம், ரொட்டி எல்லாம் கொடுத்து "உங்க அம்மாகிட்டே குடு" என்பார். அம்மா விடம் கொடுத்தால் முதுகில் பழம் வர வைத்துவிடுவாள் என்று தெரியும். இவளே தின்றுவிடுவாள். சிநேகிதிகளுடன் பகிர்ந்துகொள் வதும் உண்டு. ஒரு முறை அவர் சிவப்புப் பட்டு ரவிக்கைக் துண்டு ஒன்றை அவளிடம் தந்து, "உன் அம்மாகிட்டே குடுத்துடு. மாமி ஊரிலே இல்லேன்னு சொல்லு" என்றார்.

அம்மாவிடம் சென்று அவள் சொன்னதுதான் தாமதம், அம்மா அவளையும் இழுத்துக்கொண்டு விடுவிடுவென்று ராயர் வீட்டில் புகுந்தாள். மாலையில் குளிக்க நீர் சுடப்பண்ண ராயர் குளியலறை யின் பெரிய தவலைக்கு அடியே விறகு வைத்து எரிய விட்டிருந்தார்.

அறைக்குள்ளிருந்தவன் -> 133 ->கன்னடப் பாடல் ஒன்றை உரக்கப் பாடிக்கொண்டு அதன் எதிரிலே குந்தி உட்கார்ந்திருந்தார்.

அந்தச் சிவப்பு ரவிக்கைத்துண்டை அந்த அடுப்பில் திணித்தாள் அம்மா. பிறகு ஏதோ கத்தினாள். அந்த வயதில் அது புரியாததாலோ என்னவோ சொற்கள் நினைவில்லை. நெருப்பில் கருகிக்கொண்டிருந்த ரவிக்கைத்துண்டைச் சுட்டிக் காட்டி, அதைவிடச் சிவப்பாகக் கண்கள் ஒளிர, இன்னொரு கையை நெஞ்சின் மீது வைத்துநின்று கொண்டிருந்த அம்மாவின் உருவமும், எண்ணெய் தடவிய உடம்புடன் பிரமித்துப் போய் நின்ற ராயரின் உருவமும் மறக்கவில்லை இன்னமும்,

இப்போது மட்டும் அந்தச் சந்து மாறிவிடப் போகிறதா என்ன? ராயர் இல்லாவிட்டால் எவனாவது ராவ்ஜி வந்து விட்டுப்போகிறான். அந்தச் சந்தின் வம்பும், அவதூறு பேசும் நாக்குகளும் ஏனோ அவளுக்குப் பழைய பயத்தை உண்டாக்கவில்லை. அவளை யறியாமல் ஒரு மகாராணியின் கம்பீரம் அவள் மேல் வந்து கவிந்து கொண்டது போல் அவள் உணர்ந்தாள். தன் ஒரு பார்வையாலேயே அங்குள்ள அத்தனை பேரையும் சாம்பலாக்கிவிடும் பலம் அவளிடம் வந்து சேர்ந்துவிட்டது எப்படியோ.

அந்தக் குறுகிய சந்து, அதைச் சுற்றியிருந்த குறுகிய மனங்கள் எதுவும் அந்தக் கணம் அவள் மனதைப் பாதிக்கவில்லை. அந்த வாழ்க்கைக்கு மீண்டும் போகிறோமே என்ற தாபம் சிறிதளவுகூட எழவில்லை. தன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தவனைப் பற்றிய எண்ணமே அவள் மனத்தை வியாபித்திருந்தது.

அவளுக்கு மனம் இருந்தது. சிந்தனை இருந்தது. புழுவாக மற்றவர் கள் நடத்தினாலும் வாழ வேண்டும் என்றதுடிப்பு இருந்தது. இவனுக்கு என்ன இருக்கிறது ? வாழ்நாள் முழுவதும் ஓர் அறையினுள் கத்திக்கொண்டோ,தன்னையே தாக்கிக்கொண்டோ இன்னும் எத்தனை வருடங்கள் இவன் வாழ வேண்டும்?

அவள் வீடிருக்கும் சந்தின் முனையில் ஓர் அரச மரமும் அதைச் சுற்றி மேடையும் உண்டு. அங்கு படியருகே எப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு கறுப்பு நாய் ஒன்று உட்கார்ந்திருக்கும் சில வருடங்களுக்கு முன்னால், பள்ளியிலிருந்து வரும்போது அதன் வாலை இழுத்து விளையாடாமல் எந்தக் குழந்தையும் வீட்டுக்குப் போகாது. ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் அம்மாவோடு அப்பளம் இட்டுக்கொண்டிருந்தபோது அதன் ஒலம் கேட்டது. எழ நினைத்த

அவளை அம்மா அடக்கிவிட்டாள்.

"அந்த நாய்க்கு வெறி பிடிச்சுடுத்து. அதனாலே தடியாலே அடிக் கறா. நாய் வண்டி வந்து பிடிச்சுண்டு போயிடும் கொஞ்ச நாழியிலே, நீ போகாதே" என்றாள்.

令 134 令 அம்பை"அதைக் கொன்னுடுவாளாம்மா ?” என்று கேட்டுவிட்டு ஹோ வென்று அழுதாள் அவள்.

"இல்லாட்டா அதுக்கும் கஷ்டம். மற்றவாளுக்கும் கஷ்டம் இல் லையா? கடிச்சுடுமே சனியன்" என்றாள் அம்மா.

அவள் அப்பளம் இடுவதை நிறுத்திவிட்டு அந்தக் கருப்பனுக்காக முழங்காலைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

இந்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தாங்கள் கருணை மனம் படைத்தவர்கள் என்ற எண்ணம். அதனால்தான் ஏதோ ஆஸ்பத்திரி யில் இவனை உழல விடப்போகிறார்கள். இந்தக் குழப்பத்திலேயே, யாரும் இல்லாதவனாக, அவனை நீடிக்க விடப்போகிறார்கள். அவள் ஆதரிக்க அருகில் இல்லாத ஒர் இடத்தில் அவன் இருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னத்தனியனாய் அவன் ஒர் ஆஸ்பத்திரியில் அலைவதை அவளால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அந்த ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் எல்லாம் பைத்தி யங்கள் இல்லையோ? தற்சமயம் பாதி நினைவோடு படுத்திருக்கும் அவனை அந்த மற்றப் பைத்தியங்களைப் போல் ஒருவனாக அவளால் எண்ண முடியவில்லை.இந்த ஜுரத்திலிருந்து விழித்ததும் தொண்டை கமறக் கத்தும் ஒருவனாய், சந்தானம், பாலாஜி எல்லாருக்கும் வேண் டப்படாதவனாய், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரப்போகும் ஒருவனாய் அவன் மாறிவிடுவான் என்ற நினைவு வந்ததும் அவன் மேல் அவளுக்குப் பரிதாபம் மிகுந்தது.

இந்த ஜ"ரத்திலிருந்து அவன் மீளாவிட்டால் ? சாட்டையால் அடிக்கப் பட்டது போல் அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது.

அவன் மீள வேண்டும் என்று சொல்லிக்கொண்டாள்.

எதற்காக? மீண்டும் துணியை அவிழ்த்துக்கொண்டு ஒடவா ? அவள் கூட அருகில் தடை செய்ய இல்லாமல் அடிவாங்கவா ? பைத்தியக்கார விடுதியில் மெல்லச் சாகவா ?

அவன் தயவில் அவள் சாப்பிட்ட உணவெல்லாம் நெஞ்சுவரை அடைத்தது. அவனுக்கு அவள் காட்டக்கூடியதெல்லாம் வெறும் அனுதாபம்தான். பரிவுதான். அன்புதான். அது எந்த வடிவில் வெளிப்படவேண்டும் என்பது அவளே தீர்மானம் செய்ய வேண்டிய ஒன்று. எது கருணை, எது கொடுரம் என்பதை நிர்ணயிக்க வேண்டி யது அவள்தான்.

முக்காலி மீது அவள் வைத்திருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மடியில் கிடந்த அவன் முகம் ஜுர வேகத்தில் மேலும் சிவந்து கிடந்தது. வாய் அரற்றிக் கொண்டிருந்தது. அவள் அவன் கேசத்தில் விரலிட்டு அளைந்தவாறே உட்கார்ந்திருந்தாள். அவன் உடல், முகம் எல்லா

அறைக்குள்ளிருந்தவன் -- 135 --

வற்றையும் மெல்ல வருடினாள். அவன் தலை வைத்திருந்த தொடை மரத்துப் போயிற்று. பலமணி நேரங்கள் அவன் அவள் மடியில், அவள் அன்புக்குரியவனாய்க் கிடந்தான்.

அந்நிலையிலேயே சுவரில் சாய்ந்து அவள் தூங்கியே போய்விட்ட போது, இதுவரை உணரா தண்மை அவள் விரல்களில் ஊடுருவியது. திடுக்கிட்டு விழித்து அவன் நாசியருகே விரல் வைத்துப் பார்த்தாள். தலையைக் கவிழ்த்து அவன் நுதலில் தன் இதழ்களைப் பதித்தாள். ஒரு பெருமூச்சுடன் அவன் தலையைக் கீழே வைத்தாள்.

தொடையை நீவி விட்டுக்கொண்டாள், மெல்ல எழுந்து முக்காலியில் இருந்த மருந்துக்குப்பியை அறையோடு இணைந்திருந்த குளியலறை யின் தொட்டியில் கவிழ்த்தாள். பிறகு மீண்டும் அதை முக்காலியில் வைத்தாள்.

அதற்குப் பிறகு, அந்த அறையிலிருந்தவனை வெளியேற்றுவதற் கான ஆயத்தங்களை அந்த வீட்டிலிருந்தவர்களிடம் செய்யச் சொல்ல

அந்த அறைக் கதவைத் திறந்தாள். வெளியே இருந்த சுதந்திரமான காற்று இதுவரை மூடியிருந்த அந்த அறையினுள்ளே வீசியது.

'கணையாழி" ஜனவரி 1972


Tuesday, September 27, 2016

க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.. - பிரமிள்


க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.. - பிரமிள்

ஸந்த ஸுதாயிபய் லஹாஙி
 - அமரரின் புகழ் அவர்தம் அமரத்வத்திற்காக

லஹய் நீசாயி நீச்
- நீசர் புகழ் நீசத் தனத்திற்காய்

ஸுதா ஸாரஹி அமரதா
- அமரத்வம் அளிப்பதால் அமிழ்தத்தினைப் போற்று

கர்ள ஸராஹி நீச
- மரணிக்க வைப்பதால் விஷத்திற்கு வாழ்த்து
                                                                                              - துளசிதாஸ்

Posted on மே 11, 2009 by Senthilaan

https://senthilaan.wordpress.com/2009/05/11/க‌ட‌ல்-ந‌டுவே-ஒரு-க‌ள‌ம்/
க‌ட‌ல்க‌ளைத் தாண்டி கேட்கிற‌து
வீறிட்ட‌ சிசுக்குர‌ல்,
காப்புடைந்த‌ பெண்ணின் க‌த‌ற‌ல்,
க‌ன‌ன்றெரியும் வீட்டின் குமுற‌ல்,
ச‌ம‌ர‌ச‌ப் பேச்சின் அல‌ங்கார‌ வ‌ளைவுக்குள்
எதிரெதிர் இன‌த்து ம‌க‌னும் ம‌க‌ளும்
முகூர்த்த‌ வேளையில்
சிர‌ச‌றுப‌ட்டு அல‌றிவிழும் ர‌ண‌க‌ள‌ம்
இன‌ம் மொழி ம‌த‌ம் என்று
ஊர்வ‌ல‌ம் எடுத்த‌
மூளையின் தாதுக்க‌ள் மோதி
ச‌ங்க‌ம‌ம் பிற‌ழ்ந்து
சிக்கெடுத்த‌து ஒரு முடிச்சு
முடிச்சு இனி
வேட்டிக்கும் முந்தானைக்கும‌ல்ல‌,
முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்
அமைதியின் அனுஷ்டான‌ங்க‌ளும்.
ஆர‌வார‌ம் ஒடுங்கி ஸ்த‌ம்பித்த‌ன‌.
க‌ல்லும் உருகி
அலையெடுக்கிற‌து
எரிம‌லைப் பிழ‌ம்பு.
ம‌ரண‌ம் ம‌ட்டுமே என்றான‌ பின்
ம‌ர‌ண‌ம் தான் என்ன‌..?
அழிவது உடலின்
கற்பூர நிர்தத்துவம்;
அழியாததுவோ உயிரின்
ஆரத்திச் சுடர்.

‍‍‍—–பிர‌மிள்

பிரமிள் நினைவுகள்: Vimaladhitha Maamallan
Prasanna Ramaswamy:
// 80களில் ப்ரமீளின் ஒரு கையெழுத்து ப்ரதியைப் படித்து விட்டு அதைப் பதிப்பிக்க வேண்டியிருந்த தொகையைத் திரட்ட ஒரு சைக்கிளில் சென்னை முழுவதும் அலைந்தவர் மாமல்லன்.
அப்போதுதான் கல்லூரி முடித்திருந்தார் என்று நினைவு.
"இனி வேட்டிக்கும் முந்தானைக்குமல்ல உறவு" என்ற வரிகள் வரும் ப்ரமீளின் கவிதையை, ஏறக்குறையை இருவது வரிகளில் அந்த நாளின் ஈழப் போராட்ட வரலாற்றையே சொல்லும் கவிதை அது...அதை சிவராம் எழுதிய கைப்ரதியை வைத்துக் கொண்டு போகிறவருகிற இடத்திலெல்லாம் படித்துக் காட்டுவார். "கடல்களைத் தாண்டிக் கேட்கிறது வீறிட்ட சிசுக்குரல்" புத்தகத்தில் படிப்பதற்கு முன் ப்ரமீளின் கையெழுத்தில் அவர் படித்துக் கேட்டதுதான்....பிற்பாடு என் நாடகங்களில், குறும்படத்தில் ஒரு முக்கியமான வரி அது...
ஒரு பேச்சு கேட்க, ஒரு எழுத்தாளரை சந்திக்க, ஒரு கவிதை வாசிப்பு கேட்க, தெய்யம் பார்க்க, ஒரு யான்ச்சோ படம் பார்க்க வண்டியேறிப் போன நாட்கள் அவை....
அன்று வேறு கிழமை:))//
Lakshmi Chitoor Subramaniam:
// What a poem! //

Saturday, September 24, 2016

ஸஞ்சாரி - அம்பை

ஸஞ்சாரி - அம்பை 
Automated GOOGLE-OCR
https://ia600307.us.archive.org/15/items/orr-11904_Sanchari/orr-11904_Sanchari.pdf
அவன் ஒரு நல்ல பிராமணப் பையன்.

மீன் வறுவல் மணத்திலும், பூணுாலை எரித்துவிட்ட வீரத்திலும், ஸிகரெட் புகையிலும் தன் பிராமணத்தனம் மடிந்துதான் தன் வகுப்பிலிருந்து விடுதலை அடைந்துவிட்டதாக அவன் எண்ணினான்.

அப்படியும் அவன் ஒரு பிராமணப் பையனே. இதை அவன் அடிக்கடி நிரூபித்தான். அவனுக்குச் சில சுணக்கங்கள் ஏற்படுவதுண்டு. "இன்னிக்கு புத்த விஹார் போலாமா ?” "வேண்டாமே, ரங்கா. வயத்து வலி.” "அந்த வலியா?"

LO

தன்னை அறியாமல் அவன் ஓரடி விலகிவிடுவான்.பிறகு அவளுடன் பிணையும் விரல்களில் ஒரு கூச்சம் இருப்பதாக அவளுக்குத் தோன்றும். அவன் வீட்டுக்குப் போய்க் குளிப்பானோ ? தன்னைச் சுத்தப் படுத்திக்கொள்வானோ? அதெல்லாம் செய்யாவிட்டாலும் அந்த மூன்று நாட்களும் மர விரல்களால் தன்னைத் தொடுவானோ ? சபிக்கப்பட்டவளைப் போல் பார்ப்பானோ?

"என்ன யோசனை ?"

"ம்? ஒண்ணுமில்லையே."

நீ ஒரு பிராமணன் வைதீக வேஷங்களைத் துறந்துவிட்டாலும், நீ ஒரு பிராமணன். என்னை இப்போது என் உடைகள் இல்லாமல் உன்னால் பார்க்க முடியுமோ? என் வயிறை,இதமாகத் தடவ முடியுமோ? தடவிப் பின் ஏதோ ஒரு உணர்வில் நீகையை அலம்பிக் கொள்வாயோ?

-> 60 -> அம்பை

________________

"பேசாமலே வரயே?"

"என்ன பேசறது" "ஏதாவது சொல்லேன்" "நீ ஒரு பிராமணன்." "என்ன உளர்றே?"

"நிஜம்தான். பிராமணனோட அத்தனை அலங்காரங்களையும்

ஒதறியுட்டு நீ அம்மணமா நின்னாலும் அது பொடரிலே ஏறி உக்காந்துண்டு உன்னை வெரட்டும்!"

"கெடையவே கிடையாது. பிராமணனுக்கு ஸெக்ஸ்ங்கறது ஒரு பாவம். நான் ஒரு புரட்சிகரமானவன். எனக்கு ஸெக்ஸ்ங்கறது ஒரு அழகான, வாழ்க்கையோட ஒரு அம்சம்."

சிரிப்பு. "ஏன் சிரிக்கறே?”

"ஆடம்லேந்து இன்னிவரை எல்லாரும்தான் ஸெக்ஸை அனுப விச்சுண்டு வரா. இதுலே என்ன புரட்சி இருக்கு? பார்க்கப்போனா ஸெக்ஸ் வேண்டாங்கறது வேணா ஒரு புரட்சி"

"அப்படியில்லே. இவ்வளவு சுதந்திரமா, வெளிப்படையா. "எங்க வீட்டு நாய் டைகர் மாதிரி" "ருக்மா, இன்ஸல்ட் பண்றதுக்கும் ஒரு லிமிட் உண்டு."

மெளனம்.

டேய் ரங்கா, வெளிப்படையா எனக்கும் வாழ்க்கையில் ஸெக்ஸ் உண்டு என்பதா சுதந்திரம்? அதை இருட்டில், ரகசியமாய், அவமானத் துடன் செய்துவிட்டு, வெளிச்சத்தில் என்னைப் பார்த்ததும் என் கண்களைச் சந்திக்காமல் பேசுகிறாயே, நீயா புரட்சிகரமானவன் ? காலமெல்லாம் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியுமோ என்றும் உன் பெளருஷத்தையும் சந்தேகிக்கும் நீ படுக்கையில்கூட என்ன புரட்சி செய்துவிடப் போகிறாய்? செய்துவிட்டாய்? உனக்கு ஸெக்ஸ்ங்கறது விளக்கில்லா வேளையில் விளையும் ஒரு பசி மட்டுமே! நீல ஆகாசத்தின் அடியே, சூரியனின் இதமான வெளிச்சத்தில் பசிய மரங்களின் கீழ், அல்லது அலைகள் மோதும் மணலில் உடலின் மற்றும் மனத்தின் அழகுகள் எல்லாம் பீரிட உன்னால் ஒருத்தியைப் புணர முடியுமா? உன்னால் பஸ்ஸில் போகும் போது, எதிரே வரும் பெண்ணை ஒரு உடலாய் மதிக்காமல் பார்க்க முடியுமோ? அவள் மாரை வெறிக்காமல் இருக்க முடியுமோ? அப்படிப் பார்த்தாலும், அதை ரஸனையோடு செய்ய முடியுமோ ? அடேய் பிராமணா.

ஸஞ்சாரி -- 61 -->

________________

. நீ என்ன புரட்சியைச் செய்யப் போகிறாய்?

"பேச மாட்டியா ?”

"பேசலாமே."

பேச்சு வேறு பாதைகளில் ஓடியது. "ருக்மா, நீ அடிக்கடி குமாரோட பேசறதும், பழகறதும் எனக்குப் பிடிக்கலே."

கட்டாயம் உன் அப்பாவுக்கு அவர் மனைவி வேற ஆம்பளையைப் பார்த்திருந்தால் பிடித்திருக்காது. அவர் அப்பாவுக்கும் அப்படியே. அவர் அப்பாவின் அப்பாவுக்கும்.

"கேட்ட கேள்விக்குப் பதில் கெடையாதா, ருக்மா ?” "ரங்கா, நீ என்னைப் பத்தி என்ன நெனக்கறே?" அவன் யோசித்தான்.

எப்படிச் சொல்வது? உன் உடம்பில் ஒரு மிருக அழகு இருக்கிறது. உன் வாழ்வில் எத்தனை மேடு பள்ளங்கள்? நீ என்னை ஏன் விரும்பு கிறாய்? நான் ஏமாந்தவனா? நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது. குமா ரோடு நீ பேசுவது என்னை உன் பின்னால் ஓடி வரவைக்கவா? நான் என்ன உன் செல்ல நாயா? நீ ஒரு கர்வி. உன் உடம்பில் வெறியூட்டும் ஒன்று இருக்கிறது. நீ சற்றே நாணமுடையவளாக, வார்த்தைகளில் தாகத்தைக் கொட்டாமல் அடக்குபவளாக, நான் பெண் என்று நினைக்கும் அம்சங்களை உடையவளாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ! நீ நேரில் வந்து "ரங்கா, மழை பேயறது பாரேன். மரம் எல்லாம் சொட்டச் சொட்ட நனைஞ்சு,பூவெல்லாம் குளிச் சுண்டிருக்கற இப்போதான் எனக்கு நீ வேணும்" அப்படீன்னு சொல்லி என் கண்ணுக்குள்ளே அம்பு மாதிரி தொளச்சுண்டு பார்க்கறச்சே, முதுகுத்தண்டு சிலிர்த்து எனக்கே கூசுகிறது. நீ ஒரு பிட்ச்.

"சொல்லேன், ரங்கா."

"ஐ லவ் யூ ருக்மா." அவள் தன் கரத்தை அவன் கரத்துடன் பிணைத்தாள்.

இது உண்மையா ரங்கா ? லவ் என்றால் என்ன ? நமக்குத் தெரி யுமோ? நீ சொல்லும் சில சொற்கள் அடிவயிற்றில் சீறிப்பாய்ந்து நெஞ்சை முட்டுகிறதே. இதுவும் லவ்வா? நான் உன் உடைமைப் பொருளா? நீ அரசோச்சும் ராஜ்யமா? ஒரு முறை உன்னிடமிருந்து எதையோ கோபத்துடன் பிடுங்க வந்தபோது, என்னைக் கீழே தள்ளி விட்டுப் பார்த்தாயே, அப்போது குதற வரும் நாயின் பைத்தியக்கார வெறி உன் கண்களில் எனக்குத் தெரிந்தது. இதுவும் காதலா? என்னை நீ மதிக்கிறாயா?

-> 62 --> அம்பை

________________

"டூ யூ லவ் மீ, ருக்மா ?” "ம்? ஆமாம். அப்படித்தான் நினைக்கிறேன்." "அப்புறம் என்ன 'உம்'முன்னு மூஞ்சியை வெச்சுண்டு ?" "சரி, கனாட் ப்ளேஸ் போலாம். வெளக்கெல்லாம் பளிச்சுன்னு எரிஞ்சிண்டிருக்கும். அந்த வட்டத்துலே இருக்கிற பார்க்லே உட் காந்துக்கலாம்."

ஸல்மாவுக்கு வயது முப்பத்தைந்தாம். அவளே சொன்னாள்."ருக்மா, உன்னை ஒருத்தன் காதலிக்கிறான் என்றால் அவனை விட்டுடாதே. என் வயதில் தனிமை கொல்லும் அப்புறம். யாரை யென்றுதான் சாப்பிடக் கூப்பிடுவது தினமும்? அப்புறம் ஒருநாள் திடீர்னு மேஜை மேல் சப்பாத்தியும் ஆலுவும் உன்னை முறைச்சுப் பார்க்கும். பாதுகாப்பு அவசியம், ருக்மா. ஆண் பொண் ரெண்டு பேருக்குமே" என்றாள். உண்மையாகவா ? எது பாதுகாப்பு? ரங்கா இப்படிக் கூட நடந்து வருவதா? இரவில் கையை மேலே போடுவதா? தான் ஆக்ரமித்த ஒரு கோட்டையைப் போல அவளை நடத்துவதா?

"கட்டாயம் அதுக்காக சில தியாகங்கள் செய்யணும்" - ஸல்மா சொன்னாள்.

அந்தத் தியாகங்களுக்கு உரியதா அந்தப் பாதுகாப்பு? அவன் என்னை ஆக்ரமிக்க விட்டு, நான் அவனை ஆக்ரமித்து, நெஞ்சைக் குடையக்குடைய நிகழ்ச்சிகள் நடக்கும்போதே, அதையெல்லாம் ஒரு தீவிரமான அன்பு என்று நினைத்து, ஏமாற்றிக்கொள்வதா அந்தப் பாதுகாப்பு? இரு அன்பு செலுத்தும் உள்ளங்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை? காலையில் எழுந்தது முதல், இரவு கண்மூடும் வரை அவன் தன் வீட்டிலேயே தன்னுடனே இருந்தால், ஒரு நாள் இரவு அவள் வீரிட்டுவிடுவாளோ? அப்படி இருவர் சேர்ந்து வாழ்வது-திருமணம் செய்துகொண்டோ, செய்து கொள்ளாமலோ - ஒருவரை ஒருவர் திருப்தி செய்துகொள்ளும் ஒரு ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன ?

ரங்காவுக்கு எத்தகைய அன்பு பிடிக்கும்? அவன் பேசப்பேச அவள் கேட்டு, அவன் மற்றவருடன் பழகுவதைச் சகியாமல் பொறாமைப் பட்டு, கோஸ்லரைப் பற்றி விவாதித்து, பூரண சுதந்திரத்தைப் புரிந்து கொண்டு இருப்பதுதான் அவன் அன்பு.

"ருக்மா, நாம ரெண்டு பேரும் ரொம்பவே சந்தோஷமா இருக்கப் போகிறோம். இல்லையா ?”

"ஆமாம்." அவள் த்வனியில் இருந்த அசிரத்தையில் அவனுக்குச் சுணக்கம் ஏற்பட்டது. அவன் அன்புதான் எவ்வளவு உயர்ந்தது! இவள் அதற்கு உரியவளா? இவள் மற்ற பெண்களை விட வித்தியாசமானவள்தான்.

ஸஞ்சாரி -> 63 ->

________________

அதுவே சில சமயம் உறுத்தியது. அவனுக்கு அவள் தைரியமும் மதர்ப்பும் வெளிப்படையான பேச்சும் அவன் கற்பனை செய்த பெண்ணின் குணங்களோடு பொருந்தவில்லை. மானைக் கண்டால் மிரளும் பெண்ணாக இல்லாவிட்டாலும், பெண் என்றால் கொஞ்சம் பயப்பட வேண்டும் என்றே தோன்றியது, "பிரானேசா, நீயே கதி," என்று சொல்லாவிட்டாலும், அவன் இல்லாவிட்டால் அவள் வாழ்வில் சூன்யம் கவியும் என்ற நம்பிக்கை அவனுக்குத் தன் மேலேயே ஓர் உறுதி பிறக்க வைக்கும் என்று தோன்றியது. அதே சமயம் அவன் சுதந்திரம் அவனுக்குப் பிடித்த ஒன்று. முதல் முறை ஏதோ ஒரு உணர்ச்சிகள் மீறிய கட்டத்தில் அவன் அவளைப் பிரிந்தபோது, "நீ போனால் என் மனத்தில் ஒரு பெரிய மரம் வேரோடு சாயும்," என்று அவள் எழுதியபோது கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது. அதே சமயம் அவள் அவனை விலங்கிடுவது போல தோன்றியது. அவன் சுதந்திரத்தின் தத்துவத்தை அவளுக்கு போதித்தான்.

"ருக்மா, இன்னிக்கு நாம அந்த பாரதியாரின் கவிதைக்கு மெட்டு போட்டு, நாட்டியத்துக்கு அமைப்பு தரலாமா?

"சரி, குமார்."

குமார் மிருதங்கம் வாசிப்பவன். தாளம் அவன் விரல் நுனிகளில் கட்டுண்டு கிடக்கும் ஒன்று.

"மழை" கவிதை.

திக்குகள் எட்டும் சிதறி- தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

திஸ்ர நடையில், நாட்டை ராகத்தில் அமைத்தான் குமார்.

"மழை வருவதுபோல் தாளம் இருக்கணும் ருக்மா. பாவத்தில் ஒண்ணும் இல்லை. ஆடிண்டே வரப்போ மழை 'சோ'ன்னு கொட்டற மாதிரி இருக்கணம். உன் மூஞ்சியை மறந்துடனும் பார்க்கறவா இந்த நாட்டியத்துலே நீதான் மழை, உனக்கு முகம், கண், வாய் கெடையாது. சத்தமும், அதுலே இருக்கற புல்லரிப்பும்தான்."

இரண்டு மணி நாழிகை மழையாய்ப் பெய்தாள். முடிந்தபோது பிறந்த திருப்தியில் நெஞ்சை ஒர் அழுகை கவ்விக்கொண்டது. மொட்டை மாடியில் அடித்த ஜில்லென்ற காற்றில் வியர்வையோடு நின்றபோது, அவளே காற்றாய் மாறிப் பறப்பது போலத் தோன்றியது.

"ருக்மா"

"என்ன, குமார்”

"நீ நன்னா ஆடினே.”

"தாங்க்யூ நீ தாளம் போட்டதுதான் எனக்கு ஆதாரம், குமார்."

"கேன் ஐ கிஸ் யூ குட் நைட் டு ஷோ மை அப்ரீஸியேஷன் ?”

令 64 令 அம்பை

________________

அந்த அருமையான மாலைப் பொழுதுக்கு அது ஒரு பொருத்தமான முடிவாகவே பட்டது.

அவள் தனிமையின் காரணமே உடல் சுதந்திரத்துக்காக என்று நினைத்து, அவளைப் படுக்கை ஒன்றிலேயே கற்பனை செய்பவன் அல்ல குமார், அவன் ஒரு கலைஞன்.

. . .

LD). பின்பக்கமாய் வந்து பின் அவளைத் தன்புறம் திருப்பி, வியர்வை வழியும் கன்னங்களை இருபுறமும் பற்றி, இன்னமும் நாட்டை ராகத்தை முனகும் இதழ்களை முத்தமிட்டான் குமார்.

"என்ன ருக்மா இவ்வளவு நேரம்?" "ஆடிண்டிருந்தேன், ரங்கா, போது போறதே தெரியலே." "என்னை விடவா நாட்டியம் முக்கியம்?" "அப்படீன்னா ?” “எது மேலேயும் உணர்ச்சி பூர்வமா சார்ந்து இருக்கக் கூடாது ருக்மா, கலை உன்னை அடிமையாக்கக் கூடாது. நீசுதந்திரமா, எல்லா விலங்குகளையும் உதறிவிட்டு."

"உறவுகள் விலங்கு இல்லையா, ரங்கா? நான் ஆடறது உனக்குப் பொறாமையா இல்லே? பொறாமை ஒரு விலங்கு இல்லையா?”

அவனுக்கு அந்தக் கேள்வி பிடிக்கவில்லை.

நீ என்ன ஆடுவாய் ருக்மா? உனக்கு எந்தப் போராட்டமும் இல்லாத அமைதி பற்றி தெரியுமோ? உலகத்தையே பகிஷ்காரம் செய்யத் தெரியுமோ? உனக்கு நான் இல்லாவிட்டால் குமார். அவனும் இல்லா விட்டால் வேறு ஒருத்தன். நீ உடம்பால் ஜீவிப்பவள். நீ என்னை அணைச்சுக்கறபோது வேறு யார்யார் அணைப்பை நினைத்துப் பார்க்கிறாய்?

"சொல்லு, ரங்கா."

"எல்லாமே விலங்குதான். நான் உன்னை விரும்பறதா சொன் னேனோ இல்லையோ, அதுவே விலங்குதான். அதனாலேதானே என்னை அலைக்கழிக்கறே?"

"கோவமா, ரங்கா ?”

அவள் அவன் தோள்களைப் பற்றினாள்.

"இன்னிக்கு ஒண்ணு நடந்தது."

"சொல்லு."

"குமார் என்னிக்குமே உணர்ச்சிவசப்பட மாட்டான். இன்னிக்கு ஆடின ஆட்டம் அப்படி அவனே கனிஞ்சுபோயிட்டான். என்னைக் கிஸ் பண்ணினான்."

ஸஞ்சாரி 令 65 令

________________

இந்த உதடுகளையா? அவனுக்கு உரியவற்றையா? இதை ஏன் என்னிடம் சொல்லுகிறாய்? என்னைப் பொறாமைப்பட வைக்கவா? ஏங்க வைக்கவா? உன் பாபுலாரிடியை வெளியிடவா? நான் ஏமாந்தவனா? நீ ஊரை எல்லாம் மேய்ந்துவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்ளும் சோடை போனவனா? நீ என்னதான் நினைக்கிறாய் என்னைப் பற்றி? உன் சுதந்திரம் எல்லாம் நினைத்தவனை முத்தமிட்டுப் படுக் கையில் சாயவா? கேவலம் உடம்பிலா உன் சுதந்திரம் ?

"என்ன ரங்கா, ஏதாவது சொல்லேன்"

"சுதந்திரமா இருன்னா கண்டவனைப் போய் முத்தம் குடுக்கணம்னு அவசியம் இல்லே."

"இதுக்கு ஏன் இவ்வளவு இம்பார்டன்ஸ் தரே, ரங்கா? இதைப் பெரிசா மதிச்சு ராத்தூக்கத்தைக் கெடுத்துக்கறதும், ஒண்ணுமே இல் லேன்னு சந்நியாசியா போய் தப்பிச்சுக்கறதும், ரெண்டுமே ஸெக்ஸ்ங்கறதுக்கு அதுக்கு மீறின பவிஷைத் தரதுனாலதானே?"

நீ பேசுகிறாயா? நீ அறிவுஜீவி என்பதைக் காட்டவா? ருக்மா, மனிதர்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நான் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லப்போக நீ அந்த விளக்கத்தை எனக்கே சொல்கிறாயா? யூ பிட்ச்,

"பேச மாட்டியா, ரங்கா ?"

"சுதந்திரத்தைப் பத்தி உன்னாலே புரிஞ்சுக்க முடியாது, ருக்மா, நீ அவ்வளவு நீசமானவ."

"சுதந்திரம்னா என்ன ரங்கா, உன் டிக்ஷனரியிலே? அது உனக்கே இருக்கற ஏகபோக உரிமையா?”

"அதைப் பத்தித் தெரிஞ்சுக்க நீ உன்னை சுத்தீகரிச்சுக்கணம், ருக்மா, உன்னோட மிருக உடம்போடு அலையக்கூடாது."

அவள் உரக்கக் கத்தினாள். "நீ ஒரு நாத்தமெடுத்த, சாக்கடையிலே ஊறிப்போன பிராமணன். உன் அப்பா உங்க அம்மாவைச் சந்தேகிச்சு வீட்டிலே பூட்டிண்டு போய் அவ ஒருநாள் தலையை விரிச்சுண்டு பைத்தியமா நின்னா இல்லையா ? நீ அதே அப்பாவோட பிள்ளைதான். பாஸ்டர்ட்."

பேசி முடித்ததும் மூச்சு வாங்கியது. முதல் சண்டை, அதனால் முதல் கூடலும் சற்றுத் தீவிரமாகவே இருந்தது.

"ருக்மா, சுதந்திரம் எதுவா வேணும்னா இருந்துட்டுப்போகட்டும். அதுக்காக நாம்ப சண்டை போடறதுலே அர்த்தம் இல்லை."

"ஆமாம், ரங்கா"

-> 66 -8- அம்பை

________________

"நம்ப ரெண்டுபேரும் ஒரு அபூர்வ ஜோடி, ருக்மா. நாம்ப பிரியவே

கூடாது."

“வெளியிலே போலாமா ?”

"ம். நீ புடவை கட்டிண்டு வாயேன். இந்த லுங்கியிலே நீ வந்தா எல்லாரும் பார்ப்பா உன்னையே."

ஒரு நிமிடம் பிடரி சிலிர்த்தது. "சரி, புடவையே கட்டிக்கறேன் - உனக்காக."

இந்தப் புடவை கட்டுவதில் கூடவா நீ குறுக்கிடுவாய், ரங்கா? தலைப்பு சற்றே தழைந்துவிட்டால், ரங்கா, நீ காதருகில் "தலைப்பு" எனும்போது, நீயே மாமியார், மாமனார், நாத்தனார் போன்ற பயங் கரமாய் வர்ணிக்கப்படும் சகல ரூபங்களோடும் காட்சியளிக்கிறாய்.

"ருக்மா, நான் பெங்களூருக்குப் பத்து நாள் போகணம்."

“போயேன்”

"நான் ஒண்ணு சொன்னா கோவிச்சிப்பியா?"

"ம்ஹ"ம்."

"நான் போனா, நீ இங்கே யாரோடயாவது. படுத்துப்பியா?"

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"என்னைப் பத்தி என்னதான் நினைக்கறே?"

"நீ பதில் சொல்லு."

கோபம் பொங்கியது.

"ஆமாம், பத்து நாளும் பத்து பேருக்கு ரிஸர்வ் பண்ணி வெச்சி ருக்கேன்."

"நீ என்னைக் கஷ்டப்படுத்தறே, ருக்மா."

"யூ ஆஸ்க்ட் ஃபார் இட்."

"எனக்கு நீ ப்ராமிஸ் பண்ணு, அப்படிப் பண்ண மாட்டேன்னு."

"அந்த ப்ராமிஸ் இல்லாட்டா நான் ஊரை மேய்வேன்னுதானே நினைக்கறே? அந்த ப்ராமிஸ் கேவலமானது."

"ருக்மா, நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். உன் நல்லதுக்குத்தான் நான் சொல்றேன். மத்தவா உன்னை உபயோகிக்கப் பார்ப்பா.

அப்பறமா நீ மனசு கஷ்டப்படுவே, உனக்குத்துக்கமே வராம நான் உன்னைப் பாதுகாக்கணம்னு ஆசைப்படறேன்."

"எனக்கு என்னைப் பாதுகாத்துக்கத் தெரியும்."

"அந்த லட்சணம்தான் தெரியறதே!"

ஸஞ்சாரி -> 67 Kx.

________________

அறையின் முனைக்கு விடுவிடுவென்று நடந்து போனவள், கதவை அடையும் முன்பே, வெடித்துப் பொங்கிச் சரிந்தாள்.

தரையில் மார்பு அமுங்கிப் போக அழுகை வெடித்தது.

"ஏய் ருக்மா, ஏன் அழறே?"

அவளைத் தரையிலிருந்து தூக்கி எடுத்து அணைத்தான்.

பதிலே கூறாமல் அழுதாள் ருக்மிணி.

"நான் சொன்னது தப்பா ?”

தலையை ஆட்டினாள்.

"அப்படீன்னா ஏன் அழறே ?”

“தெரியலே."

"தெரியாம ஒரு அழுகையா?"

நான் எதுக்காக அழறேன்? ஒருநாள் நடனம் ஆடிவிட்டு வந்ததும் சதங்கையைத்தூக்கி எறிந்துவிட்டு,நிலைப்படியை அடைத்துக் கொண்டு நின்ற அப்பா உதிர்த்த சொற்களுக்கா இன்று அழுகிறேன்? மயிர் அடர்ந்த மார்பைத் தட்டி, "நீ என் பெண்ணா அல்லது கூத்தியா?" என்று அப்பா சொன்னதா இன்று வலிக்கிறது? கூடவே படித்த பையன், திருமணமானதும் மனைவியை என்னுடன் அறிமுகப்படுத்தாமல் போன புறக்கணிப்புக்காகவா அழுகிறேன் ? ஒவ்வொரு குளிர்காலத்திலும் கை வலிக்கவலிக்க ஸ்வெட்டர் பின்னித் தந்து, பின்னர் திருமணத்துக்கு எல்லா ஏற்பாடும் செய்த பின்னர், "கூடப் படுக்கும் பெண்ணையெல்லாம் மணக்க வேண்டும் என்று கட்டாயமா?" என்று கேட்ட ராஜனிடம் கொண்ட குழந்தைத்தனமான காதல் முறிவுக்கா ? ரங்கா என்னை அவமதிப்பதாலா ? எதற்கென்று அழுகிறேன் ?

"சொல்லும்மா, ருக்மா. அழக்கூடாது."

உடனே எழுந்து கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

"நான் அழலையே!”

"நான் பெங்களூர் போறேன். பத்ரமா இரு."

"சரி ரங்கா."

ருக்மா, நீ அழுதுவிட்டாய். இதெல்லாம் ஒரு பெண்ணின் ஸாகஸங்கள். நீ கெட்டிக்காரி ப்ராமிஸ் தரவில்லை. பூரண சுதந்திரத்துடன் என்ன செய்வாய்? குமாருடன் போவாயா? இல்லை, அந்த தேவ னோடா ? நான் உன்னை நம்பவில்லை.

"ஆக்ரா போலாமா, ரங்கா ?”

"பெங்களூர்லேந்து இப்போதானே வந்தேன். உடனேயா?"

"போலாமே, நாளைக்கு ராத்திரி பெளர்ணமி."

“与ff"

令 68 令 அம்பை

________________

"இங்கேயெல்லாம் வந்தா உனக்குப் பழைய ஞாபகம் எல்லாம் வருமா, ருக்மா ?”

"இல்லியே."

"வந்தாக்கூட நான் புரிஞ்சுப்பேன். என்ன இருந்தாலும் மறக்க முடியாது, இல்லியா? ராஜனோட நீ வந்தப்போ இதே தாஜ்மகாலைப் பார்த்திருப்பே. அவன் அழகா பேசியிருப்பான். அணைச்சுக்கூட இருக்கலாம். பூச்செடிக்குப் பின்னாலே போனா முத்தம் கூட.

"ஸ்டாப் இட், ரங்கா"

“கோச்சுக்காதே ருக்மா. நான் புரிஞ்சுக்கறேன். இப்படிச் "சள்னு' விழாதே. என்ன இருந்தாலும் பழைய ஞாபகங்கள் வரும் இல்லையா?”

பெளர்ணமிச் சந்திரன் வீணாகப் போயிற்று.

"அன்புள்ள ரங்கா.

நான் இரண்டு நாட்கள் வேறு இடத்தில் இருப்பேன்; அப்புறம் சந்திக்கலாம்.

உன்

ருக்மா"

சீட்டு, கதவின் தாழ்ப்பாளில் ஏறிக்கொண்டது.

யமுனை மந்தகதியில் ஒடும் அந்த இடத்தின் அமைதி அவளுக்குத் தேவை.

ஒரு சிறு படகில் இருவர் ஏறிப்போனார்கள் - காதலர்கள். அக்கரைக்குப் போய் அமர்வார்கள்; பேசுவார்கள்; திட்டம் போடு வார்கள்; தங்கள் வாழ்க்கைகளை இவர்கள் வரையறுத்து வைத்து விடுவார்கள்; ஒரு நல்ல ஏற்பாட்டைச் செய்துகொள்வார்கள்.

அவள் செய்யக் கூடியவை:

சமையல்

அன்பு செலுத்தல்

அம்மாவாதல்

அவனையே காதலித்தல்

அவனையே அடுத்த பிறப்பிலும் அடைய வேண்டிக்கொள்ளல்

அப்படி இல்லையென்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொள் ளல் - அல்லது

இன்னொருவன்; கிடைத்தால்,

அவன் செய்வான் என்று எதிர்பார்ப்பவை:

சம்பாதித்தல்

ஸஞ்சாரி -- 69 --

________________

குலத்தை நசிக்காமல் வளர்த்தல்

அன்பு செலுத்துதல் -

எப்போதெல்லால் அவள் உரியவள் என்று

எண்ணுகிறானோ

அப்போது

அவள் பிடாரியாகப் போனால் இவன்

சகித்துக்கொள்ளல் - அல்லது

மற்றொருத்தி.

எழுதாத இந்தச் சட்டங்களோடு இவர்கள் ஏற்பாடு செய்துகொள்வார்கள். ஒருவேளை இந்த மண்ணோடு வாசனை மீறியவர்களானால், அவன் ராமன்தான்; அவள் சீதைதான். மாறி அமைந்துவிட்டால் இவர்களை ரட்சிக்கவே சில மத விற்பன்னர்கள் உண்டு. ஒரு சிக்கலும் சிக்கலாக நின்றுவிடாத மண் இது. சப்பைக் கட்டு கட்டி, அதை தெய்வீகமாக்க சில யாக சாலைகள் நடத்தும் வியாபாரிகள் உண்டு.

ருக்மணி புன்னகைத்தாள். தனக்குக் கோபம் ரொம்ப வருகிறது என்று நினைத்துக் கொண்டாள்.

யமுனை அங்கே அழுக்காகத்தான் ஒடும். ஆனாலும் அதில் ஒரு நளினம்.

லேசாகத்தூறியது. யமுனைக் கரையோடு நடந்து போனால் அந்தச் சுடுகாடு வரும். போலாமா ?

மெல்ல எழுந்து கரையோரமாக நடந்தாள்.

இங்கே பெண்கள் வரக்கூடாதாம். சற்று தூரத்தே ஒரு பாடை போயிற்று. அங்கேயே நின்றுகொண்டாள்.

மழை நின்று மண் வாசனை அடித்தது, சிறிது நேரத்தில் தூரத்தே தீப்பொறி பறந்தது. ஓர் உடம்பு எரிகிறது.

தீஜ்வாலை நீலமாயும் ஊதாவாயும் மேலெழுந்தது. ஈரத் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

அவளும் அத்தீயும் மட்டுமே அங்கு எதிரும்புதிருமாக வீற்றிருப்பது போல் தோன்றியது. அத்தீயினுள் விழிகளைத் துளைத்துப் பார்த்த போது, அம்மாவின் நீண்ட முடியும், அப்பாவின் கனத்த உடம்பும், ராஜனின் அன்புக் கண்களும், ரங்காவின் மென் உதடுகளும், குமாரின் தாளம் சொட்டும் விரல்களும் விசுவரூபமெடுத்து வந்தன. வந்த வேகத்திலேயே நீலத் தீயில் கரைந்து போயின. எல்லாம் போய் தீயும் அவளும் மட்டுமே எஞ்சியதுபோல் தோன்றியது. பாடையில் உள்ள முகம் தெரியவில்லை. ரொம்ப உற்று நோக்கியபோது, சுருண்ட

-- 70 -> அம்பை

________________

முடியுடன், கருப்பில் பொட்டிட்ட புடவையோடு அங்கே படுத்திருந் தது, யார்? அவளேவா? ஜிவ்வென்று ஒரு வேகம் நாபியைத் தாக்கியது. எழுந்து வந்தபோது மீண்டும் தூறல் தொடங்கியது. எல்லா ஜ்வாலையும் குளிர்ந்துபோய் விட்டது. மழைச் சொட்டுக்களுடன் அவளும் ஒரு மழைத்துளியாய், யமுனை நதியுடன் ஒடும் மழைநீராய். மழைக்குப் பின் தோன்றிய வானவில்லில் கண்ணைப் பதித்து, அதனுடன் உலகத்தையே ஸஞ்சாரம் செய்யும் வர்ணக்கலவையாய் தான் மாறுவது போல் உணர்ந்தாள்.

அவள் பந்தம் அவளைச் சுற்றி பல ரூபங்களோடு விரிந்த வாழ்க்கை யுடன்தான். சிவப்புத் தோல் உரியக் கிடக்கும் பச்சைக் குழந்தை, சுழித்து ஒடும் யமுனை, எங்கோ கதறும் ஒரு சோகம், இதழ் விரிக்கும் புன்னகை, வானத்தில் ஒலமிடும் இடி என்று வியாபிக்கும் வாழ்க்கை யுடன்தான் அவள் பிணைப்பு; எந்தத் தனி மனிதனிடமும் இல்லை. இதுதானோ சுதந்திரம்?

இருக்கலாம். சுதந்திரம் என்பது என்ன, அதன் விளக்கம் என்ன என்பதல்ல அவள் கண்டுகொண்டது. அவள் நரம்புகளில் ஊடுருவிப் பாயும் ஒர் உணர்ச்சியை, வானில் கரும்புள்ளியாய்ப் பறக்கும் பறவையின் சிறகுகளை அவள் மாட்டிக் கொண்டு வேலிகளற்ற பெருவெளியில் ஸஞ்சாரம் செய்ய விரும்பும் வேகத்தை, அன்று அவள் இனம் கண்டுகொண்டாள்.

நீ புரிந்துகொள்வாயோ, ரங்கா? உனக்குச் சுதந்திரம் என்பது ஒரு விளக்கம். நீ அடையவேண்டிய ஒர் எல்லை. அந்த எல்லையே உன் விலங்கு.

மீண்டும் யமுனை நதி ஒரம் உள்ள படிக்கட்டில் அமர்ந்தபோது, மழை வலுக்கத் துவங்கியது. ஒவ்வொரு மழைத் துளியும் அமிர்த தாரையாய் வர்ஷித்து அவளை நனைத்தது.

ரங்கா, உனக்கு அறிவுஜீவியான, ஆனால் ஓர் எல்லைக்குட்பட்ட, சுதந்திரமான, ஆனால் உனக்குக் கட்டுப்பட்ட மனைவி வாய்ப்பாள். நீ சந்தோஷமாகவே இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு நல்ல பிராமணப் பையன் மட்டுமே.

யமுனையின் பழுப்பு நீரோடு வெளேரென்று மழை நீர் சேர்ந்து கொண்டது. புடவை ரவிக்கையெல்லாம் உடம்போடு ஒட்டிக் கொள்ள, முகம், வாய், கண்களற்ற ஒரு பெரும் மழையில் ஐக்கியமாகி மேகத்தையெல்லாம் பிளந்துகொண்டு தர்ன் பொழிவதாக ருக்மிணி நினைத்தாள்.

'கணையாழி நவம்பர் 1974

ஸஞ்சாரி -- 7 --

Monday, September 19, 2016

I have tried to write Paradise - -Ezra Pound- (The Cantos ), எஸ்ரா பவுண்ட் எதிர்ப்புக் கவிதை தமிழில்: பிரமிள்

விமலாதித்த மாமல்லன்

16 hrs ·
எஸ்ரா பவுண்ட் எதிர்ப்புக் கவிதை

கண்டவை
எல்லாம் தெரிந்த பெருநிலையில்
அசல் அசெளகரியத்தோடு வாழும்
இன்றைய தலைமுறைக்காரர்களே!
அசுத்தமான குடும்பங்களுடன்
வெய்யிலில் பிக்னிக் நடத்தும்
மீனவர்களைக் கண்டவன் நான்.
பற்கள் நிரம்பிய அவர்களது
சிரிப்பைக் கண்டு
அசட்டு நகைப்பொலியையும்
கேட்டவன் நான்
உங்களைவிட
நான் மகிழ்ச்சி நிரம்பியவன்.
என்னைவிட
அவர்கள் மகிழ்ச்சி நிரம்பியவர்கள்.
குளத்தில் நீந்துகின்றன மீன்கள் -
அவற்றுக்குச் சொந்தமான
உடலில் துணிகூடக் கிடையாது.

SALUTATION
Poems by EZRA POUND (1885-1972) from PERSONAE

தமிழில்: பிரமிள்



The tree has entered my hands,

The sap has ascended my arms,
The tree has grown in my breast -
Downward,
The branches grow out of me, like arms.

Tree you are,
Moss you are,
You are violets with wind above them.
A child - so high - you are,
And all this is folly to the world. 
Like a skein of loose silk blown against a wall
She walks by the railing of a path in Kensington Gardens,
And she is dying piece-meal
of a sort of emotional anemia.

And round about there is a rabble
Of the filthy, sturdy, unkillable infants of the very poor.
They shall inherit the earth.

In her is the end of breeding.
Her boredom is exquisite and excessive.

She would like some one to speak to her,
And is almost afraid that I
will commit that indiscretion.



Shanmugam Subramaniam updated his cover photo.

19 hrs ·

I have tried to write Paradise

Do not move
Let the wind speak
that is paradise.

Let the Gods forgive what I
have made
Let those I love try to forgive
what I have made.

-Ezra Pound-

(The Cantos )

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .484.- 509 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .484.- 509  வங்காள மூலம் :  அதீன் பந்த்யோபாத்யாய

அவனுக்கு எரிச்சல் அதிகரித்துக்கொண்டு வந்தது. கன்றுக் குட்டி எதையோ பார்த்துப் பயப்பட்டது. அவன் நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். ஓ, சனியன் பிடித்த அந்தக் கோவில் காளை ! ஹாஜிசாயபுவின் கோவில் மாடு இரண்டு முன்கால்களையும் ஊன்றிக் கொண்டு, பின்னங்கால்களை உயரே தூக்கி, வாலை விறைப்பாக வைத்துக்கொண்டு கொம்புகளால் மண்ணைக் குத்தி எடுத்தது. கன்றுக்குட்டியைப் பயமுறுத்தியது. அது நெல்லைத் தின்றாலும் யாரும் எதுவும் சொல்ல முடியாது. மண்ணைக் குத்தித் தன் பலததைச் சோதித்துப் பார்த்துக் கொண்டது அது. கூர்மையான கொம்புகத்தி முனை போல் பளபளப்பாக இருந்தது. அது இஷ்டம் போல் சுற்றிக்கொண் டிருக்கும். கோவில் மாடு என்று யாரும் அதை ஒன்றும் செய்வதில்லை, அது கொம்புகளை த தீட்டிக்கொல்லன டு ராஜாபோலக் கம்பீரமாகக் கழுததை நீட்டிக்கொண்டு மைதானத் தில் நின்றது. இப்படிப்பட்ட வீரம் நிறைந்த பிராணியைக் கண்டால் பெலுவின் பிராணன் வற்றிவிடுகிறது. அந்தக் கன்றுக் குட்டியைக் கண்டாலே அதை விரட்ட ஓடி வரும் அது. ஒருநாள் அது கன்றுக்குட்டியின் வயிற்றைக் கிழித்துவிடப் போகிறது. ஒரு சாதாரண மிருகத்துக்கா பேலு பயப்படுவான்! அவன் தன் தைரியத்தைக் காட்டிக் கொள்வதற்காக, 'நாசமாப் போன மாடே !' என்று அதைத் திட்டினான்.

திட்டியதோடு திருமதி அடையவில்லை, அவன் பலி கொடுக்க உபயோகிக்கும் கத்தியால், “பிஸ்மில்லா ர கிமானே ரகீம்'' என்று சொல்லி அதன் கழுத்தை வெட்டத் துடித்தான். அவன் உபயோகித்த வசவுகள் யாரைக் குறித்துச் சொல்லப் பட்டவை என்று சொல்வது கஷடம். எந்த மாடு ரொம்ப மோசம் ? அவன் முன்னால் நிற்கும் மாடா, அல்லது ஆகாலுவா ?

அவன் கத்தினான் : "நாசமாப் போன காக்கா ! நாசமாப் போன ஆகாலு.''

கட்டம் போட்ட லுங்கியும், தலையில் துருக்கிக் குல்லாயும் அணிந்துகொண்டு தாடியில் அத்தர் தடவிக்கொண்டு பேலு வீட்டு வாசல் வழியாகப் போனான் ஆகாலு. சிவப்பு நிறத் துருக்கிக் குல்லாய், அதில் ஒரு கறுப்புக் குஞ்சம், காக்கை மாதிரி, "ஏய் ராஸ்கல்! நீ என் பெணடாட்டி மேலே கையை வைக்கிறியா ? நாசமாப் போ க நீ! என் வீட்டு வாசல்லே எப்படிப் போறே, பார்க்கிறேன்" என்று சொல்லி, அவன் தன் வீட்டுவாசலில் கல்யாண முருங்கைக் கிளைகளை நட்டு வேலி போட்டுவிட்டான். "இது பொது வழியில்லை, மியான் ! இது ரஸ்தா இல்லே!" ஆனால் அவன காலையில் எழுந்து பார்த்தபோது வேலியை யாரோ பிய்த்துப்

484போட்டிருந்தார்கள் பீபியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூடத் துணிவு ஏற்படவில்லை போலுவுக்கு. அவளைக் கேட்டால் எரிந்து விழுவாள் ; "எனக்கென்ன தெரியும், யார் வேலியைப் பிய்ச்சு எறிஞ்சாங்க?" என்று.

"நாசமாப் போறவ! உனக்குத் தெரியாதாக்கும் !" என்றெல்லாம் அவன் கத்தலாம். ஆனால் இப்போதெல்லாம் அவனுக்கு அவளிடம் பயம். ஜப்பர் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட புடைலை வாங்கிக் கொடுத்தான் அவளுக்கு. வாசனைத் தைலம் வாங்கிக் கொடுத்தான். பதிலுக்கு அவள் அவனுக்கு என்ன கொடுத்தாளோ, யாருக்குத் தெரியும் ? பேலு தன் கை நொண்டியாகி விட்டதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டான். இப்போது அவனுடைய பீபியிடம் ஒரே ஒரு துண்டும் ஒரு கிழிந்த புடைவையுந்தான் இருக்கின்றன. இரவில் வயலில் கதிர் திருடப் போகும்போது அவள் கிழிந்த புடைவையைக் கட்டிக்கொள்வாள், வீட்டுக்குள் இருக்கும் போது துண்டைத்தான் உடுத்தியிருப்பாள். எப்போதாவது துண்டு ஈரமாகி விட்டால் அதை வேலியின்மேல் காயப்போடுவாள். அப் போது அவள் நிர்வாணந்தான் அநேகமா க என்ன, முற்றிலுந்தான்! சீதாமர வேலி மறைவில் வீடு. எதிரில் புதர், காடு. வேலியின் மறுபுறம் செல்பவர்களுக்குத் தெரியாது வேலியின் மறுபக்கத்தில் பேலுவின் பீபி நிர்வாணமாக உட்கார்ந்துகொண்டு சோறு சமைப்பாள், அல்லது கோதுமை வறுப்பாள், அல்லது மக்காச் சோளம் ஊறவைப்பாள். எந்தக் காலத்தில் எந்தத் தானியம் விளைகிறதோ அதைத் திருடிக்கொண்டு வந்து அதைக் கொண்டு எப்படி ஒரு வருஷத்தைக் கடத்துவது என்று கவலைப்பட்டுக் கொண்டே வேலை செய்வாள் போலுவின் பீபி.

பீபி இப்படி நிர்வாணமாக உள்ளே வேலை செய்யும்போது பேலு வாசலில் உட்கார்ந்து கொண்டு ஹக்கா பிடிப்பான். இடை யிடையே வேலியிடுக்கு வழியே பீபியின் வாழைக் குருத்துப் போன்ற இளமையைப் பார்த்து ரசிப்பான். சரியான பராமரிப்பு இல்லாமல் அந்த இளமை வீணாகிக் கொண் டிருந்தது. அவளுக்குத் தலையில் தடவிக்கொள்ள எண்ணெய் இல்லை. கண்களில் மை தீட்டிக்கொள்ள வழியில்லை. விசேஷ நாட்களில் பீபி கடன் வாங்கித் தலைக்கு எண்ணெய் தடவிக்கொண்டு அலங்கரித்துக் கொண்டால் அவளை அழைத்துக் கொண்டு படகில் உல்லாசப் பிரயாணம் செய்யத் தோன்றும் பேலுவுக்கு.

பேலு வீட்டில் இருந்தால் வாசலில் காவல் காத்துக்கொண் டிருப்பான். யாராவது அங்கே வந்தால் விரல்களால் சுண்டி ஒலி யெழுப்புவான். இரண்டு தடவை இந்த ஒலி வந்தால் ஆன்னு

485ஜாக்கிரதையாகி விடுவாள். வேலையை அப்படியே போட்டு விட்டு அவசர அவசரமாகப் புடைவையை எடுத்து உடுத்திக் கொள்வாள். திருடி வந்த கதிர்களைச் சட்டிப் பானைக்குள் போட்டு மறைப்பாள். அவள் ராத்திரியில் கதிர் திருடி வந்தாள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

வேலிக்கு அப்பாலிருந்து திருட்டுத்தனமாகப் பீபியைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு. சில சமயம் கண் கண்ணாகக் கிழிந்த துண்டை உடுத்தியிருப்பாள் அவள். மூங்கில் தட்டி மாதிரி ஓட்டை ஓட்டையாக இருக்கும் அது. அவன் முன்பு ஹாஜிசாயபுவின் வீட்டுத் துறையை ஒட்டிய புதரில் ஒளிந்துகொண் டிருப்பானே ஹாஜிசாயபுவின் இரண்டாவது பீபியைப் பார்ப்பதற்காக, அது போல அவன், வீட்டுக்குள் தன் பீபியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான், தன் சொந்த பீபியின் நிர்வாணமான உடலைப் பார்க்க அவனுக்கு ரொம்ப ஆசை.

இந்த வறுமையிலும் பற்றாக்குறையிலும் எப்படித்தான் உடம்பை இவ்வளவு வாளிப்பாக வைத்துக்கொண் டிருக்கிறாளோ அவள்? ஆகாலுவின் ஆஜானுபாகுவான உடல். உரமேறிய நெஞ்சு, சிவப்பு நிறக் குல்லாய் இவையெல்லாம் கானல் நீர்போல் பேலுவின் ஆசையைக் கிளப்பிவிடும்.

ஆகாலு தாடியில் அத்தர் தடவிக்கொள்வான். அவன் பெரிய தந்திரசாலி. அவன் பேலுவின் வீட்டு வழியே போகும்போது அத்தரின் மணம் வீட்டுக்குள் பரவும். அந்த மணத்தை முகர்ந்ததும் ஆன்னுவின் நெஞ்சு குதிக்கத் தொடங்கிவிடும். அவளுடைய ஆள் வந்துவிட்டான்! மூங்கில் காட்டுப் பக்கம் போயிருப்பான்! அவள் உடனே ஜப்பர் கொடுத்திருந்த பச்சைப் புடைவையைக் கட்டிக் கொண்டு வெளியே கிளம்பிவிடுவாள்,

"எங்கே போறே?” ''மதி உர் வீட்டுக்கு, அவ அவலுக்கு நெல் ஊறப் போட்டிருக் கா, வறுத்துக் கொடுத்தா ரெண்டு தொன்னை அவல் கொடுப்பா.''

"வேறே ஒண்ணும் கிடைக்காதா ?'' "வேறே என்ன கிடைக்கும் ?" "ஏன், முத்தம் கிடைக்காதா ?" புருஷன் தன்னைச் சந்தேகிப்பது ஆன்னுவுக்கு நன்றாகப் புரியும். அத்தர் மணத்தை அவனும் மோப்பம் பிடித்துவிட்டான்! அல்லா இந்த மனிதனை நொண்டியாக்கி வலுவைப் பிடுங்கிக் கொண் டாரே, மோப்ப சக்தியை ஏன் பிடுங்கிக் கொள்ளவில்லை ? சில சமயங்களில் காதல் வேண்டியிருந்தது ஆன்னுவுக்கு.

486ஆகாலு, ஆன்னுவின் காதலைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டு விட்டான் என்று பேலுவுக்குப் புரியும். அப்போது அவன் பலி ஆடு வெட்டும் கத்தியை எடுக்கத் துடிப்பான். ஆனால் நண்பகல் வெயிலில் ஆகாலு சிவப்புநிறத் துருக்கிக் குல்லாயும், கறுப்பு நிற மஸ்லின் ஜிப்பாவும், கட்டம் போட்ட லுங்கியும் அணிந்து கொண்டு போவதைப் பார்க்கும்போது அவனும் ஒரு கோயில் காளை என்றே தோன்றும்.

மூன்று கோவில் மாடுகள் மூன்று பக்கங்களிலிருந்து பேலுவை விரட்டிப் பைத்தியமாக அடித்தன. ஒன்று ஹாஜிசாயபுவின் கோவில் காளை, இரண்டு ஆகாலு, மூன்று, பைத்தியக்கார டாகுர்.

பேலு கன்றுக்குட்டியை இழுத்துக்கொண்டு சென்றான். அவன் சில சமயம் பலியிடும் கத்தியைக் குடிசையின் எரவாணத்தில் எங்காவது ஒளித்து வைத்திருப்பான். ஆன்னு அவனு டைய கழுத்தை வெட்டிவிட்டு ஓடிப் போனாலும் போய்விடுவாள். இரவும் பகலும் அவனுக்கு அவநம்பிக்கை . அவன் அடிக்கடி எரவாணத்தில் பார்த்துக் கொள்வான், கத்தி இருக்கிறதா என்று. அதையும் ஆகாலு, ஆன்னு முலம் எடுத்துக்கொண்டு போய் விட்டானோ என்று சந்தேகம் தோன்றும்.

அவனால் கன்றை அசைக்க முடியவில்லை. கோவில் மாடு பூதா காரமாக நின்றுகொண் டிருந்தது. இந்தப் பக்கம், அந்தப் பக்கம் திரும்பாமல் கன்றையே முறைத்துப் பார்த்தது. நடுநடுவில் அவன் கண்ணுக்கு முன்னால் அது மியான் ஆகாலுத்தீனாக மாறிவிட்டது! கன்றுக்குட்டியை விரட்டுவதற்காக வாலைத் தூக்கியது அது.

அது கொம்பை உயர்த்திக்கொண்டு இந்தப் பக்கம் ஓடிவரலாம்! அது ஓடிவந்தால் கன்றும் ஓடும். பேலு கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தால் அவனையும் இழுத்துக்கொண்டு வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும், நாசமாப் போன மாடு! அதற்கு முன்னாலே இருக்கிற வயல்கள், அவற்றில் விளைந்திருக்கும் பயிர், பசும்புல் எல்லாவற்றையும் தின்றுவிடலாம் என்று அதற்கு நினைப்பு! 'இந்த உலகத்திலே என் தீனியிலே பங்கு கேட்க யாருக்குத் தைரியம் இருக்கு? யார் என் முன்னாலே வரமுடியும்?' என்று கேட்பது போல் இருக்கும் அது நிற்கும் நிலை.

பேலு மாட்டை ஆபாசமாகத் திட்டினான். அதன் முன்னால் போகப் பயமாக இருந்தது கன்றுக்குட்டிக்கு. கன்றைச் சொல்லிக் குற்றம் என்ன ? அவனுக்கே பயமாக இருந்தது. அவன் அவசர அவசரமாக ஒரு கிட்கிலா மரக்கிளையை ஒடித்து வைத்துக்கொண் டான். ஒரு கையாலேயே அதன் இலைகளைப் பிய்த்து எறிந்து விட்டு ஒரு ஈட்டிமாதிரி அதைச் செய்துகொண்டான். அதைத்

487தலைக்கு மேல் கையால் சுழற்றினான். அவனுக்கு எவ்வளவு தைரியம், சக்தி இருக்கிறதென்று மாடு பார்க்கட்டுமே!

கம்பைச் சுழற்றி அதைப் பயமுறுத்தப் பார்த்தான் அவன். அவன் சாதாரண ஆள் இல்லை. பேலுவாக்கும்! ஒரு கை போனாலும் அவனுக்கு இன்னும் பழைய வலு இருக்கிறது. மாடு அருகில் வந்தால் அதை உதைத்து நொறுக்கிவிடுவான் அவன். இதுதான் அவன் மாட்டுக்கு உணர்த்த விரும்பியது.

ஒரு நாள் மாடு கன்றுக்குட்டியைத் துரத்தியது. பேலுவால் தன் நொண்டிக் கையுடன் கன்றைத் தடுக்க முடியவில்லை. கன்று அவனை இழுத்துக்கொண்டு வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டது. மாடு. மகாமாரியைப் போல் திடுதிடுவென்று வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. கோவில் மாட்டுக்குத் தான் எத்தனை பிரதாபம்!

அது வீட்டு வாசலுக்கு வந்ததும் எங்கும் ஆரவாரம். கன்று வீட்டுக்குள் நுழைந்துகொண்டது. மாடு கொம்புகளால் பேலுவின் குடிசையையே பிய்த்துப் போட்டிருக்கும். நல்ல வேளை, ஆன்னு வின் கையில் சூடான கஞ்சிச் சட்டி இருந்தது. அவள் மாட்டைக் கண்டு பயந்து கஞ்சியை அதன் மேல் கொட்டிவிட்டாள். அதன் முகம் வெந்துப் போய்விட்டது. அது, 'அம்மா அம்மா' என்று அரற்றத் தொடங்கியது. வாலைத் தூக்கிக்கொண்டு வயற் பக்கம் ஓடிவிட்டது. அதுமுதல் மாடு அதன் எல்லைக்குள் நிற்கும் ; பேலு அவனுடைய எல்லைக்குள் இருப்பான். மாட்டின் முகம் வெந்து போய்விட்டது. ஒரு கண் அழுகிப் போய் நெற்றிக்குள் இடுங்கி விட்டது. பெரியம்மையால் பேலுவின் ஒரு கண் போய்விட்டது. ஆகவே இரு பிராணிகளுக்கும் ஒவ்வொரு கண் தான். சமயம் கிடைத்தால் இரண்டும் சண்டை போடும்,

பேலுவுக்கு இப்போது பயந்தான். இருந்தாலும் கையில் தடி இருந்ததால் பயம் கொஞ்சம் குறைந்திருந்தது. அவன் கன்றைக் கூட்டிக்கொண்டு நடந்தான். மாஜி வீட்டு வயல் வரப்பில் நல்ல புல் வளர்ந்திருந்தது. அவன் கன்றை அங்கு விட்டுவிட்டுக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான். நாற்புறமும் நெல் வயல்கள். 'கன்று புல்மேயும்போது 'சப் சப்' என்று ஒளி எழுந்தது. அது வாலை ஆட்டிக்கொண்டு கவலையில்லாமல் புல்லை மேய்ந்தது. அது புல் மேய்வதைப் பார்த்து ஏனோ பேலுவும் உணர்ச்சி வசப் பட்டுப் போனான். அவனுக்கு கடந்த இரவின் நினைவு வந்தது.

இரவு முழுவதும் அவன் பயத்தால் தூங்கவில்லை. சாயங்காலத்தி லிருந்து ஆன்னு வீட்டில் இல்லை. கிழிந்த புடைவையைக் கட்டிக் கொண்டு எங்கேயோ போய்விட்டாள் அவள். அவன் அவளைப்

488பக்கத்து வீடுகளில் தேடினான். ஹாஜிசாயபு வீட்டுக்குப் போக அவனுக்குப் பயம். அவனைக் கண்டால் ஹாஜிசாயபுவின் இரண் டாவது பீபி, 'அடியே தோழி லலிதே!' என்று பாடத் தொடங்கி விடுவாள், ஹாஜிசாயபு தடியால் அடிக்க வருவார்.

அவன் திரும்பினான் வீட்டுக்கு. ஆன்னுவைக் காணோம். கடைசி யில் அவள் இரவு வெகுநேரத்துக்குப் பிறகுதான் வீடு திரும்பினாள். அவள் தலையில் ஒரு கட்டு உளுந்துக் கதிர். ஹாஜிசாய்புவின் நிலத்திலிருந்து திருடிக்கொண்டுதான் வந்தாளா அல்லது அவள் செய்த குற்றத்தை மறைப்பதற்காக ஆகாலுவே ஒரு மூட்டைக் கதிர் அறுத்துக் கொடுத்தானா என்று போலுவுக்குப் புரியவில்லை.

பீபி சொல்லிக் கொள்ளாமல் வெளியே போனால் திருட்டுத் தனமாகக் காதல் செய்யத்தான் போகிறாள் என்று பேலுவுக்குத் தோன்றும். கள்ளக் காதலன் ஆகாலுவுடன் காட்டில் சரசமாடப் போயிருக்கிறாள் பாவி!

கடந்த இரவில் எங்கும் போவதாகப் பேச்சே இல்லை. இருந் தாலும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாள். அவ்வளவு ஆசை வெறி! தலையில் துருக்கித் தொப்பி போட்டுக்கொண்டு தாடியில் அத்தர் தடவிக்கொண்டு இருட்டில் காட்டுப்பக்கம் போயிருக்கிறான் ஆகாலு. ஆன்னு அத்தரின் மணத்தை மோப்பம் கண்டுகொண்டே இருட்டில் அவனைக் கண்டுபிடித்து விடுவாள் பேலு அன்று கெளர்சந்தா வீட்டுக்கு வேலைக்குப் போவதாகவும் இரவானதும் திரும்பி வருவதாகவும் சொல்லியிருந்தான். இந்த வாய்ப்பை நழுவவிடாமல் பீபி காட்டுக்குப் போய்விட்டாளே, கள்ளக் காதலனைச் சந்திக்க!

வீட்டு வேலை முடிந்துவிட்டால் ஆன்னு கன்றுக்குட்டிக்குப் புல் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வெளியே போய் விடுகிறாள். இருட்டில் வயலிலிருந்து உளுத்தம் பயிரைப் பறித்துக் கொண்டு வருகிறாள். என்னதான் நடக்கிறதோ? கிராமத்தார் எல்லா ருக்கும் தெரிந்து போய்விட்டது, முரட்டுப் பேலுவின் பீபிக்குக் கள்ளக் காதலன் இருக்கிறான் என்று. முரட்டுப் பேலுவின் நிலை இப்படி ! அவனுக்கு உள்ளுற ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அவள் தலையிலிருந்து மூட்டையை இறக்கக்கூட இல்லை அவளுடைய இடுப்பில் காலால் உதை உதை என்று உதைத்தான். அவன் கால் முடமில்லையே! கையின் வலுவும் அவனுடைய காலுக்கு வந்துவிட்டதோ? அந்த உதைகளைத் தாங்க முடியாமல் அவள் குப்புறக் கீழே விழுந்தாள். அடி வாங்கினால் ஆன்னு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பிலாக்கணம் பாடத் தொடங்கி

489விடுவாள், வீட்டில் இழவு விழுந்துவிட்ட மாதிரி. அழுகைக்கு நடுவே ஆபாசமாகத் திட்டுவாள், பேலுவை, ராகம் போட்டு. அப்போது வயல் பக்கம் செல்பவர்கள் பேலுவுக்கு வெறிபிடித்து விட்டது என்று புரிந்துகொள்வார்கள், இது சகஜம் என்று யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

இருந்தாலும் தம்பதிகளுக்கிடையே எவ்வளவு ஆசை ! இப்போது ஆன்னுவின் விவகாரம் எல்லாருக்கும் தெரிந்து போய் விட்டது. சென்ற இரவு இவ்வளவு உதை வாங்கியும் அவள் கொஞ்சமும் அழவில்லை. அவளுக்கு எங்கோ நன்றாகக் காலை ஊன்றிக்கொள்ள இடம் கிடைத்துவிட்டது. அவள் அழுது பிலாக் கணம் பாடித் திட்டினால் பேலு கவலைப்படுவதில்லை. இந்தத் தடவை அவள் அவனைத் திட்டவில்லை. உண்மையில் எங்கேயாவது போய்விடப் போகிறாள் அவள். பேலு தலாக் கொக்காவிட்டால் அவளால் எங்கும் போகமுடியாது. பேலு தலாக் கொடுக்கட்டும் என்று தான் ஆகாலு விரும்புகிறான். தலாக் கொடுத்தால் அவனுக்குப் பணம் கொடுப்பதாகக் கூட ஆசை காட்டினான் ஆகாலு. பேலு இப்போது எடுத்தற்கெல்லாம் கத்துவதும் சண்டை போடுவதும். பணம் இன்னும் நிறைய வாங்கச் செய்யும் தந்திரமோ என்று கூடத் தோன்றும். ஆனால் பேலுவுக்கு உள்ளுறத் தெரியும், அவனால் பீபிக்குத் தலாக் கொடுக்க முடியாதென்று. பீபி இல்லாவிட்டால் செத்துப் போய்விடுவான் அவன்.

ஆன்னுவை விட்டுக் கொடுக்க எவ்வளவு பணம் வாங்குவது என்று யோசி ததுக்கொண்டு பேலு ஒற்றைக் கண்ணால் புன்சிரிப்புச் சிரித்தால் அவனுடைய அம்மைத் தழும்பு முகம் தாடிக்கு நடுவில் அருவருப்பாகக் காட்சி அளிக்கும். பெண் ணுக்குப் பதிலாகப் பணம்.

ஆன்னு இருக்கும் வரையில் வறுமை, பற்றாக்குறை, கடன் பிழைப்புத்தான். அவள் இல்லாவிட்டால் அந்த நாசமாய்ப் போன ஆகாலு பேலுவை வீட்டை விட்டே விரட்டியிருப்பான். ஆகாலு தன் வீட்டு வாசல் வழியே போவதைப் பேலு பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆகாலு தன் வீட்டு வழியே போகும்போது அவனை த் தடியால் ஒரேயடியாக அடித்துவிட தோன்றும் போலுவுக்கு. நீசப் பயலோட கள்ளக் காதல் மாயமாப் பறந்துடும். ஆனால் மறு கணமே பேலுவுக்கு ஞாபகம் வரும், தன் ஒரு கை வழங்கவில்லை என்று. பேலு ஆகாலுவை அடிக்கப் போனால் ஆகாலு அவனைப் பிடித்து அவனுடைய நொண்டிக் கையை முறுக்குவான். பேலு. வெறிநாய் போல ஊளையிடுவான். ஆகையால், ஆகாலு அந்தப் பக்கமாகப் போனால் பேலு அவனுடன் சிரித்த முகத்துடன் பேசு

490வான். ''எங்கே போறீங்க ? இந்தத் தடவை விளைச்சல் எப்படி? கார்த்திக் சால் நெல் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, அறுவடையான தும் ஆன்னுவை அனுப்பறேன். ரெண்டு நாழி நெல் கொடுத் தனுப்பறீங்களா ?"

ஆகாலுவுக்குக் கோபங் கோபமாக வரும். எப்போ அறுவடை யாகும்னு காத்திட்டிருக்கானா பேலு? என்ன பதில் சொல்வதென்று தெரியாது அவனுக்கு. 'சரி, ஆன்னு எங்கே?' ஆகாலு திருட்டுத் தனமாகச் சீதாமர வேலிப் பக்கம் பார்வையை ஓட்டுவான். அவனுடைய தாடியின் அத்தர் மணம் அவளுக்கு எட்டவில்லையா ? அவன் ஆன்னுவைப் பார்ப்பதற்காக அங்கேயே நிற்பான். ஏதோ பேச்சுக் கொடுப்பான், இங்குமங்கும் பார்த்துக்கொண்டு சொல் வான் : "பீபியை அனுப்பு, ரெண்டு நாழி நெல், பாக்கு, வெத்திலை புகையிலை எல்லாம் கொடுத்தனுப்பறேன்.''

பேலு தன் பீபியையே திருட்டுத்தனமாக இடுக்கு வழியே பார்த்துக்கொண் டிருக்கிறான் என்று தெரிந்தால் அவன் முகத்தில் காரித் துப்பத் தோன்றும் ஆகாலுவுக்கு.

பாவம், இந்த ஆளிடம் மாட்டிக் கொண்டு எவ்வளவு கஷ்டப் படுகிறாள் ஆன்னு! அவனை விட்டுவிட்டு வரவும் முடியவில்லை அவளால். பேலு எங்கிருந்து, எப்படித்தான் இவ்வளவு அழகான பீபியைப் பிடித்துக் கொண்டு வந்தானோ? இந்த விஷயம் யாருக் கும் தெரியாமல் இல்லை. ஆனால் தெரிந்தும் தெரியாதது போல் எல்லாரும் நடந்துகொண்டார்கள். பேலுவின் பீபி ஆன்னு என்ற விஷயம் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பேலு முறைப் படி ஆன்னுவுக்குத் தலாக் கொடுத்தாலொழிய ஆகாலு அவளைத் தன் வீட்டுக்குக் கொண்டுவர முடியாது. வேண்டுமானால் அவளை இழுத்துக் கொண்டு வேறு ஏதாவது ஓர் ஊருக்கு ஓடிப் போய்விடலாம்.

தன் பீபி ஒரு நாள் உண்மையிலேயே ஓடிப் போய்விடுவாள் என்று பேலுவுக்குத் தோன்றும். சும்மா ஓடிப் போகமாட்டாள். அவன் மியான் சாயபுவின் கழுத்தை இரண்டாக வெட்டிப் போட்ட மாதிரி அவளும் அவனுடைய கழுத்தை இரண்டாக வெட்டிவிட்டு ஓடிப்போகப் போகிறாள்.

இவ்வாறெல்லாம் நினைத்துக்கொண்டு அவன் அன்றிரவு பீபியின் முகத்தைப் பார்த்தான். இவ்வளவு உதை வாங்கியும் அவள் அழவில்லை. சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் தலையைக் குனிந்து கொண்டு உம்மென்று உட்கார்ந்திருந்தாள். அவள் என்ன செய் வாளோ என்ற பயத்தில் பேலு முன்னிரவில் தூங்கவில்லை. அவன் பிரப்பம்பாயை விரித்துப் படுத்துக்கொண்டு அவளைப் பார்த், துக் கொண்டே இருந்தான். அவளுடைய முகம் இறுகியிருந்தது. கண்

491வெளிறிப் போயிருந்தது. அப்போது வெளியே ஏதோ ஒரு பறவை கூவியது. பின்பனிக் காலப் பனி வயலில் விழுந்துகொண் டிருந்தது. கிரவுஞ்சப் பறவைகளின் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வந்திருக்கும். இதற்குள். பேலு பெருமூச்சு விட்டான். ஆன்னு கொஞ்சம் அசைந்தாள். இப்போது அவனுக்கு அவளிடம் பரிவு ஏற்பட்டது. பாவம், ரொம்பத்தான் அடிபட்டுவிட்டாள் அவள், அவன் கேட்டான், “எங்கே போயிருந்தே ?" என்று.

"சாகப் போயிருந்தேன் !'' ''சாக எங்கே போயிருந்தே ?" "வயலுக்கு ." ''வயல்லே என்ன வேலை?" "புல் அறுத்துக்கிட்டு வரத்தான் ! புல் இல்லேன்னா உன் அருமை கன்னுக்குட்டி என்னத்தைத் தின்னும்?"

" அவன் எழுந்து உட்கார்ந்தான். "சரி, சோறு போடு" ''என்னாலே முடியாது !" 'ஏன் முடியாது ? யாரு உனக்குச் சோறு போடறா ?'' மறுபடி அவளை உதைக்கலாமா என்றுகூட நினைத்தான் பேலு. ஆனால் அவள் உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து அவனுக்கு அவளை அணுகத் தைரியம் வரவில்லை, எரவானத்தில் செருகி வைத்திருந்த கத்தி இருக்கிறதா என்று பார்த்தான், இல்லை. பரபரப்புடன் இங்குமங்கும் பார்த்தான் அவன். ஒற்றைக் கண்ணால் பார்க்கவேண்டி யிருந்ததால் கழுத்தை முழுவதும் திருப்ப வேண்டி யிருந்தது. வேறு எங்கேயாவது வைத்து விட்டோமோ என்று நினைத்தான். தேடிப் பார்த்தால் கிடைக்கும். அவன் பீபியின்மேல் வீணாகச் சந்தேகப்படுகிறானோ ? தவிர. அவனால் பீபிக்கு என்ன சுகம்? ஒருசமயம் அவனுக்கு அவளிடம் அநுதாபம் பிறந்தது. மறுநிமிடமே அவநம்பிக்கை ஏற்பட்டது. அவன் அவள் அருகில் போய் உட்கார்ந்தான் அவளுடைய முதுகை வருடி, அவளை இறுகத் தழுவிக் கொஞ்ச முயற்சி செய்தான். ஆன்னு கடிக்க வரும் பாம்பு போல் சீறினாள். "மியான் என்னைத் தொடாதே! நீ ஒரு சைத்தான், ஒரு ராட்சசன்!''

"என்ன சொன்னே? நான் சைத்தானா, ராட்ச்சனா ?'' பேலு எகிறிக் குதித்தான். இவ்வளவு காலத்துக்குப்பின் அவள் சொல்லிக் காட்டு கிறாளா, அவன் சைத்தான் என்று !

பேலுவின் கால் ரத்தம் தலைக்கேறி விட்டது. அவன் ஏதோ ஒரு பயங்கரமான காரியம் செய்யப் போகிறான். அவன் வெளியே இருட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் இருந்தால் இப்போதே ஒரு கொலை விழுந்துவிடும். நான் சைத்தானா ராட்சசனா என்று முணு

-492முணுத்துக்கொண்டே அவன் வெளியிலிருந்தே எரவானத்தில் கத்தியைத் தேடினான் "ஆமா, நான் தொழுகை செய்யறதில்லே, அல்லா பேரைச் சொல்றதில்லே, நான் செஞ்ச பாவத்துக்குக் கணக்கு இல்லே. அதையா இப்போ சொல்லிக் காட்டறே நீ?" என்று சொல்லிக்கொண்டே அவன் உள்ளே நுழைந்து தடாரென்று அவள் அருகில் உட்கார்ந்தான். பிறகு தன் முறிந்த இடக்கையைச் செத்த பாம்பைத் தூக்குவது போல் வலக்கையால் தூக்கி அவ ளுடைய கண்ணுக்கு நேரே ஆட்டினான். "பீபி, நீ ரொம்பத் தைரியசாலி தான். என் கை ஒடிஞ்சு போனதுதான் உனக்கு இவ் வளவு தைரியத்தைக் கொடுத்திருக்கு. நீ என்னைச் சைத்தான்னு சொன்னியா ? இந்தமாதிரி யாராவது சொன்னாக் கதறக் கதறச் சாக அடிப்பேன். நீ ஒரு பொம்பளை என்று பார்க்கிறேன், சரி, கத்தி எங்கே ? பலி வெட்டற கத்தி ?''

''ஏன்? என் கழுத்தை வெட்டப்போறியா?" "வெட்டித்தான் பார்க்கலாமே, உன் கழுத்து அறுபடறதா, இல்லையான்னு !''

ஆன்னுவின் அழுத்தம் அதிகரித்தது. "இதுவா உன்னோட எண்ண ம் ?"

அவன் புல் கட்டுக்குள்ளிருந்து கத்தியை எடுத்துப் போட்டாள். "இந்தா. கொடுத்துட்டேன் ! எங்கே வெட்டு பார்ப்போம்! உருப்படியா இந்தக் காரியமாவது செய்யறியா, பார்க்கலாம்."

இவ்வாறு கத்திக்கொண்டே அவள் பத்ரகாளி போல் கண்களை அகல விரித்துக்கொண்டு புடைவையை அவிழ்த்தெறிந்து விட்டு நிர்வாண நிலையில் கழுத்தை அவனுக்கு முன் நீட்டினாள். "உம், தைரியம் இல்லே மியானுக்கு ! வெட்ட முடியல்லே !'' என்று சொல்லிவிட்டு அவள் விறைத்துக்கொண்டு உட்கார்ந்தாள். பேலு வுக்கு வந்த கோபத்தில் அந்த நிமிஷமே அவளுடைய கழுத்தை வெட்டிவிடலாம் போல் இருந்தது. ஆனால் சற்றும் பயப்படவில்லை ஆன்னு. ஏனென்றால் அவனுடைய கண்ணைப் பார்த்தே அவள் புரிந்துகொண்டுவிட்டாள், அவன் பயந்துவிட்டான் என்று. அவன் முன்போல் கண்களை அகலமாக விரித்துக்கொண்டு, கண்களில் ஆத்திரம் ஜொலிக்க, வெறி பிடித்தவள் போல் அட்டகாசமாகச் சிரித்தாள். முன்பொரு நாள் தன் கணவன் வயலில் கொல்லப் பட்டான் என்பதைக் கேட்டுவிட்டுப் பேலுவுடன் ஓடிவரும் போது சிரித்தாளே அது போல்.

உடனே பேலு தன் முறிந்த கையைப் போல் தானும் ஜீவனற்றுப் போனான். முரட்டு மனிதர் அடங்கிப் போய்விட்டதைக் கவனித்

493தாள் அவள். அவள் ஏளனமாகக் கேட்டாள் : "என்ன மியான்

தைரியம் வரல்லியா ? உனக்கு அதுக்கெல்லாம் திராணி ஏது ?"

''இல்லை பீபி.” "அப்படியானா, உன் மூஞ்சியை வெளியே காண்பிக்காதே !' உண்மையாகவே தான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது பேலுவுக்கு. பீபியின் கேலிக்குப் பதில் சொல்வதானால் அவன் தன் தலையைத் தானே வெட்டிக்கொண்டு, வெட்டப்பட்ட தலையைக் கையில் வைத்துக்கொண்டு ஆட வேண்டும். ஆனால் இந்த இருட்டு, அந்தப் பக்கம் கொட்டிலில் இருக்கும் கன்றுக்குட்டியின் கண், நெல்லைத் - திருட்டுத்தனமாக அறுத்துக்கொண்டு வந்து அவன் நடத்தும் பிழைப்பு - எல்லாமே அவனுக்கு உயிரில் ஆசையை உண்டாக்கியிருந்தன. அவனுக்குத் தலையை வெட்டிக்கொண்டு வெறியாட்டம் ஆடத் துணிவு வர வில்லை. அவன் அவளுக்குத் தெரியாமல் கத்தியைப் புல்லுக்குள் ஒளித்து வைத்துவிட்டுப் பிரப்பம் பாயில் படுத்துக்கொண்டு விட்டான். இரவு முழுவதும் தூங்க முடியவில்லை அவனால்.

அவன் சற்று அயர்ந்துவிட்டால் பீபி வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டு ஓடிப் போய்விடுவாள். எரிந்த சாம்பற் குவியலில் வெந்து கிடப்பான் அவன். ஆன்னுவும் தலைப்பை விரித்துக்கொண்டு ஒரு புறம் படுத்துவிட்டதைப் பார்க்காதிருந்தால் அவன் அன்று பைத்திய மாகவே ஆகியிருப்பான். அவன் அவள் அருகில் சென்று பார்த தான், அவள் நிஜமாகவே தூங்குகிறாளா அல்லது தூங்குவதாகப் பாவனை செய்து கொண் டிருக்கிறாளா என்று. ஆன்னு உண்மை யாகவே தூங்கிக்கொண் டிருந்தாள். அவனுக்கு அவள் மேல் அநுதாபம் ஏற்பட்டது. அவளைக் கொஞ்ச ஆசை. ஆனால் அவன் தன் கழுத்தை அவள் அருகில் கொண்டு சென்றும் அவளைத தொடத் துணிவில்லாமல் விலகிக்கொண்டான்,

பெண் பாம்பிடம் பயப்படுவதுபோல் அவளிடம் அவனுக்குப் பயம். அவளைக் கொஞ்சப் போனால் கழுத்தைப் பிடித்துக் கடித்து விடுவாள். அவன் அவளுக்கு அருகில் துண்டை விரித்துக்கொண்டு படுத்தான். காலையில் ஆன்னு அவனை எழுப்பி, “'கன்னுக்

குட்டியை வயல்லே மேயவிட்டுட்டு வா!'' என்றாள்.

மேய்க்கக் கன்றை இழுத்துவந்த இடத்தில்தான் இந்த ஆபத்து. கோவில் மாடு உறுமிக்கொண்டு நின்றது. அது விசாலமான மைதானம், நெல்வயல்கள், சோனாலி பாலி நதிப்படுகை - எல்லா வற்றையும் அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு அவனைப் பய முறுத்தியது.

494ஹாஜிசாயபுவின் சிறிய மகன் ஏற்கனவே நல்ல உயரம், இன்னும் நல்ல உயரமாக ஆசை அவனுக்கு. தலையில் சிவப்புக் குல்லாய். லுங்கி அணிந்து கொண்டு வெயிலில் நின்றான் அவன். தாடியில் அத்தர் மணம். ஆன்னு கடந்த இரவு தான் வாங்கிய உதைகளை மறந்துவிட்டு மூங்கில் காட்டுக்குள் நுழைந்தாள்.

பேலு, கோவில் மாடு, ஆகாலுதீன், பைத்தியக்கார டா குர் இவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி விட்டார்கள். அந்தப் பனிக்காலத்தின் காலைவேளையில் ஸோனாலி பாலி ஆற்றின் படுகையில் வியாபித்திருக்கும் தெய்வத்துக்குத்தான், கோவில் மாடு வேகமாகப் பாய்ந்தால் பேலுவின் வயிறு எப்படிக் கிழியும் என்று தெரியும்.

பேலுவைப் பார்த்துவிட்டு ஊழி நடனமாடுகிறது. மாடு, இதோ பாயப் போகிறது அவன் மேல்!

மாலதி சிரித்தாள். ரஞ்சித்தின் பேச்சைக் கேட்டுச் சிரித்தாள். சிரிப்பிலும் இவ்வளவு வேதனை இருக்கும் என்ற உண்மை ரஞ்சித் துக்கு மாலதியின் முகத்தைப் பார்த்திராவிட்டால் தெரிந்திருக்காது. வறண்ட சிரிப்பு! எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது மாலதியின் முகம்!

தன் தனிக்குடிசையில் ஒரு வாத்துப் போல் உட்கார்ந்திருந்தாள் மாலதி. குடிசையின் கதவாகப் பயன்பட்ட படலின்மேல் பின்பனிக் காலத்தில் வெயில் விழுந்தது. பின்பனிக் கால் இறுதியான தால் கொஞ்சம் குளிரும் இருந்தது. மாலதி ஒரு கம்பளத துண்டை ஆசனமாக விரித்துக் கொண்டு, ஒரு மெல்லிய போர்வையை மேலே போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ; தான் தீட்டுப் பட்டவள்போல, நாற்புறமும் கவனக் குறைவின் அடையாளங்கள், வெளியே நரேன் தாஸ் வைக்கோலைக் குவித்துக்கொண் டிருந்தான். ஆபாராணி நெல்லைத் தூற்றினாள், சோபா, ஆபு வீட்டில் இல்லை.

இப்போதெல்லாம் மாலதி சாதாரணமாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. நடுநடுவே வீட்டுக்கு அருகிலுள்ள கட்டாரி

மரத்தடியில் போய் உட்கார்ந்திருப்பாள்.

ரஞ்சித் வந்ததும் படலைத் திறந்துவைத்தாள் அவள். ஏனென்றால் படலைச் சாத்தினால் வீட்டுக்குள் இருட்டாயிருக்கும். அவளுக்கு

495வர வர இருட்டு பிடித்துப்போய்விட்டது. மிருகக்காட்சி சாலையி லுள்ள பிராணிபோல் பிழைத்திருக்க முடியவில்லை, அவளால். அவள் இப்போது என்ன செய்வது ? அவளுக்குள்ளே என்ன நடக்கிறது? எப்போதும் ஒரு குளிர், ஒரு பயம், நெஞ்சு நடுங்கியது. அவள் வறட்டுச் சிரிப்பு சிரிக்கும்போது நரேன் தாஸுக்குப் பயமாக இருக்கும். அவன் ரஞ்சித்தைப் பார்த்தால் அவனிடம் சொல்லுவான் : "போய்ப் பாருங்க அவளை ! பைத்தியம் மாதிரி சிரிக்கிறா !'

இவ்வாறு கேட்டுத்தான் ரஞ்சித் வந்திருந்தான், அவளைப் பார்க்க. அவனைக் கண்டதும் அவள் சாதுவாக, அடக்கம் நிறைந்த இளம் பெண்ணாக ஆகிவிட்டாள். சற்றுத் தள்ளி ஒரு பலகையைப் போட்டு அதில் அவனை உட்காரச் சொன்னாள். ரஞ்சித் வந்து உட்கார்ந் தால் அவளுக்கு எப்படியோ தெம்பு வந்துவிடும். தன் மனத்தில் உள்ளதை அவனிடம் சொல்லவேண்டும் எனறு தீர்மானிக்க முடியும். அவளுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. தெரியாததால் அவளுடைய முகம் பரிதாபமாகத் தோற்றம் அளித் தது. அவளால் வாய் திறந்து பேச முடியவில்லை. அவள் அவனைப் பார்த்ததும் ஒரு மயக்க நிலையை அடைந்தாள்.

'நீ ஏன் இந்தமாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணறே, மாலதி ?" "என்ன பைத்தியக்காரத்தனம்?” "நடுநடுவிலே கட்டாரி மரத்தடிக்கு ஓடிப் போய்ப் பேசாமே உக்கார்ந்திருக்கே! ஒணணும் சாப்பிடறதில்லே!"

"ஒண்ணும் சாப்பிடவே பிடிக்கல்லியே!'' "பிடிக்கலேன்னு விடமுடியுமா ? சாப்பிடணும், உசிரோட இருக் கணும்.”

"நான் உன்னை ஒரு கத்தி கேட்டேனே! ஏன் கொடுக்க மாட் டேங்கறே?''

"உனக்கு எப்போதும் இந்தப் பேச்சுத்தான்." ''ஆமா, எனக்கு வேறே பேச்சு இல்லே." ''நீ இந்த மாதிரியெல்லாம் பண்ணினா நரேன் அண்ணா உன்னை வச்சுக்கிண்டு என்ன பண்ணுவார்?''

"என்னை வச்சுண்டு யாரும் ஒண்ணும் பண்ண வேண்டிய தில்லே ."

''அப்படிச் சொல்லாதே! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.'' "நீ என்ன நினைக்கறே டாகுர் ? எனக்குப் பிசாசு பிடிச்சிருக்கா?" "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லேன்னு உனக்குத் தெரியாதா?"

"பின்னே நீ ஏன் அண்ணா சொல்றதைக் கேட்கறே?” ''ஏன்னா உன் மூஞ்சியைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு.

496“என்ன பயம் ?" "உன்னோட கண்ணும் முகமும் இயற்கையாகவே இல்லே. நீ முந்தி யெல்லாம் இப்படி இல்லையோ, மாலதி! மனப்பூர்வமாகக் கடவுளைக் கூப்பிடு. அவர் உன்னைச் சொஸ்தமாக்கி விடுவார்."

"டாகுர், உனக்குக் கடவுள் மேலே அவ்வளவு நம்பிக்கையா?" ''நான் உனக்கு என்ன தான் சொல்லுவேன் ? மறுபடியும் நீ ஒரு நாள் தற்கொலை பண்ணிக்குவேன்னு எனக்குப் பயமா இருக்கு."

"டாகுர், எனக்குச் சாக இஷ்டமில்லே. நீ என்னை நம்பு. நீ பக்கத்திலே இருந்தா, எனக்குச் சாகக்கூடத் துணிவு வரதில்லே."

சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு அவள் சொன்னாள் : 'கத்தியாவது கொடுக்கக் கூடாதா? நீங்க என்னைச் சாகக் கூட விடமாட்டீங்க. நான் என்ன பண்றது இப்போ ?''

ரஞ்சித்தின் தலைமேல் பின்பனிக் காலத்து வெயில் விழுகிறது. எங்கோ பரிசயமான பறவையின் கூவல். உள்ளே இருளில் மாலதி உட்கார்ந்திருக்கிறாள். வெகுநாட்களாக ரஞ்சித்திடம் ஏதோ சொல்ல வேண்டுமென்று அவள் தூங்கக்கூட முடியாமல் காத்திருக் கிறாள். கண்களுக்குக் கீழே கருமை படிந்திருக்கிறது. கை, கால்கள் மெலிந்திருக்கின்றன. களைத்துச் சோர்ந்த முகம். நாற்புறமும் அலாதி யான வெறுமை. அவள் மறுபடியும் கத்தியைப் பற்றியே பேச் செடுக்கிறாள்.

"மாலதி, நீ அன்னிக்கு நெத்தியிலே குங்குமமும், காலில் ஆல்த் தாவும் போட்டுக்கிண் டிருந்தே. எவ்வளவு அழகாயிருந்தது, தெரியுமா ?"

மாலதி பதில் சொல்லவில்லை. "உன் கண்ணு எவ்வளவு அழகாயிருக்கு, மாலதி ! என்னாலே உனக்கு ஒண்ணும் பண்ண முடியல்லியேன்னு வருத்தமா இருக்கு. நான் வேறே என்ன சொல்லுவேன் ?''

என்னவோ யோசிப்பதுபோல் மாலதி தலையைக் குனிந்து கொண் டாள்.

“நான் போயிடுவேன், மாலதி ! இனிமேல் உன்னைப் பார்ப்பேனா இல்லியான்னு தெரியாது. எப்போ பார்ப்பேன்னும் தெரியாது. என்னோட அக்ஞாதவாசம் முடிஞ்சு போச்சு. நான் போறதுக்கு முன்னாலே உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.''

மாலதியின் கண்கள் விரிந்தன ''நான் ஏன் இவ்வளவு பெரிசா பைத்தியம் மாதிரி சிரிக்கறேன்னு நீ கேட்கல்லியே ?"

"ஏன் கேட்கணும்? உனக்கு உதவி பண்ண என்னாலே முடியல்லே ! கேட்டு என்னப் பிரயோசனம் ?"

497

8)Atiti

''உன்னோட அக்ஞாதவாசம் முடிஞ்சு போச்சா?" கேட்டபோது மாலதியின் நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.

"ஆமா. நான் இந்தப் பக்கத்திலே இருக்கேன்னு போலீசுக்குத் தெரிஞ்சு போச்சு. இன்னிக்கோ நாளைக்கோ என்னைப் பிடிக்கப் போலீஸ் வரதுக்குள்ளே நான் இங்கேயிருந்து ஓடிப்போயிடணும்.'' மாலதி தான் ஒரு துக்கத்தில் ஆழ்ந்திருப்பதை மறந்து போனாள், அவள் தன் அன்புக்குரியவனின் முகத்தையே பார்த்துக்கொண் டிருந்தாள். இந்த இளைஞன் அவளிடம் வந்தால் யாரும் சந்தேகம் கொள்ளமாட்டார்கள். காரணம், இவன் எவ்வளவோ காலமாக அவளுக்குக் கத்தி விளையாட்டும் சிலம்பமும் கற்றுக் கொடுத்து வந்திருக்கிறான். ரஞ்சித் ஒரு மகத்தான லட்சியத்தில் பற்று வைத்த வன், மாலதி போன்ற சாதாரண இளம் விதவை அவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவன் அருகில் வந்தால் அவளுடைய இறுகிய முகம் இயற்கை நிலைக்கு வந்துவிடும். மாலதிக்கு ரஞ்சித் திடம் பயம் என்று நரேன் தாஸும் மற்றவர்களும் நினைத்தார்கள், இப்போது அவன் மறுபடி எங்கோ போய்விடப் போகிறான் . அவனும் போய்விட்டால் அவளுக்கென்று என்ன மிஞ்சியிருக்கும்? அவள் இப்போது எல்லாவற்றையும் அவனிடம் சொல்லிவிடலாம். ஆனால் எப்படிச் சொல்லுவாள் ? நரேன்தாஸ் தெரிந்தும் மறைத்து வைத்திருக்கும் ஒரு விஷயத்தை! அவள் அழாக்குறையாகச் சொன்னாள், "டாகுர், எனக்குச் சாக இஷ்டம் இல்லே! நீ எங்கே யாவது கூட்டிண்டு போ !"

மாலதியின் கண்களிலிருந்து நீர் அருவியாகக் கொட்டியது. கொஞ்சங் கொஞ்சமாக மாலை மங்கிக்கொண்டே வந்தது. வயல்களிலிருந்து நெல்லின் மணம் மிதந்து வந்தது. நாற்புறமும் நெல், பருப்பு வயல்கள். பருப்புப் பயிரில் நீல நிறப் பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. நெற்பயிரில் கதிர் முற்றியிருந்தது. எங்கிருந்தோ அறுவடைப் பாட்டு காற்றில் மிதந்து வந்தது. இவை எல்லாமே அர்த்தமற்றவையாகத் தோன்றின மாலதிக்கு. ரஞ்சித் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்கத் துடித்தாள் அவள்.

இதுவரை ரஞ்சித் அவனுடைய சங்கத்தின் கட்டளைப்படி எவ்வ ளவோ பெரிய பெரிய காரியங்களை அநாயாசமாகச் சாதித்திருக் கிறான். குமில்லாவில் ஹட்சன் துரையைக் கொன்றுவிட்டுத் தப்பி யோடி விட்டான், அவன் அ கர்த்தலா வழியாகச் சில்சாருக்குப் போய்ப் பிறகு அங்கிருந்து அஸ்ஸாமில் எங்கோ மறைந்து போய் விட்ட தாகப் போலீஸார் நினைத்தார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவனுடைய இளம் பிராயத்து வரலாற்றைப் போலீஸாரால் அறிய முடியவில்லை. அவனுக்குப் பல பெயர்கள் - ரஞ்சித் சுகமஸ்

IA:

498iiii

தாஸ், சரண்பண்டல் .... ஒரு தடவை ஆற்றுக்கு மறுகரையில் கோபால் சாமந்தா என்ற பெயரில் வாத்தியம் வாசித்தான் அவன். இவ்விஷயங்களைக் கண்டுபிடித்த போலீசுக்கு அவன் இந்த இடத்தில் தான் வாலிபப் பருவததைக் கழித்தான் என்று தெரிய வில்லை. இந்தப் பிராந்தியத்து மக்களுக்கோ ரஞ்சித் தேசத்துக்குச் சேவை செய்கிறான் என்று மட்டுந்தான் தெரியும்.

இப்போது அவன் முன்னால் மாலதி சோகமே உருவாக உட்கார்ந் திருந்தாள். தான் இதுவரை போற்றிவந்த லட்சியங்கள் எல்லாம் அர்த்தமற்றவையாக ரஞ்சித்துக்குத் தோன்றின. மாலதியின் இந்நிலையைப் பார்க்க அவனுக்குத் தாளவில்லை. அவன் தன்னைப் பலவீனனாக உணர்ந்தான்.

அவனுக்கு முன்னே உலகமே நெல்வயலாக விரிந்து கிடக்கிறது. ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்வான்? மாலதியை எங்காவது கொண்டு போய்ச் சேர்க்க முடியவில்லையே அவனால்! இது தான் மாலதியின் விதியா ? அவனுக்குப் பேச வாயெழவில்லை. அவன் தலையைக் குனிந்து கொண்டே நடந்து போய் மரங்களுக்குப்பின் மறைந்து போனான்.

மாலதி தன் குடிசைக்குள் வாத்தைப் போல் அடைந்து கிடந் தாள். சற்று நேரத்துக்குப் பின் சோபா வந்தாள். அவளுடைய இடது கையில் லாந்தர். வலது கையில் ஒரு தட்டில் பொரியும் வெல்லமும் - மாலதியின் இரவு ஆகாரம். அதை வாங்கிக் கொண்டு மாலதி தன் குடிசைப் படலைச் சாத்திக்கொண்டாள். பிறகு அந்த இருட்டில் கண்களை இடுக்கிக் கொண்டு படுத்துக் கிடப்பாள், கண்களில் உறக்கம் இருக்காது. ஏதோ ஒரு பாலைவன எல்லையில் ஒரு மொட்டைமரம் தன்னைக் கைத் தட்டி அழைப்பதாகத் தோன்றும் அவளுக்கு.

ரஞ்சித் நடந்துகொண்டே குளத்தங்கரைக்கு வந்து சேர்ந்தான். மருதமரம் கொப்புங்கிளையுமாகப் பெரிதாக வளர்ந்திருந்தது. நாற்புறமும் கொஞ்சங் கொஞ்சமாக இருட்டுப் பரவியது. தெற்குப் பக்க அறையில் சசிபூஷண் சிறுவர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்தார்.

உரக்கப் படித்துக்கொண்டிருக்கிறான் சோனா. ரஞ்சித் வீட்டுக்கு வந்தால் சோனா அவனுடைய காதில் படும்படி பெரிய பெரிய வார்த்தைகளை உரக்கப் படிப்பான். தான் இந்த வயதிலேயே எவ் வளவு பெரிய வார்த்தைகளைக் கற்றுக்கொண் டிருக்கிறான் என்பதை மாமாவிடம் காட்டிக்கொள்ள ஆசை அவனுக்கு. இதை நினைக்கும் போது ரஞ்சித்துக்கு இவ்வளவு கவலைகளுக்கிடையிலும் சிரிப்பு) வந்துவிடும். அவன் போய்விடப் போகிறான்.

499இவையெல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகக் கஷ்டமாக இருந்தது அவனுக்கு, அக்காவிடம் வளர்ந்தவனாதலால் தனிப்பட்ட பாசம் அவனுக்கு. தவிர, அவளுடைய கணவர் பைத்தியம் என்பதால் அவளிடம் அநுதாபம். அந்த மனிதர் வாழ்நாள் முழுவதும் இப்படியே கவிதையை ஒப்பித்துக்கொண்டு இருந்துவிடப் போகிறார். அண்ணியின் வாழ்க்கை துன்பமயமாகவே கழிந்துவிடும். இந்த ஊருக்கு வரும்போது தன் சொந்த வீட்டுக்குத் திரும்பும் உணர்வு ஏற்படும் அவனுக்கு. இங்கு எல்லாமே அவனுக்குப் பரிசயமானவை. ஆகையால் தான் போவதற்கு முன் கடைசியாக ஒரு தடவை) எல்லாவற்றையும் பார்த்துவிட்டுப் போக விரும்பினான் அவன்.

குளத்தங் கரையிலிருந்து அவனுக்குப் படிப்பறையின் வெளிச்சம் தெரிந்தது. சசிபூஷண் உடம்பை ஆட்டி ஆட்டிக்கொண்டே பாடம் கற்பிப்பார். சரித்திரம் கற்பிக்கும்போது 'ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்கதபி கரீயஸ்' என்று சொல்லும்போது இந்த மண்ணுக்காகவும் மண்ணில் வசிக்கும் மக்களுக்காகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவார் அவர். இந்தச் சிறுவர்களைத் தம் குழந்தைகள் போல் நேசிக்கிறார் அவர்.

ரஞ்சித் இருட்டிலிருந்து கிளம்பி வந்தான். உலகத்தில் அவனு" டைய ஒரே உறவு அவனுடைய அக்கா மட்டுந்தான். அவளுடைய கணவரோ பைத்தியம் !

அவன் நேரே வீட்டுக்கு வந்தான். தன் அறைக்குப் போய் உடைகளை மாற்றிக்கொண்டான். தன் சூட்கேஸைத் திறந்து அதில் எல்லாச் சாமான்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டான்.

மகேந்திரநாத் தம் அறையில் உட்கார்ந்திருந்தார். இந்தச் சமயத்தில் அவர் சூடான பால் குடிப்பார். இப்போது அக்கா அவருடைய காலடியில் உட்கார்ந்திருப்பாள்.

அவன் அக்காவைப் பரிமாறச் சொல்லிக் கொஞ்சம் சாப்பிட் டான். மகேந்திர நாத்தின் அறையில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, “நான் இன்னிக்கே புறப்பட்டுப் போறேன்" என்றான்,

ரஞ்சித்தின் இம்மாதிரி செய்கைகள் பெரிய மாமிக்கு வியப் பளிப்பதில்லை. அவன் எங்கே போகப் போகிறான், எங்கே தங்கப் போகிறான் என்று அவனைக் கேட்டால் பதில் கிடைக்காது. முன் பெல்லாம் இது பற்றி அவள் ரஞ்சித்துடன் சண்டை போடுவாள் : இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. வேளை கெட்ட வேளையில் அவன் திடீரென்று புறப்பட்டாலும் அவளுக்கு ஆச்சரியம் ஏற்படுவதில்லை. அவள் அதிகம் பேசாமல் அவனு டைய பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாள்.

500தான் செய்வது குறித்து அவளுக்கு உள்ளுற ஏற்படும் கஷ்டம் அவனுக்குத் தெரியும், அவன் போன பிறகு அவள் அழுவாள் என்பதும் தெரியும். அவன் புறப்படுவதற்கு முன் வழக்கம்போல் அவளுக்கு நமஸ்காரம் செய்தான், அவளுடைய சோகமான முகத்தைப் பார்த்து அவளைக் கேட்டான் :

" நீ ஏன் சிரிக்க மாட்டேங்கறே அக்கா? நீ சிரிச்ச முகத் தோடே இல்லேன்னா நான் எப்படிக் கிளம்புவேன்?''

பெரிய மாமி பலக்கச் சிரித்தாள், தம்பிக்கு விடை கொடுக்க. ''உம், இதுதான் என்னோட அக்கா !" என்று சொல்லிவிட்டு, அவன் எல்லாரிடமும் விடைபெறுவதற்காக முதலில் தென் பக்கத்து அறைக்குள் நுழைந்தான். "நான் போயிட்டு வரேன்" என்று சசிபூஷணிடம் சொல்லிவிட்டுச் சோனாவின் தலையில் அடர்ந்து வளர்ந்திருந்த மயிற் கற்றைகளைக் கையால் அளைந்து அவனைக் கொஞ்சினான். "நான் போயிட்டு வரேன். நீங்க சமத்தா இருக் கணும். அம்மா பேச்சைக் கேட்கணும், பெரியப்பாவைக் கவனிச்சுக்கணும், தெரிஞ்சுதா?"

சசிபூஷண் கேட்டார் : "மறுபடியும் தலைமறைவாகப் போயிடப் போறீங்களாக்கும் ?"

''ஆமா." ''எப்போ திரும்புவீங்க ?" ''திரும்பி வர முடியாதுன்னு தோண்றது."

"ஏன் ?"

''சில அசெளகரியம் இருக்கு." " நீங்க சுதேசி இயக்கத்தைச் சேர்ந்தவர். உங்களைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் சில சமயம் உங்க மாதிரி தேசசேவை செய்யப் போயிடணும்னு தோண்றது !"

''இப்பவுந்தான் நீங்க தேச சேவை செய்யறீங்க. இதை விடப் பெரிய சேவை என்ன இருக்கு ?''

''ஆனால் பாருங்க, தேசம் எப்போ விடுதலையடையும்னு எனக்குப் புரியல்லே .”

"விடுதலை கிடைச்சுடும்!'' "கிடைக்கும். ஆனால் ரொம்பத் தாமதமாறது. நாம எல்லாரும் தேச சேவையிலே இறங்கல்லேன்னுதான் இப்படித் தாமதமாறது."

ரஞ்சித் பதில் சொல்லவில்லை. ''நீங்க என்ன நினைக்கிறீங்க?" "எதைப் பற்றிச் சொல்றீங்க ?'' அதேச விடுதலையைப் பத்தித்தான்."

501'எல்லோரும் தேச சேவையில் இறங்கிட்டா, வாழ்க்கை எப்படி நடக்கும் ?''

“ நீங்க சொல்றது சரிதான். ஆனால் லீக் போற போக்கைப் பார்த்தால் கடைசி வரையிலே என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு."

ரஞ்சித் இதற்குப் பதில் சொல்ல விரும்பாமல் பேச்சை மாற்றினான். ""இந்தப் பசங்களுக்கு உங்ககிட்டே ரொம்ப விசுவாசம். இப்போ எல்லாம் ரொம்பக் கவனமாப் பல் தேய்க்கறாங்க."

"பல்லுத்தான் ரொம்ப முக்கியம். எங்கே, உங்க பல்லைக் காட்டுங்க, பார்க்கறேன்.”

வேறு சமயமாயிருந்தால் ரஞ்சித் என்ன செய்திருப்பான் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது அங்கிருந்தே போய்விட இருந்ததால் மிகவும் எளியவனாக ஆகிவிட்டான். ஆகவே அவன் சற்றும் தயக்கமின்றிச் சசிபூஷணுக்குத் தன் பற்களைக் காட்டினான். சசிபூஷண் விளக்கைத் தூக்கி ரஞ்சித்தின் பற்களைக் கவனித்தார். கை தேர்ந்த பல் டாக்டரைப் போல. ஈறுகளை அமுக்கி அமுக்கிப் பார்த்தார். பல்டுவை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு ரஞ்சித்தின் பக்கம் திரும்பிச் சொன்னார். " கீழ் வரிசைப் பல்லுகள் நன்னாயில்லே.”

ரஞ்சித் சிரித்துக்கொண்டே கேட்டான். "என்ன பண்ணணும் அதுக்கு ?"

"தினம் ராத்திரி ஒரு கடுக்காய் சாப்பிடுங்க." அவர் வெளியில் போய்க் கையை அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சொன்னார். கேடுக்காய் சாப்பிட்டால் பல் கெட்டிப்படும். ஈரப் த ன வேலை செய்யும். நன்னாத் தூக்கம் வரும். கடுக்காய் ஜீரணத்துக்கும் நல்லது" என்று சொல்லி நிறுத்திவிட்டு, அவர் தம்முடைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். அதன் அட்டவணையைப் பார்த்து 'கடுக்காய்' எந்தப் பக்கத்தில் இருக்கிறதென்று தெரிந்துகொண்டு அந்தப் பக்கத்தைப் பிரித்தார். பிறகு கடுக்காயின் குணங்களைப் பற்றி விவரமாகச் சொல்லிக்கொண்டே போனார் அவர்.

அந்த நோட்டுப் புத்தகத்தில் ஆயுர்வேதத்தில் பயன் படும் இலை கள். பூக்கள், பழங்களைப் பற்றிய எல்லா விவரங்களும் இருந்தன. ஒவ்வொன்றின் குணங்களும் உபயோகங்களும் விவரமாக எழுதியிருந்தன.

"இதிலே இருக்கிறதெல்லாம் இவங்களுக்குச் சொல்லிக் கொடுங்க. இந்த நாட்டு மண்ணிலே கிடைக்கற சாமான்கள் உலகத்திலே வேற எங்கேயும் கிடைக்காது" என்றான் ரஞ்சித்.

502"லால்ட்டு ! பல்ட்டு ! உங்க மாமா என்ன சொல்றார், கேட்டீங் களா? அவர் வெளியூர் போகப்போறார். அவருக்கு நமஸ்காரம் பண்ணுங்க !"

சிறுவர்கள் ஒரே சமயத்தில் எழுந்தார்கள். யார் மாமாவுக்கு முன்னால் நமஸ்காரம் செய்துவிட்டுத் தன் இடத்தில் திரும்பிப் போய் உட்காருவது என்பதில் அவர்களுக்குள் போட்டி, ரஞ்சித் சொன்னான. ''பரீட்சை சமயத்திலே இந்தமாதிரி போட்டி போட்டுக்கிணடு படிக்கணும். பரிட்சையிலே எல்லாரையும்விட முன்னாலே நிற்கணும், எல்லாத்திலேயும் வெற்றி அடையணும்."

அந்தப் பக்கத்தில் இருண்டிருந்த வராந்தாவில் மணீந்திர நாத் மெளனமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான் ரஞ்சித். அவன் அவரிடம் சென்று, ''மாப்பிள்ளை, இன்னிக்கு நான் ஊருக்குப் போறேன்” என்று கூறி, அவன் அவருடைய கால்களில் தலையை வைத்து வணங்கினான், "நான் நல்ல காரியம் செய்யணும்னு ஆசீர் வாதம் பண்ணுங்க.''

அவர் உட்கார்ந்தே இருந்தார். பேசவில்லை. அவருடைய கண் கள் இருட்டில் தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் தெரிந்தது. இந்த மனிதர் தம் வாழ்நாள் முழுதும் ஒரு பொன்மானின் பின்னால் ஓடிக்கொண் டிருக்கிறார். அவரைப் பார்த்தாலே ரஞ்சித்தின் கண் களில் நீர் நிறைந்துவிடும்.

அவன் அவசர அவசரமாக மேற்குப் பக்க அறைக்குள் நுழைந் தான். தனமாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டுச் சொன்னான் : "அக்கா. நான் இன்னிக்குப் புறப்படறேன்.''

"பத்திரமா இரு அப்பா !" ரஞ்சித் சசீந்திரநாத்திடமும் விடைபெற்றுக் கொண்டு அந்த அடர்ந்த இருளில் புறப்பட்டான். சசிபூஷண், சோனா, லால்ட்டு, பல்ட்டு எல்லாரும் அரிக்கேன் விளக்குடன் குளத்தங்கரை வரையில் அவனை வழியனுப்ப வந்தார்கள்,

ரஞ்சித் சொன்னான். "இனிமே நீங்க திரும்பிப் போங்க, மாஸ்டர் பாபு! எனக்கு இருட்டிலே வழி தெரியும். வெளிச்சம் இருந்தாத்தான் கண் கூசும், வழி சரியாத் தெரியாது."

திறந்தவெளி, ஸோனால் பாலி ஆற்றின் படுகை, தர்மூழ் வயல், மேலே வானம், வானத்தில் ஒளிர்ந்த நட்சத்திரங்களும் நிர்ஜன மான அந்தத் திறந்த வெளியும் அவனுக்கு அவனுடைய குழந் தைப் பருவத்தை நினைவூட்டிக் கொண்டிருந்தன. சிறுவயதில் அவன், சாம்சுதீன், மாலதி மூவரும் இந்த நதியில் விளையாடு வார்கள். நீந்தி மறுகரைக்குப் போய் விடுவார்கள், கொய்னாப்

503படகுக்குப் பின்னால் ரஞ்சித் ஒளிந்துகொள்வான். மாலதி அவனைக் காணாமல் பயந்துபோய், "டாகுர்!'' என்று கூப்பிடுவாள்.

இப்போதும் அவள் தன்னைப் பின்னாலிருந்து கூப்பிடுவதாக அவனுக்குத் தோன்றியது 'டாகுர், நீ என்னை யார்கிட்டே ஒப்ப டைச்சுட்டுப் போறே? நீ தேச சேவை பண்ணிக்கிண்டு திரியறியே? நான் மட்டும் இந்தத் தேசத்திலே சேர்ந்தவ இல்லையா? இந்த மண்ணிலேயும் தண்ணியிலேயுந்தானே நானும் வளர்ந்து பெரியவளானேன். என்னோட சுகதுக்கம் உன்னோட சுகதுக்கம் இல்லையா ? டாகுர், டாகுர்! நீ ஏன் பதில் பேசமாட்டேங்கறே?' நினைத்த அளவு வேகமாக நடக்க முடியவில்லை ரஞ்சித்தால், யாரோ இவனைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள், பின்னா லிருந்து, ''நான் என்ன செய்வேன், டாகுர்?'' அவன் தன்னை மறந்து ஒரு மரத்தடியில் நின்றுவிட்டான், அவளுடைய கால்கள் நகர மறுத்தன. அவனுக்கு மேலே வானத்தைப் போல் தூய்மையே உருவாகத் தோன்றுகிறாள் மாலதி. ஓர் அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை அவனால்.

அவன் இதுவரை நினையாத நினைவுகள் இப்போது திடீரென்று அவனைத் தாக்கின. அவன் தன் லட்சியங்களை, கனவுகளைத் துச்ச மாக மதித்து வேறொரு வாழ்க்கையில் புகலாமா என்று நினைத்தான். இந்தக் காரியத்தின் மகத்துவம் நாட்டு முன்னேற்றத்தின் முக்கியத்து வத்தை விடச் சற்றும் குறைந்ததில்லை என்று அவனுக்குத் தோன்றியது.

அரசமரத்தடியில் நின்றுகொண் டிருந்தான் அவன். அடர்ந்த இருள். இருளில் நின்றுகொண்டே எதையோ பார்க்க முயற்சி செய்தான் அவன். தூரத்தில் கிராமங்களின் விளக்குகள் பொட்டுக் கள்போலத் தெரிந்தன. இரவு வெகு நேரமாகவில்லை. கவிராஜிடமும் புஜங்கனிடமும் கத்திப் பயிற்சி, சிலம்பப் பயிற்சி சம்பந்தமான எல்லா விஷயங்களையும் - எங்கெங்குப் புதிய பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்க வேண்டும், அவன் இல்லாதபோது யாருடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்பது போன்ற விஷயங்களை - சொல்லிவிட் டானா என்று ஒரு தடவை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

எங்கோ ஒரு நாய் குரைத்தது. நரிகள் ஊளையிட்டன, ஜாலாலியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இதற்குள் நாணல் காடாக வளர்ந்துவிட்டது. அதன் வெள்ளைப் பூக்கள் இந்த இடத்தில் நிலாத் துண்டு போல் பளிச்சென்று கண்ணில் பட்டன, ஜாலாலி தன் வாழ்நாள் முழுதும் பிழைப்புக்காகப் போராட்டம் நடத்தினாள், சாவுக்குப் பின் தனக்கென்று ஒரு சிறிய நிலத்தை அடைந்து விட்ட மகிழ்ச்சியில் எவ்வளவு அழகாகச் சிரிக்கிறாள் அவள்! ஆம்,

504இருளில் வெள்ளையாகப் பளிச்சிடுவது நாணற் பூவுமல்ல, நிலாவு மல்ல. ஒரு துண்டு நிலம் கிடைத்த மகிழ்ச்சியில் சிறு குழந்தை போல் சிரிக்கும் ஜாலாலியின் சிரிப்புத்தான் அது. மலரைப் போன்ற பவித்திரமான சிரிப்பில் அவளது முகம் மலர்ந்திருக்கிறது.

இருட்டில் நின்றுகொண் டிருந்த ரஞ்சித்துக்குத் தோன்றியது ; 'உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு நிலம் கிடைக்க வேண்டும்; சாப்பாட்டுக்கு இல்லாத மனிதன், தன் கால்களுக்குக் கீழே தனக்கென்று கொஞ்சம் சொந்த நிலம் இல்லாத மனிதன்.' இப்படி மனிதர்கள் இருப்பதைக் கற்பனை செய்துபார்க்கக் கூடப் பிடிக்கவில்லை அவனுக்கு. மனிதனுக்கு வீடு இருக்கவேண்டும், உழுது பயிர் செய்து சாப்பிடக் கொஞ்சம் நிலம் இருக்கவேண்டும். சாப்பிட வழியில்லா த மனிதனுக்குச் சுதந்தரம் கிடைத்து என்ன பிரயோசனம்? வீடு, வாசல், உணவு, துணி - இவையே சுதந்தரத் துக்கு அடையாளம். மாலதிக்கும் ஒரு துண்டு நிலம் கொடுக்க வேண்டுமென்று ரஞ்சித்துக்குத் தோன்றியது.

இருளில் இருக்கும்போது அவனுக்கு அசாதாரண தைரியம் பிறந்துவிடுகிறது. அப்போது அவனுக்கு மரண பயம் இருப்ப தில்லை. இரவு பகல் என்று பாராமல் வயல்கள், காடுகள், நதிகள் ஆகியவற்றில் சுற்றித் திரிவது, மலைகள் இருந்தால் அவற்றின் மேல் சிங்கக்குட்டி போல் ஏறிச் சுற்றுவது - ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்துக்குப் பிரயாணம் செய்வது போன்ற சஞ்சாரங்கள் மூலம் அவனுக்கு உயிர் வாழ்வதில் ஆர்வம் உண்டாகிறது.

ஒன்றும் செய்ய முடியாது போனால் அவன் தன்னைச் சவமாகக் கருதிக் கொள்கிறான். மாற்றமில்லாத ஒரே மாதிரியான வாழ்க்கை அவனுக்கு அலுப்பைத் தருகிறது. அத்தகைய வாழ்க்கையில் அவனுக்கு உயிருடனிருக்கும் ஆசையே மறைந்துவிடுகிறது. உற்சாகம் மறைந்துவிட்டால் அவன் தன் கடமையையே மறந்து போகிறான்.

ஹட்சன் துரையைக் கொன்ற பிறகு இப்போது மறுபடி ஒரு புதிய சாதனையைச் செய்யப் போகிறான் அவன் ; ஒரு கிரகத்தி லிருந்து இன்னொரு கிரகத்துக்குப் பிரயாணம் செய்வதைப் போல.

இருளில் நரேன்தாஸின் வீடு தெளிவாகத் தெரிந்தது. அதில் பொட்டுப் பொட்டாக வெளிச்சம் தெரிந்தது. நரேன்தாஸ் மாட்டுக் கொட்டகையில் மாடு கட்டுகிறான் போலும். ஆபாராணி துறையில் பாத்திரங்களைத் தேய்த்துவிட்டுத் திரும்பி வந்தபின் தான் அவன் மேலே செல்ல முடியும். வீடு திரும்பியதும் படுத்துக் கொண்டு விடுவார்கள் அவர்கள். மாலதியைப் பற்றிய அவனு

505டைய பயம் குறைந்துவிட்டது. காரணம், இப்போது அவளுடைய உடலில் முன்பு இருந்த இளமை வெறி இல்லை. அவள் உடல் மெலிந்து சோர்ந்து நோயாளியாகி விட்டாள். தர்மம், அதர்மம் பற்றிய உணர்வுகள் அவளைக் குழப்பிக்கொண் டிருக்கின்றன. நரேன் தாஸ் அவளைத் தன் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை, அவள் இங்கேயே தங்கியிருந்தால் அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

இரவு நேரம் கழிந்துகொண் டிருக்கிறது. பொழுது புலரும் முன் போலீஸ் டாகுர் குடும்பத்து வீட்டைச் சூழ்ந்து கொள்ளும். இந்தச் செய்தி அவனுக்குக் கிடைத்திருந்தது. சந்தோஷ்*தாரோகா ஆயுதம் தாங்கிய போலீசை அழைத்துவர நாராயண கஞ்ச் போயிருக்கிறான் - ஒரு சாமானிய ஆளைப் பிடிப்பதற்காகப் பிரமாத ஏற்பாடுகள் செய்திருக்கிறான் சந்தோஷ தாரோகா. அவனுடைய அபரிமிதமான பயத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது ரஞ்சித்துக்கு,

அவனைக் காட்டிக்கொடுப்பவர்கள் யார் ? ரஞ்சித்துக்கு இது தான் புரியவில்லை. இந்தக் கிராமத்தில் அவனுடன் யாருக்கு விரோதம் ? போலீஸ் ஸ்டேஷன் அங்கிருந்து சில கோசதூரம். ஸ்டேஷ னுக்குப் போய்வர அதிக நேரம் பிடிக்கும். தண்ணீர் சூழ்ந்த இடமாதலால் அந்தப் பக்கம் போலீஸ் அதிகம் வருவதில்லை, ஆகவேதான் அவனால் அவ்விடத்தில் செளகரியமாக நீண்ட காலம் அக்ஞாதவாசம் செய்ய முடிந்தது. ஆனால் வேலையின்றிச் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை அவனுக்கு. ஆகையால் அவன் தன் சங்கத்தின் ஆலோசனையை வேண்டிக் கடிதம் எழுதினான். சங்கத்தின் உத்தரவுப்படி ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி நிலையங்களைத் துவக்கினான். ஒரு நாள் தேசாந்திரிப் பாடகன் போல் வேடமணிந்த ஒருவன் அவனுக்கு ஒரு செய்தி கொண்டு வந்தான், 'போலீஸ் அவனைத் தேடிக்கொண் டிருக்கிறது, அவன் அங்கிருந்து ஓடிவிடவேண்டும்!' என்று.

இப்போது நரேன் தாஸின் வீட்டு விளக்குகள் அணைந்துவிட்டன. ரஞ்சித காவிநிற ஜிப்பாவும் அதன்மேல் கையில்லாத குட்டைக் கோட்டும் அணிந்திருந்தான், கோட்டின் உட்புறப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தான். அவன் அதில் வைத்திருந்த சாமான் பத்திரமாக இருந்தது. எதிரில் இருட்டில் ஏதோ உறுமும் ஒலி, அவசர அவசரமாக ரிவால்வரை எடுக்கக் கோட்டுக்குள் கையை விட்டபோது அவனுக்குத் தோன்றியது. அது அவர்களுடைய வளர்ப்பு நாய். அவனுக்கு விடை கொடுக்க வந்திருக்கிறது போலும்.

"இங்கே என்ன வேலை உனக்கு ? வீட்டுக்குப் போ" என்று ரஞ்சித் சொன்னான்.

*தாரோகா- போலீஸ் இன்ஸ்பெக்டர்.

HTTI

IT

5

506நாய் அவனோடு நடக்க ஆரம்பித்தது. ''நீ போ, போ! நான் இவ்வளவு நாள் கழிச்சு ஒரு நல்ல காரியம் செய்யப்போறேன்!''

நாய் அவன் பேச்சைக் கேட்காமல் அவனுடனேயே நடந்தது. "சொல்றேனே, காதிலே விழல்லே ? '' நாய் அவனுடைய கால்களில் விழுந்து சுருண்டு படுத்துக் கொண்டது.

"போதும், போதும் ! நமஸ்காரம் பண்ணினது போதும்! இப்போ வீட்டுக்குப் போ!"

நாய் குளத்தங்கரையை நோக்கி ஓடியது. மருத மரத்தடியில் நின்றுகொண்டு அவன் எங்கே போகிறான் என்று பார்த்தது. ரஞ்சித் மாலதியின் குடிசை வாயிலில் நின்றான். மூங்கில் படல். டார்ச்சை அடித்துப் படல் கொஞ்சமாவது திறந்திருக்கிறதா என்று பார்த்தான் ரஞ்சித். அது திறந்திருக்கவில்லை. அவன் வெளியிலிருந்து மெல்லிய குரலில் கூப்பிட்டான் “மாலதி !” என்று. விழித்துக்கொண்டுதான் இருக்கிறாள் அவள். அவன் ஒரு தடவை கூப்பிட்டதும் அவள் எழுந்து உட்காரும் அரவம் கேட்டது. ரஞ்சித்தின் குரலை அடையாளங் கண்டுகொண்ட மாலதியின் நெஞ்சு அடித்துக்கொண்டது. அவள் நடுங்கும் கைகளால் படலைத் திறந்தாள்.

"நான் தான்.'' மாலதி ஒன்றும் பேசவில்லை. *இந்தத தடவை நாம் போகலாம்.” மாலதிக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாம போகலாம்!' என்ற வார்த்தைகளால் என்ன சொல்ல விரும்புகிறான் அவன் ? அவள் தலையைக் குனிந்து கொண்டு அசையாமல் நின்றிருந்தாள்.

''என்னோட நீயும் வா." “எங்கே ?" "கண் போகிற இடத்துக்கு.'' "நான் உனக்கு ஒரு விஷயம் சொல்லணும், டாகுர்." "இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லே நீ . தாமதமானால் பிடிபட்டுடுவோம். கிளம்பு உடனே !''

''எனக்குப் பயமா இருக்கு, உன் கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லாட்டா.''

"போற வழியிலே எல்லாம் கேட்டுக்கறேன். சீக்கிரம் வா." மாலதி குடிசைக்குள் நுழைந்து இரண்டு வெள்ளைப் புடைவைகள், பாவாடைகள், ஒரு மாக்கல் தட்டு இவற்றை எடுத்துக் கொண்டாள்.

"இவ்வளவையும் தூக்கிண்டு உன்னாலே நடக்க முடியாது."

507மாலதி தட்டை வைத்துவிட்டு வந்தாள். "பொழுது விடியறதுக் குள்ளே சாலமரக் காட்டுக்குள்ளே நுழைஞ்சுடணும்" என்று ரஞ்சித் சொன்னான்.

அவர்கள் ஆற்றுப் படுகையில் நடந்து போகும்போது தோடார் பாகின் மறுபக்கத்தில் யாரோ டார்ச்சைப் போட்டுக்கொண்டு வரும் அரவம் கேட்டது. குதிரைகளின் குளம்பொலி. இரவோ டிரவாகச் சந்தோஷ் தாரோகா கிராமத்தைச் சூழ்ந்துகொண் டிருக்கிறான் என்று ரஞ்சித்துக்குப் புரிந்தது. “தண்ணியிலே குதிச்சுடு!" அவன் மாலதியிடம் கூறினான்.

போலீஸ்காரர்கள் டார்ச்சை அணைத்துவிட்டு நடந்து போனார்கள். அவர்கள் நீரில் குதித்த அரவம் போலீசுக்குக் கேட்டிருக்கும் என்று ரஞ்சித்துக்குத் தோன்றியது. அவன் மாலதியிடம், எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மறுகரையை நோக்கி நீந்தச் சொன்னான்

அவர்கள் நீந்திப் போய் மறுகரையை அடைந்தார்கள். டார்ச்சின் வெளிச்சமும் அந்தக் கரையில் வந்து விழுந்தது. ரஞ்சித் பிடிபட்டு விடுவானோ ? அவர்கள் அவனைத் தேடுகிறார்கள்.

இந்த ஆபத்தான நிலையிலும் ரஞ்சித் சற்றும் சலனமடையவில்லை. மாலதியும் கூட இருப்பதால் அவனுக்குச் சற்று அசௌகரியம். அவ்வளவுதான்! அவன் சொன்னான் :"'நான் தப்பிப்போயிடுவேன்னு அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுடுத்து. அதுதான் அவங்க முன்னாலேயே வந்துட்டாங்க."

மாலதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

“உனக்கு என்ன வந்தது?'' "டாகுர், நீ ஓடிப்போ ! நீ தாமதம் பண்ணினா உன்னைப் பிடிச்சுடு வாங்க '

அவன் சற்றும் பரபரப்படையாமல் மெல்லச் சிரித்தான். மாலதி யிடம் சொன்னான், ''இதை எடுத்துப் போட்டுக்கோ. எவ்வளவோ ஆபத்திலேருந்து என்னைக் காப்பாத்தியிருக்கு இது."

அவன் மாலதியிடம் ஒரு கறுப்பு நிறப் *புர்க்காவை எடுத்துக் கொடுத்தான். அவர்கள் காட்டுக்குள் நுழைந்து உடை மாற்றிக் கொண்டார்கள். அவன் தன் சூட்கேசிலிருந்து ஏதேதோ சாமான் களை எடுத்தான். ஒரு துப்பாக்கியை எடுத்து மாலதிக்கு டார்ச் ஒளி யில் விளக்கினான். "இதோ பார், இதுதான் ரிவால்வரோட குதிரை. இதை அழுத்தினால் குண்டு வெளியிலே பாயும். இதை நன்னாப்

*புர்க்கா - கோ ஷாப் பெண்கள் தங்கள் உடலை மறைத்துக்கொள்ள அணியும் -உடை . 1

508
பிடிச்சுக்கணும். நன்னாக் குறிவைக்கணும். இதென்ன மாலதி ? ஏன் ஓங்களிக்கறே ?''

ஓங்களித்துக்கொண்டே இருந்ததால் மாலதியால் பதில் பேச முடியா வில்லை .

"உனக்கு என்ன வந்தது, மாலதி? எனக்கு ஒண்ணும் புரியல் லியே? விளக்கமாச் சொல்லேன்.''

மாலதி ரஞ்சித்திடம் இவ்வளவு நாட்களாகச் சொல்ல விரும்பி யதை, அருவருப்பிலும் தயக்கத்தாலும் இதுவரை சொல்லாமல் இருந் ததை, இப்போது சொல்லிவிட்டாள்.

"டாகுர், நான் அம்மாவாகப் போறேன், மூணு பிசாசுகள் என்னை அம்மாவாககிட்டாங்க !" மேலும் பேச முடியாமல் அவள் ஓங்களித் தாள்.

இருட்டில் ரஞ்சித்துக்கு ஒன்றும் தெரியவில்லை. அவள் அவன் காலடியில் உட்கார்ந்திருந்தாள். மறுகரையில் தொடர்ந்தாற்போல் எண்ணற்ற டார்ச்சு விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. ஆனால் காட்டுக்குள் அதிகம் நுழையவில்லை. சிறு ஒளிக்கீற்றுகள் மட்டும் மழைத் தூறல் போல் இலைகளின் இடைவெளிகள் வழியே வந்தன. ரஞ்சித மண்டியிட்டு உட்கார்ந்தான். மாலதியின் தலைமேல் வைத்தான். ''நாம ரொம்பத் தூரம் போகணும். மாலதி எங்கே போவோம்னு தெரியல்லே எனக்கு. நீ எழுந்திரு!"

முன் ஒரு தடவை சோனாவின் பைத்தியக்காரப் பெரியப்பா யானை மேல் உட்கார்ந்துகொண்டு கடந்த ஆற்றங்கரைக் காட்டில் ரஞ்சித்தும் மாலதியும் ஒரு மரத்தடியில் அருகருகே படுத்துக் கொண்டு காலைக்காகக் காத்திருந்தார்கள். ரஞ்சித் ஒரு வார்த்தை யும் பேசவில்லை. பயந்திருந்த மாலதி புல்லுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண டிருந்தாள். இருவருமே இரவு முழுதும் விழித் திருந்தார்கள். இவ்வளவு நிகழ்ந்த பிறகு என்ன பேச்சு பேசினால் சகஜ நிலைக்குத் திரும்பிவர முடியும் என்று ரஞ்சித்துக்குப் புரிய வில்லை. அவன் இந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கே போவான் ? அவளை எங்கே, யாரிடம் விடுவான் ? மரக்கிளைகள் காற்றில் அசைந்தன. மரங்களின் இலைகளில் நிலவு -- முடியப் போகும் இரவின் நிலவு விழுந்தது. 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்!' யாரோ உரத்த குரலில் படிக்கிறாற் போன்ற பிரமை ""அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம்.''

அதிகாலையில் கிழக்கு வெளுக்கு முன்பே மாலதிதான் ரஞ்சித்தை எழுப்பினாள். விடியற்காலையில் அவன் தூங்கிப் போயிருந்தான்,

509ரஞ்சித் பரபரத்துக்கொண்டு எழுந்தான். ஒரு லுங்கியணிந்து கொண்டான். தன் சூட்கேஸிலிருந்து கோந்தும் கொஞ்சம் சணலும் எடுத்துத் தன் முகத்தில் ஒட்டிக்கொண்டு முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறிவிட்டான். இப்போது அவன் ஒரு மியான் சாயபு. அவனுக்கு அருகிலுள்ளவள் புர்க்கா அணிந்த அவனுடைய பீபி. கட்கத்தில் ஒரு கிழிந்த குடை , மியானும் பீபியும் உறவினர் வீடு போகும் பாவனையில் நடந்தனர். சற்றே நொண்டி நொண்டிக் கொண்டு நடந்தான் ரஞ்சித்.

போகும் வழியில் மாலதி சொன்னாள் ; "டாகுர், என்னை ஜோட்டன் கிட்டே விட்டுட்டுப் போ!''

ரஞ்சித் ஒன்றும் சொல்லவில்லை. இந்த நிலையில் அவளை வேறு எங்கே கூட்டிக்கொண்டு போவது? அவர்கள் தர்காவை நோக்கி நடந்தார்கள். நாள் முழுதும் நடந்தால் தர்காவை அடையலாம். மாலதியை ஜோட்டனிடம் விட்டுவிட்டு அவன் வேறெங்காவது போகத் தீர்மானித்தான்.

நடந்துகொண்டே அவன் யார் மேலோ கோபங் கொன்ட வனாக அந்தக் காட்டுக்குள்ளே உரக்கக் கூவினான் : "வந்தே மாதரம்," அவனுடைய கோபம் ஜப்பர் மேலா அல்லது சந்தோஷ் தாரோகா மேலா என்று ரஞ்சித்தின் முகத் தோற்றத்திலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

முதற்பாகம் நிறைந்தது.