தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, July 28, 2014

Trees - Joyce Kilmer & Welcome and Farewell by Johann Wolfgang von Goethe

Joyce Kilmer. 1886–1918

Trees

I THINK that I shall never see
A poem lovely as a tree.

A tree whose hungry mouth is prest
Against the sweet earth's flowing breast;

A tree that looks at God all day,        
And lifts her leafy arms to pray;

A tree that may in summer wear
A nest of robins in her hair;

Upon whose bosom snow has lain;
Who intimately lives with rain. 

Poems are made by fools like me,

But only God can make a tree.

********************

Leena Manimekalai (https://www.facebook.com/lmanimekalai/posts/10152565760382645)
7 hrs · 31/07/2014 7.05 AM

So therefore I dedicate myself, to my art, my sleep, my dreams, my labors, my sufferances, my loneliness, my unique madness, my endless absorption and hunger because I cannot dedicate myself to any fellow being.― Jack Kerouac
Thanks Karthik Muthuvali

“Oh, the comfort, the inexpressible
comfort of feeling safe with a person;
having neither to weigh thoughts nor
measure words, but to pour them all
out, just as they are, chaff and grain
together, knowing that a faithful hand
will take and sift them, keep what is
worth keeping, and then, with a breath
of kindness, blow the rest away.”



- George Eliot Leena Manimekalai shared Nitesh Noor Mohanty's photo.

#####################################

Shanmugam Subramaniam liked this.

Lenin Akathiya

அவளை அடிக்கடி பார்க்கக்கூடாது என்று மனத்தில் உறுதி எடுத்துக்கொள்வேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடிந்தால்தானே! ஒவ்வொரு நாளும் என்னுடைய ஆசைக்கு நான் அடிபணிந்து விடுகிறேன்.

உடனடியாகவே இன்றோடு சரி, நாளைக்கு அவளைப் பார்க்கக்கூடாது என்று மிக சிரத்தையாக உறுதியெடுத்துக்கொள்வேன். மறுநாள் விடிய வேண்டியதுதான்.

உடனேயே ஆவலைத் தடுக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, எனக்குத் தெரியாமலேயே, அவளிடம் போய் நின்றுவிடுவேன்.


- காதலின் துயரம் நாவலில் இருந்து....
- கதே
Welcome and Farewell

- Goethe

[Another of the love-songs addressed to Frederica.]

QUICK throbb'd my heart: to norse! haste, haste,

And lo! 'twas done with speed of light;
The evening soon the world embraced,

And o'er the mountains hung the night.
Soon stood, in robe of mist, the oak,

A tow'ring giant in his size,
Where darkness through the thicket broke,

And glared with hundred gloomy eyes.

From out a hill of clouds the moon

With mournful gaze began to peer:
The winds their soft wings flutter'd soon,

And murmur'd in mine awe-struck ear;
The night a thousand monsters made,

Yet fresh and joyous was my mind;
What fire within my veins then play'd!

What glow was in my bosom shrin'd!

I saw thee, and with tender pride

Felt thy sweet gaze pour joy on me;
While all my heart was at thy side.

And every breath I breath'd for thee.
The roseate hues that spring supplies

Were playing round thy features fair,
And love for me--ye Deities!

I hoped it, I deserved it ne'er!

But, when the morning sun return'd,

Departure filled with grief my heart:
Within thy kiss, what rapture burn'd!

But in thy look, what bitter smart!
I went--thy gaze to earth first roved

Thou follow'dst me with tearful eye:
And yet, what rapture to be loved!

And, Gods, to love--what ecstasy!

1771.



Restless Love

THROUGH rain, through snow,
Through tempest go!
'Mongst streaming caves,
O'er misty waves,
On, on! still on!
Peace, rest have flown!

Sooner through sadness

I'd wish to be slain,
Than all the gladness

Of life to sustain
All the fond yearning

That heart feels for heart,
Only seems burning

To make them both smart.

How shall I fly?
Forestwards hie?
Vain were all strife!
Bright crown of life.
Turbulent bliss,--
Love, thou art this!

1789.



Saturday, July 26, 2014

சூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்

சூன்யப் பிளவு - கைலாஷ் சிவன்

அகாலம்
இருளில் நெளியும் ஒளிவரிகள்
கொடியால் படரும்
தனித்திருக்கும் ‘நான்-இல்’
எரிந்த நிணம்
கரி-ஆகா எலும்புகள்
உதிர்ந்து
சுவாசம் தரிக்க
அதிர்ந்தெழும்பும் ஒலி ரூபத்தின்
ஸப்ததாது
சுயம் தேடும்
தீரா அவஸ்தையின்
‘வேள்வித் தீ’
இருள் வெளிக்குள்
பின்னகரும்
ஒற்றை  நதி
அந்த ஹூங்காரத்தின்
சூன்யப் பிளவிற்குள்
சொட்டுச் சொட்டாய்
மூச்சு விடும்
ஜனன மூலாதாரம்
அது ஏனென்றாய்?
ஒன்றுமில்லை
இருள் சக்திக்குள்
நீர் கோர்க்கும்
மௌனத் துளிகள்
சிரசின் முடிச்சுகளில்
கவியும்
மேக ஸ்தம்பங்கள்
உயிரின்
ஓளி விரல்கள்
ஸ்பரிசம் பட்டு
மனிதாத்மம் - ஆகும்
பிரபஞ்ச விஸ்தாரம்
‘சமுத்திர அலைகள்
கால்களுக்குள் உருண்டு ஓட
சிரசில் தெறிக்கும்
உயிர் முடிச்சு’
எதன் நீட்சியோ
எதையோ தீண்டி
ஸ்தூல மெங்கும்
உள்தகித்து
பாய்ந்து ஓடும்
உதிரம் நதி.

அதோ உன் கண்களுக்குள்
ஸப்திக்கும்
ஓர்
நதியின்
பிரவாஹம்

காலத்தை காலம் தீண்டி
கருக்கொள்ளும்
‘கவிதார்த்தத்தின் தர்ஷனப் பிழம்பு’
அதன் உயிர் முகம்
நீ.

(பிரபஞ்ச ஜீவி பிரமீளுக்கு)

Tuesday, July 22, 2014

வெறுமை அற்ற வெற்றுத்தாள் & இசை ஆனந்தம் : சாக துணிந்த க்ஷணத்தில் - கைலாஷ் சிவன் & இசை தரும் படிமங்கள் - சுகுமாரன்

வெறுமை அற்ற வெற்றுத்தாள் - கைலாஷ் சிவன்

கவிதை கேட்டு வந்தான்
ஒருவன்
வெறுமை அற்ற
வெற்றுத் தாளாக - உன்னால்
கவிதை தர முடியுமா?
ஒரு வரி - ஒரேயொரு வரியில்
நண்பா
‘நீ எறிந்த கல் ஒரு குளத்தில்’

இசை ஆனந்தம் : சாக துணிந்த  க்ஷணத்தில்

1.
அடங்கா குதிரையின்
கொந்தளிப்பு
பசிதீரா தீ நாக்குகளில்
எரியும் விழிகள்

2.
இறுகும் முடிச்சு
திமிறி
முட்டி மோத
சுற்றிலும்
திசைச் சுவர்கள்
நிழல்களாய்
அசையும் காற்று
நிஜம்
‘?’

3.
வெளியேற
திடம் கொண்ட
‘நான்’
நிழலசையும்
இடுக்கு நோக்கி
கிழித்த
தீக்குச்சி வெளிச்சம்
இருளை உதறித்தள்ள
பதறும் படிக்கட்டுகள்
பரிதவிக்கும் மூச்சு
அதோடு கூட
நிஜம் கருகிய நிழலாய்
‘நான்’

4.
ஓ!
அ(க்ஷ்)க்ஷணம் தான்
ஒலி அலைகள்
அசைந்தசைந்து
நெய்த இசை ரூபம்
மிதந்தூர்ந்து
புலன்களில் ஈர்ந்து
மருவி கசிய
உயிர் கோர்க்கும்
ஓளி வியர்வைகள்

5.
மிதந்தறியும்
ரூபத்தை
பின் தொடர்ந்த
‘நான்’
தூரம் தூரமாய் சென்று
தனித்திருந்து
வியந்து
சுடராய்
தன் முகம் கொள்ள
கண்களுக்குள் பூத்துச் சிரிக்கும்
அரூப பாஷைகள்
ஓர் ஆநந்தம்

6.
காலம் காலமாய்
பதுங்கி உறைந்து
புதைந்த
சொற்கள்
மனிதர்கள்
இன்னும் பிற
புகைந்து எரிந்து
சாம்பலாகும் க்ஷணங்கள்
ஓர் நிச்சலனம்

7.
ஏதோ வொரு
புள்ளியை
தொட்டுணர்த்தி
மையம் கடந்து
மையம் அழிந்து
திடரூப - ‘நான்’
தன்னில்
பஸ்பம்
மீண்டும் உயிர்த்தெழும்
அது எது?
ஜீவ சப்தங்கள்

8.
விதவித நிறங்களில்
ஒளி அடர்ந்த
தைலங்கள்
ஒன்றுடன் ஒன்று
புணர்ந்து
பெருகும்
கோடி கோடி

ஜாலங்களின்
வர்ண பாஷைகளின்
ஓர்
ஆநந்தம்.

9.
பிரக்ஞை குமிழ்கள்
உடைந்துடைந்து
நாதரூபம் தரிக்கும்
பிரபஞ்ச கதிக்குள்
ஒளியும் ஒலியும்
இசைந்து கோர்க்கும்
இசையின்
ஸ்வரூபங்கள்
சித்-சித்-ஆநந்தம்

10.
உயிரின் பிரக்ஞை
இமை திறந்தபோது
அறிவும் - உணர்வும்
குவிந்தோர்
ஆலிங்கனம்
மீண்டும்
புலனாகும்
இங்கோர்
சிருஷ்டி
அது என்ன?
கவிதை


(தமிழ் செல்வனுக்கு)



















































































































http://thooralkavithai.blogspot.in/2011
/04/blog-post_10.html

ஜெ.மோ.பரிந்துரைத்த சுகுமாரன் கவிதைகள்


 இசை தரும் படிமங்கள்

1.
விரல்களில் அவிழ்ந்தது தாளம்
புறங்களில் வீசிக் கசிந்தது குரல்

கொடித் துணிகளும்
சுவர்களும் விறைத்துக்கொண்டன‌

ஈரம் சுருங்கிய பிடிமணலாய்ப்
பிளந்தேன்
தொலைவானின் அடியில்
நூலறுந்த பலூன்

யாரோ தட்டக் -‍' கதவைத் திற'
வெளிக்காற்றில்
மழையும் ஒரு புன்னகையும்
(ஹரிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும்)

2.
புல்லாங்குழல்
சகல மனிதர்களின் சோகங்களையும்
துளைகளில் மோதிற்று

கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்
ரத்தமாய்ப் பெய்தன‌
அறையெங்கும் இரும்பின் வாசனை

மறு நிமிஷம்
என் உப்புக் கரைந்து எழுந்தது
மல்லிகை மணம்
(ஹரிபிரசாத் சௌரஸ்யாவுக்கு)

3.
மழை தேக்கிய இலைகள்
அசைந்தது
சொட்டும் ஒளி

கூரையடியில் கொடியில் அமர‌
அலைக்கழியும் குருவி

காலம்-‍ ஒரு கண்ணாடி வெளி

எனக்கு மீந்தன‌
கண்ணீரும் சிறகுகளும்
(யேசுதாஸுக்கு)

4.
குழம்பியிருந்தது சூரியன் அதுவரை
கரை மீறிய கடல்
என் சுவடுகளைக் கரைத்தது
இசை திரவமாகப் படர்ந்து உருக்க‌
செவியில் மிஞ்சியது உயிர்
திசைகளில் துடித்த தாபம்
சகலத்தையும் பொதிந்துகொள்ள விரிந்தது

அண்ணாந்தால்
கழுவின கதிர்களுடன் வெளியில் சூரியன்
(ஸாப்ரிகானுக்கு)

கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

தனிமை இரக்கம்

வந்து போகின்றன பருவங்கள் தடம் புரண்டு
வசந்தம் நாட்கணக்கில்
எனினும்
வருடம் முழுதும் இலைகள் உதிர்கின்றன‌
வெற்றுக் கிளைகளாய் நிமிர்ந்து
கபாலத்தைப் பெயர்க்கிறது தனிமை

திசைகளில் விழித்து நிராதரவாய் வெறிக்கின்றன‌
உனது நீர்த்திரைக் கண்கள்
அலைகளின் இடைவேளைகளில் உயிர்த்துத் ததும்புகிறது
உனது சோக முகம்
காலடி மணலின் துகள்கள் பிளந்து அலைகிறது
உனது பெயரின் தொனி

வேட்டை நாய் விரட்டல்,
இளைப்பாறுதலின் சங்கீதம் என
அகல்கிறது நாட்களின் நடை

வெளியில் போகிற எப்போதும்
காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை
இதோ உன்னிடமிருந்தும்
ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்

முதல் பெண்ணுக்குச் சில வரிகள்

இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்
அல்லது
இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என‌
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதி காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப் பொருட்களுடன் குதூகலமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ, காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்து வைக்கும் கதவுகளில்
வெறுமையின் தாள ஒலி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச் சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப் பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப் பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்க‌ள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப் போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலைந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக மிஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்
இன்னும் நான் நேசிக்கும் முதல் பெண் நீ...



‍நதியின் பெயர் பூர்ணா

முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறௌக்குத் தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில்
தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்

போதைக்கும்
கனவுக்கும் இடைப்பட்ட‌
காலமற்ற பொழுதில் வந்தாய் நீ

கருவறை விட்டெழுந்த அவ்சரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை

கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள்
துளியாய் விழுந்தேன்

'யாதுமாகி நின்றாய் காளி
என்கும் நிறைந்தாய்'

2.

பூர்ணா நதியின் மடிப்புகளில்
ஒடுங்க மறுத்தது
அலைகிறது சூரிய வெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத‌
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நொடியில்
பூமி மயங்கி
மீண்டும் விழித்தது

கற்படியின் குழியில் தேங்கிய நீர்
வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில் குளிர்.
நதியும் அத்வைதிதான்‍
போதையும் கனவும் போல‌

கடவுளைப் புணர்ந்த ஆனத்தம் கொண்டாட‌
நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய‌
நீயும்
மூழ்கிக்கொண்டிருக்கிறோம் தேவி
ஒரே நதியில்

உன் பெயர்

உன் பெயர்‍-

கபாலத்தின் உட்கூரையில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணை வரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணி நிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-
இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச்சொல்லும் வினோதக் கோரிக்கை*
கொய்யப்பட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம்,அலைச்சலில் ஆசுவாசம்,குதூகலம்
நீயே என் துக்கம்,பிரிவின் வலி

காலம் அறியும்:
உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு

நீயே அறிபவள்
நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரோ உனக்கு?

உன் பெயர்-
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்
*தனது காதலின் பரிசாகக் காதை அறுத்துத் தந்த வான்கா என்ற ஓவியன்

                                                                **யோவானின் தலையை அன்பளிப்பாக                                                                               வேண்டிய பைபிள் பாத்திரம்

Monday, July 21, 2014

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி - பாபநாசம் சிவன் & நீ வரவில்லையெனில் ஆதரவேது .. - மருதகாசி

தாயே ஏழைபால் தயை செய்வாயே

ராகம்: பைரவி

தாளம்: ஆதி

இயற்றியவர்: பாபநாசம் சிவன்

பல்லவி

தாயே ஏழைபால் தயை செய்வாயே
தயாபரி சங்கரி - சகல லோக நாயகி ( தாயே )

அனுபல்லவி

நாயேனுன் பாலன்றி எங்கே செல்வேன்
நளின மிருதுள சுகுமார மனோகர
சரணயுகல மருள தருணமிதுவே என் ( தாயே )

சரணம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசை கோட்டை கட்டி
புண்ணாக நெஞ்சம் புலம்பும் மடம்(இடம்)
போதும் இனி முடியாது உனதடி
இப்போது அடைய இது போது வரம் அருளும் என் ( தாயே )

கற்பகம் பாட்டி பாடிய கானாம்ருதங்கள்


நீ வரவில்லையெனில் ஆதரவேது .. - மருதகாசி

http://www.mayyam.com/talk/showthread.php?6089-ONNEY-ONNU-KANNAEY-KANNU&s=5fffc9716d06426fa625785886a45197&p=254311&viewfull=1#post254311

from 'Mangaiyar Thilagam - by M.Sathyam (he sang maybe 1 more tamil song)
Lyric : Maruthakasi 
Music: S. Dakshina Moorthy

நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
வாடிய துளசி வாடாமல் வாழ்ந்திட
நீ வரவில்லையெனில் நீரைப் பொழிந்து
அன்போடு காப்பவர் யார் இந்த வீட்டினில்
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் 

நீ வரவில்லையெனில் நிழலும் ஏது
நேசம் பாசம் வளருவதேது
நிம்மதி இன்பம் என்பது ஏது
நிலையாய்த் தென்றல் வீசுவதேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் 

ஆறுதல் அளித்திடும் அன்னையின் அன்பை
அனாதை நானும் அறிவதும் ஏது
நீ வரவில்லையெனில் நிலவின் குளுமை
இனிமை எல்லாம் ஏது வாழ்விலே
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் 

காரிருள் நீக்கும் கலைத்தேன் நிலையே
காவியம் புகழும் கலாவாணியே
நீ வரவில்லையெனில் இதயம் தனிலே
ஜீவநாதம் எழுவதும் ஏது

நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் !


அவளா சொன்னாள் இருக்காது - வாலி

http://songlyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=3994&mode=Language&Language=0

வாலி
செல்வம் - திரைப்படம் 

பல்லவி


அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...


இசை சரணம் - 1

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

இசை சரணம் - 2

உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
நம்ப முடியவில்லை... இல்லை ...இல்லை...

இசை சரணம்-3

அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

Sunday, July 20, 2014

ஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)

ஆநந்த போதை - ஜே.கிருஷ்ணமூர்த்தி (மொ.பெ. - பிரமிள்)

கனவில் மூழ்கிக் கிடக்கும் கடல்மீது
கிழக்கே உதிக்கிறான் சிவந்த சந்திரன்.
சப்தம் செய்யாமல் வரும் இரவினுள்
கரிய பனை ஒன்று பெருமூச்சு விடுகிறது.

தூரத்தே கூட்டுக்குத் திரும்பும்
ஒரு தனிப்பறவையின் குரல்
கதகதப்பு மறையாத கரையை
குளிர்ந்த சிற்றலைகள் வந்து தொடுகின்றன.

இதயத்தின் வேதனைபோல்
உன்மத்தம் கொண்ட ஆநந்த போதை.
என் தேவை எதையும் புரிந்து கொள்ளும் இதயம்.

ஆழ்ந்துறங்கும் நிழல்களிலிருந்து
புலம்பி எழுகிறது ஓர் இனிய பறவைக்குரல்.
ஒலியற்ற இரவின் காற்று கனன்று கனக்கிறது

ஆனால் என் இதயத்தில் வேதனைபோல்
உன்மத்தம் கொண்ட ஆநந்த போதை

1927 -31.

பிரம்மாண்டம் - சுரேஷ் குமார இந்திரஜித்

பிரம்மாண்டம் - சுரேஷ் குமார இந்திரஜித்

எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது. மன எழுச்சியில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களாக கலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள், அரங்கில். நான், வெண்புரவியாய் மாறி சைக்கிளில் வந்திறங்கினேன். கட்டிடத்தின் பிரம்மாண்டம் என்னை ஈர்த்தது. வாசலில் பளிங்குத்தரையில் நின்றிருந்த வேளை, காற்று உற்சாகத்தைத் தூண்டும்படியாக, பிரம்மாண்ட கட்டிடத்தை எதிர்கொள்ளும் முறையில் வீசியது. காற்றில் குதூகலித்த, புல்லாங்குழல் இசை தன் இடத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. மாடிப்படிகளின் வழியே நான் ஓடினேன். இசையின் இடத்தை நெருங்கி விட்டேன். அறை வாசலில் நிதானித்து உள்ளே பார்த்தேன். இருள்வெளியை தன் இயற்கையாகக் கொண்டிருந்தவன், ஆற்றலை இசையாக்கிக் கொண்டிருந்தான். இருள்வெளி குதூகலித்துக் கொண்டிருக்கவேண்டும். எதிரே ஒரு பெண். ஆனந்தபைரவி. நான் ஏற்படுத்திய சலனத்தில், திரும்பி, என்னைப் பார்த்தாள். ராகமே அவளென வடிவெடுத்திருந்தாள்; உற்சாகவெளியில் நான். வாசிப்பவனின் வலப்பக்கத்தில் அவன் பின்னே சென்று அமர்ந்தேன். அவளைப் பார்க்க என்னால் இயலாது என்று தோன்றியது. என் நலன் கருதிய விசித்திர சக்தியொன்று பெரிய நிலைக்கண்ணாடியொன்றை வாசிப்பவனின் இடப்பக்க சுவரையொட்டி வைத்திருந்தது. கண்ணாடியில் அவள். இரண்டு டியூப்லைட்டுகளின் வெளிச்சத்தில் கண்ணாடி மின்னியது. மின்னும் கண்ணாடிக்குள் ராகமென அவள்.

இருளில் வாசிப்பவன், இசையை முடித்து, புல்லாங்குழலை வைத்துவிட்டுக் கைகளினால் தரையைத் தடவி  அதைக் காட்டிலும் பெரிய புல்லாங்குழலை எடுத்து வைத்துக்கொண்டான். ராகமென நின்றிருந்தவள் ஒரு பாடலை வாசிக்கச் சொன்னாள். இருள்வெளி மீண்டும் குதூகலித்தது. கண்ணாடியுள் நான் நுழைந்தேன். எங்கும் அவள் பிம்பமெனக் கண்ணாடி ஜொலித்தது. இசை, அவளின் முழங்கையாக, பின் விரல்களுமாக மாறியது. பாறைகளில் வெண்மையாய் சிதறிக்கொண்டு நதி பாயந்து வருகிறது. பசுமெபுல்வெளி எங்கும் படர்ந்தது. அவள் கைகள் கண்ணாடியுள். திரும்பும் திசையெங்கும் அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள்.

கண்ணாடியுள்ளே, அவள் என்னைப் பார்த்து விட்டால், நானும் அதைத் தாங்க இயலாது நொய்ந்து விடுவேன் என்றும் தோன்றியது. கண்ணாடியின் ஜொலிப்பில் கண்கள் கூசின. அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள் என்னைச் சுற்றி சுழன்றன. இசையின் ஒரு கட்டத்தில் அவள் கண்களை மூடினாள். அவள் சிந்தையெங்கும் இசையே ஆனதான பிரகாசத்தை முகம் கொண்டது.  மேகமண்டலம், பனிமலை, எங்கு நோக்கினும் பனி படர்ந்த குன்றுகள். சந்நிதியின் முன் தோன்றுவது, அந்த பாவம். ஆஹா ஆஹா என்று கோஷமிட்டு தேவராட்டம் ஆடினர், மனிதர்கள். திரைவிலக சூத்ரதாரி கூத்தனாய் ஆடினான். அரங்கில் கேட்ட பாகேஸ்வரி இப்பாட்டிற்குள் ஊடுருவியது. கண்களைத் திறந்தாள். கண்கள் ஒளிர்ந்தன. பரவசத்தில் முகம் வசீகரம் கூடி பிரகாசித்தது. பாறைகள் முழங்கின.

மனிதர்கள் வினோத ஆடைகளுடன் ஒரு சேர ஒழுங்காக ஆடிக்கொண்டே பாடினர். மீண்டும் கண்ணாடிக்குள் நான். அவள் முகம், அவள் வடிவம். அவள் முழங்கை. அவள் விரல்கள். கண்ணாடியின் ஜொலிப்பு. ஆனந்த பைரவியும் அவளே; பாகேஸ்வரியும் அவளே. புலம்பாதே மனமே. அதீத கற்பனை வயப்படாதே. நான் கற்பனை வயப்படுவேன். குதூகலிப்பேன். இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கு அரிது. சிறு குருவியெனக் காற்றைக் கிழிப்பேன். கிளைகளில் அமருவேன். மரம் விட்டு மரம் பறப்பேன். ஸாக்ஸபோனின் கல்யாண வசந்தமாக காற்றில் படர்வேன். இருளில் வாசிப்பவன், வாசிப்பை நிறுத்தினான்.

அவள் கூட வந்திருந்த மனிதர், கிளம்புவதற்கு சமிக்க்ஷை காட்டினார். இருளில் வாசிப்பவனையும் சாப்பிடக் கூப்பிட ஆட்கள் வந்தனர். இக்குழப்பத்தில்  அவள், அவனிடம் சொல்லிக் கொண்டு விடை பெற்றாள். மாயம் போல் மறைந்தாள். கண்ணாடி வெறுமையாய் மின்னியது. சாப்பிடக் கூப்பிட வந்தவர்களை பொருட்படுத்தாது அவன் தேக்ஷை வாசிக்க ஆரம்பித்தான். நிர்ப்பந்தத்தால் நிறுத்தி விட்டுப் புல்லாங்குழலை உறையில் வைத்து விட்டு, கழியைத் தேடினான். நான் அறையை விட்டு வெளியே வந்தேன். பிரம்மாண்டமான கட்டிடம். அதற்கேற்ற காற்று. ஒன்றிரண்டு நண்பர்களே நின்றிருந்தனர். விடை பெற்று என் வெண்புரவியில் ஏறி, முன்னால் சாக்கடை ஓடும் என் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். அப்போது பிரம்மாண்டங்களை விழுங்கி இருள்வெளி விகசிக்க ஆரம்பித்தது

-கனவு, 11
 -1989

தட்டச்சு : ரா ரா கு


புனைவுகளின் உரையாடல்

சுரேஷ்குமார இந்திரஜித்



நானும் நண்பர் கிளாடியஸ் குலோத்துங்கனும், அந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தோம். குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைக்குள் மது அருந்துவதைக் காட்டிலும், உயரமான மொட்டை மாடியில் மது அருந்துவதே பிரியந்தரக்கூடியதாக உள்ளது.

நண்பர் நகரிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் நிர்வாக இயக்குநர். தெருவோரக்கடைகளில் உணவு சாப்பிடுவதும் இதைப்போன்ற இடங்களில் மது அருந்துவதுமே அவருக்கு உண்மையில் பிடிக்கும். ஸ்டார் ஹோட்டலின் உடைமையாளர், இப்படி சாப்பிடுவதிலும் மது அருந்துவதிலும் உள்ள பிரச்சினை காரணமாக அதைத்தவிர்த்துவிடுவது வழக்கம். வெளியூர் என்றால் பிரச்சினை இல்லை. நண்பர் எனக்காக வந்திருந்தார். தவிர புறாத்தோப்பிலுள்ள இந்த ஹோட்டலில் உள்ளவர்களுக்கு அவரைத்தெரியவும் செய்யாது. ஊழியர்களை நிர்வகிப்பதில் அவருக்குள்ள உளவியல் பிரச்சினைகள் பற்றியும் ஆங்கிலோ இந்திய ரிஸப்ஷனிஸ்ட் பெண்ணின் பாவனைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். நான் அவருடன் பேசிக்கொண்டே அடுத்த டேபிளில் எனக்கெதிரே அமர்ந்திருந்த அன்னிய நாட்டுப் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அறிவான முகம், நிறம் வெள்ளை அல்ல; பளபளக்கும் மாநிறம். தலைமுடி கறுப்பக இருந்தது.அழகாக இருந்தாள்.அவளுக்கு எதிரேஅமர்ந்திருந்த அன்னிய நாட்டு மனிதன் வெள்ளையாக இருந்தான்.

அன்னிய நாட்டு மனிதர்களைச் சந்திக்கும் சூழலில், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரிப்பது என் வழக்கம். நான் படித்துக்கொண்டிருந்த போது, தெலுங்கு டப்பிங் சினிமா பார்க்கச் சென்ற தியேட்டருக்கருகே இருந்த டீக்கடையில் பார்த்த ஜெர்மனியைச் சேர்ந்த இருவரைப் பற்றி ஏற்கனவே ”பீஹாரும் ஜாக்குலினும்” என்ற சிறுகதையில் எழுதியிருந்தேன். நான் பாரிஸில் இருந்த போது யதேச்சையாக வாங்கிய புத்தகத்தின் ஒரு பகுதியில் நான் அவர்களை அப்போது சந்தித்த விவரம் பற்றி அப்புத்தகத்தின் ஆசிரியகளான அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் ஏற்ப்பட்டதையும், பீஹாரில் கணவரைக் கலவரத்தில் இழந்து அழுது கொண்டிருந்த பெண்ணும் ஜாக்குலின் என்ற பெயர் கொண்ட அவளும் ஒருவர்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டதையும், அவளைச்சந்திக்கும் வாய்ப்பை ஒரு இழையில் தவற விட்டதையும் அச்சிறுகதையில் நான் குறிப்பிட்டிருந்தேன். வாஇப்பை இழந்துவிட்டது இன்னும் என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது.

நான், நண்பரிடம் ‘எக்ஸ்க்யூஸ் மீ’’ என்று நாடகப் பாணியில் கூறி விட்டு, கை கழுவ செல்வதான பாவனையில் அவ\ர்களைக்கடந்து சென்று, கைகளையும் கழுவிவிட்டு, திரும்பி வரும்போது அவர்கள் டேபிளருகே நின்று சிகரெட் பற்ற வைத்தேன். அவனையும், அவளையும் பார்த்துப் புன்னகைத்தேன். பிறகு அவனருகே அமர்ந்தேன். அவனைப்பற்றி விசாரித்தேன். அவன் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் ஓவியன் என்றும் கூறினான்.அந்தப் பெண்ணிடம் அவளைப்பற்றி விசாரித்தேன். அவள் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவள் என்றாள். சில வருடங்களுக்கு முன் நான் ’க்ரையோஜெனிக்ஸ்’ தொடர்பான கருத்தரங்கில்கலந்து கொள்ள பாரிஸ் வந்தது பற்றி இப்போது ஏதும் கூறவில்லை. ( இவ்விஞ்ஞானத்தில் தற்போது எனக்கு நாட்டமில்லை) எனக்கு ஓவியங்கள் பற்றி அதிக அறிவு கிடையாது. அச்சமயத்தில் எனக்கு ’டாலி’ என்ற ஓவியர் பெயர் நினைவிற்க்கு வந்தது. அவர், இத்தாலியா, பிரான்ஸா, ஸ்பானிஷா அல்லது வேறு நாட்டவரா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே ஜாக்கிரதையாக டாலி ஓவியங்களைப் பற்றி விசாரித்தேன்.எனக்குத் தெரிந்த சில ஃப்ரெஞ்சு நாவசிரியர்களின் பெயர்களைக்குறிப்பிட்டேன். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுதான் எனக்குத்தேவை. இந்தியாவில், தமிழ் நாட்டில், மதுரையில் புறாத்தோப்புதெருவிலுள்ள கந்தசாமிக்கோனார் ஹோட்டலின் மொட்டை மாடியில் ஒருவர் வந்து, டாலி ஓவியங்களைப்பற்றி விசாரித்தார் என்றும், ஃஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்களைப் பற்றிக் குறிப்பிட்டார் என்றும் பேசுவான், எழுதவும் செய்வான். மொராக்கோ நாட்டைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு துர்பாக்கிய நிலையில் நான் இருந்தேன்.அவளிடம் மொராக்கொ நாட்டைப் பற்றி விசாரித்தேன். மொராக்கோ நாடு ஃப்ரெஞ்சுக் காலனியாக இருந்து மார்ச் 2, 1956 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது என்றும், இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்றும், அரசர் பெயர் ஹாஸன் II என்றும், பிரதம மந்திரி பெயர் அப்துல் ரஹ்மான் யூசுஃப் என்றும், பார்லி, கோதுமை, பேரீச்சம்பழம் ஆகியவை முக்கியப் பயிர்கள் என்றும் கூறினாள். மொராக்கோ நாட்டின் சரித்திரத்தையும் பூகோளத்தையும் அறிந்தவனாக விடை பெற்று என் நண்பனிடம் மீண்டும் வந்தேன்.

அந்தப் பெண்ணின் வித்தியாசத் தோற்றம், நண்பரையும் கவர்ந்திருக்க வேண்டும். அந்த்ப் பெண்ணைக்குறிப்பிட்டு ’எந்த நாடு?’ என்று கேட்டார். நான் ’மொராக்கோ’ என்றேன் ’வித்தியாசமாக இருக்கிறாள்’ என்றார்.

அடுத்த ரவுண்டுக்குப் போனோம். இந்தச் சந்தர்ப்பத்தில் ’பீஹாரும் ஜாக்குலினும்’ சிறுகதை நினைவுக்கு வந்துகொண்டேயிருப்பதற்கான காரணங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் பற்றி அடிக்கடி கதைகளில் வர நேர்வது பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். அத்துடன் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் பற்றி அடிக்கடி கதைகளில் வர நேர்வது பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். நண்பரிடம் இவை பற்றிக் கூறினேன். ‘ வாழ்வில் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் அதிகமானால், கதைகளிலும் அவை வரத்தானே செய்யும் ? மது அருந்தும் சந்தர்ப்பங்கள் ”க்ரியேட்டிவானவை” என்றார். நல்ல சாக்கு என்று எடுத்துக்கொள்வதா, நல்ல காரணம் என்று எடுத்துக்கொள்வதா என்று யோசனை ஏற்பட்டது.

சர்வர், ஆர்டர் பண்ணியிருந்த சூடான எலும்புகளற்ற கோழித்துண்டுகளையும், முட்டைப்பொரியலையும் கொண்டு வந்து வைத்தான். நண்பர், ஹோட்டலுக்கு அவர் வாங்கியுள்ள சோஃபாக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். தற்போது, ஹாங்காங்கிலிருக்கும் என் கஸினின் மார்க்கெட்டிங் திறமை பற்றி நானும் கூறினேன். அவருடன் நான் கோவையில் தங்கியிருந்த போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது.

நானும் என் கஸினும், ராபர்ட் என்பவருக்காக மதுவும், கொறிப்பதற்க்கான காரங்கள் மற்றும் சுண்டல் ஆகியவைகளையும் வாங்கி வைத்திருந்தோம். அவர் மாலை ஆறு மணிக்கு வருவதாகக் கூறியிருந்தார். மணி ஆறேகால் ஆகியிருந்தது. ’ நாம் ஆரம்பிப்போம்; அவர் வந்து கலந்து கொள்ளட்டுமே ‘ என்றேன். ‘ ’அவரிடம் பிஸினெஸ் பேச வேண்டியிருக்கிறது. அவர் வந்த பின் ஆரம்பித்தால் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இருக்கும்’ என்றார் கஸின். அவர் ஆறரை மணிக்கு வந்து அனைவரையும் போல மன்னிப்புக் கேட்டார்.

ஆரம்பமாகியது. சற்று நேரத்திலேயே பிஸினெஸ் படிந்து விட்டது. இனி சற்று இறுக்கமின்றி இருக்கலாம். வந்திருந்தவன் அதிக மதுப் பழக்கம் இல்லாதவன் எனத் தோன்றியது. மது அவனுக்குப் பரவசத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

’என் மனைவி மிக அழகானவள்; ஆனால் அவள் இப்போது உயிருடன் இல்லை, தெரியுமா?’ என்றான் ராபர்ட். அவனுக்குப் போதை ஏறிவிட்டது என்ற எண்ணத்தை நானும் கஸினும் ஒருவரையொருவர் பார்த்துப் பரிமாறிக்கொண்டோம்.

’நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவள் அவள் ஒரு பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். 27c நல்லூர் பஸ்ஸில் அவள் ஏற வேண்டும்.பஸ் ஸ்டாப்பில் தான்…….. சார் ……. எங்கள் காதல் வளர்ந்தது. நாங்கள் இருவரும் ஒரே மதம். ஆனால் அவர்க்கள் பிள்ளை மார். நாங்கள் கவுண்டர். எவ்வளவு கடிதங்கள் ! இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். இரு வீடுகள் எதிர்ப்புகளுக்கிடையே நாங்கள் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம்.முதல் குழந்தை பிறந்ததும் அவர்கள் வீட்டில் உள்ளோர் சேர்ந்து கொண்டார்கள். அதுவரை பயங்கர கஷ்டம். எனக்குச் சரியான வேலை இல்லை. பிரசவச்செலவுக்குக் கையில் காசில்லை. அவள் வீட்டிலுள்ளோர் சேர்ந்த பின்னர் தான் என் கஷ்டம் தீர்ந்தது. இரண்டு குழந்தைகள்…. இரண்டும் பெண் குழந்தைகள். திடீரென்று இருதய நோய் ஏற்பட்டு இறந்து போய்விட்டாள் ஸார். இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை எப்படி நான் வளர்த்து திருமணம் செய்து கொடுக்க முடியும். வாழ்க்கை என்பதே கஷ்டம்தான். இப்படி என்னை விட்டுப் போய்விட்டாள். அவளை மறக்க முடியவில்லை. அவள் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான் எனக்கு ஆறுதல் தருகின்றன. ‘

இப்படி ஒரு நிலைமை அவனுக்கு ஏற்பட்டதற்காக நாங்கள் வருந்தினோம். அவனுடைய வெள்ளை மனது எங்களைக் கவர்ந்ததாகக் கூறினோம். பார்ட்டி போதுமென்று முடித்துக் கொண்டோம். ராபர்ட் எழுந்து நின்ற நிலையில் தள்ளாடினான். அவனைப் பத்திரமாகக் காருக்குச் செல்லும்படி கூறினோம். ‘ கூட வரவா ‘ என்று கேட்டதற்கு, ’ வர வேண்டாம் ‘ என்று கூறி தள்ளாடியபடி நடந்து சென்றான். நாங்கள் அவன் சென்ற பின்னர் வருத்தங்களைப் பரிமாறிக்கொண்டோம்.

இரண்டு நாட்கள் கழித்து, நானும் என் கஸினும் காரில் சென்று கொண்டிருந்த போது, ராபர்ட்டும், ஒரு பெண்ணும், இரு பெண் குழந்தைகளும் காரிலிருந்து இறங்கி ஒரு ரெஸ்டாரன்டுக்குள் செல்வதைப் பார்த்தோம். எனக்கும் கஸினுக்கும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு ராபர்ட்டின் கார் டிரைவரை அழைத்தோம். எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு மாதிரியாக அவன் குடும்பத்தைப் பற்றி விசாரித்தோம். அவன், மனைவி, குழந்தைகளுடன் சாப்பிடச் செல்வதாக டிரைவர் கூறினான். மனைவி இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டதாகக் கூறியதற்கு டிரைவர் எங்களை முறைத்து, ’அதுதான் உயிரோடு போராங்களே ஸார்’ என்றான்.

கஸின் கார் ஓட்டிக்கொண்டு வந்தார்.” ஏன் பொய் சொன்னான்?” என்றார். ”புனைவு மர்மம் மிகுந்தது” என்றேன். கார் சென்று கொண்டிருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தற்போது கிளாடியஸ் குலோத்துங்கனிடம் கூறினேன்.’ ஏன் இப்படிக் கூறினான்’ ?. என்றார். நான் மவுனமாக இருந்தேன். நண்பர் எழுந்து கை கழுவி வந்தார்,. பேப்பரில் கையைத் துடைத்து விட்டு சிகரெட் பற்ற வைத்தார்.

”நடந்த சம்பவமாக நான் கூறியது அனைத்தும் புனைவு” என்று கூறினேன். நண்பர் சிகரெட்டை இழுத்துப் புகையை விட்டார். உண்மையைச் சொல்லிவிட்டுப் புனைவு என்று ஏமாற்றுகிறீர்களா ? “ என்றார். இல்லை ; புனைவை உண்மை போலச் சொன்னேன்’ என்றேன். நண்பர் மவுனமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

மொராக்கோ நாட்டுப் பெண்ணும், ஃப்ரான்ஸ் நாட்டு ஆணும் எங்களிடம் கை குலுக்கி விடை பெற்று மறைந்தார்கள்.



நன்றி : ”மாபெரும் சூதாட்டம்” – சிறுகதைத்தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம்

எதிர்பாராத முத்தம், துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ .... & எங்கெங்கு காணினும் சக்தியடா - பாரதிதாசன்

 எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்

வையம் சிலிர்த்தது நற் புனிதையேக, 
மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச்சென்று 
கையலுத்துப் போகு'தென்று மரத்தின்வேர்மேல் 
கடிதுவைத்தாள்; "அத்தான்நீர் மறந்தீர்என்று 
மெய்யாக நான்நினைத்தேன்" என்றாள்.அன்னோன் 
வெடுக்கென்று தான்அனைத்தான். "விடாதீர்"என்றாள்! 
கையிரண்டும் மெய்யிருக, இதழ்நிலத்தில் 
கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான்முத்தம்! 

•                  •                      • 
https://www.facebook.com/kutti.revathi.1?fref=nf
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...
அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...
புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...
~ பாரதிதாசன்

எங்கெங்கு காணினும் சக்தியடா;-தம்பி 

ஏழு கடல் அவள் வண்ணமடா!-அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா-ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோஈ?-எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம்-அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக்-கரை
காண நினைத்த முழு நினைப்பில்-அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்-அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பாரதிதாசனையும் பாரதியையும் ஒப்பிடுவது ஏன்?
சுப்பிரமணிய பாரதியை மகாகவி என்றும் பாரதி ஒரு அதிசயம் என்றும் சொல்லும் இலக்கியக் குடிமரபினர் பாரதிதாச சுப்புரத்தினக் கவியைப் படிப்பதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பாரதி பாடல்களைக் கேட்பது இதம்.
சுப்புரத்தினக் கவியை கேட்பதுடன் சிந்திப்பதும் உணர்வதும் ஆக்கம் தருவன.
பாரதி அல்ல அதிசயம், அது போலப் பலர் உருவாக முடியும். தாயுமானார், ராமலிங்க அடிகள் வந்து விட்டபின் பாரதி ஒரு பின்னோக்கு நிலைதான்.
“வேதத்திலே உயர் நாடு” என்ற கவி மொழிபு மிகமிகப் பின்னோக்கிய நிலையே.
அதிசயம், அசாத்தியம் என்றால் பாரதிதாச மகாகவிதான். (மகாகவி என்ற அடை-உடை விரும்பாத மகாபின்னவீனத்துவ கோடுபாட்டு அறிஞர்கள் காலமொழிபு மாற்றிய கவிஞர் என அவரை அறிக.)
ஏனெனில் தமிழ் மொழி அதுவரை ஏற்க மறுத்த அனைத்தையும் யாப்பில் அடங்காது எனச் சொல்லப்பட்ட அனைத்தையும் பா-பாடல் என்ற இசை மொழிபாக மாற்றுவது அத்தனை இலகுவான வேலையல்ல.
சுப்பிரமணிய பாரதி இல்லாமல் போயிருந்தால் நவீன தமிழ் ஒன்றும் குறைபட்டுப் போயிருக்காது, சுப்புரத்தின பாரதிதாசன் இல்லாமல் (கவிக்களம்) போயிருந்தால் தமிழ் பா-கவி மரபு நவீனமடைந்தே இருக்காது. பண்டார சன்னதிகள் பாரதியையும் பகுத்தறிவு மரபினர் பாரதிதாசனையும் கொண்டாடி மகிழ்வதில் தப்பில்லை.
துன்பம்நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா? எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? கேட்டுப்பாருங்கள் அதிசயம், அற்புதம் என்ன என்று புரியும்.
“மணலின் ஏட்டிலே அலைகள் பாவரி
வரைவதென்பதோனோ-நிதம்
வரைவதென்பதேனோ!
கனவின் யாழினைகை விரல்கள் இன்றியே
காற்றும் மீட்டுதல் வீணோ!
காற்றும் மீட்டுதல் வீணோ!
இசையின் தாரைகள் திசைகள் எங்கணும்
இனிமை சேர்க்கும் போது- தமிழ்
இனிமை சேர்க்கும் போது- உயிர்
அசைவிலாவிடில் உலகில் மானுடர்
உய்வதென்ப தேலாது!” (பாரதிதாசனின் வரியிசையில்)
(ஓவியம் டி.சௌந்தர் இணையத்தில் பார்த்ததும் பிடித்தது)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

https://www.facebook.com/riyas.qurana/posts/912869448743142

'கலைகளில் சில தம்மைப் பல திசைகளிலிருந்தும் அணுக அனுமதிக்கின்றன.சில தம்மைச் சுற்றி வந்து மாறுபட்ட இடத்திலிருந்து,கோணத்திலிருந்து,திசையிலிருந்து நமக்கேற்ற வகையில் தம்மைக்காண அனுமதிக்கின்றன.கட்டிடம்,சிற்பம்,ஓவியம் போன்ற கலைகள் மறுதிசையில் செல்லக்கூடியவை.அப்படி மறு திசையில் இயங்க முடியாமல் ஒரே திசையில் செல்பவை? இசையை அப்படிக் கூறலாம். தொடக்கத்திலிருந்து முடிவுவரை, பிறப்பிலிருந்து சாவுவரை என ஒருவழிப்பாதையாகச் செல்கிற இலக்கியத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால் மறு திசையில் இயங்க முடியாததாகிய இலக்கியத்தை,அப்படி இயங்க வல்லதாக மாற்றவே எப்போதும் நான் விரும்பியிருக்கிறேன்.'

@ மிலோராட் பாவிச்




கமலா தாஸின் " ஆடி" (மொ.பெ. - பத்மா)

Image result for Kamala Das
Image result for Kamala Das
முதுமை

The Looking Glass

Getting a man to love you is easy 
Only be honest about your wants as 
Woman. Stand nude before the glass with him 
So that he sees himself the stronger one 
And believes it so, and you so much more 
Softer, younger, lovelier. Admit your 
Admiration. Notice the perfection 
Of his limbs, his eyes reddening under 
The shower, the shy walk across the bathroom floor, 
Dropping towels, and the jerky way he 
Urinates. All the fond details that make 
Him male and your only man. Gift him all, 
Gift him what makes you woman, the scent of 
Long hair, the musk of sweat between the breasts, 
The warm shock of menstrual blood, and all your 
Endless female hungers. Oh yes, getting 
A man to love is easy, but living 
Without him afterwards may have to be 
Faced. A living without life when you move 
Around, meeting strangers, with your eyes that 
Gave up their search, with ears that hear only 
His last voice calling out your name and your 
Body which once under his touch had gleamed 
Like burnished brass, now drab and destitute.

Kamala Das :
http://www.poemhunter.com/
Image result for Kamala Das
இளமை












கமலா தாஸின் " ஆடி"
  http://kakithaoodam.blogspot.in/2013/05/blog-post_31.html                                 
ஓர் ஆணை, உன்னை நேசிக்கசெய்வது
மிகவும் எளியதானதாய் இருக்கிறது,
அதற்கு
ஒரு பெண்ணாய் உன் தேவைகள் பற்றி
அவனிடம் நீ உண்மையாய் மட்டும் இருக்க வேண்டும்.
அவனுடன் கண்ணாடி முன்
வெற்றுடம்பில் நின்று பார்.
அதில் அவன் தன்னை பலவானாய் உணரட்டும்.
அதை அவன் நம்பட்டும்
அவனை விட நீ இளமையாகவும் மிருதுவாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறாய் என்று கூட.

அவனை நீ  வியக்கிறாய் என்று ஒத்துக்கொள்.
அவனுடைய கைகால்களின் நேர்த்தியையும்,
நீர்த்திவலைகளுக்குக் கீழ் சிவக்கும் கண்களையும்,
குளியறையின் ஊடே நடக்கும் அந்த வெட்க நடையையும்,
துண்டினைத் தளர்த்தி அவன் நீரினைக் கழிப்பதையும்  கூட.

இது போன்ற இனிமையான
அவனை உன்னுடயவன் மட்டுமாய்
ஆக்கக் கூடிய குறிப்புகள் அனைத்தையும் வியந்திரு.

அவனுக்குப் பரிசளி
உன்னைப் பெண்ணாய் ஆக்கும் அனைத்தையும் பரிசளி.
உன் நீண்ட கூந்தலின் மணத்தையும்
உன்னிரு மார்புகளுக்கிடை மலர் வேர்வையையும்,
உன் தூமையின் அதிர்வையும்,
உன் முடிவிலா பெண்மையின் பசியையும்.


ஓர் ஆணை  நேசிக்க வைப்பது சுலபம் தான்.
ஆனால் பின் அவனில்லாத வாழ்க்கையையும் நீ எதிர் கொள்ள நேரலாம் குறித்துக் கொள்.
நடை பிணமாய் வாழும்வாழ்க்கையில்
தேடலை கைவிட்ட கண்களுடன்
உன் பெயரைக் கூவி அழைத்த
அவனின் கடைசிக் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுடன்,
துலக்கிய பித்தளையாய்,அவன் தொடுதலில் மின்னி,
இன்று மங்கி, ஆதரவில்லாத உன்னுடலுடன்
நீ புதியவர்களை சந்திக்க நேரலாம்.
எனினும்
ஆண்களை நேசிக்க வைப்பது லகுவானது தான்.

                                                                    ******கமலாதாஸ்    
       

Saturday, July 19, 2014

STALKING A POET - JEENA MARY CHACKO

https://www.facebook.com/lmanimekalai/posts/10152539458742645

AN ENGLISH POEM BY JEENA MARY CHACKO : "STALKING A POET"( For Aimee Herman)
Stalking a Poet(For Aimee Herman)

Stealthily I get inside her skull-
a tedious process, she leaves no maps
legends disintegrate upon touch
I track her scent-
In the raw free verses she sheds-
scrapping samples
bagging tagging - her verbs and iambs;
cells arranged assonance-wise-
I test, taste, navigate,
her dark alleys, dead-ends

Through unclimbable fences, I peer,
piecing together jigsawed sights
thirsting for one glimpse of the whole
(not the tail, not the trunkthe whole darn elephant!)

Scars on her shoulder blades, flight dissolved-
breathes swollen with fireflies
she breaks open her body-
bi-polar ends of her axis
cloning herself over and over-
a composition of mountains
unfolding-
a haemorrhaging story.


I wept over her autopsied corpses,
labyrinths losing into each other.
studied her dissociations,
heavier than secrets and dying stars;
bedless lakes,
I swum in her until my eyes wrinkled
hunting-
the language of her shut doors and open wounds,
the enjambment of her silence
each a thorn, a tear - untrammelled.


WE RELEASE THE COLLECTION OF ENGLISH POEMS BY JEENA MARY CHACKO WITH THE PAINTINGS OF SURENDRAN NAIR ON NONEMBER 1, 2015


https://www.facebook.com/lmanimekalai/posts/10152539445897645

"Don’t date a girl who reads because girls who read are storytellers. You with the Joyce, you with the Nabokov, you with the Woolf. You there in the library, on the platform of the metro, you in the corner of the café, you in the window of your room. You, who make my life so goddamned difficult. The girl who reads has spun out the account of her life and it is bursting with meaning. She insists that her narratives are rich, her supporting cast colorful, and her typeface bold. You, the girl who reads, make me want to be everything that I am not. But I am weak and I will fail you, because you have dreamed, properly, of someone who is better than I am. You will not accept the life of which I spoke at the beginning of this piece. You will accept nothing less than passion, and perfection, and a life worthy of being told. So out with you, girl who reads. Take the next southbound train and take your Hemingway with you. Or, perhaps, stay and save my life." C Warnke

From Meherin Roshanara



Do not love writers like her
People with starlight in their eyes and trinkets on their feet. People who are difficult to love.
 https://campusdiaries.com/stories/do-not-love-writers-like-her
Lakshmi from University of California Davis
14th Jan 2014
Do not love writers like her, you can have no secrets. Even your whispered nothings will become a character narrative, the blur of resemblances melting and morphing into an eerie picture of you; she will carry you by the multiple into all her stories. Do spare yourself the misfortune of sharing yourself with her. It is sickening how she can see meanings in your half-hearted shadows, in your gait, in your crow-feet. She will toss you about with great disregard when she writes, using you as muse, chewing you and spitting you out when unnecessary. By a happy misfortune, if a writer takes interest in you, you are forced to linger in sentences that bind you to paper: imprisoned in punishing scribbles.

Remember she can write you. Remember always that she has the haunting capacity to memorize you and all your mistakes. She will not be discreet, she will not overlook you. Your presence is as formidable to her as her own breath. She will exhale you brackishly as disgusting sea-water from her clogged lungs. Her attention is sharp enough to slice your heartbeats in one swift spearing of emotion. She can reduce you or deduce you, reason you or betray you. She can make you anything. She will take you as a lie into her story, a cynical backdrop, a tricky dialogue, a violation.

Do not wrong a writer. Do not cheat on her or abandon her. She is aware of your dismissal, and she will split her wrists to write with blood if you steal her pens. She is made by words, remember, and she will flow in them. One cannot take the songs of the soul away from itself. She will immortalize your shame for the world to see.

Therefore, simply do not wrong her. There is nothing more terrifying than her pain, nothing more deep than her loss. It might sound musical to you, or even sound like vacuous silence sometimes. But don’t think that her love is insubstantial. If you visit her words closely, they will burn you like no fire has. She can move you from ecstasy to anxiety, temptation to tears. She can be more grievous than mirrors, more unforgiving than the Saharan sun.

If you spare her that privilege, wait for her dangerous mercy.

It will convince and console in the most extraordinary of ways, even death then, will feel like making love.

Do not love writers like her.

Leena Manimekalai liked this.

No, I cannot give you abstractions. I cannot give you heart-stopping kisses, undying love nor searing passions. I cannot give you a forever.
But what I can offer you are simple, true and real – this moment, this buttery coffee, this promise of sparkling wit, our togetherness resonating the dance of stars, this inherent sense of each other, this understanding of the passing of time, changing of dreams, of stories hiding in the eye-creases, shoulder-shrugs and yawns. I give you this moment of silence, the answers within a gaze, small empathies, indulgences, a fresh towel, a careful listening, mad ideas, this cane-chair, this chuckle at your neat, curious jokes that no one gets but me, this adoration of your smell - a heady mix of bay leaves and peanut butter. I give you my gratitude, that special chicken soup you make that I am crazy about, the fuzz on our shared blanket, your shoulder becoming a boat that holds me, the calm inside all turbulence, our insane, cackling laughter which startles the neighbour's cat, the comfortable little habits and routines that fit us like smooth three-pin plugs into life’s socket. This music, this tangible day-to-day grind, this madness. I offer you the solace of small things. How is love more real than all this? I want to breakdown this forever-ness and have it, one bite at a time.



- Jeena Mary Chacko \ Mikimbizii

Photo: Maria Vasil'kova



Leena Manimekalai liked this.






‎Friday, ‎November ‎20, ‎2015
Swarna Lata
4 hrs ·

“Don’t fall in love with a woman who reads, a woman who feels too much, a woman who writes...

Don’t fall in love with an educated, magical, delusional, crazy woman. Don’t fall in love with a woman who thinks, who knows what she knows and also knows how to fly; a woman sure of herself.
Don’t fall in love with a woman who laughs or cries making love, knows how to turn her spirit into flesh; let alone one that loves poetry (these are the most dangerous), or spends half an hour contemplating a painting and isn't able to live without music.

Don’t fall in love with a woman who is interested in politics and is rebellious and feel a huge horror from injustice. One who does not like to watch television at all. Or a woman who is beautiful no matter the features of her face or her body.

Don’t fall in love with a woman who is intense, entertaining, lucid and irreverent. Don’t wish to fall in love with a woman like that. Because when you fall in love with a woman like that, whether she stays with you or not, whether she loves you or not, from a woman like that, you never come back.”

- Martha Rivera-Garrido

Friday, July 18, 2014

நெய்தல் தேசம் - பிரம்மராஜன்

நெய்தல் தேசம் - பிரம்மராஜன்

நீயும் ஒரு கடல் காக்கையும்
நினைவுகொள்ளும் நெய்தல் தேசம்
எட்டு வைரப் படிமம் கடந்து
தூய வலியால் திகழும் அலுமினியச் சிறகிரண்டு
படபடக்கும் நெஞ்சின் மீதிப்பீதி
கூசும் மின்னொளி இன்றின் உண்மையை
நாளையின் பொய்யைச் சொற்கூடுடைக்கும்
நெடுநல் வாழ்வின் ஓற்றைக் கவிதை
புல்லரிசி உண்போரின் கண் உருளை
சித்திரக் கோட்டில் புரண்டு படுக்கும்
ஒற்றையடிப்பாதை
துணித்த கிளைவெட்டோரப் பிசினில் வழியும்
இலைப் புனல் ஓயும்
வெட்டுக்கிளி நறுக்கிய மதிய கிராமத்தில்
தீ எழுதும் உறக்க மலர்
ஞாபகப் பிரதிகளும் நிலையாடிகளும்
நனைந்த மீதிப் பயணக் குறிப்பும்
நமது அதேயில்
காணி நிலம் எதுவுமே
கனவுடைந்த இடது பாகம்
அவன் விளைந்த இடத்தில் அழிந்த பயிர்
வில்லாளியோ விடுபட்ட அம்போ
காற்றுத்திரட்டும் கற்பனை
மிகவும் ஒன்றுபோல் ஸ்ருதி சேர்க்கிறாள்
பெண்ணுடலை ஓர் யுவதி

... உபாசனை செய்ததுடன் கிரிராஜன் சேகரித்து வைத்திருந்த ஸங்கீத ரத்நாகரம், நாரதீயம் முதலிய நூல்களைப் பயின்று சுருதிகள், பிரக்ருதி விக்ருதி ஸ்வரங்கள், 21 மூர்ச்சனைகள், 72 மேளகர்த்தாக்கள் தசவிகித கமகங்கள், ஜன்ய ராகங்கள் இவற்றின் மர்மங்களைத் தம்முடைய முயற்சினாலேயே

 மூளை அகன்று விசும்பு விரியவேண்டும்
இப்போது இல்லை
சோற்றின் நிஜமாய்க் கவலை
அவர்களின் மழை மதியம் நமதென்றால்
இலைவழிப் பாட்டில் செவியின் ஓவியம் எந்நிறம்
மண்ணும் சதையும் மதிலின் வரட்டியும்
கதிர்ச் சுடரின் கட்டிடக்கலை
மலைகளின் நாடித் துடிப்பை
விரல் தொட்டுணர
ஐம்புலன் தெரியும்.

கூழாங்கல்லின் சந்தோஷம்போல்
காற்று வரத் தொடங்கிய செப்டம்பர்
இன்னும்
மிருகக் கூறுபாடு
மறக்கப்பட்ட சரித்திரம்
விற்பனைக்கான க்ளோஸப்
சொற்களுக்காகப் புறவிருள்
மரமாகும் பயப் பதியம்
உன் விழைவுப் புழுதி நீயாக
பாவம் அந்தப் பட்டாம்பூச்சி
இதுவரை காகிதப் பதுமை
காண்பொருளைத் திறந்து நனவேற்றி
உலர்ந்த அறைகளை ரணமாக்கித்
துகில் திரை விலக்கி
வெப்பநிலையும் கவலையும் ஒரே வாயிலில்
வந்திறங்க
புரியாது தடுமாறும் மனப்பதம்
உஷை  உணராச் சாயுங் கால விரல் ரேகை
பதியும் உன் முகத்திலொரு வயலின் மொழி
எதுவும் உறங்கா இந்நகரின் இரவில்
மாநரகரின் மௌனம் அலறும் குரல்வளை
மாற்றிடம் வெற்றிடமாகாது
மீன்பிடிப்பு ஆபத்தானது திறந்த தோணிகளில்
ஆண்களின் 20 மணி வியர்வை
உயிரிழப்பு அதிகம் வேலைப் பாதுகாப்பில்லை
ஊழின் கரிப்பினை அறிந்திலர் அநேகர்.

இரவென்பது ஒரு பறவை
இரவின் ஆதாரம் ஸ்ருதியே
நள் என்று சொல்லும்
கொன்ற செய்தி கொணர்கிறான்
புகார்களைப் புன்னகையுடன் ஒப்பிட்டு

மகா ஸ்ருதியாகும் காதுகளில் ஓயாத சுத்தியல்
மீண்டும் ஆர்க்க வேண்டும் பாசி வயல்
எவரும் நவிலா ஒன்றை
மொழி மாற்றும் செயல் அது
காற்றின் வடிவூற்று
புயலும் மழையும் கலந்து வரைபெற்ற தெரு
வானத்தின் நினைவோ
கத்திரிப்பூ
வேறெப்படி நூற்பது இப்பனுவலை
இப்பொழுதில்லை மறுநாளில்
முளைத்தெழுக கற்பக விருட்சமே
எல்லாமே காத்திருக்கிறது
மறதியின் இறுதிப் புள்ளிக்காய்
இனியிலும் புல்மிளிரும் ஏரி
நித்திய மதியத்தின் யூரியாப் பிசுபிசுப்பு
மேகச் சிறகொழித்துத் திறந்திருக்கிறது
மாலைக் காதலின் வெளிர் நீலத்தாள்
நீ எழுதும் வேலை குடும்பம் எரிவாயு
தடங்கிப்போன கடிதம்
தினசரிகளின் கவிதை
அராஜகவாதியின் சாம்ராஜ்யம்
தெள்ளிய நீர்
நைட்ரிக் அமிலம்
உடைந்த ஸ்பிரிங்
மாத்திரை பிரிந்த பிளாஸ்டிக் கொப்புளம்
இரட்டைக் குவிமையக் கவிதை
யாருடன் எங்கென்பதும்
பொருட்டல்ல இத்தினம் ஆயினும் இதுவல்ல க்ஷணம்
கேஸட்டில் ஒலிக்கும் ஆத்மாநாமின் குரல்
காட்சிகளின் கோணம் தலைகீழாகப்
புகைப்படச் சாம்பல் காற்றில் அலையும்
காதலின்றிப் புணர்ந்து முப்பால் அறியாது
பிறப்பிக்கும் பூனைச்சாதி நாமல்ல
ஒரு கவலை பல துயரம் விலை மீறும்
இலையரிக்கும் புழுவே
வாழ்க்கையைத் தொங்கித் திருகிப்
பாவங்களைப் புண்ணியமும்
தண்டனையைக் குற்றமும் முயங்க
துருவத் தகராறு புனிதர் ஏசுவும் அறிவார்
துடிக்கும் சொற்களில் ஜடமுயிர்க்கும்
நாம் நாமின் நம்மால் நமதின் சமன்
மேற்கோள் முற்றும்

சமீபிக்கும் அவர்கள் முதுமை இப்போது
நொடிக்கும் அவர் இருக்கை
அவர்கள் பீதியில் தம் நாய்களுக்கு
நஞ்சிட விருப்பம் தெரிவிக்க
வீட்டுச் சாமான்களைக் கால் விலைக்கு விற்று
க்ஷாலைப் போக்குவரத்தின் தலை தெறிப்பை 0 ஆக்க
நாற்பதாண்டுகள் பகிராததை இன்று
க்ஷணத்தில் இரு நூற்றாண்டு வாழ்ந்ததை
வெளியிலிருந்து பூட்டப்பட்ட கதவின் பின்னால்
ஏதும் நடவாததுபோல்
இருவரும் பூர்வகாலத்திலும் அந்நியராய்
குரவர்களின் பறவை உறவு வலையளவு
காதலின் கதகதப்பை எழுத்துப் பிழைகளுடன்
எழுதி அயலார் ஒருவர்
மௌனமே பொருளாய்
மென்மையே வன்ம்மாய்
விற்க முடியாதிருப்பது
உன் இலக்கமிடா எலும்பு

ஒரு கவிதை அறிவை நிர்த்தாட்சண்யமாய்
நிராகரிக்கட்டும்
மனதுடன் உனது லிங்கத்தை
பிணைத்துக் காற்றில் ஊசலாடும் சங்கிலி
பிரண்டு படுக்கும் ஒற்றையடிப் பாதை
வாழ்ந்த வறுமை எலிவலை வெறுமை
கேள்விகள் செய்து தேற்றம் முடித்து
உன்னைப் பார்த்தால் 114 ஆண்டுகள்
வாழ்ந்தவன்போல் அவதி
தப்பிக்க வழிமுறை மரணத்தின் மொழி குறித்து
பதில்கள் சில
கடவுள் கேட்கிறாரா வார இறுதி ஓய்வு இன்னும்
சொல்லற்ற கதை சொல்

ஃபிரான்கோவின் சர்வாதிகாரத்தின்போது காட்டலோனியாவில் பெண்கள் எதிர்கொண்டது இருவகை அடக்குமுறை : காட்டலோனிய மொழியில் எழுதுவது தடைசெய்யப்பட்டது; பெண்களின் அறிவார்த்த செயல்பாடுகள் நிராகரிக்கப்பட்டன. 1976இல் ஃபிரான்கோவின் இறப்புக்குப் பிறகு காட்டலோனியாவில் மௌனமாக்கப்பட்ட 40 வருஷத்து இலக்கியம் இப்போது

உறங்கும் வயல்கள் இருவர் நாம்
மயங்கும் வரப்புகள்
கொக்கோ ஏரிக்காட்டில் பூச்சிக்கனவில்

புத்தாண்டு வாழத்தட்டையில்
நரைக்கும் உன் ஆயுள்
இக்கணத்தில் மெய் பற்ற
கிளைகளில்  சிக்கிய படிமம் தேடத்
தோண்டியகப்பட்டது வெண்கல முகம்
திறந்த வீட்டின் எளிய கனவு
உம் நெற்றியில் எம் பெருவிரல்

கண்ணிமைமேல் கனக்காத முத்தம்போல்
உறங்கியது தெரியாத உறக்கம்

நீரலை முகம் கோண
அறும் ஆறு சலனம்
தன் மெனோபாஸ் பருவத்தை யாரிடம் சொல்லும்
காயும் சூரியன்
துயிலெழுச்சிப் பாடலில் இணையாத இசை
உள்ளங்கையில் அள்ளிய அரிசி
என் நிலக்காட்சி






Thursday, July 17, 2014

அதுவாகும் நீ - பிரம்மராஜன்

அதுவாகும் நீ - பிரம்மராஜன்

நீ அது ஆகிறாய்
ஆம் அது நீயாவாய்
ஆனாய் அதுவாய் நீ
நீயே உனது மொழி
நிகர் என்றும் மொழியே உன்
பொருளாய்ப் பலவாய் மொழிந்து
பொருளே சொல்லாய் ஒன்றினுள்
என்றும்
அதன் பொருள்
யானே உனது நீ
அது நான் ஆனேன்
ஊனே உருகிய உள்ளத்துள்
ஆனாய் அது வாய் இனிமை
பொய்க்கலப்புடன் மெய்கலந்ததுவாய்
கை கலந்தும் வாய் கலந்தும்
சிரம் பற்றி
சிந்தை பற்றாது
நின்றவராய்
சென்றதென் மெய்வாய்
உன்றன் பொய்வாயுடன்
குழல் கடந்தேகத் தடங்கிய
குளத்துள் மெய்
யாகவிருந்தோம்
மெய் கலவாது
சற்றும்